Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது

Featured Replies

அதை விட்டு, மீண்டும் மின்னல் அவர்களது கருத்துக்கு வந்தால், தமிழீழ இராணுவ இரகசியத்தை யாரோ ஒரு தமிழீழ இராணுவத்துடன் தொடர்புடையவர் சொல்லித்தானே இவர்கள் பிரசுரித்திருப்பார்கள்? இதற்க்கும் இல்லை இல்லை, ரிஷி அவர்கள் வானத்திலி பறக்கும் போது பார்த்திருப்பார் என்றால் நான் வரவில்லை. இப்போது நான் சொல்ல வந்தது. என்னவெனில். அந்த செய்தியை, சொல்லியவர் அல்லது, சற்று விசயத்தை சொன்னவருக்கு உங்களிலும் பார்க்க பொறுப்பிருக்கும், அதை விட தமிழ் ஊடகம் என்ற வகையில் பரபரப்புக்கும் அது சார்ந்திருக்கும் தமிழ் தேசியம் தொடர்பான பொறுப்புள்ளது. அதை அவர்களுக்கு சொல்லி கொடுக்க முயல்வது சிறு பிள்ளைத்தனம்.

  • Replies 245
  • Views 72.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

tafet2.jpg
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

poiwl5.jpg

எத்தனை தரம் அசிங்கப்பட்டாலும் திருந்த மாட்டீர்களா?

para103qy5.jpg

மின்னல் அவர்களே உங்களுக்கு எதிhவாதம் செய்ய வேண்டும் என்பது எனது நோக்கல்ல. ஆனால் வீணான ஊடகங்கள் பழி போடும் உங்களை போன்றவர்களது கருத்துக்கு எதிரானதே எனது வாதம்.

நானும் உம்முடன் எதிர்வாதம் செய்யவோ அல்லது பரபரப்பு மீதோ வீண்பழி சுமத்த வரவில்லை நிதர்சன். பரபரப்பு போன்ற ஊடகங்களை நியாப்படுத்த புலிகளின் அறிவிப்பிலேயே பிழை கண்டு பிடிக்கிற உங்களின் தவறை சுட்டிக்காட்டவே எனது பதில் ஆரம்பித்தது. நீங்கள் புலிகளின் பிழையற்ற அறிவிப்பை தவறென்று சொல்லலாம் ஆனால் நாங்கள் பரபரப்பின் தவறை தவறென்றால் அது வீண்பழி என்கிறீர் இது என்ன நியாயம்.?

நீங்கள் நினைப்பது தான் சரி என்பதுவும், நினைப்பது தான் நடந்திருக்கலாம் என்பதுவும் வெறும் விவாதத்துக்கு சரியே தவிர யதார்த்தத்துக்கு புறம்பானவை.

நான் நினைப்பது சரி, நினைப்பது நடந்திருக்கலாமெண்டு எப்ப நிதர்சன் சொன்னேன்? எமது விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டிய ஊடகங்கள் சரியான பாதையில் செல்லவில்லை என்பதே எமது ஆதங்கம். ஒரு சிறிய விடயத்தை ஊதிப் பெருப்பித்து மக்களை முட்டாளாக்கி வருவதையே விமர்சிக்கிறோம். அதுவே அவற்றின் மீதான விமர்சனம். இது தனியே பரபரப்பின் மீது மாத்திரமல்ல. என்பதைப் புரிந்து கொள்ளும்.

நீங்கள் கனடாவில் இருப்பினும் சில விசயங்களை அறியாதவர்களா, அல்லது தெரிந்தும் தெரியாதவராக இருப்பது ஆச்சரியமாக இருக்கின்றது. அதற்காக பரபரப்பு சொன்னால் 100 வீதம் உண்மையாக இருக்கும் என்று சொல்ல வரவில்லை.

நான் கனடாவில் இருந்தால், அதே நாட்டில் இருந்து வெளியாகும் பரபரப்பில் வருகிறவற்றையெல்லாம், நம்ப வேண்டு என்று சொல்கிறீரா? அல்லது பரபரப்பில் வருபபையை நம்புங்கள் என்று இங்கே யாரும் பரப்புரை செய்தார்களா? சரி நான் அறியாத அந்த சில விடயங்களை நீரே சொல்லும் இங்கே உள்ள கள உறவுகளும் அறிந்து கொள்ளட்டும்.

அதை விட்டு, மீண்டும் மின்னல் அவர்களது கருத்துக்கு வந்தால், தமிழீழ இராணுவ இரகசியத்தை யாரோ ஒரு தமிழீழ இராணுவத்துடன் தொடர்புடையவர் சொல்லித்தானே இவர்கள் பிரசுரித்திருப்பார்கள்? இதற்க்கும் இல்லை இல்லை, ரிஷி அவர்கள் வானத்திலி பறக்கும் போது பார்த்திருப்பார் என்றால் நான் வரவில்லை. இப்போது நான் சொல்ல வந்தது. என்னவெனில். அந்த செய்தியை, சொல்லியவர் அல்லது, சற்று விசயத்தை சொன்னவருக்கு உங்களிலும் பார்க்க பொறுப்பிருக்கும், அதை விட தமிழ் ஊடகம் என்ற வகையில் பரபரப்புக்கும் அது சார்ந்திருக்கும் தமிழ் தேசியம் தொடர்பான பொறுப்புள்ளது. அதை அவர்களுக்கு சொல்லி கொடுக்க முயல்வது சிறு பிள்ளைத்தனம்.

நிதர்சன் பரபரப்பு மிக்-வன்னியில் தரையிறக்கப்பட்டது, விமானி புலிகளின் ஆள் என்று எழுதியதெல்லாம் பரபரப்புக்காரர் தமது கற்பனைக் குதிரையை வன்னிக்கு மேலே பறக்க விட்டே எழுதியுள்ளனர். இதனை தமிழீழ இராணுவத்துடன் தொடர்புடையவர்கள் சொல்லித்தான் பிரசுரிக்கிறார்கள் எண்டு நீர் நினைக்கிறதை நான் என்னென்டு சொல்ல? நிதர்சன்.

பரபரப்பில் வருபவையெல்லாம் தமிழீழ இராணுவத்துடன் தொடர்புடையவர்கள் சொல்லித்தான் பிரசுரிக்கப்படுகின்றன என்று நினைத்து கொண்டா அதன்மீது இப்படி கரிசனை காட்டுறீர்?

தமிழீழ இராணுவத்துடன் தொடர்புடையவர்கள் ஒரு செய்தியை வெளியில் சொல்ல வேண்டுமென்றால் பரபரப்பின் வாசர்களிற்கு மட்டும் சொல்ல மாட்டார்கள். உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படாத விடயமும் வெளியே வரவேண்டுமென்றால் அதனை செய்வதற்கு மக்களை இலகுவில் சென்றடையும் பல பிரபலமான ஊடகங்கள் இருக்கின்றன.

நிதர்சன் பரபரப்பு பத்திரிகையை மக்கள் வாங்கிப் படிக்க வேண்டும் என்பதற்காகவே சிறு விடயத்தையும் ஊதிப்பெருக்கி வெளியிடுகிறார்கள். இவர்கள் எமது போராட்டத்திலும் பார்க்க தமது பத்திரிகையின் விற்பனையையே பிரதானமாக நினைக்கின்றனர்.

சண் டிவி குழுமத்தின் சொத்தின் மதிப்பு 17000 கோடி. இவ்வளவு பெரும் சொத்தைக் கொண்டுள்ளவர்கள் தமது பத்திரிகைகளை விற்க அவர்கள் செய்யும் நரித்தனங்கள் எத்தனை. ஏன் இதனைச் சொல்கிறேன் தெரியுமா? வேறு வழியில் அதிக வருமானம் கிடைத்தாலும் பத்திரிகை விற்பனையிலும் கவனம் செலுத்துவார்கள் என்பதற்கு உதாரணம்

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழ ஆதரவாளர்களே தங்கள் கோபங்களை பரபரப்பு, நிதர்சனங்களின் மீதும் கொட்டுகிறார்கள்.

இனோர் உண்மை அரசவாதமும் அதைவிட பலமடங்கு வஞ்சத்தைக் கொண்டிருக்கிறது இவைகளின் மேல்.

உங்கள் பார்வையில் தோன்றும் பாதகமான தீர்வுகளூக்கு (பரபரப்பு எதிர்கால நடவடிக்கையின் தீர்க்கதரிசியாகிறது என்றவகையில்) அதாவது சிங்களத்தலைமைகளுக்கு தோன்றாத ஒன்றை இந்த ஊடகம் காட்டிக் கொடுத்து விடுகிறதே என்ற பாணியிலான கவலை வீணானது எனகருதுகிறேன்.

இவற்றை விட பலகோணங்களில் சிங்கள ஊடகங்கள் சொல்லும் போது அவற்றை நிறுத்த எம்மால் முடியுமா?

அரசு எவற்றை தம் பிரச்சினைகளின் திறவுகோல் என்று நம்பத்துவங்குகிறதோ அவற்றைக் கொண்டே புதுப் பிரச்சினைகளை திறக்கவைப்பிப்பதே புலிகளின் போர்த்தந்திரம்.

பரபரப்பு விற்பனையில் பரபரப்பேற்படுத்த முற்படுவது பத்திரிக்கை பாரம்பரியங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்று அல்லவே.

தவிர ரிஷி வருமானத்துக்காக பத்திரிக்கையை நடத்தவில்லை என்பதும் பச்சைக் குழந்தைப் பிள்ளைத்தனமானது.

அது தவறாக நோக்கப் படவேண்டியதும் அல்ல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களத்தலைமைகளுக்கு தோன்றாத ஒன்றை இந்த ஊடகம் காட்டிக் கொடுத்து விடுகிறதே என்ற பாணியிலான கவலை வீணானது எனகருதுகிறேன்.

அப்படி கவலைப்படவில்லை.

மிக் இறக்கியாச்சுது. அக்கினி வளத்தாச்சு போன்ற விசமத்தனமான புரளிகள் ஏற்கனவே மந்தைகளாகிவிட்ட புலம் பெயர்ந்த தமிழனை கோமா நிலையில் கனவு காண்பவனாகவே வைத்திருக்க உதவும். புலம்பெயர்ந்த மக்கள் முழுவீச்சாக செயல்பட எழவேண்டிய நேரத்தில் கண்ட கண்ட கற்பனைகளை கொடுத்து தேவையில்லாத நம்பிக்கைகளை வளர்த்து அவர்களை செயலற்ற நிலைக்கு இது தள்ளும்.

தமிழ் தேசியத்தின்பால் அக்கறை கொண்ட ஒரு பத்திரிகை மக்களை திரட்டி செயலுக்கு அணிசேர்க்க வேண்டும். புலம்பெயர்ந்த மேற்கில் வாழும் தமிழனுக்கு ஊக்க மாத்திரை அளிக்க முயல்வது நகைப்புக்கிடமானது.

ஊக்க மாத்திரை தேவைப்படுவது தாயகத்திலுள்ள மக்களுக்கு மட்டுமே. அவர்கள் இராணுவ துப்பாக்கிமுனையில் தமது உயிரை கைப்பிடித்தபடி வாழ்பவர்கள்.

புகலிடத்தில் அப்படி பயம் இருப்பதாக நினைப்பவர்களும் பயப்படுவதாக சொல்பவர்களும் தமது கடமையை செய்யாது தப்புவதற்கு கூறும் நிண்டிச் சாட்டேயன்றி வேறென்ன.

ஊடக துறை சம்பந்தமான எந்த அடிப்படை அறிவிமில்லாத கோமாளிகள் நடத்தும் கோமாளிக்கூத்தை தயவு செய்து வக்காலாத்து வாங்கி ஊக்குவிக்காதீர்கள். தாயகத் தமிழனை நோக்கி வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் வருவதை தவறான முன்னுதாரணமாக்கி எதை எழுதுவது என்ற தீர்க்கதரிசனமின்றி இவர்கள் செய்யும் போக்கிரித்தனம் கேவலமானது.

Edited by பண்டிதர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி கவலைப்படவில்லை.

மிக் இறக்கியாச்சுது. அக்கினி வளத்தாச்சு போன்ற விசமத்தனமான புரளிகள் ஏற்கனவே மந்தைகளாகிவிட்ட புலம் பெயர்ந்த தமிழனை கோமா நிலையில் கனவு காண்பவனாகவே வைத்திருக்க உதவும். புலம்பெயர்ந்த மக்கள் முழுவீச்சாக செயல்பட எழவேண்டிய நேரத்தில் கண்ட கண்ட கற்பனைகளை கொடுத்து தேவையில்லாத நம்பிக்கைகளை வளர்த்து அவர்களை செயலற்ற நிலைக்கு இது தள்ளும்.

தமிழ் தேசியத்தின்பால் அக்கறை கொண்ட ஒரு பத்திரிகை மக்களை திரட்டி செயலுக்கு அணிசேர்க்க வேண்டும். புலம்பெயர்ந்த மேற்கில் வாழும் தமிழனுக்கு ஊக்க மாத்திரை அளிக்க முயல்வது நகைப்புக்கிடமானது.

ஊக்க மாத்திரை தேவைப்படுவது தாயகத்திலுள்ள மக்களுக்கு மட்டுமே. அவர்கள் இராணுவ துப்பாக்கிமுனையில் தமது உயிரை கைப்பிடித்தபடி வாழ்பவர்கள்.

புகலிடத்தில் அப்படி பயம் இருப்பதாக நினைப்பவர்களும் பயப்படுவதாக சொல்பவர்களும் தமது கடமையை செய்யாது தப்புவதற்கு கூறும் நிண்டிச் சாட்டேயன்றி வேறென்ன.

ஊடக துறை சம்பந்தமான எந்த அடிப்படை அறிவிமில்லாத கோமாளிகள் நடத்தும் கோமாளிக்கூத்தை தயவு செய்து வக்காலாத்து வாங்கி ஊக்குவிக்காதீர்கள். தாயகத் தமிழனை நோக்கி வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் வருவதை தவறான முன்னுதாரணமாக்கி எதை எழுதுவது என்ற தீர்க்கதரிசனமின்றி இவர்கள் செய்யும் போக்கிரித்தனம் கேவலமானது.

என்னுடைய தனிப்பட்ட கருத்தாக நிதர்சனம், நெருப்பு, பரபரப்பு ஊடகங்கள் மீது காட்டப்படும் அதிருப்தி நியாயமாகப் படவில்லை.

அவை புலிகளின் உத்தியோகபூர்வதளம் என்று உரிமை கூறவில்லை.

எனவே அவற்றின் நன்மை தீமை எந்த பின்புலத்தையும் பாதிக்கப் போகிறது என்று சொல்லமுடியாது.

நாம்பார்கின்ற தளத்தில் இருந்து அல்லாமல் வேறுதளங்களில் இருந்து அவற்றின் செயற்பாடுகள் போராட்டதுக்கு உபயோகப்பட்டு கொண்டுதான் இருக்கிறது.

அரசின் நிழல் ஊடகங்கள் புலிகள் பேச்சுத்தீர்வின் துவக்கத்தில் நிற்க்கும் போதே "ஒன்றுமே இல்லாத தீர்வை பெற இணங்கி விட்டார்களே" என்று புலம்புவார்கள்.

அதில் இருந்து விலகினால் "போராட்டம் மக்களுக்காகவா, மண்ணுக்காகவா மக்கள் அவலத்தைக் கருத்தில் கொண்டு இறங்கிப் போகக்கூடாத?"

என்று புலம்புவார்கள்.

சண்டைப் படாமல் பொறுத்துக் கொண்டு போனால் "சண்டையைத் துவங்கினால் இருக்கின்ற கட்டுப்பாட்டு பிரதேசங்கள் எல்லாம் இராணுவம் பறித்து விடும் என்ற பயத்தினால்தான் போகவில்லை"

என்றும் புலம்புவார்கள்.

எனவே இவர்களே பல ஊடகவேடங்களில் ஊடகயுத்தம் செய்யும் போது அதை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பும் எமது ஊடகங்களுக்கு உண்டு.

முள்ளை முள்ளால் எடுக்கின்ற மருந்து போல் எம்முடைய ஊடகங்களும் பலவிதமான தளங்களில் பலவிதமான எதிர்ப்புக்களுக்கு முகங்கொடுக்கவேண்டிய அவசியம் இருக்கின்றது.

எனவே நீங்கள் இவைமேல் கொள்ளும் மனவிசனம் தேவை அற்றது என்பதே எனது தாழ்மையான அபிப்பிராயம் ஆகும்.

தவிர ஏகலைவன் காலத்து போர்த்தர்மம் எம்மை வாழ்த்த வேண்டும் என்ற ஆசையும் எமக்கு வேண்டியதில்லை.

Edited by தேவன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஊடகங்கள் தமிழ்த் தேசியம் சார்பாக எழுதவேண்டிய விடயங்கள் நிறையவே இருக்கின்றன.

நான் இதில் கருத்து எழுதுகிறபடியால் பரபரப்பு பத்திரிகையின் எதிரி என்று என்னைக் கருதவேண்டாம்.

பரபரப்பு பத்திரிகை வியாபார நோக்கம் கொண்டதா, இல்லையா என்பதல்ல எனது விவாதம்.

அதாவது பத்திரிகையில் பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதிற்காக

எல்லாம் எழுதலாம் என்ற கொள்கை கொண்டவர் தான் இந்த ரிஷி.

தான் கனடாவில் விமான நிலையத்தில் தான் தொழில் புரிகிறார்போல் தெரிகிறது, அதுதான் அளவுக்கு அதிகமாக கற்பனையில் மிதக்கின்றார்.

ஜயா நிதர்சன் அவர்களே நீங்கள் விவாதிப்பதிற்கு முன்வருவதிற்கு முன்பு நல்லாக ஜோசித்துத்தான் வந்தீர்களா? உங்கள் விவாதம் வேண்டவாதம் என்பதை ஏன் புரிந்து கொள்கின்றீர்களில்லை?

கனடாவிலை இலவசமாக வெளிவருகின்ற பத்திரிகை எல்லாம் உங்களுக்கு கேவலமாகப் போச்சுதா?

உங்களுக்குத்தெரிந்தது பரபரப்புப் பத்திரிகை மட்டுந்தானா?

முழக்கம், ஈழமுரசு ,உலகத்தமிழர் போன்றவை பத்திரிகை இல்லையா? தமிழ் வியாபாரச் சமூகத்தினர் போதியளவு ஆதரவு கொடுக்கும்போது ஏன் பணத்திற்கு பத்திரிகையை விற்கவேண்டும்?

உங்களுக்கும் பரபரப்பு பத்திரிகை நிறுவனத்திற்கும் பங்கு உள்ளதா?

ஜயா ஊடகத்தர்மம், சமுக அர்ப்பணிப்பு, இப்படிப் பல விடயங்களை மனதில் நிறுத்திக்கொண்டு தான், பத்திரிகையை நடத்தவேண்டும்.

பணத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டு விளம்பரத்திற்காக நிறைய பணத்தைச் செலவழித்து பத்திரிகை நடத்துவதை எப்படிச் சொல்லுவதோ?

ஜயா நிதர்சன் நான் இந்த தலைப்பின்கீழ் உங்கள் கருத்தை அவதாணித்தேன், அளவுக்கு அதிகமாக தமிழ்த்தேசியத்தையும், விடுதலை இயக்கத்தையும் பாதிக்கிற மாதிரி கருத்தை முன்வைக்கின்றீர்கள், நிறுத்துங்கள் இத்துடன்.

இன்னு IBC இல் விமானம் ஒன்று தெற்கில் இறங்கி ஏறியதாக செய்தி சொல்லியதே யாராவது முழுவிபரம் அறிந்தீர்களா ? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கேகாலையில் மர்ம விமானம் பறந்ததாக சிறிலங்காப் பொலிஸ் திணைக்களத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாம்.

ஆளில்லாத விமானத்துடன் கமாஸ் இயக்கத்தினர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோரும் பரபரப்பாய் தான் கருத்து எழுதுகின்றீர்கள். மின்னல் முதல் பண்டிதர் , என்று தொடர்கின்றது. பண்டிதர் அவர்களே, உங்கள் ஊடகத்துக்கான வரை விலக்கணம் என்ன என்பதை கொஞ்சம் எழுதினால் அதை கருத்தில் எடுத்து பத்திரிகை உலகம் செயற்ப்பட வாய்பாயிருக்கும். அதே போல ஊடகங்கள் எல்லாவற்றையும் வழமர்சிப்பதாய் எடுத்துக்கொண்டாலும், விமர்சனம் என்பது இலகுவாய் வைக்கப்படக்கூடியது. உங்களில் எத்தனை பேர் ஊடகத்துக்குள் செயற்ப்பட தயாராய் இருக்கின்றீர்கள்? அப்படியிருக்கையில் எப்படி அச் செயற்ப்பாடுகளில் இருப்பவர்கள் நீங்கள் விமர்சிக்க முடியும்? உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்.

அடுத்து, கனடாவில் முழக்ம், ஈழமுரசு, சுதந்திரன், இன்னும் ஏராளம் பத்திரிகைகள் வருகின்றன. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் ஒரு காலத்தில் ரிஷி அவர்கள் தமிழ்நாதத்தில் செய்த புலனாய்வு அரசியை எழுத்தாக்கியே இப்பத்திரிகைகள் பிரிசுரித்திருந்த. நீங்கள் சொல்லும் இந்த பத்திரிகைகளில், (முழக்கம், ஈழமுரசு தவிர) எந்தப்பத்திரிகையில் 20 விகிதத்துக்கு அதிகமாக சமூக சார்ந்து இருக்கின்றன? எத்தனை பக்கங்களில் அவர்கள் விளம்பரம் போடுகின்றனர். பரபரப்பு பணத்திற்க்காய் விற்கப்பட்டாலும், அதன் தரம் பத்திரிகை என்ற தொனியிலே இருக்கின்றது. வெள்ளிக்கிழமை பத்திரிகையை வெளியிட, வியாழக்கிழமை இரவு ஆயிரம் எழுத்துப்பிழைகளுடன், பத்திரிகை என்ற பெயருக்கும் வரும் பத்திரிகைகளை எல்லாம் கேவலமாக தான் என்னால் பார்க்க முடியும். மேலும், இணையங்களிலிருந்து பிரதி செய்து ஏNதூ கனடாவில் இருப்பவர்கள் எல்லாம் கணினிப்பக்கமே போகாதவர்கள் போல பத்திரிகை முழுக்க இணையத்திலிருந்து பிரதி செய்து போடுபவர்கள், அதற்க்கு ஆசிரியர் வேறு, கேவலமான பத்திரிகைகளாகவே என்னால் கணிக்க முடியும்.

களத்தில் விடுதலைப்புலிகள் பின்னகர்வில் ஏற்ப்பட்ட போது அதைப்பற்றிய ஆய்வுகளை செய்யாது, அன்று வென்றார்கள், நேற்று வென்றார்கள் என்று தமிழ் மக்களை ஏமாற்றி கொண்டிருந்த ஊடகங்களுக்கு மத்தியில் பரபரப்பு வித்தியாசமே, நான் பரபரப்பின் அபிமானியாக இதைச் சொல்லவில்லை. நீங்கள் சொல்லும் அந்த ஊடகம் தொடர்பாக எங்களுக்கும் கொஞ்சம் தெரிந்திருப்பதால் சொல்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்து, கனடாவில் முழக்ம், ஈழமுரசு, சுதந்திரன், இன்னும் ஏராளம் பத்திரிகைகள் வருகின்றன. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் ஒரு காலத்தில் ரிஷி அவர்கள் தமிழ்நாதத்தில் செய்த புலனாய்வு அரசியை எழுத்தாக்கியே இப்பத்திரிகைகள் பிரிசுரித்திருந்த. நீங்கள் சொல்லும் இந்த பத்திரிகைகளில், (முழக்கம், ஈழமுரசு தவிர) எந்தப்பத்திரிகையில் 20 விகிதத்துக்கு அதிகமாக சமூக சார்ந்து இருக்கின்றன? எத்தனை பக்கங்களில் அவர்கள் விளம்பரம் போடுகின்றனர். பரபரப்பு பணத்திற்க்காய் விற்கப்பட்டாலும், அதன் தரம் பத்திரிகை என்ற தொனியிலே இருக்கின்றது. வெள்ளிக்கிழமை பத்திரிகையை வெளியிட, வியாழக்கிழமை இரவு ஆயிரம் எழுத்துப்பிழைகளுடன், பத்திரிகை என்ற பெயருக்கும் வரும் பத்திரிகைகளை எல்லாம் கேவலமாக தான் என்னால் பார்க்க முடியும். மேலும், இணையங்களிலிருந்து பிரதி செய்து ஏNதூ கனடாவில் இருப்பவர்கள் எல்லாம் கணினிப்பக்கமே போகாதவர்கள் போல பத்திரிகை முழுக்க இணையத்திலிருந்து பிரதி செய்து போடுபவர்கள், அதற்க்கு ஆசிரியர் வேறு, கேவலமான பத்திரிகைகளாகவே என்னால் கணிக்க முடியும்.

கனடாவில் வரும் நீங்கள் சொல்கின்ற பத்திரிகைகளை எல்லாம் பத்திரிகை என்று யாரும் இங்கு வக்காலாத்து வாங்கவில்லை.

உங்கள் கருத்துப்படி எழுத்துப் பிழை இல்லாமல் எழுதுவதால் பரபரப்புக்கு பத்திரிகைத் தரம் வந்துவிடுமோ? :lol::D

ஆக, பத்திரிகைத் துறையில் புகலிட மக்களுக்கு பரபரப்பு அறிமுகப்படூத்திய புதிய விடயம் (novelty) எழுத்துப் பிழை இல்லாமல் எழுதுதல். நன்று. நன்று. பரபரப்பின் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்!! :P

உங்களுக்குத் தெரியுமோ தெரியாது, கனடாவில் ஏராளமானோர் இணையத் தொடர்பில்லாமல் இருக்கிறார்கள். உண்மையில் பரபரப்பைக் கூட அவ்வாறானவர்கள் வீடுகளில்தான் நான் பரவலாக கண்டேன். தாங்களே கதைகளை இயற்றி அதன் தாக்கம் என்ன என்ற தெளிவின்றி எழுதி மக்களை குழப்புவதை விட தமிழ்நாதம் போன்ற இணையத்தில் வரும் மிகவும் காத்திரமான படைப்புக்களை இணைய வசதி இல்லாத மக்களுக்கு எடுத்துச் செல்லும் மற்றைய பத்திரிகைகளின் சேவை நீங்கள் சொல்வதுபோல கேவலமானது அல்ல. மாறாக கண்டதையும் கற்பனை பண்ணி எழுதி மக்களை முட்டாளாக்க எண்ணும் பரபரப்பை விட அவை பரவாயில்லை . :rolleyes:

களத்தில் விடுதலைப்புலிகள் பின்னகர்வில் ஏற்ப்பட்ட போது அதைப்பற்றிய ஆய்வுகளை செய்யாது, அன்று வென்றார்கள், நேற்று வென்றார்கள் என்று தமிழ் மக்களை ஏமாற்றி கொண்டிருந்த ஊடகங்களுக்கு மத்தியில் பரபரப்பு வித்தியாசமே, நான் பரபரப்பின் அபிமானியாக இதைச் சொல்லவில்லை. நீங்கள் சொல்லும் அந்த ஊடகம் தொடர்பாக எங்களுக்கும் கொஞ்சம் தெரிந்திருப்பதால் சொல்கின்றேன்.

ஆமாம், ஆய்வு செய்து மட்டும் என்னத்தைக் கிழித்துப் போடுவீர்கள் என்று அறியலாமா? :P :P

ஆக, களத்தில் பின்னகர்வு வந்தால் உங்களுக்குத் தேவை அதைப் பற்றிய இராணுவ ஆய்வு. அவ்வளவே!

அதை பரபரப்பாக சுடச் சுட வேறு தரவேணுமாக்கும். :lol:

Edited by பண்டிதர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளை முள்ளால் எடுக்கின்ற மருந்து போல் எம்முடைய ஊடகங்களும் பலவிதமான தளங்களில் பலவிதமான எதிர்ப்புக்களுக்கு முகங்கொடுக்கவேண்டிய அவசியம் இருக்கின்றது.

ஆக, எழுதுவது பொய் தான் என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள். அதற்கு காரணம் இருப்பதாகவும் கூறுகிறீர்கள். அதாவது எதிரியின் பொய்ப்பரப்புரைகளை எதிர்கொள்ள நாமும் பொய் சொல்வது அவசியம் என்கிறீர்கள்.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு. இவர்களின் பரபரப்பு?

இவர்களின் தொடர் புளுகுகளை கேட்டு மக்கள் சலிப்ப்டையும் போது என்ன நடக்கும்? ஏதோ மாசி 22 எண்டாங்கள். பிறகு புது வருடம் எண்டாங்கள் என்று தொடர்கதையாக நீளும்போது, மக்கள் மனங்களில் சலிப்பு ஏற்படும்போது ?? அதை எதிரி தக்கவாறு பயன்படுத்தினால்?

  • கருத்துக்கள உறவுகள்

நிதர்சன் அவர்களே..விடுதலைப்புலிகளின் தந்திரமான பின்னகர்வு என்று எதிரியினாலேயே ஏற்றுக்கொண்ட சம்பவங்கள் எல்லாம் உங்களுக்கும் , உங்களால் சொல்லப்படுகின்ற பரபரப்பு பத்திரிகைக்கும் மட்டும் பின்னடைவாக தோன்றுகின்றதோ?

கனடாவில் இருந்து வெளிவரும் பத்திரிகையில் ஈழநாடு பரபரப்பு தவிர்ந்த ஏனைஐவகள் விளம்பரங்களை தாங்கி வருபவை இவைகள் இலவச வெளியீடுகள்.இது இருக்கட்டும்.இன்று தாயகத்தில் தாக்குதல் விமானங்கள் எதிர் தாக்குதலை சந்தித்துள்ளன.இதன் வெளிபாடாக இந்தியாவிடம் இலங்கை அரசு சரணடைய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிதர்சன் அவர்களே..விடுதலைப்புலிகளின் தந்திரமான பின்னகர்வு என்று எதிரியினாலேயே ஏற்றுக்கொண்ட சம்பவங்கள் எல்லாம் உங்களுக்கும் , உங்களால் சொல்லப்படுகின்ற பரபரப்பு பத்திரிகைக்கும் மட்டும் பின்னடைவாக தோன்றுகின்றதோ?

அவர் பின்னகர்வு என்று தான் குறிப்பிட்டார். நான் தான் அவ்வாறு மாறி குறிப்பிட்டிருந்தேன்.

திருத்தியுள்ளேன். நன்றி .

Edited by பண்டிதர்

உங்களில் எத்தனை பேர் ஊடகத்துக்குள் செயற்ப்பட தயாராய் இருக்கின்றீர்கள்? அப்படியிருக்கையில் எப்படி அச் செயற்ப்பாடுகளில் இருப்பவர்கள் நீங்கள் விமர்சிக்க முடியும்? உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்.

இப்போது இதுவே வாடிக்கையாகி விட்டது. பிழையைச் சுட்டிக்காட்டினால் நீ வந்து நடத்திப்பார் எண்டு வாயை அடைக்க முயல்வது ஏற்புடையதல்ல.

அடுத்து, கனடாவில் முழக்ம், ஈழமுரசு, சுதந்திரன், இன்னும் ஏராளம் பத்திரிகைகள் வருகின்றன. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் ஒரு காலத்தில் ரிஷி அவர்கள் தமிழ்நாதத்தில் செய்த புலனாய்வு அரசியை எழுத்தாக்கியே இப்பத்திரிகைகள் பிரிசுரித்திருந்த. நீங்கள் சொல்லும் இந்த பத்திரிகைகளில், (முழக்கம், ஈழமுரசு தவிர) எந்தப்பத்திரிகையில் 20 விகிதத்துக்கு அதிகமாக சமூக சார்ந்து இருக்கின்றன? எத்தனை பக்கங்களில் அவர்கள் விளம்பரம் போடுகின்றனர். பரபரப்பு பணத்திற்க்காய் விற்கப்பட்டாலும், அதன் தரம் பத்திரிகை என்ற தொனியிலே இருக்கின்றது. வெள்ளிக்கிழமை பத்திரிகையை வெளியிட, வியாழக்கிழமை இரவு ஆயிரம் எழுத்துப்பிழைகளுடன், பத்திரிகை என்ற பெயருக்கும் வரும் பத்திரிகைகளை எல்லாம் கேவலமாக தான் என்னால் பார்க்க முடியும். மேலும், இணையங்களிலிருந்து பிரதி செய்து ஏNதூ கனடாவில் இருப்பவர்கள் எல்லாம் கணினிப்பக்கமே போகாதவர்கள் போல பத்திரிகை முழுக்க இணையத்திலிருந்து பிரதி செய்து போடுபவர்கள், அதற்க்கு ஆசிரியர் வேறு, கேவலமான பத்திரிகைகளாகவே என்னால் கணிக்க முடியும்.

நிதர்சன் பத்திரிகையில் விளம்பரம் போடுவது என்ன குற்றமா? விளம்பரத்தால் கிடைக்கும் வருவாயைக் கொண்டுதான் இலவசப் பத்திரிகைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இலவசப் பத்திரிகைகளுக்குத் தான் தமது விளம்பரத்தைக் கொடுக்க விளம்பர தாரர்கள் தயாராக இருப்பார்கள். பரபரப்பு போன்ற பத்திரிகைகளிற்கல்ல (அதனாலேயோ என்னவோ பரபரப்பில் விளம்பரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை).

உம்மைப்போன்றும், என்னைப்போன்றும் இணையத்தை பயன்படுத்துபவர்களிற்கு மாத்திரம் பத்திரிகைகள் இல்லை. அனைத்துத் தரப்பினருக்கும் செய்திகள் தெரிய வேண்டும். எனவே இணையச் செய்திகளை பத்திரிகையில் பிரசுரிப்பது தவறல்ல.

எழுத்துப்பிழையில்லாமல் வந்தால் பத்திரிகை தரமான பத்திரிகையா? அமெரிக்க இராணுவத்தின் படங்களைப் போட்டு கவர்ச்சி கரமாக முன்பகத்தை வடிவமைத்தால் அது தரமான பத்திரிகையா? ஒன்று தெரியுமா? ஈழத்தமிழ் பத்திரிகைளிடம் இருக்கும் தரமான எழுத்து பரபரப்பிடம் இல்லை. பேச்சு நடையில் கட்டுரை எழுதப்படுவது பரபரப்பில் மாத்திரம்தான்.

நிதர்சன் இதுவெல்லாம் தேவையில்லாத விடயங்கள். பரபரப்பின் தவறைச் சுட்டிக்காட்டினால் அதற்கு வக்காளத்து வாங்க மற்றப்பத்திரிகைகளில் வரும் தவறுகளை சொல்லி பரபரப்பை நியாப்படுத்தாதீர்கள்.

மிக் விமானம் தாக்கப்பட்டதன் காணொளியை புலிகள் வெளியிட்டு உள்ளனர்.இந்த வார சிறப்பு பார்வை நிகழ்சியில் இந்த வீடியோ காட்சி வருகின்றது அதில் எடுக்கப்பட்ட சில படங்கள் உங்கள் காட்சிக்கு

1-5.jpg

2-5.jpg

3-5.jpg

4-2.jpg

மற்றும் விடியோவை கான இந்த இனைப்பை சொடுக்குங்கள்

http://www.pathivu.com/?ucat=sirappu_paarvai&file=130507

  • கருத்துக்கள உறவுகள்

நெவர்,, நாங்க ஒரு போதும் நம்ப மாட்டம், இது கிராபிக் வேலை.... :huh: :angry:

*உண்மையாகின் ஏன் விமானத்தை சுட்டு விழுத்தியவரின் முகத்தை காட்டவில்லை....

*எந்த இடத்தில் வைத்து தாக்கினார் எண்ட இடத்தையும் காட்டவில்லை...

*அட்லீஸ் எந்த இடத்தில் விமானம் விழுந்தது என்றதைக்கூட காட்டவில்லையே? *** :lol:

அது இருக்க பரபரப்பு ஏதோ சொன்னமாதிரி இருந்திச்சே?? விமானம் வன்னியில தரை......... :lol::lol: உண்மைமாதிரியும் இருக்கெப்பா?? :blink:

அடப்பாவியளா இப்படி பரபரப்பா செய்தியை பரபரப்பில போட்டு லண்டனில எந்த கடையிலையுமே அந்த பேப்பரை இருக்கவிடாமல் பன்னீட்டியளேப்பா, அட லண்டன் யாழ்ப்பாண ரவுனுக்கேயே இல்லை எண்டா பார்த்துக்குங்கோவன். அதுன்ப்பா ஈஸ்ற்ஹாம் பகுதி..:angry:

Edited by வலைஞன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா டங்ளாஷ்..நீங்க சொல்ல வந்தது எனக்கு புரிந்துவிட்டது, வேண்டாமப்பா வம்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.