Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நன்றி யாழ் இணையம் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

”முரட்டு மேதை என்பர் மேலோர்
'இங்கிதம் அறியான் அறியான்' என்பர்
கபடம் நிறைந்த இளம் சீமாட்டிகள்.”

.

Image may contain: one or more people, beard and indoor

.

இது என் சுய தரிசனக் கவிதை. யாழ் பல்கலைக் கழகத்தில் மாணவர் தலைவனாக செயல்பட்ட நாட்க்களில் எழுதியது. ஒரு போராட்டத்தின்போது பல்கலைக்கழக தலைவராக இருந்த பேராசிரியர் கைலாசபதி என்னை intellectual and Thug என திட்டினார். அவருக்கு பதிலாக எழுதி பல்கலைகழக மாணவர் மன்ற அறிவுப்பு பலகையில் ஒட்டிய கவிதை. தற்செயலாக யாழ் இணையத்தில் தேடியபோது கிருபன் என்னைபற்றிய குறிப்புகளோடு பதிவிட்டிருந்தார். யாழ் இணையத்துக்கும் கிருபனுக்கும் நன்றிகள். என் இளமைக் காலம்பற்றி கிருபன் எழுதிய குறிப்பின் இணைப்பு கீழே இணைக்கபட்டுள்ளது. 
.
கள்ளிப் பலகையும் கண்ணீர்த் துளிகளும்
- வ.ஐ.ச.ஜெயபாலன் -
.
முரட்டு மேதை என்பர் மேலோர்
'இங்கிதம் அறியான் அறியான்' என்பர்
கபடம் நிறைந்த இளம் சீமாட்டிகள்.
.
ஓயாது துரத்தும் சவக்குழி விழுங்குமுன்
ஒரேஒரு முறையே வாழுமிவ் வாழ்வில்
கையா லாகாத கோழையைப் போல
கொடுமையும் சூதும் நிறைந்த உலகை
சகித்தும் ரசிக்கும் பாவனை செய்தும்
சான்றோன் என்று மாலைகள் சூட
நானும் எனது நண்பரும் விரும்போம்.
.
வீணையோடும் தூரிகையோடும்
மூலைமட்டம் ஸ்டெதஸ்கோப் அரிவாள்
சம்மட்டி போன்றவை பழகிப் போன
கைகளை உயர்த்தி நெஞ்சுகள் நிமிர்த்தி
எனது தோழர் புடை சூழ்வார்கள்.
.
பொன்னாய் அழகு பொலியினும் விலங்கை
அப்பிய மலமாய் அருவருத் துதறுவோம்.
வெடி மருந்துகள் தோய்ந்த எம்நாவு
ஓய்ந்திருக்காது.
தடைகள் சீனப் பெரு மதிலாயினும்
தகர்க்கும் பணியினைப் பேனைக் குச்சியால்
அங்குரார்ப்பணம் செய்வேன்.
தடைகளை தகர்த்தும் விலகியும் தொடர்ந்து
அதிமானிடராய் முன் சென்றிடுவோம்.
விழுமிடத் தெமக்கோர் நடுகல் நிமிர்த்தி
எமது பிள்ளைகள் பெண்டுகள் தொடர்வார்.
.
கடலின் மணலை எண்ணித் தீர்ப்பினும்
மானிடர் எமது வம்சக் கொடியை
சவக்குழி விழுங்கித் தீர்த்திடல் முடியுமோ?
விலங்கும் சிறையும் வளைத்திடல் கூடுமோ?
.
விடுதலை பெற்ற தோழியரோடு
கட்டாந் தரையின் வாழ்வே உவப்பு.
பெரிய இடத்துச் சீமை நாய்களாய்
கார்ப்பவனி வரும் இல்லறக் கனவில்
எமது தோழர் தோழியர் தேயார்.
.
கொடிய உலகம் சான்றோன் என்னவும்
இளம் சீமாட்டிகள் இனியவன் என்னவும்
குனிந்து நடக்கும் கூழங்கையர்கள்
பெறுமதி கூடிய காலணி இலங்கும்
கால்களைத் தேடியே முத்தம் கொடுப்பர்.
பொன்முலா மிட்ட சவப்பெட்டிப் பரிசால்
உலகம் அவர்களைக் கெளரவம் செய்க.
.
வெளிப் பூச்சற்ற கள்ளிப் பலகையும்
வெம்மை நிறைந்த கண்ணீர்த் துளிகளும்
எங்களுக்காக இருக்கவே செய்யும்.
.
- 1979
யாழிணையத்தில் கிருபன் எழுதிய குறிப்பு.
https://yarl.com/…/162206-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%…/…

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணையவன்

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, poet said:

தற்செயலாக யாழ் இணையத்தில் தேடியபோது கிருபன் என்னைபற்றிய குறிப்புகளோடு பதிவிட்டிருந்தார். யாழ் இணையத்துக்கும் கிருபனுக்கும் நன்றிகள். என் இளமைக் காலம்பற்றி கிருபன் எழுதிய குறிப்பின் இணைப்பு கீழே இணைக்கபட்டுள்ளது

கவிஞர் ஐயா,

இந்தக் குறிப்பை எழுதியவர் வ. ந. கிரிதரன். யாழில் அதை ஒட்டிய வேலையை மட்டும்தான் நான் செய்தேன்! எனவே உங்கள் நன்றி பதிவுகள் இணைய ஆசிரியர் வ. ந. கிரிதரனுக்கே போகவேண்டும். அப்படியே முகநூலிலும் திருத்திவிடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்றெழுதிய கவிதையே ஆக்ரோஷமாய் இருக்குது கவிஞரே. அருமை....!   👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கிருபன்.

பெயர் ஒற்றுமையை பார்த்துவிட்டு கிருபனும் கிரிதரனும் ஒருவர் என நினைத்துவிட்டேன். 78 அல்லது 79ல் யாழ்பாண கட்டிட தொன்மங்களை பாதுகாக்கும் ஆர்வத்துடன் இளம் ஆய்வாளராக வ.ந.கிரிதரன் எனக்கு அறிமுகமானார். போராலும் புலப்பெயர்வினாலும் ஈழம் இழந்த ஆற்றல்களுள் வ.ந.கிரிதரனும் ஒருவர். மீண்டும் கிரிதரன் ஈழத்தில் செயல்பட புலம்பெயர்ந்த தமிழர்கள் உதவ வேண்டும்.  நானே மறந்துபோன என் கவிதை பற்றி எழுதிய வ.ந.கிரிதரனுக்கும் அதனைப் பதிவேற்றிய கிருபனுக்கும் பாதுகாத்த யாழ் இணையத்துக்கும் நன்றிகள்.  

10 hours ago, கிருபன் said:

கவிஞர் ஐயா,

இந்தக் குறிப்பை எழுதியவர் வ. ந. கிரிதரன். யாழில் அதை ஒட்டிய வேலையை மட்டும்தான் நான் செய்தேன்! எனவே உங்கள் நன்றி பதிவுகள் இணைய ஆசிரியர் வ. ந. கிரிதரனுக்கே போகவேண்டும். அப்படியே முகநூலிலும் திருத்திவிடுங்கள்.

பதிவுக்கு நன்றி கிருபன். திருத்த வாய்ப்பில்லை. ஏனெனில் எடிட் மூடபட்டுவிட்டது நண்பா. திறக்க முடியுமா?

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றி தோழமைக்குரிய புங்கையூரன், nunavilan and இணையவன். உங்களைப்போன்றவர்களின் ஆதரவுதான் என்னை தலைபணியாமல் எழுத வைக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, poet said:

பதிவுக்குன்றி கிருபன். திருத்த வாய்ப்பில்லை. ஏனெனில் எடிட் மூடபட்டுவிட்டது நண்பா. திறக்க முடியுமா?

 

நிர்வாகம்தான் உதவமுடியும்.

நீங்கள் எழுதிய கவிதைகள் அனைத்தையும் தேடிப் பெற இணையம் உதவி செய்யும் என்று நினைக்கின்றேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் நான் யாழில் ஆரம்பகாலங்களில் பதிவேற்றிய கவிதைகள் கிடைக்கவில்லை. உதவ முடியுமா

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.