Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்துமா சமுத்திரத்தின் கேந்திரமாக இலங்கை உருவெடுக்க சீனா துணை நிற்கும் - சீன தூதுவர் ஷெங் யுவான்

Featured Replies

இந்துமா சமுத்திரத்தின் கப்பல் போக்குவரத்து மையமாக இலங்கை உருவெடுக்க சீனா அனைத்து வகையிலும் ஒத்துழைப்புகளை வழங்கும். டுபாய் - கொழும்பு கப்பல் போக்கு வரத்து அடுத்தகட்ட முக்கிய நகர்வாகவே அமைந்துள்ளன. இரு நாடுகளுக்கு இடையிலான உறவு இன மற்றும் கட்சி அரசியலின் அடிப்படையிலனவையல்ல என சீன தூதுவர் ஷெங் யுவான் தெரிவித்தார்.  

26-China.JPG

இலங்கையை கடன் பொறிக்குள் சிக்க வைத்து சீனா செயற்படுவதாக மேற்குலக நாடுகள் போலி பிரசாரங்களை முன்னெடுக்கின்றன. மறுப்புறம் ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் போர்தளமெனவும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஜப்பான் மற்றும் ஜேர்மன் நாடுகளின் போர்க்கப்பல்களே  ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

இலங்கை - சீன திட்டங்கள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு தெளிவுப்படுத்தும் சந்திப்பு இன்று தாமரை கோபுரத்தில் இடம்பெற்றது. 

இதன்போதே சீன தூதுவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

https://www.virakesari.lk/article/67803

  • தொடங்கியவர்
  • உருசியா சென்று சென்னையில் இருந்து விளாடிவஸ்தோக் வரை கப்பல் சேவை தொடங்க பணம் கொடுத்த மோடி
  • மாமல்லபுரத்திற்கு சீனாவை கூட்டி வந்த மோடி  
  • இப்பொழுது உருசியாவை தமிழகத்திற்கு அழைக்கும் மோடி
  • பலாலியில் சர்வதேச விமான நிலையத்தை திறந்த இந்தியா


ஆமாம், நீங்கள் சொல்வது உண்மை 🙂 
இலங்கையை கடன் பொறிக்குள் சிக்க வைத்து சீனா செயற்படுவதாக மேற்குலக நாடுகள் போலி பிரசாரங்களை முன்னெடுக்கின்றன. மறுப்புறம் ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் போர்தளமெனவும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஜப்பான் மற்றும் ஜேர்மன் நாடுகளின் போர்க்கப்பல்களே  ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

1 hour ago, ampanai said:

மறுப்புறம் ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் போர்தளமெனவும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அம்பாந்தோட்டையில் கடற்படைத்தளம் அமைக்கும் எண்ணம் சீனாவுக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரிந்தது.

அதனால் தான் இந்தியா மத்தல விமான நிலையத்தை தனக்கு தரும்படி கேட்டது. அருகில் இருந்து சீனாவை கண்காணிக்க.

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்து இந்தியாவுடன் சேர்ந்து இயக்கப்போவதாக மார்ச் மாதம் கூறினார்கள். 40 வருட கால குத்தகைக்கு இந்தியாவுக்கு வழங்கப்போவதாகவும் வாசித்தேன். இப்பொழுது என்ன நிலையில் உள்ளது என தெரியவில்லை. 

1 hour ago, ampanai said:

ஜப்பான் மற்றும் ஜேர்மன் நாடுகளின் போர்க்கப்பல்களே  ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

ஈஸ்ரர் தாக்குதலுக்கு இரு நாட்களுக்கு முன்னம் 19 ஏப்ரல் அன்று அமெரிக்க கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டதை சொல்ல மறந்திட்டார்.

Edited by Lara

  • தொடங்கியவர்

இந்தியாவும் சீனாவும் இன்று ஆசிய வல்லரசுகள்.
இவை, நாளைய உலக வல்லரசுகள். 

இருவரும் ஒருவராக பயணிப்பார்கள். பயணிப்பது போன்று காட்டுவார்கள்.
காரணம், வெளித்தனமாக சண்டை பிடிப்பது பேரழிவை தரும்.

ஆகவே, மௌனமான, மென்மையான சண்டைகள் நடக்கும்.
அதற்குள் சிறிய நாடுகள் சிக்கி  தவிக்கலாம்.
 
சில புதிய யன்னல்கள் திறக்கலாம்.
சில திறந்த கதவுகள் மூடப்படலாம். 

5 hours ago, ampanai said:

இந்துமா சமுத்திரத்தின் கப்பல் போக்குவரத்து மையமாக இலங்கை உருவெடுக்க சீனா அனைத்து வகையிலும் ஒத்துழைப்புகளை வழங்கும்.

ஹிந்தியன் ஏற்கனவே தங்களின் காட்டுமிராண்டிப் பண்பாடுகளை சிங்களவனுக்கு புகட்டி வருகிறான்!

  • தொடங்கியவர்

இந்திய பெருங்கடலுக்குள் சீன போர்க்கப்பல்கள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை

இந்திய பெருங்கடலுக்குள் சீனாவின் விமானம் தாங்கி கப்பல்கள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் பசிபிக் கடற்படை கமாண்டரான அட்மிரல் ஜான் அக்கிலினோ டெல்லி வந்துள்ளார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய கடற்பகுதிக்குள் சீன போர்க்கப்பல் ஊடுருவினால் அது ஆச்சரியமான விஷயமல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

போர்க்கப்பல்களை மிக அதிக அளவில் சீனா குவித்து வருகிறது. அந்நாட்டு கடற்படையில் இணைக்கப்பட்டுள்ள புதிய போர்க்கப்பல்களான 54 ஃபிரிகேட், 52 d destroyer போன்ற கப்பல்களும் கடல் தாக்குதல் தடுப்பு ஏவுகணைகளும் போன்றவை மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களாக இருப்பதாகவும் அட்மிரல் அக்கிலோனோ தெரிவித்துள்ளார்.

கடந்த பத்தாண்டுகளில் சீனா அணு ஆயுதம் தாங்கி நீர்மூழ்கிக் கப்பல்களையும் இந்திய பெருங்கடலுக்குள் ஊடுருவச் செய்துள்ளதை இந்திய கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர். இவை நிறுத்தப்படப் போவதில்லை. இவற்றின் எண்ணிக்கை மேலும் அதிகமாகவே வாய்ப்புள்ளது என்றும் அட்மிரல் அக்கிலோனோ தெரிவித்துள்ளார்.

https://www.polimernews.com/dnews/86688/இந்திய-பெருங்கடலுக்குள்சீன-போர்க்கப்பல்கள்-ஊடுருவவாய்ப்புள்ளதாக-அமெரிக்காஎச்சரிக்கை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.