Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணி மிகக் குழப்பமானது - சித்தார்த்தன் எம்.பி

Featured Replies

முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலையிலான  கூட்டணி மிகக் குழப்பமான கூட்டணி. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் தேசிய மக்கள் முன்னனி அதன் செயலாளர் கஜேந்திரன் அடிக்கடி  பத்திரிகைகளில் விக்கினேஸ்வரன் ஐயா றோ என்று சொல்கின்றார். அதன் பின் தலைவர் பேசுகிறார். இந்த நிலையில் இது எப்படியான கூட்டணியாக அமையப் போகிறது. கஜேந்திரகுமார் அதற்குள் செல்ல மாட்டேன் எனக் ஊடகங்களில் தெரிவித்துள்ளார். 

இதனால் அது பலமான கூட்டணியாக வர வாய்ப்பில்லை. தற்போது விக்கினேஸ்வரனும், சுரேஸ் பிறேமச்சந்திரனும் தான் அந்த கூட்டணி. வேறு எந்தக் கட்சியும் சேரும் என்று தெரியவில்லை. 

ஆனால்  தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் தமிழ் தேசியக்  கூட்டமைப்பில் மனக்கசப்பு இருந்தாலும் கூட, ஒரு மாற்றீடு இல்லை என்ற எண்ணப்பாடு உள்ளது. அந்த மாற்றைக் கொடுக்கக் கூடிய சக்தி வாய்ந்த கூட்டு உருவாகுமா என்ற கேள்வி இருக்கின்றது. அப்படியொரு பலமான கூட்டு உருவாகுமாக இருந்தால் அது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான பலமான ஜனநாயக ரீதியான போட்டியாக அமையும். அதை அவர்கள் செய்வார்களா என்பது கேள்வியே? எனத் தெரிவித்தார். 

https://www.virakesari.lk/article/61069

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு சந்தோசமா கவலையா என்று சொல்லுங்கோ!
பலமான எதிர்க்கூட்டணி அமைந்தால் பாயலாம் என்று நினைச்சிருப்பார்.

காலங்காலமாக எட்டப்பர் தொழிலை செய்துவந்த சித்தார்த்தன் இதைக்கூறுவது வேடிக்கையானது.

எது உண்மையில் குழப்பகரமான கூட்டணி?

தமிழர் மீதான சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தின் மிக அப்பட்டமான திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கைகளை, சித்திரவதைகளை  வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட சுமந்திரன், மாவை, செல்வம் அடைக்கலநாதன், சரவணபவன், சிறீதரன், சித்தார்த்தன் உட்பட அனைவரும் தமிழர் மீதான இந்த சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தின் மிக அப்பட்டமான சித்திரவதையை இதுவரை கண்டும் காணாமல், அவர்களுடன் கூட்டணி அமைத்து சொகுசாக உள்ளனர். இவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை அனுபவித்தபடி உள்ளனர்!

தமிழினப் படுகொலைகாரர்களுடன் குழப்பகரமான கூட்டணி அமைத்துள்ள சுமந்திரன், மாவை, செல்வம் அடைக்கலநாதன், சரவணபவன், சிறீதரன், சித்தார்த்தன் உட்பட அனைவரும் எவ்வளவு கீழ்த்தரமான, மிகமிக மோசமான அரசியல்வாதிகள் என்பதை விபரித்துக் கூறத் தேவையில்லை.

சித்தார்த்தன், சுமந்திரன், மாவை, செல்வம் அடைக்கலநாதன், சரவணபவன், சிறீதரன் உட்பட அனைவரும் தமிழர் நலனில் கொஞ்சமும் உண்மையான அக்கறை இல்லாத அரசியல்வாதிகள் என்பதை அவர்களின் அண்மைகாலச் (5 வருட) செயற்பாடுகள் தெளிவாக நிரூபித்துள்ளன.

எனவே குழப்பகரமான கூட்டணி அமைத்துள்ள சித்தார்த்தன் கோஷ்டிகளுக்கு மற்றவர்கள் பற்றி கதைக்கும் அருகதை துளியும் கிடையாது.

On 7/24/2019 at 11:25 AM, ampanai said:

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் தேசிய மக்கள் முன்னனி அதன் செயலாளர் கஜேந்திரன் அடிக்கடி  பத்திரிகைகளில் விக்கினேஸ்வரன் ஐயா றோ என்று சொல்கின்றார்.

சித்தார்த்தன் உந்த இந்திய றோ உடன் சேர்ந்து இலங்கைல எத்தனை கொலைகளை செய்தவர் என்டு சொல்லலாமே! உமாமகேஸ்வரன், ..... சிவராம்,..... இப்பிடி ஒரு பெரிய பட்டியலே வருமே.

  • கருத்துக்கள உறவுகள்

 

சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து துணை இராணுவமாக செயற்பட்டு பல்லாயிரம் தமிழ் மக்களை கொலை செய்த புளொட் என்ற ஒட்டுக்குழுவின் 2008ம் ஆண்டு வீரமக்கள் தினத்தில் எடுக்கப்பட்ட கானொளி!

துணைஇராணுவமாக இருந்து போர்க்குற்றம் செய்த இந்த ஒட்டுக்குழுவைத் தான் தற்போது வெள்ளையடித்து புனிதர்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.