Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண் பாவம்

Featured Replies

பெண் பாவம் வேண்டாம்!

கிராமமும் இல்லாத, நகரமும் இல்லாத இடைப்பட்ட ஊரில் திருமணம் ஒன்றுக்கு நானும் என் தோழியும் கிளம்பினோம். பெண்ணின் தாயார் எங்களின் தோழி.  திருமண ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தன. வரவேற்பு இனிதாக நடந்து முடிந்தது. மறுநாள் விடிந்ததும் திருமணம். எல்லோரும் உற்சாகமாகப் பேசிவிட்டுப் படுத்தோம்.   

விடிகாலை மாப்பிள்ளை வீட்டார் இருந்த பகுதியில் ஒரே களேபரம். மாப்பிள்ளையின் தாய் மாமா இரவு படுத்தவர் எழுந்திருக்கவேயில்லை. மாஸிவ் ஹார்ட் அட்டாக். தூக்கத்திலேயே உயிர் போய்விட்டது.

மணப்பெண் குளித்து பாதி அலங்காரத்தில் இருக்கிறாள். சமையல் வேறு பாதியில் நிற்கிறது. அரசல் புரசலாக பெண்ணின் ராசி பற்றி விமர்சனம் எழுகிறது. 

என் தோழியின் குடும்பத்தினர் கையைப் பிசைந்து கொண்டு செய்வதறியாது கலங்கி நிற்கிறார்கள்!
அப்போது இறந்து போனவரின் மனைவி எங்களை அழைப்பதாகக் கூறினார்கள். நாங்கள் போனோம்.  ஏற்கனவே மாப்பிள்ளையின் குடும்பம் அங்கு இருந்தது.
  
அந்த அம்மா பொதுவாகப் பார்த்து, ‘‘கல்யாணம் நிச்சயித்தபடி நடக்கட்டும். அவருக்குக் கல்யாண சாவுதான். துள்ளாம துடிக்காம நிம்மதியா சேர்ந்துட்டார்.  இந்தக் கல்யாண வேலையை முன்னின்று செய்தது அவர்தான். அது நின்று போறத அவர் விரும்ப மாட்டார். இது நடக்கலைன்னா எல்லோரும் கல்யாணப் பொண்ணைத்தான் வாய்க்கு வந்தபடி பேசுவாங்க.  பெண் பாவம் வேணாம். நான் அவரோட கிளம்பறேன்’’ என்று கும்பிட்டார்.  

பெண்ணின் தாயார் அவர் காலடியிலே விழப் போக, அவர் பதறிப் போய் தடுத்து விட்டார். போன உயிர் எல்லோருக்கும் திரும்பி வந்தது. மாப்பிள்ளை வீட்டாரும் மேற்கொண்டு எதுவும் சொல்லவில்லை. அமைதியாக திருமணம் முடிந்தது. என்ன... கல்யாண கலகலப்புகள்தான் மிஸ்ஸிங். 
ஆனாலும், அந்த அம்மாவை எல்லோருமே வணங்கினர். அவர்கள் கொஞ்சம் சுணங்கியிருந்தாலும் கல்யாணம் நடந்திருக்குமா? 

தன்னுடைய பேரிழைப்பைக்கூட பெரிதாக எண்ணாமல் இன்னொரு பெண்ணின் வாழ்வை நினைத்த இவர் போன்ற மனித நேயமிக்கவர்களால்தான் பூமி இன்னும் தன் அச்சிலிருந்து பிறழாமல் சுழல்கிறது போலும்.

- ஜே.சி.ஜெரினாகாந்த், சென்னை.

#AnupavaAdvise #NamthozhiMagazine #SakthiMasala

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, அபராஜிதன் said:

...

தன்னுடைய பேரிழைப்பைக்கூட பெரிதாக எண்ணாமல் இன்னொரு பெண்ணின் வாழ்வை நினைத்த இவர் போன்ற மனித நேயமிக்கவர்களால்தான் பூமி இன்னும் தன் அச்சிலிருந்து பிறழாமல் சுழல்கிறது போலும்.

- ஜே.சி.ஜெரினாகாந்த், சென்னை.

இன்னொரு பெண்ணின் அரும்பும் வாழ்க்கையை பாழாக்காமல், யோசித்து முடிவெடுத்த அப்பெண், நிச்சயம் போற்ற வேண்டியவர்தான். 🙌

  • கருத்துக்கள உறவுகள்

அந்தத் தாயின் உயரிய சிந்தனைகளுக்கு தலை வணங்குகின்றேன்.......!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சிந்தனையும் தெளிவுமுள்ள பெண்ணென்று தெரிகிறது. அவர்மட்டுமல்ல மாப்பிள்ளை வீட்டாரும் நல்லவர்கள் போல

  • தொடங்கியவர்
On 4/30/2019 at 4:19 PM, ராசவன்னியன் said:

இன்னொரு பெண்ணின் அரும்பும் வாழ்க்கையை பாழாக்காமல், யோசித்து முடிவெடுத்த அப்பெண், நிச்சயம் போற்ற வேண்டியவர்தான். 🙌

 

On 5/1/2019 at 5:12 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நல்ல சிந்தனையும் தெளிவுமுள்ள பெண்ணென்று தெரிகிறது. அவர்மட்டுமல்ல மாப்பிள்ளை வீட்டாரும் நல்லவர்கள் போல

 

On 4/30/2019 at 6:31 PM, suvy said:

அந்தத் தாயின் உயரிய சிந்தனைகளுக்கு தலை வணங்குகின்றேன்.......!

வருகைக்கும் கருத்துகளிற்கும் நன்றிகள் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.