Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈஸ்டர் ஞாயிறுத் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்புக்கு ​தொடர்பு இருப்பதாக சாட்சிகள் இல்லை

Featured Replies

ஈஸ்டர் ஞாயிறுத் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக, எவ்வித சாட்சிகளும் கிடைக்கவில்லை என குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன தெரிவித்தார்.

அத்தோடு பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னர் பெறப்பட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திருப்தியடையவில்லை எனவும் அவர் கூறினார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இன்று முன்னிலையாகி சாட்சியம் வழங்கியபோதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தாக்குதலுக்கு முன்னர் உளவுத்துறை தகவல்களைப் பெற்றுக்கொண்டேன். அவ்வாறு பெறப்பட்ட அந்த தகவல்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டன.

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹாரன் தொடர்பான வேறு சில விடயங்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகின்றன.

கொழும்பில் உள்ள தாஜ் ஹோட்டலும் தாக்குதல்தாரிகளின் இலக்காக இருப்பதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் பார்த்த வீடியோ காட்சிகள் மூலம் தெரியவந்ததுள்ளது. குறிப்பாக இரண்டு சந்தர்ப்பங்களில் குண்டை வெடிக்க செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அறியமுடிகின்றது. ஆனால் அங்கு குண்டு வெடிக்கவில்லை.

தாஜ் ஹோட்டலில் சில வி.ஐ.பி.க்கள் இருந்ததால் குண்டு வெடிக்கவில்லை என செய்திகள் வெளியாகின. இருப்பினும் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் அத்தகைய தகவல் எதுவும் இல்லை.

தாக்குதலுக்குப் பின்னர் தாக்குதலுடன் தொடர்புடைய நபர் ஒருவர் இந்தோனேசியாவில் உள்ள மூன்றாம் தரப்பினருக்கு, ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தலைவருக்கு தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய, ஈஸ்டர் ஞாயிறுத் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக, எவ்வித சாட்சிகளும் கிடைக்கவில்லை.

http://thinakkural.lk/article/32256

முன்கூட்டியே புலனாய்வு தகவல்கள் கிடைத்தன- தாஜ்சமுத்திராவும் இலக்கு- சிஐடியின் முக்கிய அதிகாரி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே புலனாய்வு தகவல்கள் கிடைத்ததாக இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் ரவி செனிவரட்ண தெரிவித்துள்ளார்.

உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் வாக்கமூலமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே கிடைத்த எச்சரிக்கைகள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எனக்கு திருப்தியளிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

முன்கூட்டியே புலனாய்வு தகவல்கள் கிடைத்தன அவற்றை உரிய அதிகாரிகளிற்கு தெரியப்படுத்தினோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர்  ஜஹ்ரான்  வேறு சில குற்றங்களிற்காக விசாரிக்கப்பட்டார் என ரவி செனிவரட்ண தெரிவித்துள்ளார்.

 வீடியோ ஆதாரங்களை அடிப்படையாக வைத்து தாஜ்சமுத்திரா ஹோட்டலும் இலக்குவைக்கப்பட்டது என்ற முடிவிற்கு விசாரணையாளர்கள் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாஜ்சமுத்திராவில் இரண்டு தடவை குண்டை வெடிக்கச்செய்வதற்கான முயற்சிகளில் தற்கொலை குண்டுதாரி ஈடுபட்டார் ஆனால் அவை வெற்றியளிக்கவில்லை என ரவி செனிவரட்ண பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

தாஜ்சமுத்திரா ஹோட்டலில் சில முக்கிய பிரமுகர்கள் காணப்பட்டதன் காரணமாகவே அங்கு குண்டுதாக்குதல் இடம்பெறவில்லை என தங்களிற்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/61109

 

  • தொடங்கியவர்

தாக்குதலுக்கு திட்டம் தீட்டிய வேறு ஒருவர் வெளியில் உள்ளார் - பொலிஸ் பயங்கரவாத விசாரணை பிரிவின் பணிப்பாளர்

உயிர்த்த ஞாயிற்று தாற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு திட்டம் தீட்டிய வேறு ஒருவர் வெளியில் உள்ளார். பயிற்ச்சி பெற்ற பயிற்ச்சி வழங்ககூடிய ஒருவர் வெளியில் இருப்பது அச்சுறுத்தலாகும் என பொலிஸ் பயங்கரவாத விசாரணை பிரிவின் பணிப்பாளர் வருண ஜெயசுந்தர தெரிவித்தார்.   

அத்துடன் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்டதாக சகல தரப்பிலும் சுமார் இரண்டாயிரம் பேர் அளவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பலர் புனர்வாழ்வுக்கு அனுப்பி விடுவிக்க முடியும் ஆனால் எனது கட்டுப்பாட்டில் தடுப்புக்காவலில் உள்ள 32 பேரும்  ஈஸ்டர் தாக்குதலுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபட்ட நபர்கள் என்பது உறுதியான தகவல். இவர்களை கண்டிப்பாக சட்டத்தின் முன்னாள் நிறுத்தியாக வேண்டும். 

எவ்வாறு இருப்பினும் இந்த தாக்குதலுக்கு திட்டம் தீட்டிய வேறு ஒரு நபர் வெளியில் உள்ளார். பயிற்ச்சி பெற்ற பயிற்ச்சி வழங்ககூடிய ஒருவர் வெளியில் இருப்பது அச்சுறுத்தல்.  

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று கூடியது. இதில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட போதே அவர் இவற்றை முன்வைத்தார்.

https://www.virakesari.lk/article/61155

  • தொடங்கியவர்

ஈஸ்டர் தாக்குதல்  தினத்தில் 25 தாக்குதல்கள் நடத்த திட்டம் -  குற்றப்புலனாய்வு பிரிவு பணிப்பாளர்

ஈஸ்டர் தாக்குதல்  தினத்தில் 25 தாக்குதல்கள் நடத்தப்பட திட்டம் வகுக்கபட்டதாக தெரிவித்த  குற்றப்புலனாய்வு பிரிவு பணிப்பாளர் ஷானி அபேசேகர, எனினும் புலனாய்வு தகவல்கள் மூலமாக அவை முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

shani.jpg

அத்துடன் தாஜ் சமூத்திரா ஹோட்டலில் குண்டுதாரியொருவர் 2 , 3 தடவைகள் குண்டை வெடிக்க வைப்பதற்காக முயற்சிப்பது தொடர்பான  சீ.சீ.ரீ.வி வீடியோ பதிவுகள் இருக்கின்றன. அந்த குண்டு தொழிநுட்ப கோளறு காரணமாக வெடிக்காது போயிருக்கலாம். 

அதன் பின்னர் அந்த நபர் தெஹிவளையில் ஹோட்டல் அறைக்குள் அந்த கோளரை பரிசோதிக்க முயற்சித்த போது அது வெடித்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராயும் விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/61158

பயங்கரவாதி கோத்தபாயாவுக்கு உள்ள தொடர்புகள் எப்போது வெளிவரும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.