Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

TNA இன் நிபந்தனைகளுக்கு UNP உடன்படாது – கபீர் ஹஷீம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

TNA இன் நிபந்தனைகளுக்கு UNP உடன்படாது – கபீர் ஹஷீம்

 

1527827379-Kabeer

வாக்குகளுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதற்கு ஐக்கிய தேசிய கட்சி ஒருபோதும் தயாரில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலார்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் நாங்கள் ஒரே கொள்கையில் இருக்கிறோம், அவர்களுக்கு இவ்வாறு, இவர்களுக்கு இவ்வாறு என்று இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தலுக்காக முன்வைக்கும் நிபந்தனைகளுக்கு நாம் அடிபணிய மாட்டோம் என உறுதியாக தெரிவித்துள்ளோம். நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு தொடர்பில் நாங்கள் உறுதியான தீர்மானத்திலேயே இருக்கிறோம் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.dailyceylon.com/191140/

அப்ப, ஜே.வி.பி. மட்டும்தான் மிச்சமாய்  உள்ளதா பேசுவதற்கு ?

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ampanai said:

அப்ப, ஜே.வி.பி. மட்டும்தான் மிச்சமாய்  உள்ளதா பேசுவதற்கு ?

போனால் எதையாலயும் துவட்டி அடிப்பானுகள் 

தமிழர் தரப்பு முன்வைத்த பல கோரிக்கைகளில் நியாயம் உள்ளது - ஜே.வி.பி.

(ஆர்.யசி)

ஜனாதிபதி தேர்தலை அடிப்படையாக வைத்து தமிழ்க் கட்சிகள் முன்வைத்த 13 அம்சக் கோரிக்கைகளில் பலவற்றை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணி, எனினும் வடக்கு கிழக்கு இணைப்பு என்ற கோரிக்கையை மாத்திரம் ஏற்றுகொள்ள முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட  ஜே.வி.பியின் ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் எம்.பி  இதனைக் குறிப்பிட்டார். 

வடக்கு கிழக்கின் தமிழ் தரப்பு 13 கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர்களிடம்  முன்வைத்துள்ளனர். இதில் வடக்கு கிழக்கு தனி அழகாக்கும் கோரிக்கைக்கு நாம் இணங்கவில்லை. வடக்கு கிழக்கு தமிழர் தாயகம்  ஆகவே அதனை எமக்கு தாருங்கள் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது. கிழக்கில் முஸ்லிம் மக்கள் அதிகமாகவும் சிங்களவர்கள் ஓரளவு வாழ்கின்றனர். திருகோணமலையை எடுத்துக்கொண்டாலும் யாழ்பாணத்தை எடுத்துக்கொண்டாலும் அங்கு சிங்களவர்கள் வாழ்கின்றனர். ஆகவே அவர்களை நிராகரித்து வடக்கை தனி அலகாக அங்கீகரிக்க முடியாது. 

எனினும் தமிழர் தரப்பு முன்வைத்த  பல கோரிக்கைகள் நியாயமானதாக உள்ளது. வடக்கின் தனியார் நிலங்களை மீண்டும் அவர்களுக்கு கொடுக்க வேண்டும், இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதும் நியாயமாது.இப்போது இவ்வாறான மோசமான சட்டம் தேவையில்லை. அதேபோல் இப்போது கொண்டுவரும் சட்டமும் மோசமானது அதனை நாமும் எதிர்கின்றோம். 

மேலும் வடக்கு கிழக்கு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். அவர்களை பாதுகாக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆகவே தமிழ் கட்சிகளின் 13 கோரிக்கைகளில் பிரதான காரணிகளுடன் நாம் முரண்படவில்லை. ஆனால் வடக்கு கிழக்கு இணைப்பு மாத்திரம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

https://www.virakesari.lk/article/67307

30 minutes ago, ampanai said:

ஜனாதிபதி தேர்தலை அடிப்படையாக வைத்து தமிழ்க் கட்சிகள் முன்வைத்த 13 அம்சக் கோரிக்கைகளில் பலவற்றை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணி, எனினும் வடக்கு கிழக்கு இணைப்பு என்ற கோரிக்கையை மாத்திரம் ஏற்றுகொள்ள முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜேவிபி வெல்லாது என்பதால் அனைத்தையும் ஏற்றுக்கொள்வதாக கூட வாக்குறுதி கொடுக்க முடியும். 😂

13 கோரிக்கைகளும் எவை என்பதை இதில் வாசிக்கலாம்.

tamil-parties-aggrement-1.jpg

tamil-parties-aggrement-2.jpg

FB_IMG_1571067254053-681x1024.jpg

 

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Lara said:

ஜேவிபி வெல்லாது என்பதால் அனைத்தையும் ஏற்றுக்கொள்வதாக கூட வாக்குறுதி கொடுக்க முடியும். 😂

13 கோரிக்கைகளும் எவை என்பதை இதில் வாசிக்கலாம்.

இன்னுமா  இந்த பேப்பரெல்லாம் எழுதிட்டு திரியுறானுகள்  சிங்கள அரசு கொடுக்கிற மாதிரியும் இவனுகள் கேட்கிற மாதிரியும் மக்களை மாணவர்களையும் சேர்த்து இவங்க கொடுக்குற அலப்பறை இருக்கோ சபா முடியல 

சிறிதரன் எம்பி அந்தமாதிரி யப்புனா ஏர்போட் திறக்க வந்த ரணிலுக்கு பின்னுக்கு நிற்குது அங்கால சுமந்துரன் எலி கெப்டர்ல ஏறிட்டு போகுது இதுக்குள்ள இந்த பேப்பர் வேற தூக்கி ஒரு ஓரமா வையுங்க சார்🙃

23 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இன்னுமா  இந்த பேப்பரெல்லாம் எழுதிட்டு திரியுறானுகள்  சிங்கள அரசு கொடுக்கிற மாதிரியும் இவனுகள் கேட்கிற மாதிரியும் மக்களை மாணவர்களையும் சேர்த்து இவங்க கொடுக்குற அலப்பறை இருக்கோ சபா முடியல 

சிறிதரன் எம்பி அந்தமாதிரி யப்புனா ஏர்போட் திறக்க வந்த ரணிலுக்கு பின்னுக்கு நிற்குது அங்கால சுமந்துரன் எலி கெப்டர்ல ஏறிட்டு போகுது இதுக்குள்ள இந்த பேப்பர் வேற தூக்கி ஒரு ஓரமா வையுங்க சார்🙃

ஜேவிபியின் கருத்துக்காக அதை இணைத்தேன். 😀

கூட்டமைப்பினர் சஜித்தின் போஸ்டர்களுடன் வேறு நிற்கிறார்கள். 😂

https://yarl.com/forum3/topic/233124-யாழ்-நிகழ்வில்-சஜித்தின்-போஸ்டர்களுடன்-தமிழ்-தேசியக்-கூட்டமைப்பின்-உறுப்பினர்கள்/

கூட்டமைப்புடன் புரிந்துணர்வு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டதாக  மங்கள சமரவீரவும் கூறியிருந்தார். 😀

Edited by Lara

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.