Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ரதி said:

மாமி ஏன் இந்த நாத்த வேலை பார்த்தவ.😞..அவ தெரிஞ்சு செய்தாவோ தெரியாமல் செய்தாவோ தினேசுக்கு நல்லது தான் செய்திருக்கிறா😊 ...மாமியோட உப்ப பேச்சு வார்த்தை உண்டோ 🤐
 

அவவோட அதுக்குப்பிறகு நான் 2003 தான் கதைத்தது. அவவின் கணவர் திருமணமாகி ஒரு ஆண்டிலேயே இறந்துவிட ஒரு பிள்ளையுடன் தனிமரமான அவவின்மேல் கோபம் வரவில்லை. அதுமட்டுமன்றி என் வாழ்வு மிக மகிழ்ச்சியாக ஆனதில் தினேசையும் மாமியையும் மறந்திட்டன். அவர்களைப் பார்க்கமுடியாத தூரத்தில் நான் இருந்ததும் ஒரு காரணமாகும். 

  • Replies 95
  • Views 12.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொம்புளையளுக்கு  இருக்கிற ஒரு அவசரப்புத்தி எல்லாத்தையும் கெடுத்திடும்....tw_glasses:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

பொம்புளையளுக்கு  இருக்கிற ஒரு அவசரப்புத்தி எல்லாத்தையும் கெடுத்திடும்....tw_glasses:

உண்மைதான். ஆனாலும் அந்த வயதில் அதுக்கு மிஞ்சி எதுவும் செய்ய முடியாது 😀

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவவோட அதுக்குப்பிறகு நான் 2003 தான் கதைத்தது. அவவின் கணவர் திருமணமாகி ஒரு ஆண்டிலேயே இறந்துவிட ஒரு பிள்ளையுடன் தனிமரமான அவவின்மேல் கோபம் வரவில்லை. அதுமட்டுமன்றி என் வாழ்வு மிக மகிழ்ச்சியாக ஆனதில் தினேசையும் மாமியையும் மறந்திட்டன். அவர்களைப் பார்க்கமுடியாத தூரத்தில் நான் இருந்ததும் ஒரு காரணமாகும். 

வாழ்க்கையில் சில விடயங்கள் நடப்பது ஏன் என்று புரிந்துகொள்ள முடியாது. கடந்து போய்விட வேண்டும். அடுத்த பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

19 hours ago, குமாரசாமி said:

பொம்புளையளுக்கு  இருக்கிற ஒரு அவசரப்புத்தி எல்லாத்தையும் கெடுத்திடும்....tw_glasses:

அவருக்கு இருந்த அவசரபுத்தி இவருக்கு நல்லதாக போயிருந்த்திருக்கு என்றே நினைக்கலாம். மாமி அவசர பட்டு இருக்காவிட்டால் சுமேயின் வாழ்வு எப்பிடி, எந்த திசையில் போயிருந்திருக்குமோ தெரியாது. இது ஒரு 12B படம் மாதிரி 

  • கருத்துக்கள உறவுகள்

சுமோவும், தினேஷை உண்மையாய் காதலிக்கவில்லை. அப்படி காதலித்து இருந்தால் உதயன் கேட்டவுடன் ஓம் என்று சொல்லி இருக்க மாட்டார்...எல்லாத்தும் மேலாக இன்னாருக்கு இன்னார் என்பது எழுதப்பட்ட விதி...அதை மாத்த முடியாது 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/12/2019 at 10:38 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவவோட அதுக்குப்பிறகு நான் 2003 தான் கதைத்தது. அவவின் கணவர் திருமணமாகி ஒரு ஆண்டிலேயே இறந்துவிட ஒரு பிள்ளையுடன் தனிமரமான அவவின்மேல் கோபம் வரவில்லை. அதுமட்டுமன்றி என் வாழ்வு மிக மகிழ்ச்சியாக ஆனதில் தினேசையும் மாமியையும் மறந்திட்டன். அவர்களைப் பார்க்கமுடியாத தூரத்தில் நான் இருந்ததும் ஒரு காரணமாகும். 

லவ் பேலியர் கோபத்திலை   மாமிக்கு என்ன சாபத்தை போட்டியளோ ஆருக்கு தெரியும்? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நீர்வேலியான் said:

வாழ்க்கையில் சில விடயங்கள் நடப்பது ஏன் என்று புரிந்துகொள்ள முடியாது. கடந்து போய்விட வேண்டும். அடுத்த பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

அவருக்கு இருந்த அவசரபுத்தி இவருக்கு நல்லதாக போயிருந்த்திருக்கு என்றே நினைக்கலாம். மாமி அவசர பட்டு இருக்காவிட்டால் சுமேயின் வாழ்வு எப்பிடி, எந்த திசையில் போயிருந்திருக்குமோ தெரியாது. இது ஒரு 12B படம் மாதிரி 

உண்மைதான் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்துவிட்டுப் போனால் எந்தப் பிரச்சனைகளும் இல்லாதுபோய்விடும்.😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரதி said:

சுமோவும், தினேஷை உண்மையாய் காதலிக்கவில்லை. அப்படி காதலித்து இருந்தால் உதயன் கேட்டவுடன் ஓம் என்று சொல்லி இருக்க மாட்டார்...எல்லாத்தும் மேலாக இன்னாருக்கு இன்னார் என்பது எழுதப்பட்ட விதி...அதை மாத்த முடியாது 

 

அந்த வயதில் எனக்கு மட்டுமல்ல பலருக்கும் வரும் இனக்கவர்ச்சிதான் அது.

ரதி காதல் என்பது ஒருதடவை தான் வரும் என்பது பச்சைப் பொய். முன்னர் இருந்த புத்திசாலிகள் சமூகத்தின் நன்மைக்காக காதலைத் தெய்வீகமானதாகச் சித்தரித்து மிகைப்படுத்தி பெண்களின் உணர்வுகளை அடக்கி வைத்திருக்கின்றனர். பலபேருக்கு ஆண்காகட்டும் பெண்களாகட்டும் ஒருவரைத்தான் காதலித்தேன் என்று சொன்னால் அது பொய். அப்படிச் சொல்பவர்கள் ஒன்றில் சமூகத்துக்குப் பயந்தவர்களாய் இருப்பார்கள். அல்லது தன்னம்பிக்கை அற்றவர்களாய் இருப்பார்கள். என்னைப்போல் ஒரு சிலரே துணிவாகச் சொல்லுவார்கள். மற்றவர்களிடம் என் பெயர் கெட்டுவிடும் என்னும் பயத்தினால் வெளியே எதையும் கூறுவதில்லை. தம் ஆசைகளை அடக்கி ஊமைகளாய் இருந்ததனால், பெயர் கேட்க வேண்டும் என்பதனாலேயே பல காதல்கள் அழிந்தும் போயுள்ளன.

ஓர் ஆணின் பலகாதல்களை ஏற்றுக்கொள்ளும் சமூகமும் பெண்களுமேகூட பெண்ணுக்கு ஏற்படும் இரண்டாவது காதலை ஏற்றுக்கொள்வதில்லை. அப்படியான மனநிலைக்குத்தான் எம் பெண்களும் ஆண்களும் அன்றுதொட்டு தள்ளப்பட்டுள்ளோம்.
 

13 hours ago, குமாரசாமி said:

லவ் பேலியர் கோபத்திலை   மாமிக்கு என்ன சாபத்தை போட்டியளோ ஆருக்கு தெரியும்? 

அந்தளவுக்கு கொடூர மனம் எனக்கு இன்னும் இல்லை கண்டியளோ.  🙄

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அந்த வயதில் எனக்கு மட்டுமல்ல பலருக்கும் வரும் இனக்கவர்ச்சிதான் அது.

ரதி காதல் என்பது ஒருதடவை தான் வரும் என்பது பச்சைப் பொய். முன்னர் இருந்த புத்திசாலிகள் சமூகத்தின் நன்மைக்காக காதலைத் தெய்வீகமானதாகச் சித்தரித்து மிகைப்படுத்தி பெண்களின் உணர்வுகளை அடக்கி வைத்திருக்கின்றனர். பலபேருக்கு ஆண்காகட்டும் பெண்களாகட்டும் ஒருவரைத்தான் காதலித்தேன் என்று சொன்னால் அது பொய். அப்படிச் சொல்பவர்கள் ஒன்றில் சமூகத்துக்குப் பயந்தவர்களாய் இருப்பார்கள். அல்லது தன்னம்பிக்கை அற்றவர்களாய் இருப்பார்கள். என்னைப்போல் ஒரு சிலரே துணிவாகச் சொல்லுவார்கள். மற்றவர்களிடம் என் பெயர் கெட்டுவிடும் என்னும் பயத்தினால் வெளியே எதையும் கூறுவதில்லை. தம் ஆசைகளை அடக்கி ஊமைகளாய் இருந்ததனால், பெயர் கேட்க வேண்டும் என்பதனாலேயே பல காதல்கள் அழிந்தும் போயுள்ளன.

ஓர் ஆணின் பலகாதல்களை ஏற்றுக்கொள்ளும் சமூகமும் பெண்களுமேகூட பெண்ணுக்கு ஏற்படும் இரண்டாவது காதலை ஏற்றுக்கொள்வதில்லை. அப்படியான மனநிலைக்குத்தான் எம் பெண்களும் ஆண்களும் அன்றுதொட்டு தள்ளப்பட்டுள்ளோம்.
 

அந்தளவுக்கு கொடூர மனம் எனக்கு இன்னும் இல்லை கண்டியளோ.  🙄

காதல் என்பது ஒரு தடவை தான் வரும் என்பது பொய் தான் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 9

அதுக்குப்பிறகு இரண்டு ஆண்டுகளாக தினேஸ் வீட்டுப்பக்கம் இரண்டுதடவை வந்திருந்தாலும் எங்கள் வீட்டில் தங்கவில்லை. அவருக்கு என்மேல் விருப்பம் என்ற செய்தி மாமி மூலமாக என்றுதான் நினைக்கிறேன் வெளியே பரவிவிட்டது. உதயன் கூட இரண்டு தடவை “தினேஸ் எண்டு உங்கட வீட்ட வாறவனுக்கு உம்மில நல்ல விருப்பமாம். உமக்கு அவன் ஐ லவ் யூ சொல்லேல்லையோ? “ என்று கேட்க சத்தியமா அவர் என்னிடம் ஒருக்காக் கூட அப்பிடிச் சொன்னது கிடையாது என்று உதயனுக்குச் சத்தியம் செய்தாலும் அதன் பின் அவர்பற்றிய எண்ணமே எனக்கு எழவில்லை. 

அதன்பின் தினேசும் சொந்த மச்சாளைத் திருமணம் செய்துவிட்டதில் என் மனமும் நின்மதிகொண்டது. நாம் புலம்பெயர்ந்து யேர்மன் நாட்டுக்கு வந்தபின் என் வீட்டில் திருமணம் ஆகாத என் அன்ரிதான் வசித்தார். அப்போது தினேசின் அக்காவின் மகள் வேம்படியில் படிப்பதற்காக எங்கள் வீட்டில் கொண்டுவந்து விடப்பட்டார். 

எங்கள் ஒன்றுவிட்ட சகோதரன் அந்தப் பெண்ணைக் காதலித்து சகோதரனின் பெற்றோரின் எதிர்ப்போடு திருமணம் செய்து இருவரும் யேர்மனிக்கு வந்துவிட அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. என் கணவரும் பக்கத்தில் இருக்க அந்தப்பிள்ளை மாமா உங்களைப்பற்றிய விசாரிச்சவர் என்கிறார். எனக்குள் ஒரு பதைப்பு ஏற்பட, என் கணவர் கேட்கிறார் என்ன விசாரித்தவர் என்று. 

நிவேதா எப்பிடி இருக்கிறா? எத்தனை பிள்ளைகள் என்றெல்லாம் கேட்டவர். மேற்கொண்டு அவர் எதுவும் கதைக்காமல் இருக்க தினேசும் தங்கையும் கலியாணம் கட்டிவிட்டினமா எத்தனை பிள்ளைகள் என்று எதுவும் தெரியாத்துபோல் கேட்கிறேன். 

நல்ல காலம் அவரின் கணவர் என் கணவருடன் வேறு கதை கதைக்கத் தொடங்க மனம் நின்மதியாகிப் போனது. 

இடப்பெயர்வுன் போது தினேசும் அவர் குடும்பமும் எமது வீட்டில் தான் தங்கியிருந்தனர். அவர் சகோதரியின் முதற் குழந்தை கூட எமது வீட்டிற்தான் பிறந்தது என்று அன்ரியோடு போனில் கதைத்தபோது கேட்டதுதான். ஆனால் மறந்தும் கூட என் கணவருக்கு முன்னால் கதைத்ததில்லை. 

இம்முறை நான் இலங்கைக்கு என் நூல் வெளியீட்டுக்குச் சென்றபோது எதிர்பாராத ஒரு விடயம் நடந்தது.

நானே தனியாளாக அத்தனை வேலைகளையும் பார்த்துக்கொண்டிருந்தேன்.  நூல் வெளியீட்டுக்கு  வரும் அனைவருக்கும் உணவு கொடுக்கவேண்டும் என்பது என் ஆசை. நீ வெளிநாட்டில இருந்து வந்து குடுத்திட்டுப் போயிடுவாய். மற்றவையிடமும் சனம் சாப்பாட்டை எதிர்பார்க்கும். வடையும் றோள்ஸ்சும் ரீயும் கொடுத்தால் போதும் என்று அன்ரி ஏச, சரி எல்லாருக்கும் வேண்டாம். வாற முக்கியமான ஆட்களுக்கும் நெருங்கின உறவினர் கொஞ்சப்பேருக்கும் நானே சமைத்துக் குடுக்கவேணும் என்று என் ஆசை என்றேன். 

சரி ஆனால் என்னைச் சமைக்கக் கூப்பிடாதை என்ற அன்ரியிடம் நீங்கள் வந்தாலும் நான் விடமாட்டேன் என்று கூறியபடி சமையலுக்கு வேண்டிய பொருட்களைப் பட்டியலிட்டு வாங்குவதற்குச் சந்தைக்கு வெளிக்கிட்டேன். 

ஆட்களை எண்ணினால் ஒரு முப்பதுபேர் வரை வந்தார்கள். அதில் சிலர் மரக்கறிக்கார்ர். அதனால் அவர்களுக்குக் கத்தரிக்காய் பொரியல் கறி, வாழைக்காயும் பயிற்றங்காயும் பொரித்துப் பிரட்டல், பருப்பு, சொதி, பொன்னாங்காணி வறை என்று முடிவுசெய்து இறைச்சியும் மற்றைய எல்லாப் பொருட்களும் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வர, என் கணவனின் தங்கையும் மகளும் நிற்கின்றனர். 

நாங்கள் மூவரும் சேர்ந்து இறைச்சியை வெட்டிக்கொண்டிருக்கிறோம் அன்ரியின் போன் அடிக்கிறது. அன்ரி நெற்வேக் கிளியர் இல்லை என்று வெளியே போய் கதைத்துவிட்டு சிரித்தபடி வருகிறா. 

யார் அன்ரி போனிலை என்று கேட்க, தினேசும் மகளும் மாலை 5 மணிக்கு அங்கிருந்து வருகினமாம் என்றவுடன் ஒருவித மகிழ்ச்சி மனதில் பரவுகிறது. கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு முன் பார்த்தது. ஆனாலும் நீங்கள் சொன்னீர்களா நான் வந்திருக்கிறேன் என்று கேட்கிறேன். நான் சொல்லவில்லை. அவரின் மகளுக்கு நாளை செமினார் ஒன்று இருக்காம் யாழ்ப்பாணத்தில். அதுதான் வருகிறார் என்கிறா அன்ரி. 

அப்ப சமைக்க வேணுமோ அவைக்கு என்கிறேன். ஓம் இடியப்பம் அவித்து இறைச்சியும் வைத்தால் தினேசுக்கு விருப்பம் என்கிறா அன்ரி. வாறவை வேறொருநாள் வந்திருந்தால் நல்லா இருந்திருக்கும். இண்டைக்கு இந்த வேலையோட இனி அவைக்குச் சமைக்கிற வேலை என்று வெளியே போலியாகச் சலித்துக்கொள்கிறேன். ஏனெனில் என் மச்சாளும் மகளும் நிக்கினம் இறைச்சி வெட்டியபடி. 

உடனே மச்சாள் தூர இருந்து வாறவைக்கு உப்பிடியோ சொல்லுறது என்றுவிட்டு தன் மகனைக் கூப்பிட்டு ஓடிப்போய் அண்ணா பாமில ஒரு கோழி வாங்கிக்கொண்டு வாடா என்கிறார். ஏன் ஆட்டுறைச்சியையே காய்ச்சினால் என்ன என்றதற்கு அவர் நாளை நிற்பார் தானே. நாளை ஆட்டிறைச்சியை சாப்பிட்ட்டும். இண்டைக்குக் கோழியைக் காய்ச்சுங்கோ என்கிறார். 

இறைச்சிகளை எல்லாம் வெட்டி பிறிச்சில் வைத்துவிட்டு கோழியில் ஒரு பிரட்டல் வைத்து பருப்பும் சொதியும் இடியப்பமும் செய்து வைத்துப்போட்டுப் பார்த்துக்கொண்டிருந்தால் இரவு ஒன்பதாச்சு தினேசையும் மகளையும் காணவில்லை.

அன்ரி யோசனையோடு அவருக்கு போன் செய்து என்ன இன்னும் காணவில்லை என்றதும் பாதர் ஒருவரை சந்திக்கப் போனோம். இன்னும் அரை மணித்தியாலத்தில வந்திடுவம் என்கிறார் மகள். 

எனக்கு தூக்கமும் கண்ணைச் சுளற்றுகிறது. வந்தவுடன என்னை எழுப்புங்கோ என்றுவிட்டு படுத்தவுடன் தூங்கிவிட்டேன். மோட்டார்சைக்கிள் சத்தம் கேட்டதும் அன்ரி எழுப்பாமலேயே எழுந்து வெளியே போகிறேன். என்னைக் கண்டவுடன் மோட்டசைக்கிளைத் தள்ளியபடி வந்தவர் என்னைக் கண்டதும் நிவேதா.... எப்ப வந்தனீர்.... ஏன் எனக்குச் சொல்லேல்லை என்று அன்ரியைப் பார்த்துக் கேட்கிறார். ஆனாலும் முகத்தில் அத்தனை சந்தோசம். 

இவள் மட்டும்தான் வந்தவள். உவ்வளவு தூரத்தில இருக்கிறியள். உங்களை அலைக்கழிக்கிறதோ எண்டுதான் உமக்குச் சொல்லேல்லை என்றுவிட்டு பார்க்க அவர் நகராமல் அப்படியே நிற்பதைப் பார்த்ததும் உத நிப்பாட்டிப்போட்டு     வாருமன் என்கிறா அன்ரி.

இவதானா உங்கள் மகள் என்று நான் கேட்கிறேன். ஓம் எங்கே உதயன் பிள்ளைகள் வரவில்லையா என்கிறார். நான் தனியத்தான் வந்தனான் என்று அன்ரி சொன்னதை நான் திரும்பவும் சொல்கிறேன். முகம் மட்டும்அப்படியே இருந்தாலும் உடல் பெருத்து பெரிய மலை போல் ஐந்துமாதக் கற்பிணிபோன்ற வயிற்றுடன் நின்ற தினேசைப் பார்த்து நல்ல காலம் இவர் எனக்கு ஐ லவ் யூ உதயனுக்கு முதல் சொல்லேல்லை என மனம் ஆறுதலடைய மறுபுறம் நூ மட்டும் கொடியிடையோடா இருக்கிறாய் என்று யாழ்கள உறவுகள் கேட்பதுபோல் மைன்ட் வொய்ஸ் கேட்க எனக்குள்ளே சிரித்துக்கொள்கிறேன்.

இரவு உணவை எல்லாரும் சேர்ந்து பம்பலாய் உண்டுவிட்டு குடும்பம் , பிள்ளைகள், உறவுகள் என்று எல்லா விடயங்களும் கதைத்துவிட்டுப் படுக்க 11 மணி. ஒரு அறையில் தினேஸ் படுக்க அற்ராச் ரொயிலற் பாத்றூம் உள்ள  அறையில் நானும் தினேசின் மகளும் படுக்க, இன்னொரு அறை இருந்தும் அன்ரி எங்கள் அறைக்கு முன்னால் வந்து பாயை விரித்துப் படுக்க, ஏன் அன்ரி நிலத்தில் படுக்கிறீர்கள் உங்கள் அறையில் படுக்காமல் என்றதற்கு  சரியான புழுக்கமாய்க் கிடக்கு என்றார் அன்ரி.

 

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணின் மன உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள் அக்கா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

பெண்ணின் மன உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள் அக்கா.

நன்றி ஏராளன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை நாட்களும் என்னை கருத்தெழுதி ஊக்குவித்த அனைத்து உறவுகளுக்கும், பச்சைகளை அடிக்கடி வழங்கி எண்ணி ஆதரித்த உறவுகள் ரதி, கண்மணியக்கா, சுவி அண்ணா, ஏராளன், மல்லிகைவாசம், குமாரசாமி, நுணாவிலான், தனிக்காட்டுராஜா, நீர்வேலியான்,சசிவர்ணம்,நிழலி, ஜெகதா துரை, தமிழினி, புங்கை, இணையவன் ஆகிய உறவுகளே! மிக்க நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

முகம் மட்டும்அப்படியே இருந்தாலும் உடல் பெருத்து பெரிய மலை போல் ஐந்துமாதக் கற்பிணிபோன்ற வயிற்றுடன் நின்ற தினேசைப் பார்த்து நல்ல காலம் இவர் எனக்கு ஐ லவ் யூ உதயனுக்கு முதல் சொல்லேல்லை என மனம் ஆறுதலடைய மறுபுறம் நூ மட்டும் கொடியிடையோடா இருக்கிறாய் என்று யாழ்கள உறவுகள் கேட்பதுபோல் மைன்ட் வொய்ஸ் கேட்க எனக்குள்ளே சிரித்துக்கொள்கிறேன்.

உங்களிடம் வந்திருந்தால்,  நீங்கள் அவரை போடும் பட்டினியில், அவரும் கொடி இடையுடன் இருந்திருக்கலாம்😀. 96 படம் மாதிரியான கதை .  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, நீர்வேலியான் said:

உங்களிடம் வந்திருந்தால்,  நீங்கள் அவரை போடும் பட்டினியில், அவரும் கொடி இடையுடன் இருந்திருக்கலாம்😀. 96 படம் மாதிரியான கதை .  

இல்லை....இவர் ஒரு சுயநலவாதி.......இவருக்கு காதலும் கத்தரிக்காயும் ஒண்டுதான்....😎

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இல்லை....இவர் ஒரு சுயநலவாதி.......இவருக்கு காதலும் கத்தரிக்காயும் ஒண்டுதான்....😎

ஏன் அண்ணை? சந்தர்ப்ப சூழ்நிலையால், தினேஷ் கிடைக்கவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

புழுக்கம் அன்ரிக்கோ அல்லது உங்களுக்கோ☺️
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நீர்வேலியான் said:

ஏன் அண்ணை? சந்தர்ப்ப சூழ்நிலையால், தினேஷ் கிடைக்கவில்லை 

குமாரசாமி யாரைச் சொல்கிறார் என்று எனக்குக் குழப்பம்🧐

1 hour ago, ரதி said:

புழுக்கம் அன்ரிக்கோ அல்லது உங்களுக்கோ☺️
 

எனக்குப் புழுங்காது ரதி. ஏனென்றால் ஒருகட்டத்திற்குமேல் எல்லாம் ஒருமுகப்பட்டுவிடும்😝

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மையும் கற்பனையும் கலந்த ஒரு கதை என்று சொன்னால் நம்பவாபோறியள்????😜🤓

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இது உண்மையும் கற்பனையும் கலந்த ஒரு கதை என்று சொன்னால் நம்பவாபோறியள்????😜🤓

உங்களை தைரியமான பெண் என்றல்லவா நினைத்தேன். கடைசியில் நீங்களும் ஒரு கோழை தான் 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 4/18/2019 at 7:51 PM, ரதி said:

உங்களை தைரியமான பெண் என்றல்லவா நினைத்தேன். கடைசியில் நீங்களும் ஒரு கோழை தான் 

 

நான் துணிவுள்ளவள்தான். ஆனால் என் துணிவு மற்றவர்களுக்கு எதிர்விளைவுகளை ஏற்படுத்தக் காரணமாய் இருக்கக்கூடாதல்லவா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.