Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்னொரு தமிழ் இளைஞனின் உயிர் ரொரன்டோ பகுதியில் பறிப்பு

Featured Replies

இன்னொரு தமிழ் இளைஞனின் உயிர் ரொரன்டோ பகுதியில் பறிப்பு

சாரங்கன் சந்திரகாந்தன் ( Charankan Chandrakanthan) எனும் 25 வயதேயான தமிழ் இளைஞன் நேற்றிரவு Middlefiled and McNicoll உயிராபத்தான நிலையில் சூட்டுக் காயங்களுடன் கண்டு பிடிக்கப்பட்டு சற்று நேரத்தில் இறந்துள்ளார். இவருக்கும் இன்னொருவருக்கிடையில் ஏற்பட்ட பிணக்கின் போது மற்ற நபர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடியுள்ளார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

https://toronto.ctvnews.ca/25-year-old-fatally-shot-in-scarborough-identified-by-loved-ones-1.4602516

  • கருத்துக்கள உறவுகள்

கனடா மீளவும் சுந்தரலிங்கம் போன்ற ஒரு அதிகாரியை இலங்கையில் இருந்து அழைக்கவேண்டும் போல கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

அடி  செருப்பாலை , தமிழனின் மானத்தை...  உலகம் முழுக்க, விற்கிறார்கள். 😨
அதுகளை... பெற்ற... தாய், தகப்பன்... பிள்ளை பெற்றால், 
அவர்களை... நல்ல முறையில்.... வளர்க்க வேண்டும்.

அது, முடியா விட்டால்....  என்ன, இழவுக்கு...  உங்களுக்கு, கலியாணம்.
பொறுப்பு அற்ற, பெற்றோரால்... பிள்ளைகள், துப்பாக்கியில் விளையாடுகிறார்கள். 🔨

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று ஸ்காபரோவில் நடைபெற்ற துப்பாக்கிச் சுட்டுக் சம்பவமொன்றில் 25 வயதுடைய சாரங்கன் சந்திரகாந்தன் என்ற தமிழ் இளைஞர் கொல்லப்பட்டுள்ளார்.

சீ .ரி.வி. செய்தியின் தொடுப்பு

மிடில்பீ ல்ட் / மக்நிக்கல் சந்திப்பிலுள்ள வாகனத்தரிப்பொன்றில் வியாழன் இரவு 10 மணியளவில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

அவசரகால சேவகர்கள் சம்பவ இடத்தை அடைந்தபோது இரண்டு துப்பாக்கிச் சூடுகளுடன் வாகனமொன்றினுள் கடுமையான காயங்களுடன் காணப்பட்ட இவ்விளைஞர் அவ்விடத்திலேயே உயிர் துறந்தார் என அவ்விடத்திலிருந்து காவல்துறை அதிகாரி ஜிம் கொடேல் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

அருகிலுள்ள அச்சுத் தொழிலகத்தில் சாரங்கன் சந்திரகாந்தன் பணிபுரிந்ததாகவும், அமைதியான, நட்பை விரும்பும் அன்பான சுபாவமுள்ளவர் எனவும் அவரது நண்பர்கள் விபரித்ததாக அறிய முடிகிறது.

கொலைத் துப்பறியும் மற்றும் தடையவியல் ஆய்வு நிபுணர்களும் வெள்ளி காலை வரை சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டார்கள். சம்பவம் நடைபெற்ற வாகனத்தரிப்பி டத்தில் ‘கொண்டாட்டம்’ ஏதும் நடைபெற்றிருக்கலாம் எனக் காவல்துறை கருதுகின்றது.

அவசர சேவைகள் வண்டி சம்பவ இடத்திற்கு வந்தபோது பலர் அவ்விடத்திலிருந்து அகன்று சென்றுவிட்டதாகவும் அவர்களில் சாட்சிக்கள் யாருமிருந்தால் ரொறொண்டோ காவல்துறையின் 42 வது பிரிவிற்குத் தகவல் தருமாறும் காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

http://marumoli.com/கனடா-ஸ்காபரோவில்-துப்பா/செய்திகள்/news/

 

  • தொடங்கியவர்

இக் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் 22 வயதான Stoufville பகுதியைச் சேர்ந்த 'சரண்ராஜ் சிவகுமார்' (Saranraj Sivakumar) என்பவரை கைது செய்து மீது இரண்டாம் நிலை கொலைக் (second degree murder )குற்றச்சாட்டும், இன்னொருவரை கொலை செய்ய முயன்றார் என்ற குற்றச்சாட்டும் (attempted murder) சுமத்தப்பட்டுள்ளது.
 

https://toronto.citynews.ca/2019/09/23/22-year-old-charged-in-shooting-death-of-man-in-scarborough-parking-lot/

(second degree murder என்பதற்கு சரியான தமிழ் வடிவம் என்ன?)

  • கருத்துக்கள உறவுகள்
On 9/20/2019 at 2:21 PM, goshan_che said:

கனடா மீளவும் சுந்தரலிங்கம் போன்ற ஒரு அதிகாரியை இலங்கையில் இருந்து அழைக்கவேண்டும் போல கிடக்கு.

கொஞ்சகாலத்தின் முன்பு குற்றங்கள் புரிபவர்களை(சிற்றிசன் உள்பட)இலங்கைக்கு திருப்பியனுப்பினார்கள்.நீண்டகாலம் அமைதியாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஈழப்பிரியன் said:

கொஞ்சகாலத்தின் முன்பு குற்றங்கள் புரிபவர்களை(சிற்றிசன் உள்பட)இலங்கைக்கு திருப்பியனுப்பினார்கள்.நீண்டகாலம் அமைதியாக இருந்தது.

இதில் இலங்கையில் இருந்து வந்த பொலீஸ் அதிகாரி சுந்தரலிங்கத்தின் பங்களிப்பு இருந்ததாக கேள்விப்பட்டேன். உண்மை பொய் தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

இதில் இலங்கையில் இருந்து வந்த பொலீஸ் அதிகாரி சுந்தரலிங்கத்தின் பங்களிப்பு இருந்ததாக கேள்விப்பட்டேன். உண்மை பொய் தெரியாது.

அவர் பிரான்ஸ் என்று தான் கேள்விப்பட்டேன்.
அவரிடம் ஆலோசனை கேட்ட போது தூக்கிப் போட்டு மிதிச்சா எல்லாம் சரிவரும் என்றாராம்.
மேலநாடுகளில் அது கஸ்டம் என்று கைவிட்டதாக கதைத்தார்கள்.
(இது செவிவழி செய்தி மாத்திரமே).

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.