Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்கள் ஏற்கக்கூடிய தீர்வு யோசனையை முன்வைத்தால் புலிகளை பலவீனமடையச் செய்யலாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் ஏற்கக்கூடிய தீர்வு யோசனையை முன்வைத்தால் புலிகளை பலவீனமடையச் செய்யலாம்

[26 - April - 2007]

-சோசலிச மக்கள் முன்னணி தெரிவிப்பு

-டிட்டோகுகன்-

இனப் பிரச்சினைக்கு தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை முன்வைத்து விடுதலைப் புலிகளை அதனுள் சிக்கவைக்கும்போதே, அவர்களை ஆயுதங்கள் மூலமும் பலவீனமடையச் செய்ய முடியுமென சோசலிச மக்கள் முன்னணி சுட்டிக் காட்டுகிறது.

லங்கா சமசமாஜ கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கை மக்கள் கட்சி உட்பட 5 கட்சிகள் இணைந்து ஏற்படுத்தியிருக்கும் சோசலிச மக்கள் முன்னணி நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இக்கருத்து தெரிவிக்கப்பட்டது.

பேராசிரியர் விதாரண

இம்மாநாட்டில் உரையாற்றிய லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவிக்கையில்;

இனப் பிரச்சினைக்கு பிளவுபடாத நாட்டிற்குள் அரசியல் தீர்வொன்றை முன்வைக்க வேண்டியுள்ளது. சுருக்கமாகச் சொன்னால் பிரிவினைவாதம் தோற்கடிக்கப்பட வேண்டும். இதை நிறைவேற்ற நாம் முன்வைக்கும் யோசனை கட்டாயம் தமிழ் மக்களுக்கு திருப்தியளிக்க வேண்டும்.

இதேநேரம், இந்த யோசனையை இரு பிரதான கட்சிகளும் ஏற்றுக் கொண்டு பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும். இதன்மூலம் இதில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மேற்குறித்த யோசனை மூலம் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறானதொரு சூழ்நிலை ஏற்பட்டால் மாத்திரமே தமிழ் மக்கள் புலிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டிய நிலைமை ஏற்படாது.

ஒற்றையாட்சி, சமஷ்டி முறை என்பவற்றுக்கு தற்போது பல அர்த்தங்கள் கூறப்படுகின்றன. இந்த சொற்களுக்காக நாம் பொது இணக்கப்பாடொன்றுக்கு வருவதை நிறுத்த வேண்டியதில்லை. வெகுவிரைவில் சமாதான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.

புலிகளின் தேவைகளை நிறைவேற்றுவதை தடுக்கவும் பிரிவினைவாதத்தை முறியடிக்கவும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளும் தீர்வு யோசனையை தயாரிக்க வேண்டும். அதன்மூலம் புலிகளின் பிரிவினைவாதத்தை தோற்கடித்து ஒரே நாட்டிற்குள் தீர்வு காண முடியும்.

தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வுத் திட்டத்தை முன்வைத்து பேச்சுக்கு செல்லும்போது புலிகள் அதிலிருந்து விலகிச் செல்வார்களாயின் தமிழ் மக்கள் புலிகளுக்கான ஆதரவை தானாகவே விலக்கிக் கொள்வார்கள்.

அப்போதுதான் புலிகளை ஆயுதம் மூலமும் தோற்கடிக்க முடியும் என்றார்.

டியூ குணசேகர

இதேவேளை, கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான டியூ குணசேகர இங்கு பேசுகையில்;

இனப் பிரச்சினைக்கு அடுத்த வருடத்துடன் 25 ஆண்டுகள் ஆகின்றன. இதற்கு மேலும் இதை நீடிக்க விட்டு பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

இவ்வாறான பிரச்சினை நிலவிய நேபாளம், இந்தோனேஷியா போன்ற பல உலக நாடுகள் இன்று அரசியல் தீர்வுகளின் மூலம் பிரச்சினைக்கு சுமுகமாக முடிவு கண்டு செயற்பட்டு வருகின்றன.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் இங்கு நிலவும் பிரச்சினைக்கு நாம் தீர்வு காணவில்லையெனின், சகல துறைகளிலும் நாம் மேலும் பின்னடைவை சந்திக்க வேண்டியிருக்கும்.

இலங்கையில் நிலவும் பிரச்சினையில் அரசியல் காரணிகள் இருப்பதை எவரும் கருதாமல் இதுவரை சகலரும் முற்றுமுழுதாக பயங்கரவாத பிரச்சினையாக கருதியே செயற்பட்டு வந்துள்ளனர். இது சிக்கலாக இருந்துள்ளது.

இதில் பயங்கரவாதம் இல்லாமல் இல்லை. எனினும், அரசியல் காரணிகளும் இருக்கின்றன. இவற்றை நிவர்த்தி செய்யாமல் பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியாது.

புலிகள் இன்னும் தமிழீழ கோரிக்கையை கைவிடவில்லை. மக்களைக் கொண்டு அவர்களை அதை விடுவிக்கச் செய்ய வேண்டும். பிளவுபடாத நாட்டுக்குள் தீர்வு காணப்பட வேண்டுமென்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். இதை ஏற்றுக் கொண்டு புலிகள் தமிழீழ கோரிக்கையை கைவிட வேண்டும்.

இதேநேரம், தெற்கிலுள்ள கட்சிகளிடையே பொது இணக்கப்பாடொன்று இல்லாதது இன்னுமொரு பிரச்சினை. இனப் பிரச்சினையை எந்தவொரு கட்சிக்கும் தனித்து நின்று தீர்த்துவிட முடியாது. எனவே, பொது இணக்கப்பாடு அவசியம்.

எனவே, நாட்டின் பிரதான இரு கட்சிகளான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இனப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதில் பொது இணக்கப்பாடொன்றை ஏற்படுத்தி செயற்பட வேண்டும்.

ஜே.வி.பி.யும் இனப் பிரச்சினையால் உழைக்கும் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை உணர்ந்து அரசியல் தீர்வொன்றின் மூலம் இதை முடிவுக்குக் கொண்டு வர ஆதரவளித்து செயற்பட வேண்டும்.

இது புலிகளின் பிரச்சினையில்லை. தமிழ் மக்களின் பிரச்சினை. எனவே, புலிகள் அல்லாத ஏனைய தமிழ் கட்சிகள் புலிகளை விமர்சிப்பதை நிறுத்திவிட்டு தீர்வு யோசனைகளை முன்வைக்க வேண்டும்.

புலிகளை அரசியல் ரீதியாக சிக்கவைக்கும் போது, அவர்களை ஆயுத ரீதியிலும் பலவீனமடையச் செய்ய முடியும். இதுவே உலகமெங்கிலும் நடக்கிறது என்றார்.

வாசுதேவ

இதேநேரம், சகல மக்களும் ஏற்றுக்கொள்ளும் தீர்வொன்றை முன்வைக்கும்போது, புலிகள் அதிலிருந்து விலகிச் செல்ல முற்பட்டால் அவர்கள் மக்களிடமும் சர்வதேசத்திடமும் சிக்கிக் கொள்வார்களென தெரிவித்த ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளர் வாசுதேவ நாணயக்கார, மத்திய அரசிற்கு பூரண அதிகாரங்களுடன் பிராந்திய அரசாங்கங்கள் நிர்வாக நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் தீர்வு யோசனை முன்வைக்கப்பட வேண்டுமெனவும் கூறினார்.

தினக்குரல்

எலும்புத்துண்டுக்கு ஆசைப்படும் எச்சை இலையில சப்பிடிற சந்ததி இல்லை தமிழினம்

புலி இல்லாத தீர்வு தமிழனௌக்கு தேவை இல்லை எம்மியக்கம் எம் உயிர் பெற்றுத்தராமல் எமக்கு எந்த எலும்புத்துண்டும் தேவையில்லை

அப்படி கதைப்பது அவர்களின் அறியாமை

  • கருத்துக்கள உறவுகள்

எதையாவது வைத்து முதலில் உங்களிடம் எலும்புத்துண்டுக்கு அலைபவர்களைத்திருத்திப்படுத

அப்பு நல்லா சொன்னீர் இவங்களுக்கு

சமஷ்டி ஆட்சித் தீர்வுத் திட்டத்தைக் கைவிட்டு தனித் தமிழீழம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசியத்தலைவர் சென்ற மாவீரர் உரையில் தெரிவித்துள்ளார். ஆனால் சிங்கள அரசு தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைத்தால், புலிகள் அதனை முற்றாக ஏற்காவிடினும் பேச்சுவார்த்தைக்குப் போகவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகலாம்.

ஆனால் சிங்கள் அரசு இப்போதைக்கு தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்து இனவாதிகளின் அனுமதியைப் பெறுவது சந்தேகமே.

புலிகள் அதற்குள், திர்வுத் திட்டத்தின் அவசியத்தை இல்லாமல் ஆக்கினால்........

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசு தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைத்தால்இ புலிகள் அதனை முற்றாக ஏற்காவிடினும் பேச்சுவார்த்தைக்குப் போகவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகலாம்.

ஆனால் சிங்கள் அரசு இப்போதைக்கு தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்து இனவாதிகளின் அனுமதியைப் பெறுவது சந்தேகமே.

புலிகள் அதற்குள்இ திர்வுத் திட்டத்தின் அவசியத்தை இல்லாமல் ஆக்கினால்........

இறுதிப்போரென்று வரும் போது சிங்களத்திற்கு கடைசியாக உள்ள ஒரேயொரு வழி தீர்வை முன்வைத்தல்தான்.

நிச்சயமாக முன்வைப்பார்கள்.

அந்தத்திட்டமும்இப்போதே தயாராக இருக்கும்.

ஆனால் அதை ஏற்பது யார்???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவையும் உவையின்ரை அறிவும்.. உவையின்ரை யோசனையிலை கொள்ளி வைக்

யாரிவர்கள். எலும்புத் துண்டு கூட இவர்களிடமில்லை. இவர்கள் தமிழருக்குக் கிடைக்க வேண்டிய தீர்வைப் பற்றிக் கதைப்பதற்கு மண்டையில் சரக்கில்லாதவர்கள். காலங் காலமாக இதைத்தானே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பேரினவாத சிந்தனையை மீறி ஏதாவது நடந்துள்ளதா? சோசலிச மக்கள் முன்னணி தனது இருப்பைத் தெரிவிப்பதற்காகவே இந்தக் கருத்தை முன்வைக்கின்றார்கள். தமிழரின் பலத்தை தமிழரிடமிருந்து பிரிப்பதற்கு இவர்கள் எடுக்கும் முயற்சி அவர்களது முட்டாள் தனத்தைத்தான் காட்டுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி சும்மா சும்மா கதைத்தால் தானே சர்வதேசத்தையும் ஏமாற்றலாம், நிறைய ஆயுதமும் வாங்கலாம், மோட்டு சிங்களவனையும் ஏமாற்றலாம்

இவங்களுக்கு அடி உதவுறது மாதிரி வேறு ஒண்டும் உதவாது :angry:

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமிக் கட்டமைப்பையே இல்லாமல் செய்தவை. வட கிழக்கு இணைப்பையே இல்லாமல் செய்தவை. முதலில் எதாவது ஒரு சிறு தீர்வைச் சொன்னால், புத்தபிக்குகளும், ஜேவிபியும், சிங்கள பேரின வாதிகளும் , இதனால் தமிழர்களுக்கு தமிழீழம் கிடைக்கும் என்று கத்த, அந்தத் தீர்வுத்திட்டமும் காணாமல் போகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலங்கடந்த சுடலை ஞானம். இதேமாதிரியொரு ஞானம் ஒரு நாற்பது வருசத்துக்குமுதல், அதாவது எங்கட பாட்டன், பூட்டன் கொப்பாட்டன் காலிமுகத்திடலில உண்ணாவிரதமிருக்கேக்க வந்திருந்தால், ஒருவேளை தமிழர்கள் போராட்டத்தை கைவிட்டிருக்க வாய்ப்பிருக்கு. ஆனால் இப்ப சொல்லி????

இதேபோல இன்னுமொரு நாப்பது வருசம் போனபிறகு என்ன சொல்லுவினம் தெரியுமோ? இலங்கை ஒரு நாடாக இருக்கிறதுக்கான அரிய சந்தர்ப்பம் 2002ம் ஆண்டு யுத்தநிறுத்தம் அதை கைநழுவ விட்டபடியால்தான் இப்படி இரண்டு தேசங்கள் இந்தத் தீவில வரக்காரணம் எண்டு புலம்போ புலம்பெண்டு புலம்புவினம்.

நீங்கள் தீர்வு யோசனை வைக்கப் போறீங்களா...........? நடக்கிற காரியமா எதும் பேசுங்கப்பா, 58 வருடம் தீர்வு வச்சு வச்சு களைச்சுப் போய்த்தானே இருக்குறீங்கள், நீங்கள் அப்படி தவறி தீர்வை முன் வச்சாளும் அதை புலிகளிடம்தான் வைக்க வேண்டும், நீங்கள் வச்சால் அது எப்படியும் லூசுத்தனமாகத்தானிருக்கும், அதை அவர்களும் ஏற்க்க மாட்டார்கள், மக்களும் ஏற்க்க மாட்டார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.