Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தட்டி வான்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: outdoor

"தட்டி வான்"
-------------------

 
'தட்டி வான்' 
எங்கள் ஊர் 
எல்லைகளை 
தொட்டுச் 
செல்லும் 
'சிற்றி' வான்

அச்சுவேலி 
தொடங்கி
ஆவரங்கால் 
ஊடறுத்து 
'குரும்பசிட்டி'க்கு
கூடச் சென்று 

சில்லாலை, 
பண்டத்தரிப்பில் 
சிலிர்த்து நிற்கும்

'கொத்தியாலடி' 
ஆசுப்பத்திரிக்கும் 
'கூத்தஞ்சிமா' 
சந்தைக்கும் 
அத்தனாசியாரின் 
'சித்த' 
வைத்தியசாலைக்கும் 
சிறப்பான 
சேவை செய்யும்

காலைப் பொழுது 
'தெல்லிப்பளை'யில் 
'கரிக்கோச்சி'
இரயிலின் 
வருகைக்காய்
'படலை' ஓரம் 
பார்த்து நிற்கும்

விவசாயிகளின் 
விளைச்சல்களை 
சலிக்காமல் 
சுமந்து செல்லும்

இரயிலடி அம்மனையும் 
'தவளக்கிரி'முத்துமாரியையும 
தப்பாமல் தரிசிக்கும்

'அம்பனை' 
சந்தியில் 
அளவோடு 
ஓய்வெடுக்கும்

'முருகன் விலாஸ்'
தேனீர் கடையும் 
சாரதிகளை
சந்திக்கும்

'கும்பிளாவளையான்'
திருவிழாவிற்கு 
கூட மாடாய் 
உதவி செய்யும்

பண்டத்தரிப்பு 'பாண்' 
பேக்கரிக்கும் - இதன் 
பங்களிப்புண்டு

பள்ளித்
தோழர், தோழிகளை 
பக்குவமாய் 
காவிச்செல்லும்

ஓடிப் பாய்ந்தேறி 
ஒற்றைக்கால் 
ஊன்றி 
ஒற்றைக்கை 
ஏந்தி 
வாசல் கதவோரம் 
தொங்கிச் 
செல்கையில்
எதிர்க்காற்று 
முகத்தை 
தடவிச் செல்ல 
எண்ணங்கள் 
வண்ண வண்ண
சிறகடிக்கும்

'ஒருதலை ராகம்' 
'அலைகள் ஓய்வதில்லை' 
'உயிர் உள்ளவரை உஷா'
'பயணங்கள் முடிவதில்லை' 
பாடல்கள் ஒலிக்கையில் 
பயணங்களின் சிந்தனையை
சிதறவிடும்

இறங்கும் இடம் 
தவறி விடும்

தூரத்தே வரும் 
'உறுமல்' 
ஒலிகேட்டு 
வயல்வெளி 
வரம்புகள் ஊடே 
வழுக்கி 
விழுந்தெழும்பி
ஓடிவரும் 
கமக்காரர்களுக்காய் 
காத்திருக்கும்

எங்கள் 
கல்லூரி வாசலில் 
'கடலை' விற்கும் 
'இலட்சுமி' ஆச்சியின் 
நாளாந்த 
பயண ஊர்தியும் கூட

வாழ்வோடு 
ஊன்றிய 
விழாக்களுக்கு 
உலாப்போகும் 
'தங்க இரதம்'
எங்கள் தோழன் 
ஏழைகளின் தோழன்.

- இ.ஜெயக்குமார் -
(Scotland
  • கருத்துக்கள உறவுகள்

எங்கிருந்த போதும் மறக்கமுடியுமா ......!

சந்தைகள் ஓரம் வரு வான் 

சாமான்கள் இறக்கு வான் 

கிராமங்கள் தோறும் உலவு  வான் 

கிடுகிடுவென ஓடி  வருவோரை  ஏத்து வான் 

கன்னியரை உள்ளே இருத்து  வான் 

காளையரை வெளியே நிறுத்து  வான்.....!

----தட்டி வான்----

  • 1 month later...
On 8/11/2019 at 2:29 PM, தமிழ் சிறி said:

"தட்டி வான்"

எதனால தட்டி என்கிறாங்க?

18 minutes ago, Gowin said:

எதனால தட்டி என்கிறாங்க?

தட்டி என்பது மறைப்புக்காக பனை ஓலை அல்லது கிடுகால் மறைப்பாக கட்டி வைக்கப்படுவதாகும்.  அதே சாயலால் தான் வாகனம் மறைக்கப்பட்டிருக்கும். அத்துடன் பின்னுக்கு ஏறி நிற்பதற்கும் ஒரு தட்டு வைத்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தட்டி வான்(Van)!

 
'என்ன பிளைட் அது!யன்னலெல்லாம் லொட லொடன்னு சத்தம் போட்டுக்கொண்டு...  தட்டிவான் மாதிரி!'
 
ஏ -9 திறக்கப்படாத போர்க்காலத்தில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற தனது விமானப்பயண அனுபவத்தைத்தான் ஒருவர் இப்படிக் கூறினார்.
 
28411352.vehiclesinEelamDSC_0175.jpg
 
 

தட்டிவான்! - நீண்ட நாட்களாக அந்தப் பெயரே சொல்லக் கேள்விப்படாமல் ஏறக்குறைய நினைவிலிருந்து மறைந்து போன ஒரு அடையாளம்! ஒரு காலத்தில் தட்டிவான் பயணம் என்பது கேட்ட மாத்திரத்திலேயே மனதில் குதூகலத்தை ஏற்படுத்தும் கொண்டாட்டமான வார்த்தையாக இருந்திருக்கிறது!
 
ஒரு லொறி போல, அளவில் கொஞ்சம் சின்னதாக இருக்கும். ஒரு பழைய காலத்து Chevrolet கார் (அல்லது லொறி? - எதற்காகச் சொல்லி வைத்ததுபோல Chevrolet? ஒருவேளை அந்தக்காலத்தில் நிறைய Chevrolet கார்கள் யாழ்ப்பாணத்தில் இருந்திருக்குமோ? ) முன் பாகமும், பின்பாகம் ஒரு லாரியின் பெட்டி போல இரும்புச்சட்டத்தில் மரப்பலகைகளைப் பிணைத்தும் தட்டிவான் தயாரிக்கப்பட்டிருக்கும்! என்ன ஒரு வித்தியாசம் யன்னல்கள்! அதுவும் கண்ணாடிகள் இல்லாமல்! மற்றும் மரக்கதிரை போன்ற இருக்கைகள்! மிக முக்கியமாக தட்டிவான்களுக்கே உரிய பிரத்தியேக காற்றை அமுக்கி ஒலிக்கச் செய்யப்படும் ஹார்ன்களின் 'பாப்! பாப்!' சத்தம்!
 
 
bus.jpg
 
இன்றும் அமெரிக்கா உட்பட சில நாடுகளில் லொறிகளின் தோற்றத்தை ஒத்த பேரூந்துகள் இயக்கப்படுகின்றன. அவை வெளித் தோற்றத்தில் மட்டுமே அப்படியிருக்கின்றன  என நினைக்கிறேன்.
 
சின்ன வயதில் தெல்லிப்பளையிலிருந்து அளவெட்டி செல்லும்போது முதன்முறையாக பயணித்ததாக ஞாபகம். அதுபோல் சுன்னாகத்திலிருந்து ஊரெழு செல்லும்போதும் அதே இனிய அனுபவம்! வேறு எந்தெந்த ரூட்களில் ஓடியதென்று எனக்குத் தெரியவில்லை.
 
உண்மையில் அதற்கு என்ன பெயர்? எதற்கு அப்படியொரு பெயர் என்று தெரியவில்லை. யாழ்ப்பணத்தில்  தட்டிவான் என்றுதான் அழைப்பார்கள். தட்டி என்று தற்காலிகமாக அமைக்கப்படும் சிறிய கூரையைச் சொல்வார்கள் என்று நினைக்கிறேன். யாழ்ப்பணத்தில் சில இடங்களிலும், வன்னியிலும் மட்டுமே பார்த்திருக்கிறேன். வன்னியிலும் அப்படித்தான் அழைப்பார்களா என்று தெரியவில்லை!
உள்ளே சிறுவர்கள் தவிர யாரும் நின்று கொண்டு பயணிக்க முடியாது. இட வசதியும் இருக்காது தாழ்வான மேற்கூரையும் அனுமதிக்காது! நாலரை ஐந்தடி உயரம்தான் இருக்கும்! அதனால் பெண்கள், வயோதிபர்கள், சிறுவர்கள் உள்ளே அமர்ந்திருக்க,  பின்பக்கம் இருக்கும் அரைக் கதவை திறந்துவிட்டு, சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கும் அந்தப்பலகையின் மேல் நின்று கொண்டு ஆண்கள் கும்பல் பயணிக்கும்!
 
மூன்றரை அடி உயரம் வரை வளர்ந்த நானும் எப்படியாவது அடம்பிடித்து, அந்தக்கும்பலில் அப்பாவோடு நின்று பயணித்த ஞாபகங்கள் இன்றும் பசுமையாய்.
 
அது ஒரு செம்ம த்ரில்லான அனுபவம். பள்ளங்களில் ஏறி இறங்கும்போது குலுங்கிக் குலுங்கி ஒருவரையொருவர் பார்த்து சிரித்தவாறு..அது போன்ற ஒரு கிக்கான அனுபவம் வேறு எதிலுமே கிடைத்ததில்லை! அந்தச் சங்கிலி மட்டும் மாட்டப்பட்டிருக்கும் கொளுக்கியிலிருந்து கழன்றுவிட்டால் சங்குதான் என்பது வேறு விஷயம்!
 
ஒரு கதையில் சுஜாதா எழுதியிருப்பார் மாருதி வேன் ஒன்று குதித்துக் குதித்து  ஓடி வந்து நின்றது! அது எப்படியிருக்கும் என்பதைத் தட்டி வானில் ஒருமுறையாவது சென்றவர்களால் இலகுவாக உணரமுடியும்.
 
பொதுவாக சந்தைக்கு காய்கறிகளை ஏற்றிப் போகும் ஆச்சிமார்தான் பெரும்பான்மையான பயணிகளாக இருப்பார்கள்.நடத்துனரின் 'ரைட் ரைட்!' சத்தம் கேட்குதோ இலையோ 'கெதியா ஏறணை ஆச்சி!', 'அந்தப்பெட்டியத் தள்ளி வையுங்கோ அம்மா' என்ற சத்தம் கேட்காமல் அந்தப் பயணங்கள் சாத்தியமில்லை.
 
கிறீச் கிறீச்சென்ற பிணைச்சல்கள், பலகைகளின் சத்தத்தோடு தாலாட்டுவதுபோல அசைந்துகொண்டு..செம்மண் புழுதியையும் தாரளமாக தெளித்துக் கொள்ளும் இனிமையான பயணங்கள் என்றும் மறக்க முடியாதவை! 
 
தொண்ணூறாம் ஆண்டிற்குப் பிறகு யாழ் நகரப் பகுதியில் இருந்தகாலத்தில் தட்டிவானைப் பார்த்ததில்லை. அப்பப்போ அந்த நினைவுகள் வரும். சில வருடங்கள் கழித்து வன்னியில் நிறையத் தட்டிவான்களைப் பார்க்க முடிந்தது. யாழில் பார்த்தது போலன்றி கலர் கலராகப் புதுப் பொலிவுடன்! ஒருநாள் மாங்குளத்திலிருந்து கனகராயன் குளம் வரை பயணிக்கச் சந்தர்ப்பம் வாய்த்தது!
 
அப்போதுதான் முதன்முறையாக உள்ளே இருக்கையில் அமர்ந்து பயணம். காலி இருக்கைகள் இருந்தது மட்டுமல்ல. உடலும் அதைவிட மனமும் ஏற்கனவே பல பயணங்களினால் நிறையக் களைத்திருந்ததுதான் காரணம்! 
 
பயணத்தில் கூடவே துணையாக சினிமாப்பாடல்களும் ஒலித்துக் கொண்டிருந்தன.. அப்பொழுது பிரபலமாகி அடிக்கடி வானொலிகளில் ஒலிக்கும் 'ராசிதான் கை ராசிதான்' பாடல் அந்தப் பயணத்தில் கேட்ட ஞாபகம் இருக்கிறது. இப்பொழுதும் அந்தப் பாடலைக் கேட்க நேரும்போதெல்லாம்  கண்களை மூடிக்கொள்ள, கடைசியாக நான் தட்டிவானில் பயணித்தது காட்சியாக மனத்திரையில் விரியும்!
 
எமது மண்ணுக்குரிய, கிராமங்களுக்குரிய அடையாளங்களில் ஒன்றாக தட்டிவானையும் கொள்ளலாம். இப்போதும் தட்டி வான்கள் எங்கேயாவது ஓடுகின்றனவா?
 
samoa11.jpg
அமெரிக்காவிலோ, வேறு வளர்ந்த நாடுகளிலோ பழைய பாணியில், லொறி வடிவிலான பேரூந்துகளைப் பயன்படுத்துவதற்கான அவசியம் என்ன இருக்கிறது? நிச்சயம் பழமையை மறக்கக் கூடாது என்ற காரணம் இருக்கும்!

அது போல நாங்களும் தட்டிவான்களை பயன்படுத்தலாம்! ஆனால், சாதாரண போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படுவதைத் தவிர்த்து அமைதியான, பொழுது போக்கான சவாரிக்கு, வெளிநாட்டுப் பிரயாணிகள் மெதுவாகச் சுற்றிப்பார்க்க - இப்படியான தேவைகளுக்காக புதிய, அழகிய தட்டிவான்களை தயாரித்து உபயோகப்படுத்தலாம்.

அது எமது பழைய அடையாளங்களை, பாரம்பரிய வாழ்க்கையை நினைவூட்டும் அதேவேளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் ஒரு நல்ல முயற்சியாகவும் இருக்கும்!    

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.