Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடற்படையின்இரகசியமுகாம்கள்- இலங்கை மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள சர்வதேச பிரதிநிதிகளிற்கு சூக்கா முக்கிய வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடற்படையின்இரகசியமுகாம்கள்- இலங்கை மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள சர்வதேச பிரதிநிதிகளிற்கு சூக்கா முக்கிய வேண்டுகோள்

 

கொழும்பில் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள காலி உரையாடல் சர்வதேச  மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் இலங்கையில் உள்ள கடற்படையினரின் இரகசிய தடுப்பு முகாம்களில் இடம்பெற்ற  சித்திரவதைகள் குறித்த விசாரணைகளிற்கு  இலங்கை கடற்படையினர் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என பகிரங்கமாக வலியுறுத்தவேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற சர்வதேச அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடற்படையினரின் புலனாய்வு பிரிவினர் இவ்வாறான சித்திரவதைகளில் ஈடுபட்டவேளை கடற்படையின் புலனாய்வு பிரிவின் இயக்குநராக பணியாற்றிய இலங்கை கடற்படையின் தற்போதைய பிரதானி  நிசாந்த உலுகெட்டெனவின் அமர்வை சர்வதேச பிரதிநிதிகள் புறக்கணிக்கவேண்டும் எனவும் அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

2008- 2009 இல் 11 பேர்  இலங்கை கடற்படையின் விசேட புலனாய்வு பிரிவினரால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை  குறித்து இலங்கையின் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ள உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா கடற்படையினர் மேற்கொண்ட குற்றங்களில் இது ஒரு சிறியபகுதியே எனவும் தெரிவித்துள்ளார்.

11_abduc_case.jpg

கடற்படையினரின் பல முகாம்களில் இடம்பெற்ற சட்டவிரோதமாக தடுத்துவைத்தல்  சித்திரவதைகள் காணாமற்போகச்செய்யப்படுதல் ஆகியவற்றுடன் கடற்படையின் பல  தளபதிகளிற்கு தொடர்புள்ளது அல்லது அவர்கள் அதனை அறிந்திருந்தனர் என தெரிவித்துள்ள ஜஸ்மின் சூக்கா இவர்கள் குறிப்பிட்ட முகாம்களின் தலைமை அதிகாரிகளாக விளங்கியதுடன் இந்த குற்றங்களில் ஈடுபடுமாறு உத்தரவையும் வழங்கியிருந்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மாநாட்டை நடத்துபவர்களில் ஒருவரான  இலங்கை கடற்படையின் தற்போதைய பிரதானி  நிசாந்த உலுகெட்டென 2011 முதல் 2013 வரை கடற்படையின் புலனாய்வு பிரிவின் இயக்குநராகயிருந்தார் என தெரிவித்துள்ள சர்வதேச அமைப்பு 2012 நடுப்பகுதி வரை குறிப்பிட்ட முகாமை கடற்படையின் புலனாய்வு பிரிவினர் இயக்கிவந்தனர் , புலனாய்வு பிரிவின் இயக்குநர் என்ற அடிப்படையில் இலங்கை கடற்படையின் தற்போதைய பிரதானி  நிசாந்த உலுகெட்டென இது குறித்து தெரிந்திருக்கவேண்டும் ஆனால் அவர் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளது.

11_abductions.jpg

இலங்கை கடற்படையினருடன் கடல்சார் பாதுகாப்பு குறித்  தபேச்சுவார்த்தைகளிற்காக கொழும் செல்லும் உலக நாடுகளின் கடற்படை அதிகாரிகள் சர்வதேச நியாயாதிக்கத்தை கொண்ட சித்திரவதைக்கு எதிரான பிரகடனத்தில் தங்கள் நாடுகள் கைச்சாத்திட்டுள்ளதை மறந்துவிடக்கூடாது எனவும் ஜஸ்மின் சூக்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்
 

https://www.virakesari.lk/article/67209

 

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற சர்வதேச அமைப்பு மற்றும் செல்வி சூக்கா அவர்களும் தொடர்ந்தும் உண்மைகளை வெளிவர செய்வதிலும் நீதியை பெற்றுக்கொடுப்பதிலும் முனைந்து வெற்றியும் கண்டு வருகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா நினைத்தால் இந்த இரகசிய முகாம்களை கலர்படமாகவே வெளியிடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்கா நினைத்தால் இந்த இரகசிய முகாம்களை கலர்படமாகவே வெளியிடலாம்.

நீங்கள் நினைத்தாலும் இந்த இரகசிய முகாம்களை கலர்படமாக வெளியிடலாம்.

அமெரிக்கா வந்து தானா உங்களுக்கு எல்லாம் தீத்தி விட வேண்டும்? உங்களால் ஒன்றுமே செய்ய முடியாதா?

உங்களுக்கு தீத்தி விட அமெரிக்காவை தவிர வேறு யாரும் கிடைக்கவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Jude said:

நீங்கள் நினைத்தாலும் இந்த இரகசிய முகாம்களை கலர்படமாக வெளியிடலாம்.

அமெரிக்கா வந்து தானா உங்களுக்கு எல்லாம் தீத்தி விட வேண்டும்? உங்களால் ஒன்றுமே செய்ய முடியாதா?

உங்களுக்கு தீத்தி விட அமெரிக்காவை தவிர வேறு யாரும் கிடைக்கவில்லையா?

இல்லையே மேலே இருந்து உங்க வீட்டு கோடிக்குள்ளும் என்ன நடக்கிறது ,நடந்தது என்று துல்லியமாக படமெடுப்பது அவர்கள் தானே.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:

நீங்கள் நினைத்தாலும் இந்த இரகசிய முகாம்களை கலர்படமாக வெளியிடலாம்.

அமெரிக்கா வந்து தானா உங்களுக்கு எல்லாம் தீத்தி விட வேண்டும்? உங்களால் ஒன்றுமே செய்ய முடியாதா?

உங்களுக்கு தீத்தி விட அமெரிக்காவை தவிர வேறு யாரும் கிடைக்கவில்லையா?

 

1 hour ago, ஈழப்பிரியன் said:

இல்லையே மேலே இருந்து உங்க வீட்டு கோடிக்குள்ளும் என்ன நடக்கிறது ,நடந்தது என்று துல்லியமாக படமெடுப்பது அவர்கள் தானே.

படம் எடுத்தால் உங்களுக்கு இலவசமாக தர வேண்டுமா? படம் எடுக்க செலவான மில்லியன்களில் எவ்வளவை இந்த படங்களுக்கு நீங்கள் தருவீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

 

படம் எடுத்தால் உங்களுக்கு இலவசமாக தர வேண்டுமா? படம் எடுக்க செலவான மில்லியன்களில் எவ்வளவை இந்த படங்களுக்கு நீங்கள் தருவீர்கள்?

யூட் அதற்காகவே
அமெரிக்கா நினைத்தால் என்று எழுதியுள்ளேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.