Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனோவால் முடியுமென்றால் ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முடியவில்லை - வரதராஜப் பெருமாள் கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனோவால் முடியுமென்றால்  ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முடியவில்லை - வரதராஜப் பெருமாள் கேள்வி

அரசியல் கைதிகளின் விடுதலை தெடர்பில் மனோ கணேசனால் கொடுத்திருக்கின்ற வாக்குறுதியை நிறைவேற்ற முடியுமாக இருந்தால் 13 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் ஏன் நிறைவேற்ற முடியாமல் இருக்கின்றது. 

04.jpg

ஏன் அவர்கள் சென்று அந்த வாக்குறுதியை அளிக்கவில்லை. மேலும், அமைச்சரவைப் பத்திரம் போடுவது இருக்கட்டும், பிரதமர் இது தொடர்பாக என்ன கூறுகின்றார். அவருடைய சட்டம் ஒழுங்கிற்கான அமைச்சர் என்ன கூறுகின்றார். நீதியமைச்சர் என்ன கூறுகின்றார். அவர்கள் எவருமே இது சம்பந்தமாக வாய் திறக்கவில்லை. ஆகவே மீண்டும் தமிழ் அரசியல் கைதிகள் ஏமாற்றப்படப் போகின்றார்கள். என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் வரதராஜப் பெருமாள் தெரிவித்தார்.

கட்சி அலுவத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் அங்கு தெரிவிக்கையில்,

இப்பொழுது உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த அரசியல் கைதிகளை மனோ கணேசன் சென்று பார்த்து வாக்குறுதியளித்து அந்த உண்ணாவிரதத்தை முடித்து வைத்திருக்கின்றார். ஏனென்றால் இப்பொழுது மனோ கணசேனைத்தான் அனுப்ப வேண்டிய கட்டாய சூழலிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் காரர்கள் இருக்கின்றார்கள். ஏனென்றால் தாங்கள் போகமுடியாது.

இவர்கள் கடந்த காலங்களில் பல தடவைகள் அரசியல் கைதிகளுக்கு இவ்வாறான  வாக்குறுதிகள் கொடுத்து கொடுத்து ஏமாற்றியது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம். ஆகையால் அரசியல் கைதிகளுக்கு மீண்டும்மொருமுறை அவர்கள் போய் பொய் வாக்குறுதிகளை அளிக்க முடியாது என்பதால் தாங்கள் ஒளிந்துகொண்டு மனோ கணேசனை அனுப்பியிருக்கிறார்கள்

ஆனால் மனோ கணேசன் கொடுத்திருக்கின்ற வாக்குறுதியை எப்படி நிறைவேற்றுவார். மனோ கணேசனால் நிறைவேற்ற முடியுமாக இருந்தால் 13 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் ஏன் நிறைவேற்ற முடியாமல் இருக்கின்றது. ஏன் அவர்கள் சென்று அந்த வாக்குறுதியை அளிக்கவில்லை. 

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் நடைபெற்ற நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போதும் கூட அந்த அரசியல் கைதிகளை விடுதலை செய்திருக்காலாம், ஆனால் எந்தவொரு நடவடிக்கையினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளவில்லை. இப்பொழுது அதைப்பற்றி தெரியாதது போல, அரசியல் கைதிகள் சிறையில் இருப்பதே தாங்கள் அறியாதது போல மறந்து விட்டதுபோல தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் காரர்கள் செயற்படுகின்றார்கள். ஆனால் தாங்கள் போக முடியாத இடத்திற்கு, இப்பொழுது அந்தக் குற்றச்சாட்டை மனோ கணேசன் மீது திருப்பி விடுதற்காக மனோ கணேசனை அனுப்பியிருக்கிறார்கள் என்றுதான் கூறமுடியும். 

இந்த நிலையில், அமைச்சரவைப் பத்திரம் போடுவது இருக்கட்டும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பாக என்ன கூறுகின்றார். அவருடைய சட்டம் ஒழுங்கிற்கான அமைச்சர் என்ன கூறுகின்றார். நீதியமைச்சர் என்ன கூறுகின்றார். அவர்கள் எவருமே இது சம்பந்தமாக வாய் திறக்கவில்லை. ஆகவே மீண்டும் தமிழ் அரசியல் கைதிகள் ஏமாற்றப்படப் போகின்றார்கள் எனத் தானங்கள் நாங்கள் கருதிகொள்ள வேண்டியதாக இருக்கின்றது என்றார்.

 

 

https://www.virakesari.lk/article/61092

  • கருத்துக்கள உறவுகள்

வில்லன்கள் எல்லாம் கதாநாயகர்கள் ஆகும் காலம் எல்லாம்   நேரம்டா சாமி .

  • கருத்துக்கள உறவுகள்

இவர் கேட்கின்ற கேள்வியிலும் ஒரு உண்மை இருப்பது உண்மைதான்.இப்போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கோபம்எல்லாம் மனோகணேசன் மீது பாயப்போகிறது.ஏனெனில் மனோ அவர்கள்செயற்படுகிறார் உறங்குநிலையில்இல்லை.

18 minutes ago, நந்தி said:

இவர் கேட்கின்ற கேள்வியிலும் ஒரு உண்மை இருப்பது உண்மைதான்.இப்போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கோபம்எல்லாம் மனோகணேசன் மீது பாயப்போகிறது.ஏனெனில் மனோ அவர்கள்செயற்படுகிறார் உறங்குநிலையில்இல்லை.

உண்மை.

மனோ தான் செய்வது சரிவருமா வராதா என்று பார்க்காமல், ராச தந்திரமாக செயலாற்றுகின்றோம் என்று நாடகம் போடாமல் தானே இறங்கி பல நடவடிக்கைகளை மேற்கொள்வதை  வழக்கமாக கொண்டுள்ளவர்.

இவர் பதவிக்கு வந்த பின் நுவரெலியாவில் தமிழ் மக்கள் உள்ள  பல உப பிரதேச சபைகளை தரமுயர்த்தியது தொடக்கம் பல விடயங்களை செய்துள்ளார்

18 hours ago, கிருபன் said:

மனோவால் முடியுமென்றால்  ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முடியவில்லை - வரதராஜப் பெருமாள் கேள்வி

தமிழனப் படுகொலைகளுக்கு பெரும் துணையாக இருக்கும் இந்தியப் பயங்கரவாதிகளின் தயவில் வாழும் வரதராஜர் உட்பட முற்றுமுழுக்க சுயநல நோக்குடன் எடுபிடிகளாகவே செயற்பட முடிவெடுத்தவர்களால் எதைத்தான் சாதிக்கமுடியும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.