Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுமிகளுடன் பாலுறவு கொண்டதாக கைது: தொழிலதிபர் சிறையில் மரணம்

Featured Replies

பதினெட்டு வயதுக்கும் குறைவான சிறுமிகளுடன் பாலுறவு கொண்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் புகழ்பெற்ற நிதி முதலீட்டு நிர்வாகிகளில் ஒருவரான ஜெப்ரே எப்ஸ்டெய்னின் உடல், சனிக்கிழைமை சிறையில் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் தமது சிறை அறையில் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கருத்துப்படுகிறது.

2002 முதல் 2005 வரை 18 வயதுக்கும் குறைவான பல சிறுமிகளுடன் பாலுறவு கொண்ட குற்றச்சாட்டுகளின் பேரில் கைதான அவர் மீது, பாலுறவுக்காக சிறுமிகளைக் கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Donald Trump, Epstein

படத்தின் காப்புரிமைGETTY IMAGES

2005இல் அவரால் பாதிக்கப்பட்டதாக 14 வயது சிறுமி ஒருவரின் குடும்பம் புகார் கூறியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளியில் தெரியவந்தது.

2002இல் ஓர் ஊடக நேர்காணலில், "அவர் ஒரு பயங்கரமான ஆள்; என்னைப்போலவே அவருக்கும் அழகான பெண்களைப் பிடிக்கும் என்று கூறுகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இளம் பெண்கள்," என்று இப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார்.

66 வயதான எப்ஸ்டெய்ன், கடந்த மாதம் சிறையில் பாதி மயங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அது ஒரு தற்கொலை முயற்சி என்று அப்போது கூறப்பட்டது.

https://www.bbc.com/tamil/global-49309648

The Justice Department's inspector general is opening an investigation into the circumstances surrounding the death of multimillionaire financier and accused sex trafficker Jeffrey Epstein, Attorney General William Barr announced on Saturday.

The Federal Bureau of Prisons confirmed Epstein's death, saying he was found unresponsive in his cell on Saturday at New York's Metropolitan Correctional Center around 6:30 a.m. ET. The bureau's release called it "an apparent suicide," and said the FBI is investigating. Two law enforcement sources told CNN that Epstein died by suicide.
 
Barr said he was "appalled" to learn of Epstein's death while in federal custody awaiting trial.
 
  • தொடங்கியவர்

அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் ஆகியோரின் நெருங்கிய நண்பரான கோடீஸ்வரர் ஜெவ்ரே எப்ஸ்டெய்ன் சிறுமிகளை பாலியல் நோக்கத்திற்காக கடத்தினார் என  எப்பிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

2002 முதல் 2005 வரையான காலப்பகுதியில் புளோரிடா மற்றும் நியுயோர்க்கில் பல சிறுமிகளை எப்ஸ்டெய்ன் துஸ்பிரயோகம் செய்தார் என குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள அதிகாரிகள் இது தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் அதனை தெரிவிக்குமாறு  பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

சிறுமிகளை கடத்தினார் மற்றும் துஸ்பிரயோகம் செய்தார் என்ற இரு குற்றச்சாட்டுகளை எவ்பிஐ  அதிகாரிகள் சுமத்தியுள்ளனர்.

எவ்பிஐ அதிகாரிகள் சோதனை நடவடிக்கையின் போது ஜெவ்ரே எப்ஸ்டெய்னின் மாளிகையிலிருந்து  சிறுமிகளின் நிர்வாணப்புகைப்படங்களை மீட்டுள்ளனர் எனவும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்

சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பின்னர் தனது தவறை மறைப்பதற்காக பெருமளவு பணத்தை ஜெவ்ரே எப்ஸ்டெய்ன் வழங்கினார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

அவர் தான் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கியவர்களிற்கு பணம் கொடுத்து புதிதாக சிறுமிகளை அறிமுகப்படுத்தும் படி கேட்டுக்கொண்டார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் அவர் ஒரு வலையமைப்பை உருவாக்கியிருந்தார் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

செல்வந்தரிடம் பணிபுரிந்தவர்கள் உட்பட அவரிற்கு நெருக்கமான பலர் இந்த துஸ்பிரயோக நடவடிக்கைகளிற்கு உதவியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிலர் ஜெவ்ரே எப்ஸ்டெய்னின் இச்சையை பூர்த்தி செய்வதற்காக சிறுமிகளை நியுயோர்க்கிற்கு அழைத்து வந்தனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/60056

  • தொடங்கியவர்

 

  • கருத்துக்கள உறவுகள்

US-financier-Epstein-commits-suicide-.jpg

சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய அமெரிக்க கோடீஸ்வரர் சிறையில் தற்கொலை!

சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய வழக்கில் கைதான அமெரிக்க கோடீஸ்வரர் ஒருவர், மன்ஹட்டன் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

அமெரிக்காவில் நிதி நிறுவன தலைவராகவும், கோடீஸ்வரருமான ஜெப்ரி எப்ஸ்டீன் என்பவரே தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மன்ஹட்டன் மற்றும் புளோரிடாவில் உள்ள தனது சொகுசு வீடுகளில் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை பல சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் எப்ஸ்டீனை கடந்த மாதம் கைது செய்து, மன்ஹட்டன் சிறையில் தடுத்து வைத்தனர்.

இந்த நிலையில், மன்ஹட்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் சிறை அறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான காரணம் வௌியிடப்படவில்லை.

இதுதொடர்பாகவும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

http://athavannews.com/சிறுமிகளை-பாலியல்-வன்புண/

############    #################    #######################

எவ்வளவு பணம், செல்வாக்கு இருந்தும்... அவரின் வாழ்வு, அற்ப புத்தியால்.... முடிந்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

US-financier-Epstein-commits-suicide-.jpg

சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய அமெரிக்க கோடீஸ்வரர் சிறையில் தற்கொலை!

சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய வழக்கில் கைதான அமெரிக்க கோடீஸ்வரர் ஒருவர், மன்ஹட்டன் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

அமெரிக்காவில் நிதி நிறுவன தலைவராகவும், கோடீஸ்வரருமான ஜெப்ரி எப்ஸ்டீன் என்பவரே தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மன்ஹட்டன் மற்றும் புளோரிடாவில் உள்ள தனது சொகுசு வீடுகளில் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை பல சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் எப்ஸ்டீனை கடந்த மாதம் கைது செய்து, மன்ஹட்டன் சிறையில் தடுத்து வைத்தனர்.

இந்த நிலையில், மன்ஹட்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் சிறை அறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான காரணம் வௌியிடப்படவில்லை.

இதுதொடர்பாகவும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

http://athavannews.com/சிறுமிகளை-பாலியல்-வன்புண/

############    #################    #######################

எவ்வளவு பணம், செல்வாக்கு இருந்தும்... அவரின் வாழ்வு, அற்ப புத்தியால்.... முடிந்து விட்டது.

தற்போதைய சிறைகளில் தற்கொலை செய்வது என்பது  சாத்தியம் இல்லாத ஒன்று.
இவருக்கும் இவருடைய [பாலியல் துஸ்பிரயோககளுக்கும் 
பங்காளிகளாக ட்ரம் கிளின்டன் உட்பட பல அரசியல் பிரமுகங்கள் உண்டு 
இவர்களினால் பாலியல் துஸ்பிரயோகம் செய்யபட்ட பெண்களில் இரண்டு மூன்று பேர் 
மட்டுமே இப்போது கோர்டில் தமது சாட்ச்சிகளை பதிவு செய்து இருக்கிறார்கள் .... அதுக்கே கோர்ட் ஆடிப்போய் இருக்கிறது மற்றவர்கள் வாய் திறந்தால் எவ்வாறு இருக்கும் இருக்கும் என்பது கற்பனைக்கும் வாராது.


இது திட்டமிட்ட ஒரு கொலை 
வாய் அடித்து மூட வைக்க பட்டு உள்ளது. 
இவருக்கு பெண்களை வயது குறைந்த குமரிகளை கூட்டி கொடுத்தவர் ஒரு பெண் 
அவருக்கு எதிராக வழக்கை மாற்றி தொடர முடியும் 

இங்கு நீதிபதிகள் அரசியலவாதிகள் எல்லோரும் விலை போனவர்கள் 
எந்த நீதியும் உண்மையும் வெளிவர போவதில்லை. 

தரம் கெட்ட நாதாரிகள் கோட் சூட்டுடன் 
வெள்ளையார்போலவும்  நல்லவர்கள் கூனி குறுகுவதும் என்பது 
எழுதப்படாத விதியாகி விட்டது. 

  • தொடங்கியவர்
43 minutes ago, Maruthankerny said:

இங்கு நீதிபதிகள் அரசியலவாதிகள் எல்லோரும் விலை போனவர்கள் 
எந்த நீதியும் உண்மையும் வெளிவர போவதில்லை. 

பொதுவாக நீதிபதிகள் நியமிக்கப்படுவர். அமெரிக்காவில் இவர்கள் மக்களால் தெரிவு செய்யப்படுவார்கள்? அப்படி எனில் இவர்கள் அடுத்த தெரிவில் தோல்வியடையலாம்?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ampanai said:

பொதுவாக நீதிபதிகள் நியமிக்கப்படுவர். அமெரிக்காவில் இவர்கள் மக்களால் தெரிவு செய்யப்படுவார்கள்? அப்படி எனில் இவர்கள் அடுத்த தெரிவில் தோல்வியடையலாம்?

மக்க்களால் ............
இதுதான் அமெரிக்காவில் கேலி கூத்தான விடயம்.
மக்கள் ஆண்டாண்டு காலமாக இங்கே மூளை சலவை செய்து வைக்க பட்டு உள்ளார்கள்.

ஆப்ரிக்க  மக்கள் எப்படி மருத்துவ பரிசோதனை எலியாக 
மேலைநாட்டு நிறுவனங்களாலும் அரசுகளாலும் பாவிக்க படுகிறார்களோ 
அமெரிக்கர்கள் மூளை சலவை சைக்கோலஜி என்பவற்றுக்கு பாவிக்க படுகிறார்கள் 
இங்கு வெற்றியானதை பின்பு இந்தியா ஐரோப்பா தென் அமேரிக்கா என்று விரிவாக்குவார்கள்.
நீங்கள் உலக மாற்றங்கள் ஒழுங்குகளை சரியாக கவனித்து வந்தால் இது விளங்கும். 

இங்கு யார் என்ன தராதரம் என்று எல்லாம் யாரும் பார்ப்பதில்லை 
தேர்தல் வந்தால்  எந்த கட்சி  என்றுதான் பார்ப்பார்கள்  நீலமா  சிவப்பா என்று பார்த்து 
வாக்கு போட்டு தமது தலையில் மண்ணை போடுவது அமெரிக்கர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

தற்போதைய சிறைகளில் தற்கொலை செய்வது என்பது  சாத்தியம் இல்லாத ஒன்று.
இவருக்கும் இவருடைய [பாலியல் துஸ்பிரயோககளுக்கும் 
பங்காளிகளாக ட்ரம் கிளின்டன் உட்பட பல அரசியல் பிரமுகங்கள் உண்டு 
இவர்களினால் பாலியல் துஸ்பிரயோகம் செய்யபட்ட பெண்களில் இரண்டு மூன்று பேர் 
மட்டுமே இப்போது கோர்டில் தமது சாட்ச்சிகளை பதிவு செய்து இருக்கிறார்கள் .... அதுக்கே கோர்ட் ஆடிப்போய் இருக்கிறது மற்றவர்கள் வாய் திறந்தால் எவ்வாறு இருக்கும் இருக்கும் என்பது கற்பனைக்கும் வாராது.


இது திட்டமிட்ட ஒரு கொலை 
வாய் அடித்து மூட வைக்க பட்டு உள்ளது. 
இவருக்கு பெண்களை வயது குறைந்த குமரிகளை கூட்டி கொடுத்தவர் ஒரு பெண் 
அவருக்கு எதிராக வழக்கை மாற்றி தொடர முடியும் 

இங்கு நீதிபதிகள் அரசியலவாதிகள் எல்லோரும் விலை போனவர்கள் 
எந்த நீதியும் உண்மையும் வெளிவர போவதில்லை. 

தரம் கெட்ட நாதாரிகள் கோட் சூட்டுடன் 
வெள்ளையார்போலவும்  நல்லவர்கள் கூனி குறுகுவதும் என்பது 
எழுதப்படாத விதியாகி விட்டது. 

ஸ்ரீலங்காவில் ... அரசியல் கைதிகளாக இருந்த குட்டிமணியையும், சக தமிழ் கைதிகளையும்.... கண்ணை தோண்டி  கொலை செய்தார்கள்.  உலகம் ரசித்தது.

தமிழ் நாட்டு  சிறையில் ....  ரவி என்பவர், மின்சார இணைப்பை கடித்து மரணம் அடைந்தார்  எனும் போதும்... உலகம் கண்டு கொள்ளவில்லை.

ஆசிய நாடுகளில்... இது, சாதாரணமானது என விட்டதன் பலன்... அமேரிக்கா வரை வந்துள்ளது.

எந்தக் குற்றத்தை... செய்த கைதியாக இருந்தாலும்,
அவர் சிறைக்குள் வந்தவுடன்....  அவரின் உயிருக்கு பாதுகாப்பு கொடுப்பது,
சிறைச்சாலை.....  உத்தியோகத்தினர்களது கடமை.
அதற்காகத்தான்... அவர்ககளுக்கு, அரசு சம்பளம் கொடுக்கின்றது.
ஒரு பொறுப்பான  வேலையை... நம்பி, செய்பவர்கள்,
அதற்கு.... கண்ணும் கருத்துமாக.. வேலை செய்ய வேண்டும்.

அந்த  அமெரிக்கரின்... செய்த செய்கையை... யாருமே மன்னிக்க முடியாது என்றாலும்,
அவரின்.. சிறைச் சாலை மரணம், மனதை உறுத்துகின்றது.  

இதுக்கெல்லாம்.... குரல் கொடுக்காத ஐ.நா.வை....
நாற்சந்தியில் வைத்து.... சாணி அடி  கொடுக்க வேண்டும் என்று,  கைகள் துடிக்கின்றது.  🤬

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.