Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கமலின் பேச்சுக்கு பிரதமர் மோடி பதிலடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கமலின் பேச்சுக்கு பிரதமர் மோடி பதிலடி

 

எந்த ஒரு இந்துவும் பயங்கரவாதி அல்ல. அப்படி ஒரு பயங்கரவாதி இருப்பின் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் தஜீந்தர் பால் சிங் பாகா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, 

mode.jpg

“பயங்கரவாதத்தை ஒரு மதத்திற்குள் வரையறுப்பது தவறு. இந்தியாவின் தேசத் தந்தையான காந்தியைக் கொன்றவரை இந்து பயங்கரவாதி என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஆயிரக் கணக்கான சீக்கியர்களைக் கொன்று குவித்த ராஜீவ் காந்தியை அவர் எவ்வாறு அழைப்பார்? நாட்டில் மக்களிடையே மத அடிப்படையில் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசியுள்ள கமல்ஹாசன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.

இந்நிலையில் இது குறித்து பிரதமர் மோடி பதிலளிக்கையில்,

Kamal.jpg

“எந்த ஒரு இந்துவும் பயங்கரவாதி அல்ல. அப்படி ஒரு பயங்கரவாதி இருப்பின் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது. எந்த ஒரு பயங்கரவாதியும் இந்து மதத்திற்கு சொந்தம் கொண்டாட முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக நடிகர் கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது,“ சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஓர் இந்து. அவர் தான் மகாத்மா காந்தியை சுட்டுக் கொலை செய்த நாதுராம் கோட்சே.” என பேசியது குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/55988

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கோவிலுக்குள் சென்று சீக்கியர்களை கொன்றது இந்திரா காந்தியா,ராஜிவ் காந்தியா எந்தக் காந்தி  கன் எடுத்தவர்  ஒரே குழப்பமாக இருக்கு......!   🚀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

பொற்கோவிலுக்குள் சென்று சீக்கியர்களை கொன்றது இந்திரா காந்தியா,ராஜிவ் காந்தியா எந்தக் காந்தி  கன் எடுத்தவர்  ஒரே குழப்பமாக இருக்கு......!   🚀

இந்திரா காந்தி காலத்தில்தான் 'Operation Bluestar' நிகழ்ந்தது. இந்தியப் படை பொற்கோவிலுக்குள் சென்று பிந்தரன்வாலே மற்றும் அவன் ஆட்களை ஒழித்தனர். அரசியல் காரணத்தால் பிந்தரன்வாலே இந்திரா அரசினால் ஒரு காலத்தில் உருவாக்கப்பட்டவன்தான் - அமெரிக்கா‌ ஒரு காலத்தில் ரஷ்யாவிற்கு எதிராக பின்லேடனை உருவாக்கியதைப் போல. இரண்டுமே வளர்த்த கிடா மார்பில் பாய்ந்த கதை.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

இந்திரா காந்தி காலத்தில்தான் 'Operation Bluestar' நிகழ்ந்தது. இந்தியப் படை பொற்கோவிலுக்குள் சென்று பிந்தரன்வாலே மற்றும் அவன் ஆட்களை ஒழித்தனர். அரசியல் காரணத்தால் பிந்தரன்வாலே இந்திரா அரசினால் ஒரு காலத்தில் உருவாக்கப்பட்டவன்தான் - அமெரிக்கா‌ ஒரு காலத்தில் ரஷ்யாவிற்கு எதிராக பின்லேடனை உருவாக்கியதைப் போல. இரண்டுமே வளர்த்த கிடா மார்பில் பாய்ந்த கதை.

 

ராஜீவகாந்தி என்று சொல்கிறவர் தஜிந்தர் பால் சிங் பாகா(பா.ஜ.க. செய்தி தொடர்பாளர்) அவருக்கே ஒரு செய்தியை சொல்வதில் தடுமாற்றம் என்றால் என்னத்தை சொல்லுறது.....சுப.சோமர்.....!  😄

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அவர்கள் பதிவிட்ட செய்தி நமக்குத் தெரிந்தமையால், மேலோட்டமாக வாசித்ததில் தஜிந்தர் சிங் பெயர் வரும் இரண்டாம் பத்தியைக் கவனிக்கவில்லை. நீங்கள் வேடிக்கையாய்க் கேட்டதற்கு நான் முனைப்புடன் பதிலிறுத்துவிட்டேன். எனினும் தஜிந்தர் சிங் குறிப்பிடுவது, இந்திரா காந்தியின் Operation Bluestarக்கு பழி வாங்கும் விதமாக இந்திரா தமது மெய்க்காப்பாளராயிருந்த இரண்டு சீக்கியர்களால் கொல்லப்பட்டவுடன் வெடித்த கலவரத்தில் ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டதை, என நினைக்கிறேன். இந்திரா மறைந்ததும் உடனே ராஜீவ் காந்தியைப் பிரதமராக்கித் தீவிர அரசியலுக்கு இழுத்து வந்தார்கள். டெல்லி கலவரம் காங்கிரஸின் முக்கியப் பிரமுகர்களாலேயே அரங்கேற்றப்பட்டது. அப்போது கொலைகாரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. "ஒரு பெரிய ஆலமரம் விழும்போது பூமி அதிரத்தான் செய்யும்" என்று பிரதமர் ராஜீவ் வேறு திருவாய் மலர்ந்தருளினார்.

 

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

பொற்கோவிலுக்குள் சென்று சீக்கியர்களை கொன்றது இந்திரா காந்தியா,ராஜிவ் காந்தியா எந்தக் காந்தி  கன் எடுத்தவர்  ஒரே குழப்பமாக இருக்கு......!   🚀

மோடி சொல்வதில் அர்த்தமிருக்கிறது.

சீக்கியர்களின் புனிதமான பொற்கோயிலுக்குள் தனது ராணுவத்தை அனுப்பி, தீவிரவாதிகளைக் கொல்கிறேன் என்கிற போர்வையில் பல அப்பாவிகளின் உயிர்களையும் சேர்த்தே பறித்தவர்தான் இந்திரா. இதனாலேயே அவர் தனது சீக்கிய மெய்ப்பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆனால், இந்திராவின் கொலைக்குப் பின்னர், அதற்குப் பழிவாங்குவதற்காக ராஜீவ் காந்தியும் அவரது இந்திரா காங்கிரஸ் அமைச்சர்கள் சிலரும் சேர்ந்து தில்லி அடங்கலாக வட மாநிலங்கள் பலவற்றில் சீக்கியர்களுக்கெதிரான வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு சுமார் பத்தாயிரம் சீக்கிய அப்பாவிகளைக் கொன்று குவித்தார்கள். இது இன்றுவரை காங்கிரஸால் மறைக்கப்பட்டு வரும் ஒரு இனவழிப்பு நடவடிக்கை. சீக்கியர்களைடம் இதுபற்றி விசாரித்துப் பார்த்தால் ராஜீவின் உண்மையான முகம் தெரியும். அந்த முகத்தின் இன்னொரு பக்கத்தை அவரது ராணுவம் 1987 இல் இருந்து 1990 வரை ஈழத்தில் செய்துகாட்டியது.

ஆனால், இதைச் சொல்வதற்கு இந்துப் பயங்கரவாதி மோடிக்கு எந்த அருகதையும் கிடையாது. குஜாரத்தில் இவர் முதலமைச்சராக இருந்த காலத்தில்தான் முஸ்லீம்களுக்கெதிரான வன்முறையைத் திட்டமிட்டு நடத்திக் காட்டினார்,. பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்களைக் கொன்று குவித்ததில் இவரது ஏவலும் பங்கும் இருக்கிறது. 

குஜராத்தில் மோடி தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கொடூரமாகக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து 2005 இல் அமெரிக்கா தனது நாட்டுக்குள் நுளைய மோடிக்குத் தடை வித்திதிருந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்

கமலுக்கு நன்றி. (மறைக்கப்பட்ட உண்மைகளை அவரவர் வாயால் வெளிக் கொண்டு வருவதற்கு.)

சொக்கத்தக்கம் சோனியா ஈழத்தில் நிகழ்த்திய இனப்படுகொலை.. மாமியார்.. கணவர் வழியில் வந்தது என்பது வெளிப்படை உண்மை.

இதில் சில ஹிந்திய தீவிரவாதிகள்.. அது பழிவாங்கலாம். ராஜீவ் காந்தி என்பவர்.. உண்மையில்.. தண்டிக்கப்பட வேண்டிய ஒரு கொடூர இனப்படுகொலையாளன் என்பதே சர்வதேச நீதிச் சட்டம் ஒழுங்காக அவர் மீது விசாரணை செய்திருந்தால்.. வந்திருக்கும் தீர்ப்பாக இருக்கும். 

அதேபோல்.. சோனியாவும் சர்வதேசச் சட்டங்களால் தண்டிக்கப்பட வேண்டிய ஒருவர்.. சொறீலங்கா இனப்படுகொலையாளர்களுடன் சேர்த்து. 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.