Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மொட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார் தொண்டமான்

Featured Replies

image_73c263ad07.jpg

 

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையே ஜனாதிபதி தேர்தல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கொழும்பு, இலங்கை மன்றக் கல்லூரியில் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (18) முற்பகல் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோர் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

நிகழ்வில் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவும் இரு கட்சி சார்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மடடடன-பரநதணரவ-ஒபபநதததல-கசசததடடர-தணடமன/150-240141

கடந்த சனாதிபதி தேர்தலில் ஆறுமுகன் தொண்டமான் எவருடன் கூட்டு சேர்ந்து இருந்தார் என்று யாருக்காவது தெரியுமா

1 hour ago, நிழலி said:

கடந்த சனாதிபதி தேர்தலில் ஆறுமுகன் தொண்டமான் எவருடன் கூட்டு சேர்ந்து இருந்தார் என்று யாருக்காவது தெரியுமா

மகிந்தவுடன்.

மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் போன்றன மைத்திரியுடன்.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

  • தொடங்கியவர்

இந்தியா மொட்டுவை ஆதரிக்கின்றது? எனவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மொட்டுவை ஆதரிக்கின்றது?

இல்லை, இந்தியாவை மீறி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மொட்டுவை ஆதரிக்கின்றது?
  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

கடந்த சனாதிபதி தேர்தலில் ஆறுமுகன் தொண்டமான் எவருடன் கூட்டு சேர்ந்து இருந்தார் என்று யாருக்காவது தெரியுமா

மகிந்த கொம்பனியிடம் தான் இருந்தார் ஆட்சி மாறியதும் பல உடமைகள் நல்லாட்சியினரால் கைப்பற்றப்பட்டது  எல்லாம் கள்ளன் தான் 

22 minutes ago, ampanai said:

இந்தியா மொட்டுவை ஆதரிக்கின்றது? எனவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மொட்டுவை ஆதரிக்கின்றது?

இல்லை, இந்தியாவை மீறி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மொட்டுவை ஆதரிக்கின்றது?
  

கோத்தாவை அமெரிக்கா ஆதரிப்பதால் இந்தியாவும் கோத்தாவை ஆதரிக்கும் என நம்புகின்றேன். தேசியவாதியும் இலகுவாக விட்டுக் கொடுக்க முடியாதவருமான சஜித்தை கையாளுவதை விட அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் போர்க் குற்றவாளியான கோத்தாவை கையாளுவது இலகு என நினைக்கின்றனர் என கருதுகின்றேன்.

ஆனால் சீனா இவர்களுக்கு எல்லாம் பெப்பே காட்டி விடும்

  • தொடங்கியவர்
18 minutes ago, நிழலி said:

கோத்தாவை அமெரிக்கா ஆதரிப்பதால் இந்தியாவும் கோத்தாவை ஆதரிக்கும் என நம்புகின்றேன். தேசியவாதியும் இலகுவாக விட்டுக் கொடுக்க முடியாதவருமான சஜித்தை கையாளுவதை விட அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் போர்க் குற்றவாளியான கோத்தாவை கையாளுவது இலகு என நினைக்கின்றனர் என கருதுகின்றேன்.

ஆனால் சீனா இவர்களுக்கு எல்லாம் பெப்பே காட்டி விடும்

அமெரிக்கா கோத்தாவை ஏன் ஆதிரிக்கின்றது? தனது நலம் சார்ந்த உடன்படிக்கைகளில் எந்த தடையையும் மீறி கை எழுத்திடும் 'சண்டியன்' வலிமை உள்ளதால் என எண்ணுகின்றேன். அதேவேளை, கையொப்பம் இடாவிட்டால், தங்களிடம் உள்ள கோத்தா சார்ந்த 'இரகசியங்களை' பகிரப்படுத்துவேன் என மிரட்டலாம். ஆனால், அமெரிக்காவையும் மகிந்த அண்ட் கோ மீறலாம், நீங்கள் கூறியது போன்று சீனாவின் உதவியுடன். ஆனால், இந்தியா அதை விரும்பாது.   

இவ்வாறான நிலைமை சில அரசியல் சந்தர்ப்பங்களை தமிழர் தரப்பிற்கு  வழங்கலாம்.

எமது தலைமைகள் மத்தியில், தாயகத்திலும் சரி புலம்பெயர் அமைப்புக்கள் மத்தியிலும் சரி, ஒரு உள்ளூர் (ஐ.தே.க. / மொட்டு/ ஜே.வி.பி., ..), பிராந்திய (இந்தியா, தமிழகம், சீனா) மற்றும் சர்வதேச (அமெரிக்கா)  அரசியலை ஆராயும் நிறுவனம் (think tank) இல்லை என்றே நம்புகின்றேன். இதனால் எமது அரசியல் தலைமைகள் அரசியலில் மூளை சொல்வதை விட இதயம் விரும்புவதையே தெரிவு செய்கின்றோம்.
 

18 minutes ago, ampanai said:

அமெரிக்கா கோத்தாவை ஏன் ஆதிரிக்கின்றது? தனது நலம் சார்ந்த உடன்படிக்கைகளில் எந்த தடையையும் மீறி கை எழுத்திடும் 'சண்டியன்' வலிமை உள்ளதால் என எண்ணுகின்றேன். அதேவேளை, கையொப்பம் இடாவிட்டால், தங்களிடம் உள்ள கோத்தா சார்ந்த 'இரகசியங்களை' பகிரப்படுத்துவேன் என மிரட்டலாம். ஆனால், அமெரிக்காவையும் மகிந்த அண்ட் கோ மீறலாம், நீங்கள் கூறியது போன்று சீனாவின் உதவியுடன். ஆனால், இந்தியா அதை விரும்பாது.   

இவ்வாறான நிலைமை சில அரசியல் சந்தர்ப்பங்களை தமிழர் தரப்பிற்கு  வழங்கலாம்.


 

கோத்தாவின் வருகை தமிழர்ளுக்கு சாதகமாக அமையும் எனவும் அவர் அமெரிக்காவை பகைத்தால் அமேரிக்கா + இந்தியா தமிழர்களுக்கு சாதகமாக திரும்பும் என்பதையும் நான் நம்பவில்லை.

காரணங்கள்

1. கோத்தாவினால் அமெரிக்காவினை திருப்தி படுத்திக் கொண்டு சீனாவை அனுமதிக்க முடியும்.  இலங்கை அரசு மூன்று எதிர்முனைகளில் இருக்கும் சக்திகளை (அமெரிக்கா, இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா) கையாள்வதில் தேர்ந்தவர்கள். 2009 இலும் இதுதான் நடந்தது.

2. ஒரு வேளை கோத்தா அமெரிக்காவை  + இந்தியாவை மீறி செயல்பட்டால் இவை அடுத்த 5 வருடங்களில் ஆட்சியை மாற்ற முனையும். 2015 இல் மைத்திரியை கொண்டு வந்த மாதிரி

3. போர்க்குற்றத்தின் பிரதான பங்காளிகள் அமெரிக்காவும் இந்தியாவும் மேற்குலகும். இவை சும்மா வெருட்ட போர்க்குற்றத்தினை பற்றி இலேசாகத்தான் கதைக்க முடியும். . போர்க்குற்றச் சாட்டு இந்தியாவை மீறி ஒரு அடி கூட எடுத்து வைக்காது. இது இலங்கை அரசுக்கு 100 வீதம் தெரிந்த விடயம்

4. தமிழர்கள் பக்கம் சாய்வதை விட மேற்குலகுக்கு இஸ்லாமிய பயங்கரவாதத்தின் மூலம் இலங்கை அரசை இலகுவாக தம் பக்கம் இழுக்க முடியும். ஈஸ்டர் குண்டு வெடிப்புகள் அதைத்தான் நிரூபித்தன.

5. சீனா மூலம் இலங்கை அரசு பெப்பே காட்டினாலும், சீனாவை மீறி இந்தியாவாலும் சரி அமெரிக்காவாலும் சரி காத்திரமாக எதையும் செய்ய முடியாது. மைத்திரி வந்தபின்பும் கூட இவர்களால் சீனாவை பெரியளவில் விரட்ட முடியவில்லை.

6. இவை எல்லாவற்றையும் விட சிங்கள மக்களின் ஒட்டுமொத்த ஆதரவு இலங்கை அரசுக்கு சனனாயக முறையின் மூலம் கிடைக்கும் போது மேற்குலகால் ஒரு எல்லைக்கு அப்பால் அழுத்தம் கொடுக்க முடியாது. போர்க்குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்ட அல்லது விசாரணை இடம்பெறும் நாடுகளில் அனேகமானவை சனனாயக ரீதியில் தெரிந்தெடுக்கப்பட்டவை அல்ல.


மிதவாத அரசை கொண்டு கூட எதையும் செய்ய வக்கற்ற தமிழ் தலைமைகள் கோத்தா போன்றவர்களை கையாள முடியாமல் வழக்கம் போல மேற்குலகின் தூதரகங்களுக்கு போய் முறையிட மட்டுமே முடியும். அதற்குள் முதல் 5 வருடங்கள் ஓடி முடிந்து தமிழர்களின் நிலை மிகவும் மோசமாக போயிருக்கும்.

  • தொடங்கியவர்

தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்றால், அதற்கு சிங்கள மக்கள் (தேரர்கள், அரசியல்வாதிகள்) உடன்பட வேண்டும். அவ்வாறாக, மக்களையும் சிங்கள மதவாதிகளையும் எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளையும் கையாளக்கூடிய வல்லமை யாரிடம் உள்ளது?

மகிந்த அண்ட் கோவிடம் தான் அது உள்ளது என நூறுவீதம் சொல்லாவிட்டாலும் அவர்களிடம் வேறு எவரையும் விட அந்த 'வல்லமை' கூடுதலாக உள்ளது என தெரிகின்றது.

 

Spiritual leader மகிந்த நிற்கும் நிலையை பார்த்தால் ஆள் ஏதும் பிரச்சினையில் உள்ளாரோ என தோணுது.

EHJG1bnWwAEh4pF?format=png&name=900x900

பி.கு: பசில் ராஜபக்ச The Hindu க்கு வழங்கிய செவ்வியில் மகிந்தவை “He is our leader, and he is the spiritual leader of our country” என குறிப்பிட்டிருந்தார். 😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.