Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கும் சீனா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sl-and-China-flag.jpg

இலங்கைக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கும் சீனா!

அந்நிய சக்திகளின் தலையீடுகள் குறித்து இலங்கை விழிப்புடன் இருக்க வேண்டுமென இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஷி யுவான் எச்சரித்துள்ளார்.

அவர் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, “சீனா, இலங்கை போன்ற நாடுகள் மேற்கத்திய சக்திகளின் ஆதிக்கத்தின் கீழ் பொதுவான வரலாற்றைக் கொண்டவை.

எனவே அந்நிய சக்திகளின் தலையீடுகள் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இத்தகைய தலையீடுகள் சிக்கல்கள் மற்றும் பேரழிவுகளைத் தருமே தவிர ஒருபோதும் நன்மைகளைத் தராது.

சுயாதீனமான மற்றும் அமைதியான இராஜதந்திர கொள்கைகளை கடைபிடிக்கும் சீனா, ஒருபோதும் மற்றவர்களின் உள் விவகாரங்களில் தலையிடாது. அத்தகைய தலையீடுகளை கடுமையாக எதிர்க்கின்றது.

நாம் எப்போதும் சுதந்திரத்தை வலியுறுத்த வேண்டும். வெளிப்புற தலையீடுகளுக்கு எதிராக போராட வேண்டும். சொந்தமாக முடிவுகளை எடுக்க வேண்டும். இந்த வழியில் மட்டுமே நாம் சரியான திசையை நோக்கிச் சென்று பிரகாசமான எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

http://athavannews.com/இலங்கைக்கு-முக்கிய-எச்சர/

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இந்த வழியில் மட்டுமே நாம் சரியான திசையை நோக்கிச் சென்று பிரகாசமான எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

எங்கப்பா....பிரகாசிக்குது...?

வட்டியும்....குட்டியும் மட்டும் தானே வளருது...!😌

சீனாவின் கடன் பல நாடுகளில் அதன் அரசியல் ஆதிக்கத்தை வளர்த்து வருகின்றது. இந்த கடன்கள் அமெரிக்க, இந்திய கடன்கள் போல அல்லாது மக்கள் பார்த்து அனுபவித்து பயன்பெறும் கடன்கள் : பாலங்கள், துறைமுகங்கள், வீதிகள், கட்டிடங்கள். அதனால், மக்கள் சீன அரசை விரும்புகிறார்கள்.

அமெரிக்கா, ஆசியாவால் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க முடிவெடுத்துள்ளது.  

இந்த போட்டிக்குள் பல மாற்றங்கள் நிகழும். அதில் புதிய நாடுகளை கூட உருவாக்கலாம்.

On 7/16/2019 at 8:54 AM, தமிழ் சிறி said:

இத்தகைய தலையீடுகள் சிக்கல்கள் மற்றும் பேரழிவுகளைத் தருமே தவிர ஒருபோதும் நன்மைகளைத் தராது.

சீனாக்காரர், குறிப்பாக இந்திய அரச பயங்கரவாதிகளின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் பற்றி கவனமாக இருக்கும்படி கூறுகிறார்கள்.

இலங்கை பாராளுமன்ற குழு சீனா பயணம்

இலங்கை - சீன பாராளுமன்ற உறுப்பினர்களின் நட்புறவு நிமித்தம் ஆளும் , எதிர்க்கட்சி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்  நாள் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று சீனா சென்றுள்ளனர். 

எதிக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இந்த விஜயம் அமைந்துள்ளது. 

ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் , எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தண, கெஹெலிய ரம்புக்வெல்ல, மஹிந்தானந்த அலுத்கமகே, லக்ஷ்மன் யாபா அபேவர்தன மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்தி ஸ்ரீகந்தராஜா ஆகியோர் இந்த விஜயத்தில் உள்ளடங்குகின்றனர். 

https://www.virakesari.lk/article/60550

 

அமெரிக்க – சீன முரண்பாட்டுக்காக நாட்டை பலியாக்க முடியாது - வாசுதேவ

அமெரிக்க – சீன முரண்பாடுகளுக்கு  நாட்டை பலியாக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அமெரிக்கா ஆசிய நாடுகளில் நிரந்தர ஆதிக்கம் செலுத்தும் திட்டங்களை தற்போது வகுக்கின்றது. சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் பாரிய பொருளாதார போட்டித் தன்மை காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் எமது நாட்டின் இறையான்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கும்  ஒப்பந்தங்களை அமெரிக்காவுடன் அரசாங்கம் செய்துக் கொள்வது  எதிர்காலத்தில்  நாட்டை பாரிய நெருக்கடிக்குள் கொண்டு செல்லும் என்றார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடையிலான அதிகார போட்டியே  கடந்த  நான்கு வருட காலமாக அரசாங்கம் பலவீனமடைவதற்கு பிரதான காரணம் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/60609

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ampanai said:

அமெரிக்க – சீன முரண்பாட்டுக்காக நாட்டை பலியாக்க முடியாது - வாசுதேவ

கடன் வெள்ளம் தலைக்கு மேலால் ஓடுது இப்பத்தான் ஒண்டு நித்திரையால் எழும்பி அறிக்கை விடுது .

Edited by பெருமாள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.