Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலதா மாளிகையின் விஸ்ணு ஆலயத்தின் ஊர்வலத்தில் வயோதிப யானையை துன்புறுத்த வில்லை - உரிமையாளர்

Featured Replies

கண்டி தலதா மாளிகையின் விஸ்ணு ஆலயத்தின் ஊர்வலத்தில் டிகிரி எனப்படும் வயோதிப யானையை ஈடுபடுத்தியமை தொடர்பில் பலரதும் அவதானம் விழுந்துள்ளது. இதனை விலங்கு ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் யானை கொடுமைப்படுத்தபடுவாதாக குறிப்பிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், சமூக வலைத்தளங்களிலும் இது தொடர்பான தகவல்களை பரப்பி  வருகின்றனர்.

3.jpg

இந்நிலையில் டிகிரி தொடர்பில் வெளிவரும் தகவல்கள் பொய்யானவை என்றும், தவறான சித்தரிப்புகளை மேற்கொள்ளவதாகவும் குறிப்பிட்டு வளர்ப்பு யானைகள் சங்கத்தின் செயலாளர் தர்மசிறி பண்டார கருணாரத்னவும் , டிகிரி யானையின் உரிமையாளர் எல்.எல்.திலகரத்னவும் ஒருமித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் டிகிரி யானை குறித்து மேலும் தெரியவருவதாவது, 

டிகிரி யானைக்கு தற்போது 70 வயது, இது பார்ப்பதற்கு நோயால் பாதிக்கப்பட்டது போலவும் , உடல் மெலிந்த நிலையிலும் ,சோர்வுற்ற நிலையிலும் , மிகவும் பரிதாபமான நிலையில் காணப்படுகின்றமையால் இந்த யானையை ஊர்வலத்தில் பயன்படுத்தியமை குறித்து பலரும் எதிர்ப்பை தெரிவித்து வரலாயினர்.

2.jpg

ஆனால் இந்த எதிர்ப்புகளை புறக்கணிக்கும் டிகிரியின் உரிமையாளர், யானையை நேர்த்தி கடனுக்காக , கண்டி விஷ்ணு ஆலயத்தின் மூன்றாவது ரந்தோலி பெரஹரவுக்கு மாத்திரமே பயன்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுவும் இந்த யானை தொடர்பான வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், வைத்தியரின் அனுமதியையும் பெற்றதன் பின்னரே யானை இவ்வாறு ஊர்வலத்தில் ஈடுப்படுத்தப்பட்டது. கடந்த வருடம் பெரஹரவின் பின்னர் நோய்வாய்ப்பட்ட டிகிரி யானையை குணப்படுத்தி கொடுக்குமாறு தெரிவித்தும், இவ்வாறு யானை குணமடைந்தால் அதனை ரந்தோலி பெரஹெராவில் செல்ல விடுவதாகவும் தான் நேர்த்திகடன் செய்திருந்தமையால். தற்போது யானை அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளது. இதற்கு கடவுளுக்கு நன்றி செலுத்துவதற்காகவே ஒரு நாள் மாத்திரம் யானையை ஊர்வலத்தில் செல்லவிட்டோம் என்றும் தெரிவித்துள்ளார். இதற்காக பல வைத்திய பரிசோதனைகளை செய்து அனுமதிப் பெற்றுக் கொண்டதன் பின்னரே டிகிரி யானைக்கு பெரஹராலில் செல்ல அனுமதி கிடைக்கப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/62705

  • தொடங்கியவர்

காட்டு யானை எரித்து கொலை : பொலிசார் தீவிர விசாரணை 

மிக சூட்சுமுமான முறையில் காட்டு யானை ஒன்றை கொலை செய்து அதனை எரித்து , அதன் உடற்பாகங்களை வயல் வெளிக்குள் புதைத்து வைத்திருந்த சம்பவமொன்று திருகோணமலை - ஹொரவ்பொத்தான பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஹொரவ்பொத்தான - ஓலுவௌ கிராமத்தில் வயல்வெளியொன்றிலே குறித்த யானை புதைத்து வைக்கப்பட்டிருந்துள்ளது. இந்நிலையில் வன ஜீவராசிகள் பாதுக்கப்பு திணைக்களத்தினர் இவ்வாறு புதைக்கப்பட்ட யானையின் உற்பாகங்களை தோண்டி எடுத்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட யானையின் உடற்பாகங்களை பரிசோதனை செய்தபோது , குறித்த யானை ஒரு மாதத்திற்கு முன்னதாகவே உயிரிழந்துள்ளதாகவும், 30-35 வயதிற்கு இடைப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள யானையின் உடற்பாகங்கள் ஹொரவ்பொத்தான வனவள சரணாலய ஆய்வை மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த யானை பிரதேச வாசிகள் சிலராலே கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் வன ஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகள் , சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/62710

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.