Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் தாக்குதலுக்கும் தொடர்பு இல்லை – அரசாங்கம்

Featured Replies

maithiri-ltte.jpg

 

 

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களுக்கு சர்வதேச தீவிரவாத அமைப்புகளே காரணமென ஜனாதிபதியின் ஆலோசகர் சிரால் லக்திலக தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இதற்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இல்லை என கூறியுள்ளார்.

அத்தோடு இறுதி யுத்தக் காலத்தில் கூட இதுபோன்ற தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு நைஜீரியாவிலும், 2018ஆம் ஆண்டு பாகிஸ்தானிலும் கிறிஸ்தவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களைப் போலவே இந்த தாக்குதலும் இடம்பெற்றுள்ளது என அவர் கூறினார்.

எனவே இந்த தாக்குதலின் பின்னணியில் வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகள் இருக்கக்கூடும் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

http://athavannews.com/விடுதலைப்புலிகள்-அமைப்ப/

  • தொடங்கியவர்

விடுதலைப்புலிகள் தொடர்பில் தற்போது புரிந்து கொண்டுள்ள மேற்குலகமும் இலங்கை அரசும்!

இலங்கையில் நேற்று நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை.

இறுதிப் போர் உட்பட ஒரு போதும் இப்படியான தாக்குதல்களை அவர்கள் நடத்தவில்லை என்று அரச தரப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் நேற்று நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பை அடுத்து உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றியும் தெரிவித்துள்ளன.

அமெரிக்கா தெரிவிக்கையில், புலிகள் தனித்துவமான இயக்கம். அத்தோடு மதச் சார்பற்றவர்கள். புனித நாட்களில் வணக்கத் தலங்களைத் தாக்குவது ஒருபோதும் அவர்கள் உத்தி கிடையாது.

பிரான்ஸ் தெரிவிக்கையில், முப்பது வருடங்களாக நடந்து கொண்டிருந்தது மதப் போராட்டம் அல்ல. அது விடுதலைப் போராட்டம்.

இலங்கை அரசு தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளுக்கும் இந்தத் தாக்குதலுக்கும் எந்தவொரு சம்பந்தமுமில்லை. இறுதி யுத்தம் உட்பட ஒருபோதும் இப்படியான தாக்குதல்களை அவர்கள் நடத்தியிருக்கவில்லை.

https://www.ibctamil.com/srilanka/80/118356

  • தொடங்கியவர்

விடுதலைப்புலிகளுடனான மோதலின் போது கூட பொது மக்கள் இவ்வாறு இலக்கு வைக்கப்படவில்லை!

625.200.560.350.160.300.053.800.300.160.

 

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து விவாதிப்பதற்காக விசேட நாடாளுமன்ற அமர்வு இன்று 1மணியளவில் கூடியது.

இந்த அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச ,

விடுதலைப்புலிகளுடனான 30 ஆண்டுகால போரில் கூட இவ்வாறு பொது மக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசாங்கம் இனியேனும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு செயற்படும் பட்சத்தில் முழுமையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் ஜனாதிபதியும் பிரதமரும் முரணான திசையில் இருந்து கொண்டு இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது. அதேபோன்று தொடர் குண்டு வெடிப்புகள் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகக்களை சாதாரண விடயமாகவும் கருத முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/118428

  • தொடங்கியவர்

விடுதலைப்புலிகள் அரசாங்கத்துடனும் அரச படைகளுடன் மட்டுமே மோதினர்!

விடுதலைப்புலிகள் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தியதில்லை என அரச புலனாய்வு சேவையின் ஆராய்ச்சி பிரிவின் முன்னாள் பிரதிப் பணிப்பாளரும், புலனாய்வு ஆலோசகருமான கலாநிதி அஜித் ரோஹன கொலோன்னே தெரிவித்துள்ளார்.

தனியார் சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணாலில் அவர் இதனை கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கு ஐரோப்பா மற்றும் மேற்குலக நாடுகளில் எந்த எதிர்ப்புகளும் இருக்கவில்லை. அவர்கள் வெளிநாட்டவர்களை குறித்து தற்கொலை தாக்குதல்களை நடத்தியதில்லை. அந்த விடயத்தில் அவர்கள் கவனமாக இருந்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய போது, வெளிநாட்டு விமான சேவைகளின் விமானங்கள் புறப்பட்டுச் செல்லும் வரையில் ஓடுதளப் பகுதிகளில் பதுங்கி இருந்து ஸ்ரீலங்கன் விமானங்கள் மீது மாத்திரமே தாக்குதல் நடத்தினர். அத்துடன் விடுதலைப் புலிகள் அரசாங்கத்துடனும் அரச படைகளுடன் மட்டுமே மோதினர்.

ஆனால், தற்போது நடத்தப்பட்டுள்ள தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகளை அவர்கள் இலக்கு வைத்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் மக்களுக்கு பெரிய உயிர் அழிவை ஏற்படுத்த திட்டமிட்டிருக்கலாம்.

வெளிநாட்டவர்களுக்கு கூடுதலான சேதத்தை ஏற்படுத்துவதும், சுற்றுலாத்துறையை மழுங்கடிக்கச் செய்வதும் இத்தாக்குதலின் பிரதான நோக்கமாக இருக்கலாம். இதேபோன்ற தாக்குதல்கள் வெளிநாடுகளிலும் நடந்திருக்கின்றன.

குறிப்பாக பிரான்ஸ் போன்ற நாடுகள் இதுபோன்ற தாக்கதல்களை எதிர்நோக்கியிருக்கின்றன. இலங்கையில் தற்போது இடம்பெற்ற தாக்குதல்களினால் இலங்கை ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னோக்கி தள்ளப்பட்டிருக்கின்றன.

இதனைத் தவிர கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது குறி வைக்கப்பட்டுள்ளதால், தாக்குதல் நடத்தியவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான தாக்குதல் நடத்தினார்களா என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என கலாநிதி அஜித் ரோஹன கொலோன்னே குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, விடுதலைப் புலிகள் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/118660?ref=home-imp-flag

D4xP84-W4AUrlAf.jpg:large&key=e2be10d6a3

  • கருத்துக்கள உறவுகள்

லூசுங்களாய் இருக்கிறான்கள் 
கோட்டலை என்றாலும் புலிகள் தலையில் கட்டி இருக்கலாம் 
ஒரு பரபரப்பாக இருந்து இருக்கும். 

9 hours ago, Maruthankerny said:

கோட்டலை என்றாலும் புலிகள் தலையில் கட்டி இருக்கலாம் 
ஒரு பரபரப்பாக இருந்து இருக்கும். 

உண்மை தான்.

யாழ்களத்திலனாலும் பரபரப்பா இருந்திருக்கும்!

புலிகள் மீது வலிந்து வசைபாடும் நேயர்களுக்கு சான்ஸ் இல்லாம போச்சு!

விடுதலைப் புலிகளுடன் தமிழர்கள் இணைய, சிங்கள அரசியல்வாதிகளே காரணம் - ரிசாத் பதியூதீன்

_106608321_7d263805-ede8-447b-b475-bb6fa

சிங்கள இனவாத அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளினாலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாகியதாக அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவிக்கின்றார்.

கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலை அடுத்து, நாட்டில் ஏற்பட்டிருந்த பயங்கரவாத செயற்பாடுகளுடன், ஒப்பிடுகையில், தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்பாடுகள் எவ்வாறு அமைந்திருந்தது என வினவியபோதே அமைச்சர் ரிசாத் பதியூதீன் இவ்வாறு குறிப்பிட்டார்.

பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்யேகப் பேட்டியிலேயே அவர் இதனைக் கூறினார்.

_106608323_rishadbadudeen-4.jpg

இலங்கை மீதான தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் பாதுகாப்பு பிரிவினர் இதுவரை எந்தவொரு அரசியல்வாதியையும் இந்த சம்பவத்துடன் தொடர்புப்படுத்தவில்லை என கூறிய அமைச்சர், அரசியல்வாதிகளே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது சுமத்திவருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இந்த குற்றச்சாட்டுக்களுக்கான நோக்கம், எதிர்கால அரசியல் லாபத்தை பெற்றுக்கொள்ளவே எனவும் ரிசாத் பதியூதீன் குறிப்பிட்டார்.

தமது சுயலாப அரசியலுக்காக இந்த பயங்கரவாத தாக்குதலை வேறொரு திசையை நோக்கி கொண்டு சென்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

_106606023_934303d8-1b6b-42db-a1c5-60128

சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்காக கடந்த கால சிங்கள அரசியல்வாதிகள், தமிழ் மொழியை தடை செய்ததாகவும், தமிழ் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு மறுப்பு தெரிவித்ததாகவும், தமிழர்களின் உரிமைகளை பறித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான செயற்பாடுகளை சிங்கள அரசியல்வாதிகள் முன்னெடுத்ததாலேயே சிறிய குழுவாக ஆரம்பித்த தமிழீழ விடுதலைப் புலிகள், பின்னர் முழு தமிழ் சமூகத்தையும் பங்குதாரர்களாகியதாக அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவித்தார்.

 

தமிழ் சமூகம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பங்குதாரர்களாக்கிய துரோகத்தை சிங்கள அரசியல்வாதிகளே மேற்கொண்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதேவேளை, இலங்கை மீதான தாக்குதலானது, இஸ்லாத்துக்கு எதிரான செயற்பாடு என கூறிய அமைச்சர் ரிசாத் பதியூதீன், இதனை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-48067167

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.