Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு – அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ragunathan said:

இருதரப்புமே யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை ஐ. நா அறிக்கை சொல்கிறது.

மக்களை வேண்டுமென்றே இலக்குவைத்து, நிவாரண வரிசைகளில் நின்றவர்கள், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்தவர்கள், தம்மால் அடையாளப்படுத்தப்பட்ட யுத்த சூனியப் பிரதேசங்களில் தஞ்சமடைந்த மக்கள் என  ஆயிரக்கணக்கில் கொன்றமை, வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த போராளிகளையும் மக்களையும் கூட்டாகப் படுகொலை செய்தமை, பெண்போராளிகளை கூட்டுப்  பாலியல் வன்புணர்வின் பின்னர் கொலை செய்தமை, மருந்து மற்றும் உணவு ஆகியவற்றை போர் ஆயுதங்களாகப் பாவித்தமை ஆகியவை உள்ளடங்கலான ராணுவம் புரிந்த குற்றங்கள் என்றும், மக்களை மனிதக் கேடயங்களாகப் பாவித்தமை, பதின்ம வயதினரை கட்டாய ஆட்சேர்ப்பின் மூலம் இயக்கத்தில் சேர்த்தமை மற்றும் தப்பிப் போக எத்தனித்த மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தமை ஆகிய குற்றங்கள் புலிகள் மீதும் சுமத்தப்பட்டிருக்கின்றன.

இதில், இருதரப்பினராலும் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும்கூட, தமிழினம் இன்று பேசும் யுத்தக்குற்றங்கள், தம்மை தமிழர் என்பதற்காக இலக்குவைத்து, பெருமளவிலான மரணங்களை ஏற்படுத்தும் நோக்கில் செயற்பட்ட ஒரு தரப்பினரைப் பற்றித்தான் என்பது வெள்ளிடைமலை. ஆகவே, தமிழர் ஒருவருக்கோ அல்லது சிங்களவருக்கோ இங்கே நாம் பேசும் யுத்தம் குற்றங்கள் எதுவென்பது பற்றியோ அல்லது யாரைப் பற்றியோ என்பது தொடர்பில் சந்தேகங்கள் இருப்பதென்பது வேடிக்கையானது.

யுத்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். குற்றங்களில் ஈடுபட்ட இராணுவமாக இருந்தாலும் சரி, புலிகளாக இருந்தாலும் சரி, குற்றவாளிகள் குற்றவாளிகள்தான்.

வெறுமனே புலிகளும் செய்தார்கள் தானே, ஏன் ராணுவத்தை மட்டும் கேள்வி கேட்கிறீர்கள் என்பதோ, புலிகளை மன்னித்து விட்டதுபோல, இராணுவம் செய்ததையும் மன்னித்து மறப்பது நல்லது என்று கேட்பதும் ராணுவத்தைக் காப்பாற்றும் நோக்கிலேதான் அன்றி வேறெதற்குமில்லை என்பது தெளிவு. இதைச் சிங்களவர் ஒருவர் கேட்பதை புரிந்துகொள்வது அவ்வளவு கடிணமானதல்ல, ஆனால், தமிழர் ஒருவர் கேட்பது அவமானமானது.

நீங்கள் இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்? யுத்தக் கூற்றங்கள் பற்றி நாம் பேசக் கூடாதா? புலிகளும் செய்தபடியால், இராணுவத்தை மன்னித்து விட்டு விடலாமா? 

ரகு,  புலிகளும் செய்தார்கள் அதனால் இராணுவத்தை மன்னித்து விடலாம் என்று நான் சொல்லவில்லை. துளசி சொன்னாரா? நான் பார்க்கவில்லை இன்னும். யார் அப்படி சொன்ன தமிழர் என்று நீங்கள் தான் சுட்டிக் காட்டி, அவரிடமே இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும்.  

கடைசிக் கேள்விக்கு என் பதில்: இரண்டு தரப்புமே தண்டிக்கப் பட வேண்டுமா அல்லது மன்னிக்கப் பட வேண்டுமா என்பதை  குற்றத்தால் பாதிக்கப் பட்டவர்களே தீர்மானிக்கட்டும். இராணுவத்தாலும் புலிகளாலும் இறந்த தமிழர்களின் உறவுகள் தான் இந்தத் தீர்மானத்தை எடுக்கத் தகுதியானோர் (புலிகள் என வரும் போது சிங்களவர்களின் குரலையும் கேட்க வேண்டி வரும்).  

என் தனிப்பட்ட பதில்: இரண்டு தரப்பையும் மன்னிக்கக் கூடாது. தண்டிக்க வேண்டும். இதனால் மட்டுமே இனியொரு காலத்தில் இவை மீள நடக்காமல் தடுக்க முடியும்! 

புலிகளின் குற்றங்களை பற்றிப் பேச விழையும் போது புலிகள் மீது அபிமானம் உள்ள ஒருவருக்கு ஏற்படும் குழப்ப மனநிலை உங்களிடம் தெரிகிறது. அதைச் சுட்டிக் காட்டவே மேலே தடித்த எழுத்துப் பகுதிகளைக் காட்டுகிறேன். யுத்தக் குற்றம் பற்றிப்  நீங்கள்  எப்படியும் பிரித்து வகை கட்டிப் பேசலாம். அதற்குப் பாராட்டுக் கிடைக்கும் இங்கே! ஆனால், ஐ.நா வின் பார்வையை இந்த வகை பிரித்த "யுத்தக் குற்றம்" என்ற முறைமை  ஒரு நாளும் ஈர்க்காது. எங்கள் நோக்கம் பொறுப்புக் கூறலை உருவாக்குவதா அல்லது இங்கே கை தட்டல் வாங்குவதா? 

 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

ரகு,  புலிகளும் செய்தார்கள் அதனால் இராணுவத்தை மன்னித்து விடலாம் என்று நான் சொல்லவில்லை. துளசி சொன்னாரா? நான் பார்க்கவில்லை இன்னும். யார் அப்படி சொன்ன தமிழர் என்று நீங்கள் தான் சுட்டிக் காட்டி, அவரிடமே இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும்.  

கடைசிக் கேள்விக்கு என் பதில்: இரண்டு தரப்புமே தண்டிக்கப் பட வேண்டுமா அல்லது மன்னிக்கப் பட வேண்டுமா என்பதை  குற்றத்தால் பாதிக்கப் பட்டவர்களே தீர்மானிக்கட்டும். இராணுவத்தாலும் புலிகளாலும் இறந்த தமிழர்களின் உறவுகள் தான் இந்தத் தீர்மானத்தை எடுக்கத் தகுதியானோர் (புலிகள் என வரும் போது சிங்களவர்களின் குரலையும் கேட்க வேண்டி வரும்).  

என் தனிப்பட்ட பதில்: இரண்டு தரப்பையும் மன்னிக்கக் கூடாது. தண்டிக்க வேண்டும். இதனால் மட்டுமே இனியொரு காலத்தில் இவை மீள நடக்காமல் தடுக்க முடியும்! 

புலிகளின் குற்றங்களை பற்றிப் பேச விழையும் போது புலிகள் மீது அபிமானம் உள்ள ஒருவருக்கு ஏற்படும் குழப்ப மனநிலை உங்களிடம் தெரிகிறது. அதைச் சுட்டிக் காட்டவே மேலே தடித்த எழுத்துப் பகுதிகளைக் காட்டுகிறேன். யுத்தக் குற்றம் பற்றிப்  நீங்கள்  எப்படியும் பிரித்து வகை கட்டிப் பேசலாம். அதற்குப் பாராட்டுக் கிடைக்கும் இங்கே! ஆனால், ஐ.நா வின் பார்வையை இந்த வகை பிரித்த "யுத்தக் குற்றம்" என்ற முறைமை  ஒரு நாளும் ஈர்க்காது. எங்கள் நோக்கம் பொறுப்புக் கூறலை உருவாக்குவதா அல்லது இங்கே கை தட்டல் வாங்குவதா? 

 

புலிகள் மீது எனக்கு அபிமானம் உள்ளது என்பதை நான் மறுக்கவில்லை. அதற்காக, அவர்கள் செய்தவை அனைத்தைதையும் நான் ஏற்கவேண்டும் என்பதும் இல்லை.

புலிகளை தமிழர் மன்னிப்பதுபோல, ராணுவத்தையும் மன்னிக்க வேண்டுமென்று துளசி கேட்டிருக்கிறார்.

புலிகள் செய்ததை மறைக்கவேண்டும் என்று நான் ஒருபோதும் நினைக்கவுமில்லை, அப்படி எழுதவுமில்லை. ராணுவத்தைத் தண்டிப்பதைத் தடுப்பது, புலிகள் செய்த குற்றங்களை தமிழர்கள் மறைப்பதுதான் என்றால், எல்லாக் குற்றங்களும் விசாரிக்கப்படவேண்டும்.
அடுத்ததாக, இங்கே கைதட்டல் வாங்கவேண்டும் என்று நான் எழுதுவதில்லை. அந்த நோக்கம் எனக்கில்லை. கைதட்டுவதும், தூற்றுவதும் அவரவர் விருப்பம். எனக்குச் சரியென்றுபட்டதை எழுதுகிறேன். உங்களுக்கு நான் எழுதுவது கைதட்டல் வாங்கத்தான் என்று தெரிந்தால், நான் செய்வதற்கும் ஒன்றுமில்லை.

இறுதியாக உங்களின் பதிலுக்கு நன்றி. எல்லாக் குற்றங்களும் விசாரிக்கப்படவேண்டும். இனிமேல் இப்படியொன்று நடவாமல் இருப்பதற்காவது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.