Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்­கை­யி­ட­மி­ருந்து பெரு­ம­ளவு இரா­ணுவ சலு­கைகளை அமெ­ரிக்கா நாடு­கி­றது - உடன்­ப­டிக்கை வரைபில் தக­வல்கள்

Featured Replies

அமெ­ரிக்­கா­வா­னது  படை­களின் நிலைப்­பாடு தொடர்­பான உடன்­ப­டிக்­கையின் கீழ் இலங்­கை­யி­ட­மி­ருந்து பெரு­ம­ளவு இராணுவ சலு­கை­களை நாடு­வ­தாக தகவல் வெளியா­கி­யுள்­ளது.

தற்­போது அந்­நாட்­டுக்கும் இலங்­கைக்­கு­மி­டையில் பேச்­சு­வார்த்­தை­களின் கீழுள்ள  படை­களின் நிலைப்­பாடு தொடர்­பான  அந்த உடன்­ப­டிக்கை வரைபின் பிர­தி­யொன்றின் மூலமே மேற்­படி தகவல் அறி­யப்­பட்­டுள்­ள­தாக  இலங்­கையின்  முன்னணி  ஆங்­கிலப் பத்­தி­ரி­கை­யொன்று தெரி­விக்­கி­றது.

அந்த உடன்­ப­டிக்­கையில் அமெ­ரிக்­காவால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள கோரிக்­கை­களில் பல இலங்­கையின் இறை­யாண்மையைப் பாதிப்­ப­ன­வாக உள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

அமெ­ரிக்க விமா­னங்­களும்  கப்­பல்­களும் தரித்­தி­ருத்தல் மற்றும் பரி­சோ­த­னை­யி­லி­ருந்து  விடு­விக்­கப்­ப­டு­வதை அமெ­ரிக்கா நாடு­கி­றது. 

download.jpg

இதன் பிர­காரம்  சர்­வ­தேச ரீதியில்  அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட  ஒரு நாட்­டுக்­கான இறை­யாண்மை உரி­மையின் கீழ் இந்­நாட்டின் கடற்­படை, கரை­யோர காவல் படை, சுங்கப் பிரிவு உள்­ள­டங்­க­லான பாது­காப்பு பிரி­வுகள் எதுவும் இலங்கைத் துறை­மு­கங்­களை வந்­த­டையும் அமெ­ரிக்க இரா­ணுவ கப்­பல்கள் மற்றும் இலங்கை விமான நிலை­யத்தில் தரை­யி­றங்கும்  விமா­னங்கள்  அல்­லது  தரை­யி­லுள்ள  அமெ­ரிக்க வாக­னங்கள் மற்றும் உலங்­கு­வா­னூர்­திகள் என்­பனவற்­றுக்குள் பிர­வே­சிக்க முடி­யாது. அத்­துடன் அமெ­ரிக்கா  இலங்­கைக்குள்  அனு­மதிப் பத்­திரம், சுங்க வரி­கள், வரிகள் மற்றும் ஏனைய கட்டணங்களி­லி­ருந்தும்  விதி­வி­லக்கை நாடு­கிறது.

அது­மட்­டு­மல்­லாது அமெ­ரிக்கா தனது படை­யினர் இலங்­கையின் எந்­த­வொரு பகு­தி­யிலும் கட­மையிலிருக்கும்போது  சீருடை­களை அணி­வ­தற்கும்  ஆயு­தங்கள்  மற்றும் வானொலித் தொடர்­பாடல் உப­க­ர­ணங்­களை ஏந்திச் செல்­வ­தற்கும் அங்கீகா­ர­ம­ளிக்­கப்­பட வேண்டும் என விரும்­பு­கி­றது.

இலங்கை அர­சி­ய­ல­மைப்பு மற்றும்  சாதா­ரண சட்­டங்கள் ஆகிய இரண்­டி­னதும் விதி­மு­றை­களின் பிர­காரம் ஆயுதப் படையி­ன­ருக்கும் பொலி­ஸா­ருக்கும் மட்­டுமே இவற்றை மேற்­கொள்ள அதி­கா­ர­முள்­ளது.    அனு­ம­திப்­பத்­தி­ரத்தின் மூலம் அதி­கா­ரத்தைப்பெற்­றுள்ள இலங்­கை­யர்கள் மட்­டுமே  இதற்கு விதி­வி­லக்­காக உள்­ளனர்.

இதற்கு மேல­தி­க­மாக அமெ­ரிக்கப் படை­யி­னரும் ஒப்­பந்­தக்­கா­ரர்­களும்  தமது அமெ­ரிக்க அடை­யா­ளப்­ப­டுத்­தலை மட்­டுமே பயன்­ப­டுத்தி  தனி­யா­கவோ அன்றி  கூட்­ட­மா­கவோ இலங்­கைக்குள் பிர­வே­சிப்­ப­தற்கும் வெளியே­று­வ­தற்கும் அனுமதிக்கப்­பட வேண்டும் என்­பது அமெ­ரிக்­காவின் கோரிக்­கை­யா­க­வுள்­ளது.  இதன் பொருள் அவர்கள் இலங்கை வருவதற்கு  கட­வுச்­சீட்­டு­க­ளையோ அன்றி விசாக்­க­ளையோ எடுத்­து­வர மாட்­டார்கள் என்­ப­தாகும்.

படை­களின் நிலைப்­பாடு தொடர்­பான உடன்­ப­டிக்­கைக்கு  முன்னாள் வெளிநாட்டு அமைச்சின் செய­லாளர் பிரசாத் காரி­ய­வா­சத்­துடன் இணைந்து ஊக்­கு­வித்து வரும்  நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர கடந்த புதன்­கி­ழமை ஊட­க­வி­ய­லாளர் மாநா­டொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியி­டு­கையில்,  அந்த உடன்­ப­டிக்கை தீங்கு விளை­விக்­காது எனவும் அது ஆபத்­தா­ன­தல்ல எனவும் தெரி­வித்­தி­ருந்தார். அந்த உடன்­ப­டிக்­கையை இலங்கை ஏற்­றுக்­கொள்­ளா­விட்டால் அமெ­ரிக்­கா­வுக்­கான அதன் ஏற்­று­ம­தி­களை மட்­டு­மல்­லாது புதிய வேலை வாய்ப்­புக்­க­ளையும் இழக்க நேரிடும் என அவர் எச்­ச­ரித்­தி­ருந்தார்.

 அவர்கள் இரு­வரும் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி கைச்­சாத்­தி­டப்­பட்ட கைய­கப்­ப­டுத்தல் மற்றும்  குறுக்கு சேவைகள் உடன்­ப­டிக்­கைக்கும் ஆத­ர­வ­ளித்­தி­ருந்­தனர். 

அமைச்சர் சம­ர­வீர மற்றும் செய­லாளர் கா­ரி­ய­வ­சத்தால் கொடுக்­கப்­பட்ட கடும் அழுத்தம் கார­ண­மா­கவே அந்த உடன்­ப­டிக்கை வரைபு அமைச்­ச­ரவை அங்­கீ­காரத் ­திற்கு அவ­சர அவ­ச­ர­மாக கொண்டு செல்­ லப்­பட்­ட­தாக முன்னாள் பாது­காப்பு செய லாளரான பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிவித்திருந்தார்.

அந்த உடன்படிக்கை அனைத்து ஆயுதப் படையினருக்கும் அவர்களது விமர்சனத்துக் காக வழங்கப்பட்டது. இலங்கையில் கால டியெடுத்து வைக்கும் அமெரிக்கப் படையி னர் தொடர்பான கிட்டத்தட்ட அனைத்து அலகுகளையும்  உள்ளடக்கிய இணைப்பு களின் சிங்களப் பதிப்பு அமைச்சர்களின் முன்பாக  வைக்கப்படவில்லை. ஆங்கிலப் பதிப்பு மட்டுமே முன்வைக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/59450

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி யுத்த வகிபாகம் .

  • தொடங்கியவர்

சீன அரசிற்கும் அமெரிக்க அரசிற்கும் இடையில் ஆசிய நாடுகள் உட்பட உலகில் பொருளாதாரா போட்டி வலுவடைந்து உள்ளது. 2020இல் ட்ரம்ப் மீண்டும் தலைவராக தெரிவானால் இந்த போட்டி வலுவடையும். 

ஆனால், இதுவே ஒரு இராணுவ, உலக சண்டையாக மாறும் சாத்தியங்கள் குறைவு. அவ்வாறான சாத்தியத்தை குறைக்க அமெரிக்க அரசு ஆசியாவில் தனது இராணுவ பலத்தை அதிகரித்து வருகின்றது. அவுஸ்திரேலியாவில் ஒபாமா அரசு ஒரு இராணுவ தளத்தை முதல் முதலாக ஆரம்பித்தது. ஜப்பான், தென் கொரிய நாடுகளில் பெரிய இராணுவ தளங்களை கொண்டுள்ளது. குவைத்தில் பெரிய தொகையில் இராணுவத்தை நிலை நிறுத்தியுள்ளது. 

அண்மைக்காலமாக வியட்னாம், பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கையில் தனது இராணுவ பலத்தை அதிகரிக்க முயல்கின்றது. சீன நாடு தனது பலத்தை பெருக்காமல் இருக்க அதன் பொருளாதார பலத்தை ஒடுக்க அமெரிக்க அரசு நீண்ட காலமாக ஒரு மாற்று சந்தையை தேடி வருகின்றது.  

  • தொடங்கியவர்

இலங்கையில் இராணுவத்தளம் அமைக்கும் நோக்கம் எதுவும் இல்லை - அமெரிக்கா

இலங்கையில் இராணுவத்தளம் எதனையும் அமைக்கும் திட்டம் அமெரிக்காவுக்கு இல்லை. இலங்கையுடன் எந்தவொரு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டாலும் அது இலங்கையின் இறையாண்மைக்கு முழுமையான மதிப்பை வழங்கும் வகையிலேயே மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

alina.jpg

அமெரிக்கா 'படைகளின் நிலைப்பாடு' தொடர்பான உடன்படிக்கையின் கீழ் இலங்கையிடமிருந்து பெருமளவு இராணுவ சலுகைகளை நாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன என்று ஆங்கில பத்திரிகையொன்று வெளியிட்டிருந்த செய்தி தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிஸ்ட் மறுப்பு வெளியிட்டுள்ளார். 

குறித்த பத்திரிகைச் செய்தியை மேற்கோள் காட்டி அமெரிக்க தூதுவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளதோடு இலங்கையில் அமெரிக்க இராணுவ தளமொன்றை அமைக்கும் திட்டமோ அல்லது நோக்கமோ இல்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். 

https://www.virakesari.lk/article/59510

  • தொடங்கியவர்

இன்றைய உலகின் அறுபது வீதமான கடல் பொருளாதார போக்குவரத்து இந்திய - பசுபிக் கடல் ஊடாக நடக்கின்றது என்கிறார் அமெரிக்க வெளிவிவகார செயலாளர். தனது இந்திய பிரயாணத்தில் அவர் ஆற்றிய உரையில் இதை கூறினார்.

தனது பேச்சில் 'சிறி லங்கா' வையும் குறிப்பிட்டார்.   

 

இவருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இடையில் நிச்சயம் இலங்கை  பற்றியும் பேச்சுவார்த்தை நடந்திருக்கும், அதில் சீனாவின் ஆதிக்கம் பற்றி இருவரும் தமது பொது தேவைகளை கதைத்திருப்பார்கள். 

அமெரிக்கப்படைகள் குற்றம் செய்தால் இலங்கை சட்டப்படி அவர்களை தண்டிக்க முடியாதாம் என்றும் எங்கோ வாசித்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Lara said:

அமெரிக்கப்படைகள் குற்றம் செய்தால் இலங்கை சட்டப்படி அவர்களை தண்டிக்க முடியாதாம் என்றும் எங்கோ வாசித்தேன்.

உண்மைதான் லாரா.  ஜேர்மனியில்  முன்பு  இரண்டாவது உலகப் போரின் பின் வந்த,
அதிக  அமெரிக்கப் படைகள் இருந்தது. அவர்களின்  வாகன விபத்துகளாகட்டும், 
"டிஸ்கோவில்"  தண்ணியை போட்டுட்டு பிரச்சினைகளில் ஈடுபட்டாலும்,  
அமெரிக்க போலீசாரே தமது காவல் வாகனத்தில் வந்து, அந்தப் பிரச்சினையை  அணுகுவார்கள். 

  • தொடங்கியவர்

கோத்தா சனாதிபதி வேட்பாளராக வர அமெரிக்க நாட்டில் உள்ள வழக்கு ஒரு தடை. அது இல்லாவிட்டால் அவர் போட்டியிட்டு வெல்லும் சாத்தியம் உள்ளது. 

அமெரிக்காவிற்கு சோபா உடன்படிக்கை  முக்கியம். காரணம் அது சீனாவின் 'சில்க்' வீதி பொருளாதார என்ற   முகம் கொண்ட இராணுவ விஸ்தரிப்பை தடுக்க  உதவும்.

எனவே, அமெரிக்க அரசு மகிந்த அண்ட் கோ உடன் ஒரு இரகசிய உடன்படிக்கையை, அதாவது அமெரிக்க வழக்கை கைவிட, கோத்தா வென்றபின் சீனாவின், மற்றும் உள்ளூர் கட்சிகளின்  எதிர்ப்பை மீறி, சோபாவை கைச்சாத்திடலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

எனவே, அமெரிக்க அரசு மகிந்த அண்ட் கோ உடன் ஒரு இரகசிய உடன்படிக்கையை, அதாவது அமெரிக்க வழக்கை கைவிட, கோத்தா வென்றபின் சீனாவின், மற்றும் உள்ளூர் கட்சிகளின்  எதிர்ப்பை மீறி, சோபாவை கைச்சாத்திடலாம். 

சஜித், மங்கள சமரவீர, கரு ஜெய சூரிய, ரனில் எவராவது ஜனாதிபதியானால் எந்த இரகசிய உடன்படிக்கையும் தேவை படாமலே சோபாவில் கைச்சாத்து இடுவார்களே? எதற்காக சீனாவின் உற்ற நண்பனான கோத்தபாயவுடன் அமெரிக்கா இரகசிய உடன்பாட்டுக்கு வரவேண்டும்? ஜனாதிபதியான பின் கோத்தா சீனாவுக்கு ஆதரவாக சோபாவில் கைச்சாத்திட மறுத்தால்?

 

3 hours ago, ampanai said:

கோத்தா சனாதிபதி வேட்பாளராக வர அமெரிக்க நாட்டில் உள்ள வழக்கு ஒரு தடை. அது இல்லாவிட்டால் அவர் போட்டியிட்டு வெல்லும் சாத்தியம் உள்ளது. 

இன்னொரு திரியில் நான் எழுதிய கருத்து கீழே.

கோத்தபாய ராஜபக்ச இரட்டைக்குடியுரிமையுடன் தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே அமெரிக்க குடியுரிமையை கைவிடும் முயற்சியில் இறங்கினார் (6 March இல் ஆரம்பித்தார்).

அந்நேரத்தில் தான் இவருக்கெதிராக வழக்கு போட்டிருந்தார்கள். இப்பொழுதும் போட்டுள்ளார்கள்.

கோத்தா 17 April அன்று அமெரிக்க கடவுச்சீட்டையும் ஏனைய தேவையான பத்திரங்களையும் அமெரிக்க தூதரகத்தில் கையளித்து விட்டார். எனவே அமெரிக்க குடியுரிமையை இழந்ததற்கான ஆவணத்தை இவருக்கு வழங்க வேண்டும். அதை ஏற்கனவே வழங்கி விட்ட மாதிரியும் கதை அடிபடுது, இன்னும் வழங்கவில்லை என்றும் சொல்லினம். எது உண்மையோ? 

அமெரிக்காவில் இவருக்கெதிராக வழக்குகள் இருந்தாலும் அது அமெரிக்க குடியுரிமையை கைவிடும் நடவடிக்கையில் தாக்கம் செலுத்தாமல், கைவிட்ட பின் அவ்வழக்குகளை சந்திக்கக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது.

https://yarl.com/forum3/topic/229024-எந்த-தாக்கத்தையும்-செலுத்தாது/?tab=comments#comment-1385266

 

4 hours ago, Jude said:

சஜித், மங்கள சமரவீர, கரு ஜெய சூரிய, ரனில் எவராவது ஜனாதிபதியானால் எந்த இரகசிய உடன்படிக்கையும் தேவை படாமலே சோபாவில் கைச்சாத்து இடுவார்களே? எதற்காக சீனாவின் உற்ற நண்பனான கோத்தபாயவுடன் அமெரிக்கா இரகசிய உடன்பாட்டுக்கு வரவேண்டும்? ஜனாதிபதியான பின் கோத்தா சீனாவுக்கு ஆதரவாக சோபாவில் கைச்சாத்திட மறுத்தால்?

கோத்தா அமெரிக்காவின் நண்பனும் கூட. அமெரிக்க இராணுவத்துடன் தொடர்புகளை பேணி வருபவர். ட்ரம்பின் ரசிகர் வேறு. 😎

2007 ஆம் ஆண்டு மகிந்த ஜனாதிபதியாக இருந்த போது கோத்தா அமெரிக்காவுடனான ACSA ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டவர். (அவ் ஒப்பந்தம் காலாவதியானதும் 2017 இல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது). கோத்தா ஜனாதிபதியாக வந்தால் SOFA இலும் கையெழுத்து போடக்கூடும்.

Edited by Lara

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.