Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தாபயவை சந்தித்தார் டக்ளஸ் : கலந்துரையாடப்பட்டவை என்ன ?

Featured Replies

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்குமிடையில் நேற்று நடந்த சந்திப்பில் தமிழ் மக்களின் முக்கியமான பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டுள்ளன.

69467972_2352510304866519_39409373938083

முக்கியமான பிரச்சினைகள் மற்றும் உடனடியாக தீர்வு காணப்படவேண்டிய விடயங்கள் என கருதப்படுபவற்றை பட்டியலிட்டு மகஜர் ஒன்றும் இதன்போது கோட்டாபயவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் திருப்தி ஏற்பட்டதாகவும் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கோத்தாபய ஆர்வம் காட்டி விருப்பு வெளியிட்டுள்ளமையை வரவேற்பதாகவும் ஈ. பி. டி. பி. அறிக்கையொன்றில் கூறியுள்ளது .

இது குறித்து அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது ,

எந்தவொரு ஆட்சி இங்கு வந்தாலும் அவர்களுடன் பேரம் பேசி தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்த்து வைப்பதே எமது ஆழ்மன இலட்சிய அரசியல் விருப்பமாகும்.

அந்த வகையில் எவரும் விரும்பியோ விரும்பாமலோ ஆட்சி அதிகாரத்தில் உட்காரப்போகின்ற கோத்தாபய ராஜபக்சவை எது வித அரசியல் பலமுமும் இன்றி, அந்த அரசியல் பலத்தை எமது

மக்கள் இனிவரும் காலத்தில் வழங்குவார்கள் என்ற நம்பிக்கையோடு எமது நல்லிணக்க உறவுகளோடு மட்டும் கோத்தாபய ராஜபக்சவுடன் பரஸ்பரம் உரையாடியிருந்தோம்.

இலங்கைத்தீவின் சகல இன மக்களும் ஏற்றுகொண்ட 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இருந்து தொடங்கி, அதை மேலும் பலப்படுத்தி அரசியல் தீர்வு நோக்கி செல்வது.

எமது தேசத்தை தூக்கி நிறுத்தும் அபிவிருத்தி பணிகளை நாம் விட்ட குறையில் இருந்து மறுபடி தொடங்குவது.

முதற்கட்டமாக வேலையற்ற தமிழ் இளைஞர் யுவதிகளில் ஒரு இலட்சம் பேர்களுக்கு வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பது.

யுத்தம் காரணமாக கல்வி தகமையை இழந்து நிற்கும் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு தற்காலிக வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதோடு

கால அவகாசத்தின் அடிப்படையில் அதற்கான கல்வித்தகமையை அவர்கள் பெற்றிடவும், வேலையை நிரந்தரமாக்கவும் ஏற்பாடு செய்வது.

காணாமல் போன உறவுகளை தேடும் மக்களின் கண்ணீருக்கு பரிகாரம் பெற்று கொடுப்பது,

அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சியில் வெற்றி காண்பது.

நாம் ஏற்கனவே விடுவித்து இதுவரை மீட்கப்படாத எமது மக்களின் காணி நிலங்களை விடுவிப்பது,

வீடற்ற மக்களுக்கு வீடு,நிலமற்ற மக்களுக்கு நிலம், மீள்குடியேறிய மக்களுக்கு நிரந்தர வாழ்வியல் உரிமை.

இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் நடைபெறும் இன, மத ரீதியிலான சகல திணிப்பு நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்துவது,

முள்ளிவாய்க்கால் வரை யுத்தத்தில் கொல்லப்பட்ட சகல மனித உயிர்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையில் பொது சதுக்கத்தையும் அதற்கான ஒரு நினைவு நாளையும் உருவாக்குவது.

இது போன்ற எமது மக்களின் அபிலாசைகள் குறித்து எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் வெல்லப்போகின்ற கோட்டாபாயவுடன் நாம் மனம் திறந்து பேசியதில் எமக்கு நம்பிக்கை தரும் சமிஞ்ஞைகள் கிடைத்திருக்கின்றன, மாற்றமொன்று இந்த நாட்டில் விரைவில் நிகழும் என்பதில் மாற்றமில்லை.

தமிழ் பேசும் மக்களாகிய நாம் இந்த மாற்றத்தில் பங்கு தாரர்களாக இருக்கப்போகின்றோமா?. பார்வையாளர்களாக இருக்கப்போகின்றோமா? அல்லது வெறும் எதிர்ப்பாளார்களாக இருக்கபோகின்றோமா?

இதை தமிழ் பேசும் மக்களாகிய நாமே தீர்மானிக்க வேண்டும். நிகழப்போகின்ற அந்த மாற்றத்தில் தமிழ் பேசும் மக்களின் பங்களிப்பும் கணிசமான அளவு இருந்தாக வேண்டும். அதன் ஊடாகவே அந்த மாற்றத்தின் விமோசனங்களை தமிழ் பேசும் மக்களும் அனுபவிக்க முடியும்.மாற்றத்தை உருவாக்குவோம் என்று தமிழ் மக்களிடம் கூறி இன்றைய அரசை உருவாக்க பங்களித்த சக தமிழ் கட்சிகளே இன்று அதே அரசு தம்மை ஏமாற்றி விட்டதாகபுலம்பத்தொடங்கி விட்டார்கள்.

அவர்களைப்போல் நானும் எதிர்காலத்தில் எமது அரசு எம்மை ஏமாற்றி விட்டதாக ஒரு போதும் கூறப்போவதில்லை. யாருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று நான் கோருகின்றேனோ, அவர்களுக்கு வாக்களித்தால் அதற்கான பொறுப்பை நானே ஏற்பேன்.

எமது மக்களிடம் இன்று இருப்பது வாக்குப்பலம் ஒன்றே. அதை வைத்து எமது மக்களின் சகல உரிமைகளையும் வென்றெடுத்தே

தீருவோம் என்ற எமது உறுதியான ஆத்ம பலம் எம்மிடம் உண்டு.

எமது அகராதியில் எமது சொந்த சலுகைகளை பெறுவதற்காக எக்காலத்திலும் எந்த அரசுடனும் நாம் உறவு வைத்திருந்தவர்கள் அல்ல. அதற்காக எமது மக்களை எவருக்கும் வாக்களிக்குமாறு நாம் கேட்டதும் இல்லை. இனியும் அது நடக்காது.

நிகழப்போகின்ற ஆட்சி மாற்றத்தை வைத்து எமது மக்களின் வாக்குப்பலத்தால் அனைத்து உரிமைகளையும் நான் பெற்று தருவேன்.

யதார்த்தமான, உறுதியான எமது அரசியல் வழிமுறைக்கு யதார்த்தமானதும், உறுதியானதுமான நாட்டில் தலைவர் ஒருவர் உருவாகும் போது, அவரது வருகையை நாம் சரிவர கையாள வேண்டும்.

அழிவு யுத்தத்தின் போது தமிழ் மக்கள் சந்தித்திருந்த அவலங்களுக்கு ஒரு தரப்பை மட்டுமே தமது குறுகிய சுயலாப அரசியல் நோக்கில் பாரபட்சமுடன் சிலர் குற்றம் சுமத்துகிறார்கள்.

ஆனாலும், தென்னிலங்கை அரசியல் வாதிகள் பலரும் யுத்தத்தை நடத்தி அதில் வெற்றி கண்டவர்கள் தாமே என்று ஒவ்வொரு காரணம் சொல்லி யுத்த வெற்றிக்கு உரிமை கோருகின்றார்கள். இன்று இதில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது? இதுவே தமிழ் மக்களின் கேள்வி!

இல்லாத ஊருக்கும், இலக்கற்ற பயணத்திற்கும் நாம் ஒரு போதும் வழி காட்டப்போவதில்லை.

எமது அரசியல் பலத்திற்கு ஏற்ற வாறு இதுவரை எமது மக்களுக்கு எம்மால் முடிந்ததை பெற்றுத்தந்த நாம். எதிர்வரும் காலத்தில் தமிழ் அரசியல் பலத்தோடு மக்களில் தலைவிதியையே மாற்றியப்போம்.

எதையும் சாதிக்க முடிந்த வல்லமை படைத்த உறுதியானதொரு நாட்டின் தலைவர் மூலமே தமிழ் மக்களின் வரலாற்றிலும் நாம் மாற்றங்களை உருவாக்க முடியும்.இந்த உறுதியான நிலைப்பாட்டில் இருந்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்சவை ஆதரிப்பதென நாம் தீர்மானம் எடுத்துள்ளோம்.

இவ்வாறு அதில்  குறிப்பிடப்பட்டப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/62966

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குத்தியனுக்கு ஒரு அமைச்சர் பதவி ஒகேயா?

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவின் இனவெறிப் படுகொலையில் அவருக்கு உறுதுணையாக இருந்த அனைவரும் ஒவ்வொருவராய் அவரைப் போய் பார்த்து அசீர்வாதம் பெற்று வருகின்றனர். ஆனால் கோத்தாவோ.. பெளத்த பீடாதிபதிகள் காலில் வீழ்ந்து கொண்டிருக்கிறார். 

இதுவரை போய் வந்தோர்.. மற்றும் கோத்தாவுக்கு வக்காளத்து வாங்கியோர்..??

1. புளொட் நாயகன் - சித்தார்த்தன் எனப்படும் வவுனியா சித்திரவதை முகாம்களின் முதல்வன். 

2. ஈபி நாயகன் - வரதராஜப்பெருமாள் என்ற மண்டைய குழு தலைவன்

3. கிழக்கின் வெடிவெள்ளி - முரளிதரன் (கருணா கும்மான்) எனப்படும் இனத்துரோகிகளின் முதன்மை

4. வடக்கின் உதயநாயகன் - டக்கிளஸ் தேவானாந்தா எனப்படும் அத்தியடி ரெளடி. 😀

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

Duglas.jpg

கோட்டாபயவிற்கு ஆதரவளிப்பதாக டக்ளஸ் தெரிவிப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவை நேற்று (திங்கட்கிழமை) ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்நிலையில் கோட்டாவுடனான சந்திப்பு நம்பிக்கையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் எந்தவொரு ஆட்சி இங்கு வந்தாலும் அவர்களுடன் பேரம் பேசி தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்த்து வைப்பதே தமது ஆழமான இலட்சிய அரசியல் விருப்பமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சகல இன மக்களும் ஏற்றுக்கொண்ட 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல், அபிவிருத்தி திட்டங்கள், வேலையற்ற தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தல், காணாமல்போன உறவுகளுக்கு தீர்வு, அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சி, மக்களின் காணி நிலங்களை விடுவிப்பது போன்ற மக்களின் அபிலாசைகள் குறித்து கோட்டாபயவுடன் கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயங்களில் கோட்டாபய ராஜபக்ஷ தீர்வு வழங்குவார் என்ற நம்பிக்கை தரும் சமிக்ஞைகள் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதையும் சாதிக்க முடிந்த, வல்லமை படைத்த, உறுதியானதொரு நாட்டின் தலைவர் மூலமே தமிழ் மக்களின் வரலாற்றிலும் நாம் மாற்றங்களை உருவாக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, கருணா அம்மன் என அழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் கோட்டாபயவிற்கு ஆதரவு தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கோட்டாபயவிற்கு-ஆதரவளிப்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.