Jump to content

திறந்த பல்கலைக்கழகம் ஒரு பார்வை - விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா


Recommended Posts

திறந்த பல்கலைக்கழகம் ஒரு பார்வை - விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா

தமிழர் கல்வி மதியுரையகம் | சிறகுகள் அமையம்

 

 

Link to comment
Share on other sites

உள்ளூர் ஊடகங்கள் மற்றும் பாடசாலைகளில் இந்த திறந்த பல்கலைக்கழகம் பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தலாம். 

ஆனால். தொழில் வாய்ப்பு சேர்த்த துறைகளை இணைக்கவேண்டும். மேலும், பொருளியல், முகாமைத்துவம் போன்ற துறைகளில் நாம் பின்தங்கி உள்ளோம். அவை சார்ந்த கல்வி தகமைகளை இணைக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் வேடிக்கை என்னவென்றால்... இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உட்பட பல துறைகளில் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் தமிழர்கள்.

மேலும் தற்போதைய துணைவேந்தர் தனது முயற்சியால்.. முல்லைத்தீவு.. மன்னார்.. திருமலை போன்ற கல்வியில் பிந்தங்கிய.. தமிழர் பிராந்தியங்களிலும் பிராந்திய நிலையங்களை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கை பல்கலைக்கழகங்களின் தர வரிசையில் யாழ் பல்கலைக்கழகத்தை விட திறந்த பல்கலைக்கழகம்.. முன்னணியில் இருந்ததை அண்மைய ஆண்டு தரவரிசை ஒன்றில் காண முடிந்தது. 

Image result for sri lanka university rankings

இங்கிலாந்திலும் உயர்தர சித்தி பெறாதோர்.. foundation degree அடிப்படை தகுதிப் பட்டப்படிப்பு.. செய்து பின் இளங்கலை மானிக்கான பட்டப்படிப்பை மேற்கொள்ள முடியும்.

இலங்கையில்.. ஒரு அரச அங்கீகாரம் பெற்ற.. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற அடிப்படை தகுதிக்கான பட்டப்படிப்பை வழங்கக் கூடிய ஒரே அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமாக திறந்த பல்கலைக்கழகமே விளங்குகிறது.

இந்தப் பல்கலைக்கழகம்.. காமொன்வெல்த் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பில் ஒரு பிரதிநிதி மட்டுமல்லாமல்.. இங்கு கல்வி கற்பவர்களின் ஆங்கில அறிவு என்பது IELTS - மட்டம் 5.5 - 6.5 இணையாக மதிக்கப்படுகிறது.

உலகில் எல்லா உயர்கல்வி நிறுவனங்களும் திறந்த பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி மூல பட்டப்படிப்பை பெருமதிப்போடு பார்ப்பதுடன்.. முதுமாணி மற்றும் டாக்டர் பட்டங்களுக்கான  வாய்ப்பையும் இலகுவாக வழங்குகின்றன. 

இலங்கையில் நிலவும் போட்டிப்பரீட்சைச் சூழலுக்கு.. திறந்த பல்கலைக்கழகம் ஒரு நல்ல வரப்பிரசாதம்.

இது இங்கிலாந்தின் திறந்த பல்கலைக்கழகக் கோட்பாடுகளைப் பின்பற்றி இலங்கை அரசால்.. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ்..  நிறுவப்பட்ட ஒன்றாகும். 

வடக்குக் கிழக்கு மாணவர்கள் இதன் வசதியை பயன்படுத்த வேண்டும்.

இங்கு கல்வி பயிலும் மாணவர்கள்.. மகாபொல உட்பட..பல நிதி உதவிகளைப் பெற தகுதி அடைகின்றனர். 

இலங்கையில் இதர அரச பல்கலைக்கழகங்கள் போலல்லாது திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வி பயில ஒரு தொகை பணம் செலுத்த வேண்டும். அது சில மாணவர்களுக்கு சிரமமாக இருக்கலாம். அப்படியான மாணவர்கள்... இந்த நிதி உதவித் திட்டங்களைப் பெறலாம். 

இவர்களின் இணையத்தள செயற்பாடு மேற்கு நாடுகளின் பல்கலைக்கழகங்களின் செயற்பாட்டு நிகராக இருப்பதை அவதானிக்க முடிகிறது. சிறப்பாகச் செய்கிறார்கள். இணைய வழி கல்வி நெறிகளையும் அறிமுகப்படுத்தி செயற்படுத்தி வருகின்றனர்.

http://www.ou.ac.lk/home/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.