Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

6 மாதங்களுக்குப் பிறகு நனைந்தது சென்னை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

6 மாதங்களுக்குப் பிறகு நனைந்தது சென்னை

74.jpg

சென்னையில் கடும் வெயில் மற்றும் அனல் காற்று வீசி வந்த நிலையில் 6 மாதங்களுக்குப் பிறகு இன்று மழை பெய்து குளிர்வித்துள்ளது. #chennairains என்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளது.

தமிழகம் போதிய மழை இல்லாத காரணத்தால், கடும் வறட்சியைச் சந்தித்துள்ளது. சென்னையில் நிலத்தடி நீர் குறைந்து வருவதால் மக்கள் தண்ணீருக்காக இரவு பகலாக காலி குடங்களுடன் காத்திருக்கும் அவலம் அன்றாடம் நிகழ்கிறது. வெப்ப சலனம் காரணமாகவும் பொதுமக்கள் யாரும் மதியம் 11 மணி முதல் 4 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், இன்று (ஜூன் 20) சென்னை பெருங்குடி, வேளச்சேரி, கிண்டி, அடையாறு, செம்மஞ்சேரி, தரமணி, போரூர், பூந்தமல்லி, தாம்பரம் பல்லாவரம் உள்ளிட்ட பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. வெப்பம் சற்று தணிந்ததால் சென்னை மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 6 மாதங்களுக்கு பிறகு மழை பெய்ததால் பலரும் மழையைப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் #chennairains ஹேஷ்டாக் இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளது.

இந்நிலையில், “வடக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், சென்னை உட்பட வட மாவட்டங்களில், அடுத்த 2 நாட்களும் மழை பெய்ய வாய்ப்புள்ளது” என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வானிலையைக் கணித்துச் சொல்லும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், மழை தொடருமா என்பது தொடர்பாகத் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “சென்னையில் தற்போது பெய்து வரும் மழை 6 நாட்களுக்குத் தொடர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்திற்கு குட் பை” என பதிவிட்டுள்ளார்.

 

https://minnambalam.com/k/2019/06/20/74

  • கருத்துக்கள உறவுகள்

தொட்டியை,கிட்டியை கட்டி இந்த நீரை சேமிக்கலாமே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
58 minutes ago, ரதி said:

தொட்டியை,கிட்டியை கட்டி இந்த நீரை சேமிக்கலாமே!

இதுக்குதான் தங்கச்சி! ஒழுங்கான அரசியலைமைப்பு அரசியல் தலைவர்கள் வேணும் எண்டுறது.

சீமானையும் ஒருக்கால் மேடையேத்தி பாக்கலாமே :cool:

சென்னைக்கு அடுத்தாண்டு முதல் நிலத்தடி நீர் கிடைக்காது

TamilNews_Jun18_2019__523525416851044.jpg

சென்னை, பெங்களூரு உட்பட 21 நகரங்களில் அடுத்த ஆண்டு நிலத்தடி நீர் இருக்காது. கடும் தண்ணீர் பஞ்சம் நிலவும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு இதே நிலைதான் நீடிக்கும் என்று நிதி ஆயோக் அதிர்ச்சி தகவல்  தெரிவித்துள்ளது.தமிழகம் முழுக்க தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அல்லல்படுகின்றனர். குடிநீர் வழங்கும் ்ஏரிகள் வறண்டு விட்டன. இந்த நிலையில், நிதி ஆயோக் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:நாட்டின் பல பகுதிகளிலும் நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. 2020ம் ஆண்டில் டெல்லி, பெங்களூரு, சென்னை, ஐதராபாத் உட்பட 21 நகரங்களில் நிலத்தடி நீர் சுத்தமாக இருக்காது. வறண்டு போய்விடும். 10 கோடி மக்கள் இதனால்  பாதிக்கப்படுவார்கள். சென்னையில் 3 ஆறுகள், குடிநீர் வழங்கும் 4 முக்கிய ஏரிகள், 6 காடுகள் உள்ளன. மற்ற மெட்ரோ நகரங்களில் கூட இந்த அளவுக்கு மழை மற்றும் தண்ணீர் ஆதாரங்கள் இல்லை. ஆனாலும் சென்னையில் கடும் வறட்சி காணப்படும். 
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=504290

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

இதுக்குதான் தங்கச்சி! ஒழுங்கான அரசியலைமைப்பு அரசியல் தலைவர்கள் வேணும் எண்டுறது.

சீமானையும் ஒருக்கால் மேடையேத்தி பாக்கலாமே :cool:

அதுக்கு என்னத்துக்கு சீமான்?...இயலுமானவர்கள் தங்கள் வீடுகளில் தொட்டி கட்டலாம் 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ரதி said:

அதுக்கு என்னத்துக்கு சீமான்?...இயலுமானவர்கள் தங்கள் வீடுகளில் தொட்டி கட்டலாம் 

ரதி... தண்ணீர் பிரச்சினையை, ஒருவர் தனது வீட்டில் மட்டும், தொட்டி கட்டி தீர்க்க முடியாது.
இந்தப் பிரச்சினையை  அணுகுவதற்கு.. மாநில அரசாங்கம், மாநகரசபை என, 
அரச அலுவலங்களின்  ஒத்துழைப்பு இல்லாமல் சாத்தியம் இல்லை.  

சீமான்...  இப்போது, கட்சி தலைவர் மட்டுமே...
அவரால்.. செய்ய வேண்டிய திட் டங்களை, மட்டுமே சொல்ல முடியும்.  :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ரதி said:

அதுக்கு என்னத்துக்கு சீமான்?...இயலுமானவர்கள் தங்கள் வீடுகளில் தொட்டி கட்டலாம் 

அரசியல் அரசமைப்பு என்னத்துக்கு வேண்டும் என நீங்கள் உணர்கின்றீர்கள் தாயே?

 

சென்னையின் வறட்சி நிலை குறித்து கவலைப்படும் டைட்டானிக் பட ஹீரோ லியனார்டோ டிகாப்ரியோ!

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.