Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனித்துப் பேச்சுக்கு வரமாட்டோம் கூட்டணியாகவே பேச வருவோம் -ரணிலுக்கு விக்னேஸ்வரன் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தனித்துப் பேச்சுக்கு வரமாட்டோம் கூட்டணியாகவே பேச வருவோம் -ரணிலுக்கு விக்னேஸ்வரன் தெரிவிப்பு

நான் தனித்துப் பேசவர முடியாது. நாங்கள் ஐந்து கட்சிக் கூட்டணியாகவே இவ்விடயங்கள் குறித்து பேசுவது என முடிவு செய்துள்ளோம். எனவே, ஐந்து தரப்புகளுக்கும் பொருத்தமான ஒரு நேரத்தில் சந்திக்க அழைப்புக் கிடைத்தால் வருவோம் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.மேலும் தென்னிலங்கைத் தரப்புகள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், வரவேற்றாலும் வரவேற்காவிட்டாலும் ஐந்து தமிழ்க் கட்சிகளின் பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 13 அம்சங்கள் அடங்கிய தமிழர்களின் கோரிக்கைப் பட்டியல் ஜனாதிபதித் தேர்தலின் பிரதான வேட்பாளர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பதில் விக்னேஸ்வரன் உறுதியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

தற்போது கொழும்பில் தங்கியுள்ள விக்னேஸ்வரன், ஏனைய நான்கு தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும், ஏனைய தலைவர்களையும் சந்தித்துப் பேசிய பின்னரே – பெரும்பாலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ். திரும்புவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.ஏனைய நான்கு கட்சிகளின் பிரதானிகளான மாவை சேனாதிராஜா (இலங்கைத் தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட்), சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) ஆகியோருடன் உரையாடி அவர்களுக்கு ஏற்ப ஒழுங்குகளைச் செய்யும்படி விக்னேஸ்வரன் தெரிவித்த பதிலை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

 

http://www.samakalam.com/செய்திகள்/தனித்துப்-பேச்சுக்கு-வரம/

 

 

"தனித்துப் பேச்சுக்கு வரமாட்டோம் கூட்டணியாகவே பேச வருவோம் -ரணிலுக்கு விக்னேஸ்வரன் தெரிவிப்பு" 

இந்த ஐந்து தமிழ் கட்சிகளில் யாரவது ஒருவர் காலை வாரி விடாமல் இருக்கவும் இந்த கொள்கை உதவலாம்  🙂 

ஐந்து கட்சிகள் இணைந்த பின்னும் சொறிலங்காவின் திருட்டுப் புத்தி நிறைந்த பிரதமர் றணில் விக்ரமசிங்க தனது கபட குணத்துடன் தமிழ் மக்கள் கூட்டணியின் விக்கியை தனியே பேச்சுவார்த்தைக்கு அழைத்த போது அவர் றணிலுக்கு "என்னையும் கருணா என்டு நினைச்சாயோ" என சாட்டையடி குடுத்திருக்கார்.

ஐந்து கட்சிகளுக்கு சிறந்த முன்னுதாரணமாக இருந்த விக்கிக்கு பாராட்டுக்கள்!

மகிந்த அண்ட் கோ தமிழர் தரப்புடன் பேச மாட்டோம் என்று கூறிவிட்டது. 

ரணில் / சஜித் தரப்புடன் பேசி ஒரு உடன்பாட்டிற்கு வந்தால், 'அவர்கள் நாட்டை பிரிக்கப் பார்க்கிறார்கள்' என கூறக்கூடும். அதனால், தமிழர் தரப்பு ஒரு 'இரகசிய உடன்பாட்டிற்கு' வரலாம். அதை தமிழ் மக்களும் அறிய முடியாது. சஜித் ஜனாதிபதியான பின்னர் அவர் அதை நிறைவேற்ற வைப்பதும் கடினமே. 
 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Rajesh said:

ஐந்து கட்சிகள் இணைந்த பின்னும் சொறிலங்காவின் திருட்டுப் புத்தி நிறைந்த பிரதமர் றணில் விக்ரமசிங்க தனது கபட குணத்துடன் தமிழ் மக்கள் கூட்டணியின் விக்கியை தனியே பேச்சுவார்த்தைக்கு அழைத்த போது அவர் றணிலுக்கு "என்னையும் கருணா என்டு நினைச்சாயோ" என சாட்டையடி குடுத்திருக்கார்.

ஐந்து கட்சிகளுக்கு சிறந்த முன்னுதாரணமாக இருந்த விக்கிக்கு பாராட்டுக்கள்!

இவ்வளவு காலமும் ஏமாற்றி, ஆசை காட்டி காரியம் சாதித்த அனுபவம்தான்.  ஆனால் ஒன்று பிழையான ஆளை நெருங்கி இருக்கிறார் பாவம்.

யாழ் மாணவர்களை வளைத்துப் போடும் முயற்சியில் சிங்கள பயங்கரவாத அரசின் குள்ளநரிப் ரணில் சொதப்பல் சுவாமிநாதனை யாழ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பியிருக்கார்.

மறுபக்கத்தில் ராஜபக்ச கொலைகாரக் கும்பல் சார்பில் வடமாகாண ஆளுநர் அலுவலகம் யாழ் மாணவர்களுடன் நெருங்கி உறவாட ஆரம்பித்துள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.