Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாக்குவேட்டைக்காக தமிழ் மக்களை பந்தாட இனி எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை

Featured Replies

வாக்கு வேட்டைக்காக தமிழ் மக்களை பந்தாட இனி எவருக்கும் இடமளிக்கப் போவதில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். நாட்டை ஆட்சி செய்த ஆட்சியில் இருக்கின்ற தலைவர்கள் தமிழ் மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றிவிட்டதாகவும், அதனால், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், உண்மையாக செயற்படுகின்ற புதிய முகம் ஒன்று வந்தால், ஆதரவு வழங்க தயார் என்றும் அவர் தெரிவித்தார்.  என்றபிரைஸ் ஸ்ரீலங்கா யாழ்ப்பாணத்தில் நடைபெறும் கண்காட்சி கூடத்தை நேற்று பார்வையிட வந்த ஈ.சரவணபவன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

NW06.jpg
 
 

 
 

 

 

முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச தீர்வை வழங்குவதாக வாக்குறுதி அளித்து சர்வகட்சி மாநாட்டை நடாத்தி பின்னர் அதனை கலைத்துவிட்டு, காலத்தை வீணடித்தார். அதன்பின்னர், ஆட்சிக்கு வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம், புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவை அமைத்து காலத்தை வீணடித்தது. 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பை ஒரிரு தினங்களில் உருவாக்க முடியுமாயின் ஏன் இனப்பிரச்சினைத் தீர்வை உள்ளடக்கிய புதிய அரசியல் யாப்பை ஏன் உருவாக்க முடியாதென்றும் சரவணபவன் கேள்வி எழுப்பினார்.

வடமாகாணம் கல்வி சுகாதாரம், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் 9வது மாகாணமாகவே இன்னும் இருக்கின்றது. ஏனைய மாகாணங்களுக்குரிய அனைத்து விதமான அபிவிருத்திகளும் வந்து, ஏனைய மாகாணங்களுடன் சம அளவில் இருக்கக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டாலே, தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வாக அமையும்.

சகல விதத்திலும், பின்தங்கிய நிலையில் வடமாகாணம் உள்ளது. வடமாகாண சபைக்கும் உரிய அதிகாரமும், உரிய நிதியும் வழங்கப்பட்டிருந்தால், அதனூடாக மக்களுக்கு அபிவிருத்தியை பெற்றுக்கொடுத்திருக்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ். என்றபிரைஸ் கண்காட்சி தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், அமைச்சர் மங்கள சமரவீரவுடன் முதல் நாள் கண்காட்சியைப் பார்வையிட வந்த போதும், என்னால், அவற்றை ஒழுங்காக அவதானிக்க முடியாமல் இருந்தது.

தற்போது மிக ஆறுதலாக ஒவ்வொரு கண்காட்சிக் கூடத்தைப் பார்வையிட்ட போது, ஒரு வெளிப்படைத் தன்மை காணக்கூடியதாக இருந்தது.

எமது மக்களை சரியான முறையில் இந்த கடன் திட்டம் சேருமாக இருந்தால், உரிய பலனை பெற்றுக்கொள்ள முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து விசு கருணாநிதி, கே. அசோக்குமார், சுமித்தி தங்கராசா

http://www.thinakaran.lk/2019/09/10/உள்நாடு/40051/வாக்குவேட்டைக்காக-தமிழ்-மக்களை-பந்தாட-இனி-எவருக்கும்-இடமளிக்கப்-போவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

இனி மைத்திரி என்னுடைய மகளின் பேர்த்டேக்கு வரமாட்டார்....அப்ப ஏன் தமிழர் வோட்டு போடவேணும்...

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

 

தமிழ் தேசிய கூட்டமைப்பையும்,  சேர்த்துதான்  சொல்லுகிறார் என்று மக்கள் கருதுகின்றார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு மட்டும் தான் டமிழ்மக்களை புட்போலாக  விளையாடலாம் என்று சொல்லுகிறார்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.