Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வான் புலிகளை எதிர்கொள்ள அரசு வகுக்கப் போகும் வியூகம் என்ன?

Featured Replies

வான் புலிகளை எதிர்கொள்ள அரசு வகுக்கப் போகும் வியூகம் என்ன?

வான் புலிகளின் மீள் வருகைக்காக காத்திருந்த படையினரால் வான் புலிகள் மீண்டும் வந்தபோது எதுவும் செய்ய முடியவில்லை. வான் புலிகளின் தாக்குதல் ஆற்றலை முறியடிப்பதற்காக வன்னியில் விமானப் படையினர் தொடர்ச்சியாக நடத்தி வந்த தாக்குதல்களும் படைத் தளங்களில் பொருத்தப்பட்டிருந்த வான் பாதுகாப்பு பொறி முறையும் பலனளிக்கவில்லை.

கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீது அதிரடித் தாக்குதலை நடத்தியது போல் பலாலி கூட்டுப் படைத்தளம் மீதும் வான் புலிகள் இரவு நேரத்தில் பலத்த தாக்குதலை நடத்திவிட்டு பாதுகாப்பாக தங்கள் தளத்திற்கு திரும்பியதுடன், கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீது மீண்டுமொரு தாக்குதலை நடத்த முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.

முதலிரு தாக்குதலையும் மூன்றாவது தாக்குதல் முயற்சியையும் (நடந்திருந்தால்) முறியடிக்க முடியாதது விமானப் படையினரின் வான் வழித் தாக்குதல் பலவீனத்தையும் வான் பாதுகாப்புத் திட்டம் சரிவரச் செயற்படுத்தப்பட முடியாதிருப்பதையும் காட்டுகிறது.

கடந்த மாதம் 26 ஆம் திகதி கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீதான வான் புலிகளின் திடீர் தாக்குதலையடுத்தே புலிகளின் விமானப் படை குறித்து முழு உலகமும்அறிந்து கொண்டது. அந்தத் தாக்குதலையடுத்து இலங்கை அரசு தனது வான் பாதுகாப்புத் திட்டத்தை புதுப்பித்ததுடன் விமான எதிர்ப்புத் தாக்குதல் பலத்தையும் முழு அளவில் அதிகரித்திருந்தது.

இதனால், கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீதான தாக்குதல்போன்று இனியொரு தாக்குதலை புலிகளால் நடத்த முடியாதிருக்குமென்றே அரசு கருதியிருந்தது. அவ்வாறானதொரு தாக்குதலுக்கு புலிகள் முற்பட்டால் படைத்தளங்களில் பொருத்தப்பட்டிருக்கும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் அல்லது விமான எதிர்ப்பு பீரங்கிகள் புலிகளின் விமானங்களை அழித்து விடுமென்றும் இது தவறும் பட்சத்தில் விமானப் படையினர் புலிகளின் விமானங்களை துரத்திச் சென்று தாக்கி அழித்து விடுவரென்றும் அரசு கருதியது.

கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீதான தாக்குதலையடுத்து பலாலி விமானப் படைத்தளம் மீது வான் புலிகள் தங்கள் கைவரிசையைக் காட்டுவரென எதிர்பார்க்கப்பட்டிருந்த போதே இத்தாக்குதல் நடைபெற்றமை வான் புலிகளை எதிர்கொள்வதில் படையினர் பெரும் பலவீனமாயிருப்பதை காண்பித்துள்ளது.

கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்தை தாக்க வன்னியிலிருந்து வான் புலிகள் 200 கிலோமீற்றர் தூரத்திற்கும் மேல் பறந்து தாக்குதலை நடத்திவிட்டு 200 கிலோமீற்றர் தூரம் திரும்ப வேண்டியிருந்தது. இதனால், இத் தாக்குதலுக்கு வான் புலிகள் சுமார் இரு மணி நேரத்தை செலவிட்டிருந்தனர்.

கட்டுநாயக்காவுக்கு கடல் வழியால் வந்து தாக்குதலை நடத்திவிட்டு பின்னர் குடியிருப்பு பகுதிகளுக்கு மேலால் வான்புலிகள் திரும்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதேநேரம், பலாலி கூட்டுப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு வான் புலிகள் எப்படி வந்தார்களென்பதை படையினரால் இது வரை சரியாக ஊகிக்க முடியாதுள்ளது. வன்னியிலிருந்து கடல் வழியாகச் சென்று தாக்குதலை நடத்திவிட்டு கடல் வழியாகச் சென்றதாகவே படைத்தரப்புக் கூறுகிறது.

குடியிருப்புப் பகுதிகளுக்கு மேலால் செல்வதாயின் குடாநாட்டில் முகமாலை, கிளாலி, வடமராட்சி கிழக்கு முன்னரங்க காவல் நிலைகள் முதல் பலாலி வரை நிலை கொண்டுள்ள 40, 000 படையினரும் வான் புலிகளின் வானூர்திகளை அவதானித்து அது பறக்கும் திசை குறித்துக் கூறி அவற்றின் மீது தாக்குதலை நடத்தியிருப்பர். அத்துடன், பலாலி விமானப் படைத்தளத்தையும் உஷார் படுத்தியிருப்பர்.

பலாலி கூட்டுப் படைத்தளத்தை வான் புலிகள் அண்மித்ததும் அதனை அவதானித்த தரைப் படையினர் உஷாரடைந்து படைத் தலைமையகத்தை உஷார் படுத்தியதுடன் பதில் தாக்குதலைநடத்தியதாகவும் இதனால், உஷாரடைந்த வான் புலிகள் பலாலி படைத்தளம் மீது தாக்குதலை நடத்தாது தப்பிச் செல்லும் போது பலாலி படைத்தளத்தை அண்டியிருக்கும் மயிலிட்டிப் பகுதியில் இரு குண்டுகளை வீசிச் சென்றதாகவும் படைத்தரப்புக் கூறுகிறது.

வன்னியில் புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதியிலிருந்து இரு விமானங்கள் புறப்பட்டு பலாலி நோக்கி ராடர்களில் சிக்காது தாழப்பறந்து சென்றுள்ளன. இந்த வானூர்திகள் பலாலி நோக்கி வருவதை படையினர் அவதானித்த போதும் அவை வன்னியிலிருந்து வருவதாக அவர்கள் கருதவில்லையெனவும் சில தகவல்கள் கூறுகின்றன.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வருவது போலன்றி படையினரைக் குழப்பும் விதத்தில், கொழும்பிலிருந்து விமானப்படை விமானங்கள் இரவு நேரத்தில் விடுதலைப் புலிகளின் பகுதிகளில் தாக்குதலை நடத்துவதற்காக வருவது போன்று வந்து படையினரை முற்றாகக் குழப்பத்திலாழ்த்திவிட்டு குண்டுத் தாக்குதல்களை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

பத்துக் குண்டுகள் வரை பலாலி தளப் பகுதியில் போடப்பட்ட பின்பே, நிலைமையை உணர்ந்து பலாலி படைத்தளப் பகுதியில் மட்டுமல்லாது யாழ்.குடாநாடு முழுவதும் படையினர் மின்சாரத்தை துண்டித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பலாலி பகுதியில் பாரிய குண்டுச் சத்தங்கள் கேட்ட பின்பே குடாநாட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக குடாநாட்டு மக்கள் பலரும் தெரிவித்திருந்தனர்.

இத்தாக்குதலில் ஆயுதக் களஞ்சியசாலையும் இராணுவ கட்டளைத் தலைமையகக் கட்டிடங்களும் பலத்த சேதமடைந்துள்ளதாக புலிகள் தெரிவித்தனர். முதலில் இங்கு விமானத் தாக்குதலெதுவும் நடைபெறவில்லையெனவும் புலிகள் ஆட்லறி ஷெல் தாக்குதலையே நடத்தியதாகவும் கூறிய படைத்தரப்பு பல மணி நேரங்களின் பின், வான் வழித் தாக்குதல் நடைபெற்றதை ஒப்புக் கொண்டதன் மூலம் அங்கு இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து அவர்கள் தெரிவித்தவை குறித்து பலத்த சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலாலி கூட்டுப் படைத்தளத்திலேயே பாரிய ஆயுக் களஞ்சியம், இராணுவ ஆஸ்பத்திரி, கவசப் படையணித் தலைமையகம் (வடபகுதி) மற்றும் கட்டளைப்பீடங்களுள்ளன. ஹெலிகொப்டர்கள் சிலவும் இங்கு நிறுத்தப்பட்டிருக்கும். விமானப் படையினரின் பொறியியல் பிரிவொன்றும் உள்ளது.

குடாநாட்டு படையணித் தலைமையகமும் இங்குள்ள 40 ஆயிரம் படையினருக்கான விநியோக மையமும் இதுதான். குடாநாட்டில் இடம்பெறும் அனைத்துப் படை நடவடிக்கைகளுக்குமான உத்தரவுகளையும் வழங்கும் கட்டளைத் தலைமையகமும் பலாலியிலேயே உள்ளது. இதனால் பலாலி கூட்டுப் படைத்தளம் தாக்கப்படுமானால் அது குடாநாட்டில் இடம்பெறும் அனைத்துப் படை நடவடிக்கைகளையும் பெரிதும் பாதிக்கும்.

2000 ஆம் ஆண்டில் ஆனையிறவு படைத்தள வீழ்ச்சியின் பின்னர் குடாநாட்டிற்குள் நுழைந்த புலிகள் ஆட்லறி ஷெல் தாக்குதல் மூலம் பலாலி கூட்டுப் படைத்தளத்தை முற்றாகச் செயலிழக்கச் செய்த போது, 40 ஆயிரம் படையினரும் அங்கிருந்து வெளியேற வேண்டுமென்றதொரு நிலையேற்பட்டது.

அதேபோல் கடந்த வருடம் ஆகஸ்ட் மாத முற்பகுதியில் குடாநாட்டின் மீதான முற்றுகையின் போது புலிகள், ஆட்லறி ஷெல் தாக்குதல் மூலமே பலாலி கூட்டுப் படைத் தளத்தையும் காங்கேசன்துறை துறைமுகத்தையும் செயலிழக்கச் செய்திருந்தனர்.

கடந்த முறைகளில் குடாநாட்டின் மீதான முற்றுகையை ஷெல் தாக்குதல்கள் மூலம் மேற்கொண்ட புலிகள் இனிவரும் காலத்தில் வான் வழித் தாக்குதல் மூலம் குடாநாட்டை முற்றுகைக்குள் கொண்டு வந்து முடக்கி விடலாமென்று கருதப்படுகிறது.

இதேநேரம், கட்டுநாயக்க விமானப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கும் பலாலி கூட்டுப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கும் வான் புலிகளின் வானூர்திகள் மன்னாரிலிருந்தே வந்துள்ளதாக படைத்தரப்பு கருதுகிறது. புலிகளின் விமானங்கள் சிறிய இலகு ரகமாயிருப்பதாலும், அவற்றைத் தாக்குதலுக்குப் பயன்படுத்துவதாலும், தாக்குதலுக்கு முன்னர் எதிரியின் கண்களில் பட்டுவிடக் கூடாதென்பதாலும் அவை பறக்கும் தூரத்தை எந்தளவிற்கு குறைக்க முடியுமோ அந்தளவிற்கு குறைக்கவே புலிகள் முற்படுவர்.

இதனால் முல்லைத்தீவு பகுதியிலிருந்து வான்புலிகள் கட்டுநாயக்காவை நோக்கி கடல்வழியால் பறப்பதாயின் ஒன்றில் யாழ்.குடாநாட்டை சுற்றிவர வேண்டும் அல்லது தென்பகுதியை சுற்றி வரவேண்டும். இது சாத்தியப்படாதது. இதனால் கிளிநொச்சியிலிருந்து புறப்பட்டு மன்னார் சென்று கடல்வழியாக கொழும்பு நோக்கி வருவது சுலபம்.

அதேநேரம், வன்னிக்குள் கிளிநொச்சியிலிருந்து மன்னாருக்கு பறந்து சென்று அங்கிருந்து கொழும்புக்கு அல்லது குடாநாட்டுக்கு செல்வது வீண் தாமதமும் புலிகளின் விமானங்கள் குறித்து தகவல்கள் கசியும் சாத்தியமும் அதிகமென்பதால் மன்னார் பகுதியிலிருந்தே இந்த விமானங்கள் புறப்படுவதாகப் படைத்தரப்பு கருதுகிறது.

இதேநேரம், குடாநாட்டுக்கான படை விமானங்களினது போக்குவரத்தும் மன்னார் கடற்பரப்புக்கு மேலாகவே நடைபெறுவதால் அந்த வான் பாதையால் செல்லும் போது படையினரைக் குழப்பத்திலாழ்த்த முடியுமென புலிகள் கருதலாமெனவும் படைத்தரப்பு நினைக்கிறது.

அண்மையில் கூட இரவு நேரமொன்றில் விமானப்படை விமானங்கள் மன்னாரில் குண்டு வீச்சை நடத்திவிட்டு குடாநாடு சென்று பலாலி படைத்தளத்திற்கு மேலாக கொழும்பு திரும்பியிருந்தது. எனினும் புலிகளின் விமானங்களே பலாலி படைத்தளம் மீது பறந்து நோட்டமிட்டதாக சில தகவல்கள் தெரிவித்தன. எனினும் படையினர் இந்த மர்ம விமானப் பறப்பு குறித்து மறுப்புத் தெரிவித்திருந்தனர்.

அவை விமானப் படை விமானங்களின் வழக்கமான பயணப்பாதையென்பதாலும் குண்டு வீச்சு விமானங்களின் சத்தமென்பதாலும் புலிகளின் விமானங்களாயிருக்கலாமென்ற சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், பறந்தவை விமானப் படை விமானங்களென்பதால் படைத்தரப்பு, மர்ம விமானங்களென்பதை மறுத்திருந்தது.

இந்த நிலையிலேயே இதே வான் பாதையூடாக வான் புலிகளும் தாக்குதல் நடத்த வந்த போது, படையினரால் உடனடியாக அவை எந்த விமானங்களென அடையாளம் காண முடியாது போயிருக்குமெனவும் கருதப்படுகிறது.

இதேநேரம் புலிகளின் விமானங்களை எதிர்கொள்ளும் ஆற்றல் விமானப் படையினரிடம் இல்லையா என்ற கேள்வி எழுகிறது. பலாலியில் தாக்குதல் நடத்தும் வான் புலிகள் அங்கிருந்து விரைந்து வந்து வன்னியில் தரையிறங்கி விடலாம். ஆனால் கொழும்பில் தாக்குதல் நடத்தும் வான் புலிகள் வன்னி திரும்புவதற்குள் அவற்றை துரத்தித் தாக்குதல் நடத்தக் கூடிய ஆற்றல் விமானப் படையினரிடமில்லையென்றே கருதப்படுகிறது.

இதுவரை காலமும் விமானப் படையினரே குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தி வந்தனர். புலிகளிடம் முன்னர் விமானங்களில்லாததால் விமானப் படையினர் வான் புலிகளுடன் வானில் மோதும் நிலை ஏற்படவில்லை. தற்போது அவ்வாறானதொரு நிலையேற்பட்டுள்ளதால் வான் புலிகளை வானில் வைத்தே அழிக்க வேண்டிய கட்டாய நிலை விமானப் படையினருக்கு உருவாகியுள்ளது.

வான் புலிகள் தாக்குதல் நடத்த வரும் போது இலக்குகளிலிருந்து விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மூலம் அல்லது அவை தெற்கே வந்துவிட்டு திரும்பிச் செல்லும் போது ஏதாவது படை முகாம்கள் அல்லது வடக்கில் எல்லைகளிலுள்ள படை முகாம்களிலிருந்து ஏவுகணைகள் மூலம் தாக்கியழித்து விடலாமெனவும் கருதும் பாதுகாப்பு தரப்பு படை முகாம்கள் எங்கும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளிருப்பதன் ஆபத்து குறித்தும் சிந்திக்கிறது.

விமான எதிர்ப்பு ஏவுகணைகள் வைக்கப்பட்டிருக்கும் படை முகாம்களின் மீது புலிகள் அதிரடித் தாக்குதலை நடத்தி ஏவுகணைகளை கைப்பற்றிவிட்டால் நிலைமை மிக மோசமாகிவிடுமெனவும் பாதுகாப்புத் தரப்பு சிந்திப்பதால் புலிகளின் விமானங்களைத் தாக்குவதற்காக எல்லா முகாம்களிலும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வைத்திருக்க முடியாதெனவும் உணர்கிறது.

விமானப் படையை பொறுத்தவரை `கிபிர்' மற்றும் `மிக்' குண்டு வீச்சு விமானங்கள் ஓடிப் பறக்கக் கூடிய ஓடுபாதை கட்டுநாயக்கா விமானப் படைத் தளத்தில் மட்டுமே உண்டு. இதனாலேயே `கிபிர்', `மிக்' விமானங்கள் கட்டுநாயக்காவில் நிறுத்தப்பட்டுள்ளன.

பலாலி விமான ஓடுபாதை இந்தியாவின் உதவியுடன் புனரமைக்கப்பட்டு வருகின்ற போதும் அங்கு இந்த விமானங்களை தரையிறக்க முடியாதென்பதுடன் பலாலி விமானத் தளம், புலிகளின் ஆட்லறி ஷெல் தாக்குதல் எல்லைக்குள்ளிருப்பதால் அங்கு குண்டு வீச்சு விமானங்களை நிறுத்த முடியாத இக்கட்டான நிலையுள்ளது.

தற்போதைய நிலையில் புலிகளின் விமானங்களை எப்படி எதிர்கொள்வதென்ற பெரும் பிரச்சினை அரசுக்கு பெரும் தலைவலியாகவேயுள்ளது. கட்டுநாயக்காவில் நடைபெற்ற தாக்குதலைப் போன்று பலாலியிலும் வான் புலிகள் பாரிய தாக்குதலை நடத்திவிட்டு மிகச் சுலபமாக திரும்பிச் சென்றமை அரசுக்கும் படைத் தரப்புக்கும் பேரிடியாகிவிட்டது.

எதிர்பார்த்து காத்திருக்கையில் எதிரியின் விமானம் வந்து கண்முன்னே பாரிய தாக்குதலை நடத்திவிட்டு சுலபமாகத் தப்பிச் செல்கிறதென்றால் அடுத்த இலக்கு எது என்ற கேள்வியால் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை வான்புலிகள் மீண்டும் கட்டுநாயக்காவில் தாக்குதல் நடத்த வந்துவிட்டதாக பெரும் பரபரப்பேற்பட்டது.

புத்தளத்தில் சிலர் மர்ம விமானங்களைக் கண்டதாகவும் அது குறித்து கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அறிவிக்கவே அங்கு, வான் பாதுகாப்பு கருவிகள் இயக்கப்பட்டு பத்திற்கும் மேற்பட்ட குண்டுகள் ஏவப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனினும் அன்று புலிகளின் வானூர்திகள் கொழும்புக்கு வந்தனவா இல்லையா என்பதை இதுவரை படைத் தரப்பு உறுதிப்படுத்தவில்லை.

வான் பாதுகாப்பு கருவிகள் இயக்கப்பட்டு குண்டுகள் ஏவப்பட்ட போது கட்டுநாயக்காவிலும் கொழும்பு மாநகரிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மாநகரமே முற்றாக இருளில் மூழ்கியிருந்தது. இலக்கை, தாக்க முடியாவிட்டால் புலிகளின் விமானங்கள் வேறு இலக்குகளை தாக்கிவிடக் கூடாதென்பதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மாநகர் பூரண இருளடையச் செய்யப்பட்டதாக படைத்தரப்பு கூறுகிறது.

கட்டுநாயக்காவில் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்ட சிறிது நேரத்தில், கடந்த முறை கட்டுநாயக்காவில் தாக்குதலை நடத்திவிட்டு புலிகளின் விமானங்கள் திரும்பிச் சென்றதாகக் கூறப்படும் பாதையிலுள்ள படை முகாம்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களிலிருந்து வானத்தை நோக்கி கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அநுராதபுரம், மதவாச்சி, வவுனியா எங்கும் இந்தத் தாக்குதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இவ்வேளையில் அநுராதபுரம் விமானப்படைத் தளத்திலிருந்து புலிகளின் விமானத்தை தேடிச் சென்ற விமானப் படை ஹெலிகொப்டரொன்று வீழ்ந்து நொருங்கியுள்ளது. `எம்.ஐ-24' ரக தாக்குதல் ஹெலி கொப்டர் இயந்திரக் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டதாக படைத்தரப்பு கூறியது. எனினும், புலிகளின் விமானம் வரலாமென வானத்தை நோக்கி நடத்தப்பட்ட கடும் தாக்குதலுக்கு இலக்காகியே இந்த ஹெலிகொப்டர் வீழ்ந்து நொருங்கியதாக சில தகவல்கள் தெரிவித்தன.

அன்றைய தினம் புலிகளின் விமானங்கள் கட்டுநாயக்கா வந்ததானவா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லையென படைத்தரப்பு கூறுவதால், புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்த வந்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு ஒத்திகையொன்று இடம்பெற்றதா என்ற கேள்வியும் எழுகிறது.

இவ்வாறு, வான் புலிகளின் வருகை தெற்கில் பெரும் பதற்றத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. வான் புலிகளைச் சமாளிக்க விமானப் படை திணறுவதால் தரைப் படைகளின் ஒத்துழைப்பு நாடப்பட்டுள்ளது. வன்னியில் தினமும் இரவு பகலாக விமானப் படை விமானங்கள் தாக்குதல்களைத் தொடுத்தும் வான்புலிகளின் வருகையை தடுக்க முடியாதிருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பத் தொடங்கியுள்ளன.

தங்களின் வானூர்திகளை சமாளிக்க படையினர் எவ்வாறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்களென்பதையெல்

Edited by வானவில்

ம் வானத்தில தடுப்புச்சுவர்தான் எழுப்போணும்.. பகல்லயே குறிபார்த்து சுடத்தெரியாத பட்டாளம்..

இருட்டுல சுட்டா எங்ப போறது..

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா தலைநகர் கொழும்பில் வர்த்தக வானூர்தி நிலையத்தை அண்மித்த வான்படைத் தளத்தை வேறுபகுதிக்கு சிறிலங்கா அரசாங்கம் மாற்றக்கூடும் எனத் தெரிகிறது.

கொழும்பு ஆங்கில ஊடகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி விவரம்:

கட்டுநாயக்கா வான்படைத்தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் வான்தாக்குதலை மேற்கொண்டு ஒரு மாதம் சரியாக கடந்த நிலையில் மீண்டும் கட்டுநாயக்கவில் கடந்த வியாழக்கிழமை தாக்குதல் அச்சம் ஏற்பட்டிருந்தது.

மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை பலாலி உயர் பாதுகாப்பு தளத்தையும் வான்புலிகள் தாக்கிவிட்டு திரும்பியுள்ளனர்.

இந்த இரு நிகழ்வுகளின் போதும் பீதியடைந்த முப்படையினரும் வானத்தை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டுள்ளனர்.

கட்டுநாயக்கவுக்கு அப்பால் பலாலி, முகமாலை, மயிலிட்டி போன்ற பகுதிகளில் இருந்தும் விடுதலைப்புலிகளின் விமானத்தை வீழ்த்திவிடலாம் என்ற எண்ணத்தில் படையினர் வானை நோக்கி தாக்குதலை நடாத்தியிருந்தனர். ஆனால் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் பாதுகாப்பாக அவர்களின் தளப்பகுதியில் தரையிறங்கி விட்டது.

வவுனியாவானது வர்த்தக வானூர்திகளின் பாதையாகும். வர்த்தக வானூர்தி ஒன்றை விடுதலைப் புலிகளின் வானூர்தி என நினைத்து படையினர் தாக்குதலை நடத்தியிருந்தனர். அந்த வானூர்தியின் மீது பட்டிருந்தால் பெரும் விபரீதங்கள் ஏற்பட்டிருக்கும்.

கட்டுநாயக்க தாக்குதலைத் தொடர்ந்து வான் பாதுகாப்புக்கு சிறிலங்கா அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பலதரப்பில் இருந்தும் ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. சிறிலங்கா அரசாங்கம் தரமான ராடார்களை கொள்வனவு செய்யவும், பதில் நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கு முன்னரே விடுதலைப் புலிகள் மற்றுமொரு வெற்றிகரமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.

துல்லியமாக இலக்கைத் தாக்குவது தான் வான்புலிகளின் வெற்றியல்ல, தாக்குதலை நடாத்திவிட்டு அவர்கள் தமது தளத்திற்கு வெற்றிகரமாக திரும்பிச் செல்வதும், இராணுவத்தினரிடமும் மக்களிடமும் பீதியை ஏற்படுத்துவதும், பொருளாதாரத்தில் சேதங்களை ஏற்படுத்துவதும் அவர்களுக்கு பெரும் வெற்றியாகும்.

விடுதலைப் புலிகளின் இரு வானூர்திகள் கடந்த வியாழக்கிழமை புத்தளம் வான்பரப்பில் இருந்து 40-50 மைல் தொலைவில் பயணிப்பதை வான்படையினர் கண்டுள்ளனர். அந்த தகவல் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் அதிகாரிகளிடம் பதற்றத்தை தோற்றுவித்திருந்தது. ஆனால் அன்றும் வான்படையினரின் வான்பாதுகாப்பு சாதனங்கள் வழமையான மறுசீரமைப்பு பணிகளுக்காக மீண்டும் அகற்றபட்டிருந்தன.

இந்த தாக்குதல் முயற்சியின் மூலம் ராடார் தொகுதிகள் இயங்குகிறதா இல்லையா என அறியும் தொழில்நுட்பத்தை விடுதலைப் புலிகள் கொண்டுள்ளார்களா என்ற அச்சம் கொழும்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் துறையினர் தொடங்கியுள்ளனர்.

எனவேதான் ஏப்ரல் 26 ஆம் நாள் வானை நோக்கி சுடுமாறு அதிகாரிகள் தமது படையினருக்கு உத்தரவிட்டுள்ளனர். கடுமையாக பீதியடைந்த இராணுவத்தினர், இலக்குகள் இன்றி வானை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளனர். இதன் மூலம் விடுதலைப் புலிகளின் வானூர்திகளை மட்டுமல்லாது பல வர்த்தக வானூர்திகளையும் அச்சுறுத்தியுள்ளனர்.

இந்த சமயத்தில் இரு பயணிகள் வானூர்திகள் 20,000 மற்றும் 30,000 அடி உயரங்களில் குறைந்த வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தன. எனினும் 10-15 நிமிடங்களில் அவை திசைதிருப்பப்பட்டன.

இரு ஏமிரேற்ஸ் வானூர்திகளும், 1 கதே பசுபிக் வானூர்தியும் தென் இந்திய வானூர்தி நிலையத்ததிற்கு திருப்பிவிடப்பட்டன. கொச்சி, புதுடில்லி, துபாய் ஆகிய பகுதிகளில் இருந்து கட்டுநாயக்க நோக்கி வந்த வானூர்திகள் சென்னைக்கு திருப்பபட்டதுடன், சிங்கப்பூரில் இருந்து வந்த ஏமிரேற்ஸ் மற்றும் கதே பசுபிக் நிறுவனங்களைச் சேர்ந்த இரு வானூர்திகளும் திருவனந்தபுரத்திற்கு திருப்பிவிடப்பட்டன.

துபாயில் இருந்து வந்த மேலும் 1 ஏமிரேற்ஸ் வானூர்தி மாலைதீவுக்கு திருப்பிவிடப்பட்டது.

இப்படியான திருப்பி விடுதலின் போது சில வானூர்திகள், பயணிகளை மாலைதீவு, திருவனந்தபுரம் போன்ற பகுதிகளில் இறக்கிவிட்டு விட்டுச் சென்றுவிட்டன. பின்னர் அவர்களை சிறிலங்காவின் வானூர்தி நிறுவனத்தின் வானூர்திகள் அங்கிருந்து கொழும்புக்கு ஏற்றி வந்துள்ளன.

விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சம் இந்த முறை வர்த்தகத்துறையில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வர்த்தக வானூர்திகள் ஏறி இறங்கும் பகுதியில் படையினர் கண்மூடித்தனமாக சுட்டது அதனை நிறைவேற்றியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை வானூர்தி ஓடு பாதையானது 45 நிமிடங்கள் மூடப்பட்டது. ஆனால் கடுமையான துப்பாக்கிப் பிரயோகங்களின் பின்னர் வானூர்தி ஓடுபாதை திறக்கப்படுவதற்கு முன்னர் அது சேதமாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை.

பயணிகள் வானூர்திகளின் ஓடுபாதை சிவில் வானூர்திப் போக்குவரத்து அதிகார சபையினால்தான் மீண்டும் திறக்கப்பட வேண்டும். ஆனால் அந்த நடைமுறையும் பின்பற்றப்படவில்லை. இது இலகுவாக அரசாங்கத்தை குற்றம் சுமத்த போதுமானது.

அதாவது விடுதலைப் புலிகளின் வானூர்திகள், இரண்டாவது முறை மேற்கொண்ட முயற்சி முதலாவது தாக்குதலை விட அதிக சேதங்களை விளைவித்துள்ளது.

30 நிமிடங்கள் நகரம் இருளில் மூழ்கியது, உத்தியோகபூர்வமாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை. ஆனால் மக்கள் ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ளதனைப் போல் நடந்து கொண்டனர்.

ஏப்ரல் 26 ஆம் நாள் நிகழ்ந்த தாக்குதல் அச்சத்தில் ஒருவர் கூட இறக்கவில்லை. எனினும் மக்களின் மனதில் ஏற்பட்ட பீதி கொழும்பிற்கு வரும் வர்த்தக வானூர்திகளுக்கு ஏற்பட்ட அச்சம் என்பன கடுமையானது.

எனினும் சிறிலங்காவுக்கு வரும் வர்த்தக வானூர்திகளின் காப்புறுதிப் பெறுமதி அதிகரித்துள்ளதாக வெளிவந்த செய்திகளை சிறிலங்கா வானூர்தி நிறுவனத்தின் பொது முகைமையாளர் சந்தான வீரக்கோன் மறுத்துள்ளார்.

கட்டுநாயக்கா வான்படைத்தளத்தை இடம் மாற்றுவதற்கு தற்போதும் நேரம் கடந்துவிடவில்லை. அதாவது வர்த்தக வானூர்திகள் பயன்படுத்தும் கட்டுநாயக்கா வானூர்தி ஓடுபாதையை பயன்படுத்தாது கிபீர், மிக்-27 ரக வானூர்திகளை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கு அரசாங்கம் சிந்திக்க வேண்டும்.

மிக்-27 ரக வானூர்தியைப் பெறுத்தவரை இது பிரச்சனை இல்லை. ஏனெனில் அதற்கு அனுராதபுரத்தில் உள்ள வானூர்தி ஓடுபாதை போதுமானது. ஆனால் கிபீர் வானூர்திகளுக்கு மிக நீளமான ஓடுபாதை தேவையானது. எனினும் அது ஹிங்குரான்கொட வான்படைத் தளத்திற்கு மாற்றப்படுவது உகந்தது.

ஏனெனில் அங்கு தான் சிறிலங்காவிலேயே இரண்டாவது நீளமான வானூர்தி ஓடுபாதை உள்ளது. அது மேலும் நீளமாக்கப்படலாம்.

70 முதல் 90 மைல் வேகத்தில் பயணிக்கும் இலகுரக வானூர்தியை கிபீர் மற்றும் மிக் வானூர்திகளால் கண்டறிவது கடினமானது.

ஆனால் எம்.ஐ - 24 மற்றும் பெல் - 212 ரக உலங்குவானூர்திகளினால் இந்த வானூர்திகளைத் தாக்க முடியும். எனினும் அனுரதபுரத்தில் இருந்து மேலெழுந்த எம்.ஐ - 24 ரக ஊலங்குவானூர்தி இயந்திரக்கோளாறு காரணமாக சேதமடைந்துள்ளது. விரைவாக மேலெழுந்த சில கே-8 ரக பயிற்சி வானூர்திகள் என்ன செய்தன என்பது தொடர்பாக எதுவும் தெரியவில்லை.

பலாலி மீது விடுதலைப் புலிகளின் வானூர்திகள் தாக்குதலை மேற்கொண்ட போது தளத்தின் மீது பீரங்கித் தாக்குதல்களையும் விடுதலைப் புலிகள் நடத்தியுள்ளனர். இது முன்னரங்க நிலைகளில் உள்ள இராணுவத்தினரின் கவனத்தை திசை திருப்பி அவர்களை வானூர்தியை அவதானிக்க விடாது செய்யும் தந்திரமாகும்.

எனினும் முகமாலையில் நிலைகொண்டுள்ள 55 ஆவது படைப்பிரிவின் முதலாவது பற்றாலியன் மற்றும் விஜயபாகு படைப்பிரிவு ஆகியவற்றின் இராணுவத்தினரே வானூர்திகளின் ஓசையை முதலில் கேட்டனர். பின்னர் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்தே தளத்தில் இருந்த வானூர்தி எதிர்ப்புத் துப்பாக்கிகளின் மூலம் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த முறையும் நாட்டின் பாதுகாப்புத் தரப்பை விட விடுதலைப் புலிகள், பலாலி தளம் மீதான வான் தாக்குதல் தொடர்பான செய்தியை விரைவாக வெளியிட்டுள்ளனர். அதிகாலை 2.30 மணிக்கே அவர்களது செய்தி வெளிவந்து விட்டது. பாதுகாப்புத் தரப்பினரின் இந்த தாமதம் தாக்குதல் தொடர்பாக பல தவறான ஊகங்களுக்கு வழிவகுத்துவிடும்.

சிறிலங்கா அரசாங்கம் முதலில் பலாலி தாக்குதலை மறுத்திருந்தாலும் பின்னர் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த தாமதங்கள்தான் விடுதலைப் புலிகள் அனைத்துலகத்தின் கவனத்தை பெருமளவில் பெறுவதற்கு ஏதுவாகியுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

வான் புலிகளை எதிர்கொள்ள அரசு வகுக்கப் போகும் வியூகம் என்ன?

இலகுவான பதில் அதாவது தமிழ் மக்களின்மீது நடாத்திவரும் விமானத்தாக்குதல்களை உடனே நிறுத்தினால் அதனால் கிடைக்கும் பலாபலன்களை சிங்கள மக்கள் அனுபவிக்கலாம்.

இல்லையென்று அடம்பிடித்தீர்களென்றால் அதற்கு யார் பொறுப்பு?

எனது கருத்து என்னவென்றால் அவலங்கள் தமிழ் மக்களிற்கு மட்டும் சொந்தமுமில்லை, சுகபோகங்கள் சிங்களவர்களுக்கு மட்டும் சொந்தமுமில்லை என்பதை அனுபவரீதியாக சிங்கள மக்கள் தெரிந்துகொள்ளும் வரை எல்லாமே கேள்விக்குறிதான்.

Edited by Valvai Mainthan

தரை, கடல், வான் படைகள் மூன்றையும் ஒருங்கே கொண்டுள்ள உலகின் முதலாவது விடுதலை இயக்கம் தமிழீழ விடுதலைப்புலிகள். இதற்கு மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. இனிவரும் காலங்களில் விடுதலைப்புலிகளின் இராணுவ நகர்வுகள் சர்வதேசங்களால் வரையறை செய்யப்பட்ட போரியல் முறைகளுக்கு இசைவானதாகவே இருக்கும் என்பதால் தமிழர் தரப்பின் தாக்குதல்களை வெளிப்படையாக எந்த ஒரு சர்வதேச நாடும் குறைகூற முடியாது. தமிழீழ வான்படை அடுத்தடுத்து குவித்துவரும் வெற்றிகளால் கதிகலங்கிப்போயிருக்கும் சிறிலங்கா அரசு தன்னை சுதாரித்துக்கொண்டு மீண்டும் போருக்குப் புறப்பட அதாவது இன அழிப்புக்குத் தயாராக தேவையான நேரத்தை பெற்றுக்கொள்ள தனது வழக்கமான பாணியில் விரைவில் போர் நிறுத்தமொன்றை அறிவித்து சமாதான பேச்சுவார்த்தைக்கு தான் தயாரெனவும் அறிவிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தரை, கடல், வான் படைகள் மூன்றையும் ஒருங்கே கொண்டுள்ள உலகின் முதலாவது விடுதலை இயக்கம் தமிழீழ விடுதலைப்புலிகள். இதற்கு மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. இனிவரும் காலங்களில் விடுதலைப்புலிகளின் இராணுவ நகர்வுகள் சர்வதேசங்களால் வரையறை செய்யப்பட்ட போரியல் முறைகளுக்கு இசைவானதாகவே இருக்கும் என்பதால் தமிழர் தரப்பின் தாக்குதல்களை வெளிப்படையாக எந்த ஒரு சர்வதேச நாடும் குறைகூற முடியாது. தமிழீழ வான்படை அடுத்தடுத்து குவித்துவரும் வெற்றிகளால் கதிகலங்கிப்போயிருக்கும் சிறிலங்கா அரசு தன்னை சுதாரித்துக்கொண்டு மீண்டும் போருக்குப் புறப்பட அதாவது இன அழிப்புக்குத் தயாராக தேவையான நேரத்தை பெற்றுக்கொள்ள தனது வழக்கமான பாணியில் விரைவில் போர் நிறுத்தமொன்றை அறிவித்து சமாதான பேச்சுவார்த்தைக்கு தான் தயாரெனவும் அறிவிக்கும்.

சரியான எதிர்வு கூறல். உறுதிப்படுத்தப் படாத தகவல் ஒன்று கேள்விப்பட்டேன், நோர்வேத் தூதுவர் வன்னி செல்ல அனுமதி இப்போது வழங்கப் பட்டிருப்பதாக.

சரியான எதிர்வு கூறல். உறுதிப்படுத்தப் படாத தகவல் ஒன்று கேள்விப்பட்டேன், நோர்வேத் தூதுவர் வன்னி செல்ல அனுமதி இப்போது வழங்கப் பட்டிருப்பதாக.

தலைப்புக்கு பதில் இங்கே உள்ளது :mellow::(

இன்று நடந்த தாக்குதல் பதில்தாக்குதலாகவே நடைபெற்றதெனலாம்.அன்பாகச்சொல

தமிழீழ எல்லையில் தடுப்பு சுவர் எழுப்ப போயீனமாம் சு

தமிழர்கள் முப்படை சீரிய வளர்ச்சி பெற்று தம் மக்களை ஆக்கிரமிபாளர்களிடம் இருந்து விடுவிக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.