Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாக்குகளுக்காக இரண்டு கட்சிகளும் இனவாதத்தை கக்குகின்றனர்.- அநுரகுமார

Featured Replies

மக்களின் வாக்குக்களை பெற்றுக்கொள்ளவதற்காக இரண்டு பிரதான கட்சிகளும் இனவாதத்தை கக்குகின்றன. வடக்குக்கு வருகின்ற மகிந்த ராஜபக்சவும் சஜித்தும் வேறு தெற்குக்கு செல்கின்ற மகிந்தராஜபக்ச சஜித்தும் வேறு, அவ்வாறே கிழக்கிற்கு செல்கின்ற மகிந்தவும் சஜித்தும் வேறு இவர்கள் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொன்றை பேசிவருகின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

IMG_8535.JPG

இன்று 12-11-2019 கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

இலங்கையில் சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லிம்கள், பறங்கியர் என அனைவரும் சமத்துவமாக வாழக் கூடிய சூழலை உருவாக்க வேண்டும்.  ஆனால் நாட்டில் உள்ள  இரண்டு பிரதான  கட்சிகளும் அதற்கு மாறாக இனவாதத்தை தொடர்ந்தும் பேசி பேசி இனங்களுக்கிடையே இடைவெளியை ஏற்படுத்தி வருகின்றனர்.

யாழ்ப்பாண விமான நிலையத்தின் பெயர்  பலகைகளில் தமிழுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டமையினை தெற்கில் மிக மோசமான இனவாதத்தோடு பேசி வருகின்ற மகிந்த ராஜபக்சவின் யாழ்ப்பாண அலுவலகத்தின் பெயர் பலகையில் தமிழ் மொழியே முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே மக்கள் மத்தியில் உண்மையை பேசி நாட்டை அமைதி பாதைக்கு கொண்டு செல்வதற்கு பதிலாக இனவாத்தை பேசி அழிவுப் பாதைக்கு கொண்டு செல்கின்றனர்..

எமது மக்களும் 71 வருடங்களாக தோற்றுப் போன அரசியல் பாதையினை மாறி மாறி தெரிவு செய்து வருகின்றனர். இந்த அரசியல் பாதையில் நாட்டின் சாதாரன குடிமக்களின் வாழ்வில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆனால் அதிகாரங்களுக்கு வருகின்றவர்களின் பிள்ளைகள் குடும்பங்கள், உறவினர்கள் வாழ்க்கை மட்டுமே வளர்ச்சி அடைந்து சென்றிருக்கிறது. இந்த நிலைமையினை மாற்ற வேண்டும் எனத் தெரிவித்த அவர்

இலங்கையில் புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த மக்கள் எதிர்வரும் 16 திகதியை பயன்படு்த்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

https://www.virakesari.lk/article/68827

இவர்களுடைய  முதலீடே  இனவாதம். அப்போ எப்படி இனவாதம் பேசாமல் அரசியல்  செய்வார்கள்? உங்களுக்கு வாக்களிக்க எமக்கு விருப்பம் இருந்தாலும் உங்கள் கடந்த கால செயட்பாடுகள் எம்மை தடுக்கின்றன.

வடக்கு கிழக்கை பிரித்தது , தமிழ் மக்கள் கோதாவால் கொலை செய்யப்படும்போது  அதட்கு அனுமதியளித்தது etc etc . நீங்களும் அப்படியான ஒரு அரசியலை , இனவாத அரசியலை செய்து பாருங்கள் மக்கள் உங்களுக்கு வாக்களிக்கிறார்களா என்று? 

4 hours ago, Vankalayan said:

இவர்களுடைய  முதலீடே  இனவாதம். அப்போ எப்படி இனவாதம் பேசாமல் அரசியல்  செய்வார்கள்? உங்களுக்கு வாக்களிக்க எமக்கு விருப்பம் இருந்தாலும் உங்கள் கடந்த கால செயட்பாடுகள் எம்மை தடுக்கின்றன.

வடக்கு கிழக்கை பிரித்தது , தமிழ் மக்கள் கோதாவால் கொலை செய்யப்படும்போது  அதட்கு அனுமதியளித்தது etc etc . நீங்களும் அப்படியான ஒரு அரசியலை , இனவாத அரசியலை செய்து பாருங்கள் மக்கள் உங்களுக்கு வாக்களிக்கிறார்களா என்று? 

ஜேவிபி இப்பொழுதும் இனவாதம் பேசுபவர்கள் தான். 

இவ் இணைப்பிலுள்ள செய்தியை சிங்களம் தெரிந்தால் சிங்களத்தில் வாசியுங்கள். அல்லது google translate மூலம் மொழிபெயர்த்து வாசியுங்கள்.

https://www.ceylonnews.lk/archives/10476

  • தொடங்கியவர்
1 hour ago, Lara said:

ஜேவிபி இப்பொழுதும் இனவாதம் பேசுபவர்கள் தான். 

இவ் இணைப்பிலுள்ள செய்தியை சிங்களம் தெரிந்தால் சிங்களத்தில் வாசியுங்கள். அல்லது google translate மூலம் மொழிபெயர்த்து வாசியுங்கள்.

https://www.ceylonnews.lk/archives/10476

கோத்தாவாவை சஜித் இனவாதம் குறைந்தவர் என்ற ஒரே அடிப்படையில் தான் சஜித்திற்கு வாக்களிக்க தமிழ் மக்களை கேட்க்கிறோம்.

அதே வாதத்தை வைத்து பார்க்கும்பொழுது, ஜே வி பி சஜித் கடைசியை விட இனவாதம் குறைந்தது என பார்க்காலம், வாக்களிக்கலாம்.    

9 minutes ago, ampanai said:

கோத்தாவாவை சஜித் இனவாதம் குறைந்தவர் என்ற ஒரே அடிப்படையில் தான் சஜித்திற்கு வாக்களிக்க தமிழ் மக்களை கேட்க்கிறோம்.

அதே வாதத்தை வைத்து பார்க்கும்பொழுது, ஜே வி பி சஜித் கடைசியை விட இனவாதம் குறைந்தது என பார்க்காலம், வாக்களிக்கலாம்.    

நீங்கள் அந்த செய்தியில் கூறப்பட்டிருப்பதை வாசித்தீர்களா?

கோத்தாவை விட சஜித் வந்தால் தமிழர்களுக்கு அழிவு குறைவாக இருக்கும் என்பதால் தான் நான் சஜித்துக்கு வாக்களிக்க கேட்கிறேன்.

அநுரவுக்கு வாக்களித்தால் அதன் மூலம் அநுர வெல்லப்போவதில்லை, அது கோத்தாவை ஜனாதிபதியாக்கும். எனவே மக்கள் சஜித்துக்கு வாக்களிக்க வேண்டும்.

Edited by Lara

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.