Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வங்காள விரிகுடாவில் தாழமுக்க நிலை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வங்காள விரிகுடாவில் தாழமுக்க நிலை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

In இலங்கை     August 2, 2019 9:34 am GMT     0 Comments     1044     by : Litharsan

Weather-Situation.jpg

வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் தாழமுக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் எதிர்வரும் சில தினங்களில் காற்றின் வேகம் அடிக்கடி 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்கக்கூடும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் கடல் பிரதேசம் அடிக்கடி கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், புத்தளத்தில் இருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையிலான கடல் பிரதேசம் மற்றும் அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலான கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் அடிக்கடி 55 கிலோமீற்றர் தொடக்கம் 65 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்கக்கூடும்.

இந்த பிரதேசங்களில் அடிக்கடி கடல் கொந்தளிப்புடன் காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும்பொழுது கடும் காற்று வீசக்கூடும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் இந்த கடல் பிரதேசம் தற்காலிகமாக கொந்தளிப்புடன் காணப்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் தொழிலாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை குறைப்பதற்காக அவர்களைத் தெளிவுபடுத்தும் பாதுகாப்பு வேலைத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கடற்தொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலீப்வெத ஆராய்ச்சி கடற்தொழில் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த காலநிலை தொடர்பாக கடற்தொழில் திணைக்களம் வழங்கும் ஆலோசனைக்கு அமைய செயற்படுமாறு அவர் கடல் தொழிலாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

எதிர்வரும் சில தினங்களில் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறு அனைத்து கடல் தொழிலாளர்கள் மற்றும் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோரிடம் கடற்தொழில் திணைக்களத்தின் தேடுதல் நடவடிக்கை பிரிவினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்புக்கு அமைய கடற்தொழில் திணைக்களத்தில் தேடுதல் நடவடிக்கை பிரிவு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

 

http://athavannews.com/வங்காள-விரிகுடாவில்-தாழம/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.