Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"He will not waste a single bullet on a civilian like me" - Anita Pratap

Featured Replies

இது மீள்பதிவு. இறுதிப்போர்க் காலகட்டத்தில், புலிகள் தப்ப விரும்பிய தமிழ் மக்கள்மீதே தாக்குதல் நடத்தினார்கள் போன்ற அயோக்கியத்தனங்களுக்கு...

"He will not waste a single bullet on a civilian like me" - Anita Pratap

இதனை எழுதக்கூடாது என்று நினைத்திருந்தேன். ஏன் என்று பிறகு சொல்கிறேன்.

என் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த போது, அனிதா பிரதாப் அவர்களை ஒரு நிகழ்வுக்கு அழைத்திருந்தார்கள். (அனிதா பிரதாப் முதன்முதலாக தலைவர் பிரபாகரனை பேட்டி கண்டவர். இதுவரை அதிக அளவில் பேட்டி கண்டவரும் அவரென்று தான் நினைக்கிறேன்) அவருக்கு தேவையானவற்றை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டிருந்தது. அனிதா பிரதாப், ரொம்பவே இனிமையானவர் என்றாலும், 2009க்குப் பிறகு, Anti-LTTE ஆக மாறியவர்களில் அவரும் ஒருவர் என்று கேள்விப்பட்டதால், ஒரு நெருடல் இருந்துகொண்டே இருந்தது. எனவே, கலந்துரையாடலின் போது, அவரிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் என்று நான் கொடுத்தவை பெரும்பாலும் விடுதலைப் புலிகள் சார்ந்தவை தான். அப்போது அவரிடம் ராஜிவ் காந்தி கொலை பற்றி ஒரு மாணவர் கேள்வி எழுப்பினார். (நான் கொடுத்த கேள்வியா என்று நினைவில்லை)

அதற்கு அவர் கூறிய பதில்,

"ராஜிவ் காந்தி கொலைக்குப் பிறகு வைக்கப்பட்ட ஜெயின் கமிஷனிலிருந்து என்னுடைய ஸ்டேட்மெண்டையும் கேட்க வந்திருந்தார்கள். நான் பிரபாகரனிடம் இதைப்பற்றி கேட்ட போது, 'அவர் அந்த கேள்விக்கு பதிலளிக்காமல் சிரித்தார். என்னிடம் அவர் இதுவரை பொய் பேசியது கிடையாது. எனவே, நான் விடுதலைப் புலிகள் தான் ராஜிவ் காந்தியைக் கொன்றது என்று நம்புகிறேன்' என்றேன். ராஜிவ் காந்தி ஈழத்தில் செய்த அநியாயங்களை நேரில் பார்த்தவள் நான். இப்படி நான் சொன்னதும், கமிஷனில் இருந்து வந்தவர்கள், 'அது எவ்வளவு பெரிய இயக்கம். அவர்களுக்கு இங்கும் கூட உளவாளிகள் இருக்கலாம். நீங்கள் இப்படி எங்களிடம் கூறியது தெரிந்தால், உங்களை அவர்கள் கொலை செய்துவிடுவார்கள்' என்று கூறினார். நான், 'அவர் என்னைப்போன்ற ஒரு சாமானியனின் மீது ஒரு தோட்டாவினைப் பயன்படுத்தி அதனை வீணடிக்க மாட்டார் (He will not waste a single bullet on a civilian like me)' என்று பதிலளித்து, பாதுகாப்பு எல்லாம் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். இந்த நூற்றாண்டு கண்ட உண்ணதமான இயக்கம் விடுதலைப் புலிகள். அவ்வளவு ஒழுக்கமான (disciplined) இயக்கம் அது. இதே போன்று, மும்பை கலவரம் பற்றி என்னிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, பால் தாக்கரே தான் கலவரத்திற்கு காரணம் என்று நான் சொன்னேன். அதன் பின் அவரிடம் இருந்து பல்வேறு கொலை மிரட்டல்கள் வந்தன. எனவே, ஒரு மாதம் காவல் துறை பாதுகாப்போடு வீட்டிலேயே இருந்தேன்"

என்றார்.

ராஜிவ் காந்தியின் கொலை பற்றிய பதிலில் நம் பலருக்கும் மாற்றுக்கருத்து உண்டு. ஆனால், அவர் விடுதலைப் புலிகள் மீது வைத்திருந்த நம்பிக்கை, அது தான் விடுதலைப் புலிகள் இயக்கம். என்னுடைய கல்லூரி மலையாளிகள் நிறைந்தது. மலையாளிகள் பொதுவாகவே விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அனிதா பிரதாப்பும் ஒரு மலையாளி தான். அன்றைக்கு அவர் விடுதலைப் புலிகளைப் பற்றி தவறாக பேசி இருந்தால், அதிகபட்சம் தமிழ் மாணவர்களால் கேள்விகளை கேட்டு கோஷங்களை மட்டுமே எழுப்பி இருக்க முடியும். ஆனாலும், அங்கு அவர் விடுதலைப் புலிகளைப் பற்றி "அவர்கள் விடுதலைக்காக போராடினர். அதற்காகவே மடிந்தனர்" என்று சொன்னார்.

அவர் விடுதலைப் புலிகளைப் பற்றியும், தலைவரைப் பற்றியும் பேசிய ஒவ்வொன்றையும் வீடியோ ஆவணமாகச் செய்ய வேண்டுமென்று ஆசை. அதனால் தான் அதனை எழுதியது கிடையாது.

இன்றைக்கு மண்டை வீங்கிகள் மீண்டும் நம்மை பிராண்ட ஆரம்பித்ததிருக்கிறார்கள். தவறினை ஒத்துக்கொள்ள முடியாதவர்கள், கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாதவர்கள், ஓர் உன்னதமான போராட்டத்தை இழித்துப் பேசுகிறார்கள். மே மாதமும், நவம்பர் மாதமும் எப்போதுமே உணர்ச்சிகரமானது. அதுவும் நினைவேந்தலின் போது, எந்தக் கடலுக்காக, கடலுக்கு அப்பால் இருக்கும் மக்கள் கொன்றொழிக்கப்பட்டனறோ, அதே கடலில் நின்று அவர்களது நினைவினை ஏந்தி, மனதில் தமிழீழத்தின் தேவையை ஏந்தும், உணர்வுமிக்க நாள். ஒருவருடைய துக்கத்தில் கலந்து கொள்வது தான் தமிழர் மரபு; மனிதப் பண்பு. கவலைப் படாதீர்கள், உங்கள் வீடுகளில் துக்கம் நடக்கும் போது, பிணத்தின் எலும்புகளை நாங்கள் எண்ண மாட்டோம். நாங்கள் தமிழர்கள்; மனிதர்கள். பிணந்தின்னி கழுகுகள் அல்ல.

நாளை நினைவேந்தல். தமிழர் கடலில் கூடுவோம்.

#Justice4TamilGenocide

 

https://m.facebook.com/story.php?story_fbid=2358724101032341&id=100006843225344

 

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி அபராஜிதன்.

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி அபராஜிதன்......!  

நன்றி

Edited by raja.m1982

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.