Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘ அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படமாட்டாது’

Featured Replies

நாட்டில் அமுலில் இருக்கும் அவசரகாலச் சட்டத்தை, இனியும் நீடிக்கப்போவதில்லை என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திலிருந்து பதவி விலகிய அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன், ஏ.எச்.எம். பௌஸி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா உள்ளிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் எம்.பிக்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று, நேற்று (09) இரவு இடம்பெற்றது.  

இதன்போது, நாட்டில் அமுலில் இருக்கும் அவசரகாலச் சட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இலக்கு வைக்கப்படுவதாகவும் துன்புறுத்தப்படுவதாகவும், ஜனாதிபதியிடம் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.  

இதன்போதே, அவசரகாலச் சட்டத்தை இனியும் நீடிக்கும் எண்ணமில்லை என்று, ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.   

இதேவேளை, பிரசவத்துக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு, அவர்களின் பிரசவத்துக்குப் பின்னர், மீண்டும் கர்ப்பம் தரிக்க முடியாத வகையில் கர்பத்தடைச் சத்திர சிகிச்சையை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருந்த குருநாகல் வைத்தியசாலையில் மகப்பேற்று வைத்தியர் ஷாபி, குற்றமற்றவர் என்று, அவர் தொடர்பான விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், அவரை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றும், ஜனாதிபதியினால் இதன்போது உறுதியளிக்கப்பட்டுள்ளது.  

அத்துடன், பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள் முஸ்லிம் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், மௌலவிமார்கள் 36 பேரை, இன்றைய தினம் (09) விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ள ஜனாதிபதி, இவர்களின் விடுதலை குறித்து, சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபர், இராணுவத் தளபதி ஆகியோருடன் பேசி, உடன் நடவடிக்கை எடுக்குமாறு தான் கூறியதாகக் கூறுமாறு, பைஸர் முஸ்தபா எம்.பியிடம், ஜனாதிபதி தெரிவித்தார்.  

இதேவேளை, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் றிஸ்வி முப்திக்கு எதிராகவும் இந்நாட்டில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கு எதிராகவும், மோசடியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாகக் குற்றஞ்சாட்டிய முஸ்லிம் எம்.பிக்கள், தேரரை ஜனாதிபதியே விடுவித்துள்ளதால், இது விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு, இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.    

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/அவசரகாலச்-சட்டம்-நீடிக்கப்படமாட்டாது/150-235036

6 hours ago, ampanai said:

ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திலிருந்து பதவி விலகிய அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன், ஏ.எச்.எம். பௌஸி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா உள்ளிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் எம்.பிக்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று, நேற்று (09) இரவு இடம்பெற்றது.  

“உலகம் ஒரு நாடக மேடை, அதில் நாமெல்லாம் நடிகர்கள்” என அனைவரும் ஒற்றுமையாக கூறியிருப்பார்கள். 😎

10 hours ago, ampanai said:

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் றிஸ்வி முப்திக்கு எதிராகவும் இந்நாட்டில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கு எதிராகவும், மோசடியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாகக் குற்றஞ்சாட்டிய முஸ்லிம் எம்.பிக்கள், தேரரை ஜனாதிபதியே விடுவித்துள்ளதால், இது விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு, இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.  

அது அவரது மட்டுமல்ல, சிங்கள-பௌத்தர்களின் பாரிய நீண்டகால திட்டங்களில் ஒன்று!

ஞானசார தேரரை வெளியில் விட்டதே, அதிகரித்துச் செல்லும் முஸ்லிம்களின் கொட்டத்தை அடக்கவே. அந்த திட்டத்தில் அவர் தானே விரும்பி முன்வந்த ஒரு பலியாடு . அந்த திட்டம் கனகச்சிதமாக நிறைவேற வேண்டும் என்று முஸ்லிம்களை தவிர ஏனைய அனைவரும் ஒருமித்து உள்ளூர விரும்புகிறார்கள் என்பது ஒரு கசப்பான உண்மை!

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

அவசரகாலச் சட்டம் மீண்டும் நீடிப்பு

அவசரகால சட்டம் இன்று முதல் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்டுள்ளது.

2.jpg

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறுதினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலையடுத்து அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச்சட்டம் ஒவ்வொரு மாதமும் நீடிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு வந்த நிலையில் குறித்த அவரச காலச் சட்டம் இன்று மீண்டும் ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/60953

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.