Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தவ்பிக் ஜமாத் அமைப்பை, கோத்தாபயவே பாதுகாத்தார்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தவ்பிக் ஜமாத் அமைப்பை, கோத்தாபயவே பாதுகாத்தார்..

April 24, 2019

 

“இஸ்லாமியர்களான நாங்கள் இந்த அரசுக்கும் கடந்த அரசுக்கும் இந்த தவ்பிக் ஜமாத் குறித்து விபரங்களை கொடுத்துள்ளோம்”  – புலனாய்வுத் துறை தமது தேவைக்காக இவர்களை பயன்படுத்தியது – அசாத் சாலி- #asathsali #gotabayarajapaksa #thowheedjamath

அசாத் சாலி: “இஸ்லாமியர்களான நாங்கள் இந்த அரசுக்கும் கடந்த அரசுக்கும் இந்த தவ்பிக் ஜமாத் குறித்து விபரங்களை கொடுத்துள்ளோம். புலனாய்வு துறையில் இருந்தார்கள் சாலே மற்றும் அவரது சீடர் மொகமட். இவர்கள் இருவரையும் இப்போது கூட இங்கு அழைத்து கேளுங்கள். நாங்கள் தவ்பிக் ஜமாத் குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தவில்லையா என்று? (தவ்பிக் ஜமாத் புகைப் படங்களைக் காட்டுகிறார்) இவை குறித்து 31/2 – 4 வருடங்களாக விபரங்களை கொடுத்து வருகிறோம். அனைத்து அரசுகளுக்கும் கடிதங்களை கொடுத்தோம். இவர்களை இல்லாமல் செய்யச் சொன்னோம். இவர்கள் பொல்லுகள் மற்றும் வாள்களோடு வருகிறார்கள். காத்தான்குடியில்”  #Srilanka #EasterSundayAttackLK

asath-sali.png?resize=674%2C497

சத்துர இடைமறிக்கிறார் : புலனாய்வு துறையினருக்கா கொடுத்தீர்கள்?

அசாத் சாலி : “புலனாய்வு துறையினருக்கு கொடுத்தோம். பாதுகாப்பு செயலர்கள் மூவருக்கு கொடுத்துள்ளோம்.”

சத்துர : இந்த அரசில் 4 பாதுகாப்பு செயலர்கள் இருந்தார்கள். இந்த அரசில் இருந்த பாதுகாப்பு செயலர்களுக்கா? கடந்த அரசில் இருந்தவர்களுக்குமா?

அசாத் சாலி : “கடந்த அரசில் இருந்தவருக்கும்தான் கொடுத்தோம்”

சத்துர : பாதுகாப்பு செயலளாளராக இருந்த கோத்தாபய ராசபக்ச அவர்களுக்கும் கொடுத்தீர்களா?

அசாத் சாலி : அவர்தான் தவ்பிக் ஜமாத் அமைப்பை பாதுகாத்தவர். இதை பொறுப்போடு சொல்கிறேன். அவர் பாதுகாத்தார் என்பதை சாலேயை அழைத்து வந்து கேட்டால் சொல்வார். அந்த அரசாங்கம்தான் இவர்களை பாவித்தது. பழைய வீடியோக்கள் இருந்தால் எடுத்து பாருங்கள்? 

மாளிகாவத்தை தவ்பிக் ஜமாத்திலிருந்து ஒரு ஊர்வலம் போய்க் கொண்டிருக்கும் போது பஞ்சிகாவத்தையில் பொலிசார்  தடுத்து நிறுத்தினார்கள் என்பது நினைவிருக்கலாம். உடனே மேலிடத்திலிருந்து கட்டளை வருகிறது அவர்களை தொடர்ந்து போக விடுமாறு. இவர்கள் எங்கே போனார்கள் ? கோட்டை புகையிர நிலையம் வரை சென்றார்கள். 

பெண்களை இணைத்துக் கொண்டு ஆண்கள் – பெண்கள் சேர்ந்து பெண்கள் எதிர்ப்பு ஊர்வலம் என இஸ்லாமியர்கள் எங்கே போயுள்ளார்கள் என்று காட்டுங்கள்?  அப்படி பெண்கள் போனதில்லை. ஆண்கள் போயுள்ளார்கள். பெண்கள் போனதில்லை.இந்த தவ்பிக் ஜமாத் அமைப்பினர் புலனாய்வு துறையினரது தேவைக்காக சென்றார்கள்.

 

http://globaltamilnews.net/2019/119279/

1 hour ago, கிருபன் said:

சத்துர : பாதுகாப்பு செயலளாளராக இருந்த கோத்தாபய ராசபக்ச அவர்களுக்கும் கொடுத்தீர்களா?

அசாத் சாலி : அவர்தான் தவ்பிக் ஜமாத் அமைப்பை பாதுகாத்தவர். இதை பொறுப்போடு சொல்கிறேன். அவர் பாதுகாத்தார் என்பதை சாலேயை அழைத்து வந்து கேட்டால் சொல்வார். அந்த அரசாங்கம்தான் இவர்களை பாவித்தது. பழைய வீடியோக்கள் இருந்தால் எடுத்து பாருங்கள்? 

மிலேச்ச பயங்கரவாதிகள் யார் என்பது கொஞ்சம் வெளிப்பட்டுள்ளது!

வெளிப்பட்டுள்ளது ஆழப்புதைந்துள்ள பாரிய பனிப்பாறையின் ஒரு சிறுமுனை தான்.

1983 இல் இருந்து இந்த இரண்டு மதவெறிப் பயங்கரவாதக் கும்பல்களும் இணைந்து தமிழின அழிப்பை மேற்கொண்டனர்.

அதே நேரத்தில் சிங்கள-பௌத்த இனமதவெறிப் பயங்கரவாதி கோத்தபாயவால், முஸ்லீம் இனமதவெறிப் பயங்கரவாதக் கும்பல்களை வீழ்த்த இராவண பலய, பொதுபல சேன, மகாசேன் பலகாய, வியத்மக ... போன்ற  6 சிங்கள-பௌத்த இனமதவெறி அமைப்புகள் உருவாக்கபட்டன.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களை அழிக்க உலக நாடுகளை எல்லாம் துணைக்கிழுத்தவர்கள் இப்போ.. வெளிநாடுகள் வேண்டாம் எனும் போதே... விளங்கிக் கொள்ள வேண்டும்.

இதில் வேடிக்கை என்னவென்றால்..

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பேரழிவின் பின் கொழும்பு.. மட்டு.. யாழ் ஆயர்கள் வழங்கிய செவ்விகள்.. பாதிக்கப்பட்ட மக்கள் மீது கொஞ்சமும் கருசணையற்றிருந்ததை காணலாம். இவர்களுக்கும்.. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பேரழிவின் பின் பால்சோறு வழங்கி கொண்டாடி மகிழ்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும்.. வெடிகொழுத்திக் கொண்டாடிய சிங்களவர்களுக்கும்.. சிங்கக் கொடிதூக்கிப் பிடித்த டக்கிளஸ்.. சம்பந்தன் உட்பட்ட காக்கவன்னியர்களுக்கும் உள்ள வித்தியாசம் தான் என்ன..??!

ஆனால்... இழக்கப்பட்டவை எல்லாமே அப்பாவி மனித உயிர்கள்.. என்பது தான் அடிப்படை சோகமும் உண்மையும். அதில் கூட பாகுபாடு காட்டியவர்கள் தான்.. உந்த ஆயர்களும் அரசியல்வாதிகளும். அவர்களிடம் இருந்து மனிதாபிமானத்துக்கான குரலை நடவடிக்கைகளை எதிர்பார்க்க முடியாது. 

இன்று கூட முள்ளிவாய்க்கால் மண்ணிற்கு அஞ்சலி செய்யப் போகத் தயங்குபவர்களின் பட்டியல் நீண்டது..?!!!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

தவ்பிக் ஜமாத் அமைப்பை, கோத்தாபயவே பாதுகாத்தார்.. 

hqdefault.jpg

பால குடிச்சிப்புட்டு பாம்பாக கொத்துதடி ... 🤔

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.