Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அஷ்வின்: “இந்தி பேச தெரியாததால் இந்திய அணியில் நுழைந்தபோது தனிமைப் படுத்தப்பட்டேன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அஷ்வின்: “இந்தி பேச தெரியாததால் இந்திய அணியில் நுழைந்தபோது தனிமைப் படுத்தப்பட்டேன்”

கிரிக்கெட் வீரர் அஸ்வின்படத்தின் காப்புரிமைGREG WOOD

திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் கிளப் சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா திண்டுக்கல்லில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணி வீரரான அஸ்வின் விழாவில் பங்கேற்று பரிசுகளை வழங்கினார். பின்பு அந்நிகழ்ச்சியில் பேசிய அஸ்வின், தேசிய அணியில் பங்கேற்ற ஆரம்ப நாட்களில் , தனக்கு இந்தி பேசத்தெரியாததால், குழுவில் தனிமையை உணர்ந்ததாக அவர் தெரிவித்தார்.

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil

இது குறித்து பேசிய அவர், "இந்திய கிரிக்கெட் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ஒவ்வொரு நாளும் விளையாட செல்லும் போது அழுது கொண்டே செல்வேன். வீட்டுக்கு திரும்பும் போது சிரித்துக் கொண்டே வருவேன். நான் வீட்டைவிட்டு செல்வதால்தான் அழுகிறேன் என்று பல நேரங்களில் என் பெற்றோரிடம் கூறியுள்ளேன். உண்மையில், எனக்கு இந்தி எழுதவும் படிக்கவும் தெரியும். ஆனால் பேச வராது. இதனால் நான் பேசுவதற்கு ஆளின்றி தனிமையில் விடப்பட்டேன். இதனால் நான் அழுது கொண்டே இருந்தேன்" என்று இந்தி மொழி பேச தெரியாதால் மற்ற வீரர்கள் தன்னை புறக்கணித்ததாக அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/sport-49232507

"இது குறித்து பேசிய அவர், "இந்திய கிரிக்கெட் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ஒவ்வொரு நாளும் விளையாட செல்லும் போது அழுது கொண்டே செல்வேன். வீட்டுக்கு திரும்பும் போது சிரித்துக் கொண்டே வருவேன். நான் வீட்டைவிட்டு செல்வதால்தான் அழுகிறேன் என்று பல நேரங்களில் என் பெற்றோரிடம் கூறியுள்ளேன். உண்மையில், எனக்கு இந்தி எழுதவும் படிக்கவும் தெரியும். ஆனால் பேச வராது. இதனால் நான் பேசுவதற்கு ஆளின்றி தனிமையில் விடப்பட்டேன். இதனால் நான் அழுது கொண்டே இருந்தேன்" என்று இந்தி மொழி பேச தெரியாதால் மற்ற வீரர்கள் தன்னை புறக்கணித்ததாக அவர் வேதனையுடன் தெரிவித்தார்".

தமிழனுக்கு என்று ஒரு நாடு வேண்டும்... இல்லை எனில் இந்த அழுகுரல்கள் தொடரவே செய்யும்.

On 8/6/2019 at 3:24 PM, ampanai said:

"இது குறித்து பேசிய அவர், "இந்திய கிரிக்கெட் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ஒவ்வொரு நாளும் விளையாட செல்லும் போது அழுது கொண்டே செல்வேன். வீட்டுக்கு திரும்பும் போது சிரித்துக் கொண்டே வருவேன். நான் வீட்டைவிட்டு செல்வதால்தான் அழுகிறேன் என்று பல நேரங்களில் என் பெற்றோரிடம் கூறியுள்ளேன். உண்மையில், எனக்கு இந்தி எழுதவும் படிக்கவும் தெரியும். ஆனால் பேச வராது. இதனால் நான் பேசுவதற்கு ஆளின்றி தனிமையில் விடப்பட்டேன். இதனால் நான் அழுது கொண்டே இருந்தேன்" என்று இந்தி மொழி பேச தெரியாதால் மற்ற வீரர்கள் தன்னை புறக்கணித்ததாக அவர் வேதனையுடன் தெரிவித்தார்".

தமிழனுக்கு என்று ஒரு நாடு வேண்டும்... இல்லை எனில் இந்த அழுகுரல்கள் தொடரவே செய்யும்.

இந்தி பேசத் தெரிவதனால் உள்ள நன்மையை வெளிப்படுத்தவே பிபிசி யின் இந்த செய்தி. பலமொழிகளைத் தெரிந்து வைத்தல் எப்போதும் நல்லதே. ஆனால் அது திணிப்பாக மாறும்போதுதான் முரண்பாட்டை தோற்றுவிக்கும். 

தமிழனுக்கு தனிநாடு கிடைத்தால் நல்லதே. ஆனால் அது எமக்குள்ள பிரச்சணைகளுக்கெல்லாம் தீர்வாக அமையும் என எண்ணுவது பொருத்தமற்றது. அன்மையில் விடுதலையடைந்த நாடுகள் பல இதற்கு உதாரணம்.

2 minutes ago, manimaran said:

தமிழனுக்கு தனிநாடு கிடைத்தால் நல்லதே. ஆனால் அது எமக்குள்ள பிரச்சணைகளுக்கெல்லாம் தீர்வாக அமையும் என எண்ணுவது பொருத்தமற்றது. அன்மையில் விடுதலையடைந்த நாடுகள் பல இதற்கு உதாரணம்.

தமிழன் நாட்டில் தமிழை அவர்களுக்குள் பேசும்பொழுது அந்த வீரர்களுக்கு இப்படி ஒரு அழும் நிலை வராது என்பதே என் கருத்து.

ஆம், ஆக்கிரமிப்பிற்கே உள்ளாகாத பிரித்தானியாவில் கூட பிரச்சனைகள் உண்டு,
ஆனால், விடுதலை அடைந்த கிழக்கு திமோர் போன்ற நாடுகள் அமைதியாக வாழவும் செய்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, manimaran said:

இந்தி பேசத் தெரிவதனால் உள்ள நன்மையை வெளிப்படுத்தவே பிபிசி யின் இந்த செய்தி. பலமொழிகளைத் தெரிந்து வைத்தல் எப்போதும் நல்லதே. ஆனால் அது திணிப்பாக மாறும்போதுதான் முரண்பாட்டை தோற்றுவிக்கும். 

தமிழனுக்கு தனிநாடு கிடைத்தால் நல்லதே. ஆனால் அது எமக்குள்ள பிரச்சணைகளுக்கெல்லாம் தீர்வாக அமையும் என எண்ணுவது பொருத்தமற்றது. அன்மையில் விடுதலையடைந்த நாடுகள் பல இதற்கு உதாரணம்.

ந‌ம‌க்குள் என்ன‌ பிர‌ச்ச‌னை / அந்த‌ மாபெரும் த‌லைவ‌ன் பின்னால் ஈழ‌த்த்தில் ஒட்டு மொத்த‌ இன‌மும் அவ‌ர் பின்னால் ஒற்றுமையாய் நிக்க‌ வில்லையா ,

எல்லா இன‌த்திலும் விரோதிக‌ளும் குழ‌ப்ப‌ வாதிக‌ளும் துரோகிய‌லும் இருக்கின‌ம் , அதை எல்லாம் தான்டி எம‌க்கான‌ நாடு அடைஞ்சு அத‌ த‌மிழீழ‌ க‌ன‌வோடு ம‌டிந்து போன‌ மாவீர‌ர்க‌ளுக்கு ச‌ம‌ர்பிப்ப‌து ஒவ்வொரு த‌மிழ‌னுடைய‌ க‌ட‌மை  /

என்னை த‌ல‌ கீழா க‌ட்டி வைச்சு அடிச்சாலும் , நான் ஒரு போதும் ஹிந்தியோ சிங்க‌ள‌மோ க‌ற்று கொள்ள‌ மாட்டேன் , 
என‌க்கு எல்லாமே என் த‌மிழ் மொழி தான் , த‌மிழுக்கு தான் எப்ப‌வும் முக்கிய‌ம் கொடுப்பேன் /
மாற்றான் மொழி தெரியாட்டி என‌க்கு அவமான‌ம் இல்லை , என் தாய் மொழி தெரியாட்டி தான் என‌க்கு பெருத்த‌ அவ‌மான‌ம் 😉 /

இந்தியாவை முழுவதுமாக ஆண்டு கொண்டிருக்கும் ஒரு வர்க்கத்தை சேர்ந்தவர், தான் ஹிந்தி தெரியாமையால் அவதிப்பட்டதாக கூறுவதற்கு பின்னால் உள்ள அரசியலின் கோட்பாட்டுப் புரிதல் நமக்கு அவசியமானது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.