Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? - சம்பந்தன் விளக்கம்

Featured Replies

(ஆர்.யசி)

பிரதான கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தை அவதானித்துவிட்டு தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பிரதான கட்சிகள் எவ்வாறு முன்வைக்கின்றனர் என்ற காரணிகளை அவதானித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு இறுதித் தீர்மானம் எடுக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார். 

அத்துடன் நாளை வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து தமிழ் கட்சிகளும் கொழும்பில் கூடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறினார். 

கடந்த சில தினங்களாக பிரதான கட்சிகள் தமது தேர்தல்  நிலைப்பாடுகளை அறிவித்து வருகின்ற நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி  சில காரணிகள் குறித்து ஆராய்ந்துள்ளனர். இதன்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் 30 ஆம் திகதி மற்றும் 1 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள நிலையில் அதன் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தீர்மானம் எடுக்கவும், தமிழர்களின் தீர்வுகள் விடயத்தில் தொடர்ச்சியாக சகல தரப்புடனும் பேசி வருவதன் காரணத்தினால் பொறுமையாக தமிழர் தரப்புகள் தமது நிலைப்பாடுகளை ஆராய முடியும் எனவும் கலந்துரையாடிவுள்ளனர். 

மக்கள் விடுதலை முன்னணி மாத்திரமே இன்று வரையில் அவர்கள் தமிழர் தரப்பின் 13 அம்சக் கோரிக்கைகள் குறித்து தமது நிலைப்பாட்டை எட்டியுள்ள நிலையில் ஏனைய கட்சிகள் என்ன கூறுகின்றனர் என்பதையும் பார்க்க வேண்டும் என கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் இதன்போது தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/67462

  • தொடங்கியவர்

’சம்பந்தனால் முடியாது’

வி.சுகிர்தகுமார் 

யாராவது சென்று தொழில் வாய்ப்பினையோ அல்லது பாதை அபிவிருத்தி தொடர்பாகவோ பேசினால், அது முடியாத காரியம் என சம்பந்தன் ஐயா கூறுவாரென தெரிவித்த நாமல் ராஜபக்‌ஷ எம்.பி, அவ்வாறு பெற்றுத்தந்தால் அரசியல் தீர்வினைப் பெற முடியாது எனக் கூறுவார் என்றும் தெரிவித்தார். .

1983 முதல் சம்பந்தன் ஐயா தீபாவளியைக் காத்திருக்கின்றார். ஒரே கதை.ஒரே பேச்சு. ஒரே புகைப்படம். அன்று முதல் தீபாவளிக்கு முன்னர் தமிழ் மக்களுக்கானத் தீர்வு என்றே சொல்லியே காலத்தைக் கடத்தி வருகின்றார். வட,கிழக்கு மக்களுக்கு இதுவரையில் அவ்வாறு எந்தவித நன்மையும் இதுவரையில் கிடைத்ததாக இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

 அம்பாறை மாவட்டத்துக்கு வருகை தந்த அவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவின் அழைப்பின் பேரில் அக்கரைப்பற்றுக்கு நேற்றிரவு(22)வருகை தந்தார்.  இவர், பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

 அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:  

சம்பந்தனும் சுமந்திரன் உள்ளிட்டவர்களும் வாகனத்துக்கான பேமிட்டையும் மதுபான சாலைக்கான அனுமதியையும் அரசிடம் பெற்றுக்கொள்வார். மக்கள் நன்மை சார்ந்த விடயங்களைப் பெற்றுக்கொள்வதில்லை. இதனால், விசேடமாக கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் கிழக்கு மாகாணம் பற்றி அதிகம் பேசுவதில்லை என்றார்.

http://www.tamilmirror.lk/அம்பாறை/சமபநதனல-மடயத/74-240396

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பமே  அரச பணத்தை கொள்ளை அடித்தவர்கள் மற்றவர்களை  நக்கலாக விமர்சிக்க  இழிச்சவாய் கூட்டமைப்பு ஒரு பதிலும் அளிக்க மாட்டார்கள்.

11 hours ago, ampanai said:

அத்துடன் நாளை வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து தமிழ் கட்சிகளும் கொழும்பில் கூடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறினார். 

நல்ல விடயம்!

பெரும்பான்மைக் கட்சிகள் தமிழர் கோரிக்கைகளை புறக்கணித்தால் / முழுமையாக ஏற்றுக்கொள்ள மறுத்தால் தமிழர்கள் சிவாஜிலிங்கத்தை முழுமையாக ஆதரிக்க உள்ளனர் என்றும் சம்மந்தன் சொல்லியிருந்தால் சஜித் கும்பல் ஆடிப்போயிருக்கும்.

கோட்டாபயவின் பயங்கரவாதக் கும்பல் சிங்கள இனமதவெறியர்களின் வாக்குகளினாலும் ஏமாந்த/மோட்டு சிறுபான்மையினரின் வாக்குகளினாலும், திருகுதாளங்ளினாலும்  வென்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் இருப்பதால் தமிழர் கோரிக்கைகளை ஏறெடுத்துப் பார்க்கப்போவதில்லை.

தமிழர்களின் வாக்குகள் கிடைத்தால் வெற்றிக்கான சாத்தியம் அதிகம் என நம்பும் சஜித் கும்பல் தமிழர் சிவாஜிலிங்கத்தை ஆதரிக்கப் போவதில்லை என்ற நம்பிக்கையிலும், ரணிலின் எடுபிடி சுமந்திரன் எப்படியாவது சம்மந்தன் உடன் சதி செய்து தமிழர் வாக்குகளை பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கையிலும் தமிழர் கோரிக்கைகளை உதாசீனம் செய்து வருகின்றனர்.  

எனவே, தமிழர் ஒரு சிறிது காலத்துக்காவது பெரும்பான்மைக் கட்சிகளுக்கு கடுமையான அழுத்தத்தைக் கொடுப்பதற்காக சிவாஜிலிங்கத்தை ஆதரிப்பது தான் ஒரேவழி என்பதை பகிரங்கமாக, உரத்துச் சொல்லவேண்டிய தருணம் இது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.