Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்கள் இன பாகுபாடு பார்த்து வாக்களித்திருந்தால் சிவாஜிலிங்கத்தை ஆதரித்திருப்பார்கள் . கவீந்திரன் கோடீஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ் மக்கள் இனப் பாகுபாடு பார்த்தோ, மத பாகுபாடு பார்த்தோ இந்தத் தேர்தலில் வாக்களிக்கவில்லை. இனப் பாகுபாடு பார்த்து தமிழ் மக்கள் வாக்குகளை போட்டிருப்பார்களானால் அவர்கள் சிவாஜிலிங்கத்திற்கு வாக்களித்திருப்பார்கள்.அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தனது அலுவலகத்தில் நேற்று மாலை 7 மணியளவில் (20) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்  புதிய சனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு தனது வாழ்த்து தெரிவித்து இக் கருத்தினை முன்வைத்தார்.
 
மேலும் தெரிவிக்கையில்..
 
 
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித்
தேர்தலிலே வெற்றிபெற்ற அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு அம்பாறை மாவட்ட மக்கள் சார்பாகவும் ,வடகிழக்கு வாழ் மக்கள் சார்பாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாகவும் வாழ்த்துகின்றேன்.
 
 
ஜனாதிபதி அவர்கள் அனைத்து மக்களையும் ஒரே பார்வையில், ஒரே குடையின்கீழ், இன ,மத ,மொழி பாகுபாடு அற்ற முறையிலே இலங்கைப் பிரஜைகள் என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் மனதை வெல்ல கூடிய வகையில் தனது தனது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
 
கடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகோபித்த கருத்தின் அடிப்படையில் செயல்பட்டு இருந்தது. தமிழர்களின் அபிலாசைகளை கருத்தில்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு த செயல்பாடுகளை முன்னெடுக்கும் . ஒரு போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களே புறந்தள்ளிவிட்டு தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கப் போவதில்லை .
 
வடகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து தங்கள் பலத்தை  தேசியத்திற்கும், சர்வதேசத்திற்கும் நிரூபித்து காட்டியிருக்கிறார்கள். தமிழ் மக்கள் இந்த நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து இற்றைவரையும் ஒருமித்த  எண்ணத்தையும் சிந்தனையும் கொண்டவர்களாக பயணித்துக்கொண்டிருக்கிறார்கள்.
 
தமிழ் மக்களின் நோக்கமும் சிந்தனையும் எண்ணமும் தங்களது இன விடுதலை சம்பந்தமாகவும் ,அரசியல் தீர்வு சம்பந்தமாகவும் தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து வடகிழக்கில் பயணிக்க வேண்டும் என்பதனை உலகத்திற்கு பறைசாற்றியிருக்கிறார்கள். அதனடிப்படையிலேதான் இம்முறை வடகிழக்கு தமிழர்கள் ஒன்றுசேர்ந்து வெற்றி கண்டிருக்கிறார்கள்.
 
குறிப்பாக தமிழ் மக்கள் இனப் பாகுபாடு பார்த்தோ, மத பாகுபாடு பார்த்தோ இந்தத் தேர்தலில் வாக்களிக்கவில்லை. இனப் பாகுபாடு பார்த்து தமிழ்மக்கள் வாக்குகளை போட்டிருப்பார்களானால் அவர்கள் சிவாஜிலிங்கத்திற்கு வாக்களித்திருப்பார்கள்.
 
சனாதிபதி அவர்கள் பக்கச்சார்பின்றி இந்த நாட்டை நிர்வகிக்க வேண்டும். ஒரு இனத்துக்கோ அல்லது ஒரு மதத்திற்கு சார்பாக இந்த நாட்டின் சனாதிபதி அவர்கள் செயற்படுவார்கள் இந்த நாடு மீண்டும் அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும்.
 
இந்த நாட்டில் நடைபெறும் நிர்வாகம் , அரசியல் பொருளாதார விடயங்களை சர்வதேசம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருக்கின்றது. சர்வதேசத்தில் ஒத்துழைப்புடன் இந்த நாட்டில் தமிழர்களின் புரையோடிப் போயிருக்கும் இன பிரச்சினைகளை தீர்க்கின்ற விடயங்களை முன்னெடுக்க வேண்டும்.
 
கடந்த அரசாங்கம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை விடயத்தில் பல இழுத்தடிப்புக்களை  செய்துள்ளது. அது கவலைக்குரிய விடயம். இருக்கின்ற ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் தமிழ் மக்களின் கலை கலாசார விடயங்களை நன்கு உணர்ந்து செயற்பட வேண்டும். கடந்த காலத்திலேயே தமிழ்மக்கள் தமிழ் மக்களின் கலை கலாசார விடயங்களை குறைக்கின்ற வகையில் பல அமைப்புகளை கொண்டு செயற்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது.
 
பொதுபல சேனா ,இராவண பலய  போன்ற அமைப்புகள் தமிழ் மக்களின் ஆலயங்கள் விடயத்தில் பலதரப்பட்ட இடையூறுகளைசெய்திருந்தார்கள் . அந்த இடையூறுகள் எதிர்காலத்தில் ஏற்பட்டுவிடக்கூடாது அந்தவகையில் இந்த நாட்டை சரியான முறையில் நிர்வகிக்க வேண்டும் என்பதே எம் மக்களின் எதிர்பார்ப்பு.வருகின்ற அரசோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு பட்ட பேச்சுவார்த்தைகளை நடாத்த இருக்கின்றது. சர்வதேசத்தின் ஒத்துழைப்போடு செயற்பட இருக்கின்றது.
 
 
எதிர்வரும் தேர்தல்களில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஒன்றித்து பயணிக்க வேண்டும். இல்லாவிடில் அம்பாறை மாவட்டத்திற்கான தமிழ் மக்களின் பிரதிநிதி ஒருவரை இழக்க வேண்டி வரும் அதனால் தமிழ் மக்களின் காணி ,அரசியல் ,அபிவிருத்தி ,சுகாதாரம் போன்ற செயற்பாடுகளில் திட்டமிட்டு கூறைக்கப்படும் தமிழ் மக்கள்  மாற்று  சமூகத்திடமும் மாற்று இனத்தவரிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்படுவார் என இதன்போது தெரிவித்தார்.
 
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:
எதிர்வரும் தேர்தல்களில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஒன்றித்து பயணிக்க வேண்டும். இல்லாவிடில் அம்பாறை மாவட்டத்திற்கான தமிழ் மக்களின் பிரதிநிதி ஒருவரை இழக்க வேண்டி வரும் அதனால் தமிழ் மக்களின் காணி ,அரசியல் ,அபிவிருத்தி ,சுகாதாரம் போன்ற செயற்பாடுகளில் திட்டமிட்டு கூறைக்கப்படும் தமிழ் மக்கள்  மாற்று  சமூகத்திடமும் மாற்று இனத்தவரிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்படுவார் என இதன்போது தெரிவித்தார்.

சம்பந்தனின்... தமிழ் தேசியக் கூட்டமைப்பு,  தானே... 
அம்பாறை மாவட்டத்தில், பியசேனா என்னும் சிங்களவரை...
முன்பு... தனது கட்சி சார்பில், பாராளுமன்ற  உறுப்பினராக்கியது.

கிழக்கு மாகாண முதல் அமைச்சராராக... ஒரு தமிழர் வர வாய்ப்பிருந்தும்,
அதனை... முஸ்லீம்களுக்கு, விட்டுக்  கொடுத்ததும், இதே... சம்பந்தன் தானே...

ஏற்கெனவே.... மாற்று சமூகத்தினரிடம் கையேந்த வைத்த...
கூட்டமைப்பின்....    இத்துப் போன அரசியல், இனி நமக்கு.. வேண்டவே வேண்டாம்.

 

போய்... வேறு, ஏதாவது  உருப்படியான... தொழில்,  செய்யத் தெரிந்தால்...
அதனைப்  பாருங்கள். உங்களுக்கும்... அரசியலுக்கும், வெகு தூரம். 
அதனால்... தமிழருக்கு பெரும் துயரம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை சனத்துக்கு  நல்லது நடந்தால் சந்தோசம்.
ஆனால்  நல்லது ஒண்டுமே நடக்காமல்  இரண்டு பெரிய சிங்கள கட்சிகளுக்கும் வாழ்கை முழுக்க  மாத்திமாத்தி சொம்பு தூக்கிக்கொண்டு திரியேலுமே?

கடந்த வருடம் மகிந்த கும்பல் தமிழரிடம் கொள்ளையடித்த ஒருசிறு துளி பணத்தை தருகிறோம் என்று காட்டிய ஆசைக்கு இரையாகி தமிழினத்தின் நம்பிக்கைத் துரோகியான வியாழேந்திரன், நம்பிக்கைத் துரோகக் கும்பலான சம்மந்தன்-சுமந்திரன்-மாவை கும்பலுக்கே துரோகியான வியாழேந்திரன், தனது கேவலாமான மனநிலையை இந்த அறிக்கை மூலம் மீண்டுமொரு தரம் நிரூபித்துள்ளார்.  இதே கேவலமான தொழிலை வியாழேந்திரனுடன் போட்டி போட்டுக் கொண்டு செல்வம் அடைக்கலநாதனும் செய்து வருகிறார்.

தமிழின படுகொலைகாரக் கும்பல்களில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருக்கு சுயநலத் தமிழரும், பயந்தாங்கொள்ளித் தமிழரும் வாக்களித்ததை சுட்டிக்காட்டி தமிழ் மக்கள் இன பாகுபாடு பார்த்து வாக்களித்திருந்தால் சிவாஜிலிங்கத்தை ஆதரித்திருப்பார்கள், எனவே தமிழர்கள் இனவாதிகள் இல்லை என்றும் கூறும் நம்பிக்கைத்துரோகி வியாழேந்திரன், சிங்கள-பௌத்தர்கள்  இன பாகுபாடு பார்த்து சிவாஜிலிங்கத்தை ஆதரிக்கவில்லை, அதனால் சிங்கள-பௌத்தர்கள்  இனமதவெறியர்கள் என்ற உண்மையை பகிரங்கமாக கூறும் தைரியம் அற்ற கோழையாகவும்  தன்னை  அடையாளப்படுத்தியுள்ளார்.

தமிழர் இனவாதிகள் இல்லை என்று கூக்குரல் இடுவதால் சிங்களவர் மத்தியிலோ, சர்வதேசம் மத்தியிலோ எந்த நல்ல மாற்றமும் ஏற்படாது என்பது பல நூற்றாண்டு காலத்துக்கு மேற்பட்ட வரலாறு.

மாறாக பல்லின மக்கள் வாழும் நாட்டில் சிங்கள-பௌத்தர்கள் இனமதவெறியர்கள், சிங்கள-பௌத்த அரசுகள் மிலேச்ச பயங்கரவாத அரசுகளுக்குரிய அத்தனை குணாம்சங்களையும் முழுமையாக கொண்டுள்ளன என்ற பட்டவர்த்தனமான உண்மையை பகிரங்கமாக திரும்பத் திரும்ப சொல்வதன், என்று நிரூபிப்பதன் மூலமே சிங்களவர் மத்தியிலும், சர்வதேசம் மத்தியிலும் ஏதாவது நல்ல மாற்றம் நிகழ்வதற்கான அழுத்தம் ஏற்படும்.

இது போன்ற கசப்பான உண்மைகளை பகிரங்கமாக கூறும்போது மட்டும் தான் தமிழினப் படுகொலைகளை முன்னெடுக்கும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளுக்கு முண்டு கொடுக்கும் நாடுகளும் முண்டு கொடுக்க ஒன்றுக்கு இரண்டு தடவை சிந்திக்கும் சூழல் ஏற்படும்.

இது போன்ற கசப்பான உண்மைகளை பகிரங்கமாக கூறாது காலங்காலமாக சிங்களவர்கள் தமிழர் பிரச்சனைகளை சிங்களவர் விளங்கிக்கொள்ளவில்லை என்று ஒப்பாரி வைப்பதில் பிரயோசனம் இல்லை.

கடந்த தேர்தலில் சிங்கள ஊடகங்கள் நடத்திய விவாதங்களில் "கோமாளி" என பலரால் இகழப்படும் சிவாஜிலிங்கம் கலந்து கொண்டு சிங்களத்தில் நேரடியாகவே  சிங்கள அரசுகளை தாக்கியது, குறைந்தது தமிழ் அரசியல் கைதிகள் விடயத்திலாவது போர்க்குற்றவாளி கோட்டாபய தேர்தல் காலத்தில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை பற்றிய ஒரு அறிவிப்பை செய்யவும், இன்று "முன்னாள் இராணுவத்தினர் சங்கம்" தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கூறும் சூழ்நிலையை  ஏற்படுத்தியுள்ளது.  இது போன்ற மனநிலை சிங்களவர்களிடம் நீடிக்காது என்பது  வேறுவிடயம். ஆனால் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற ஒரு குரல், தங்கள் சுயநலம் கருதியெனும், மிகமோசமான சிங்கள-பௌத்த இனமதவெறியர்களிடமிருந்து  வெளிப்பட்டுள்ளது.

எனவே சிங்கள-பௌத்த கொலைகாரர்கள், சிங்கள-பௌத்த இனமதவெறியர்கள் பற்றிய உண்மைகளை வியாழேந்திரன் போன்றவர்கள், சம்மந்தன்-சுமந்திரன்-மாவை  போன்றவர்கள் மறைத்து தமிழர்களுக்கு வெள்ளையடிக்க முயலுவது அவர்களின் அடிமை மனநிலையை, அவர்களின் சுயநல இலாபங்களை குறிவைக்கும் மனநிலையை, அவர்களின் நம்பிக்கைத் துரோக மனநிலையை, அவர்களின் எட்டப்ப மனநிலையைத் தான் வெளிப்படுத்தி நிற்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எங்கடை சனத்துக்கு  நல்லது நடந்தால் சந்தோசம்.
ஆனால்  நல்லது ஒண்டுமே நடக்காமல்  இரண்டு பெரிய சிங்கள கட்சிகளுக்கும் வாழ்கை முழுக்க  மாத்திமாத்தி சொம்பு தூக்கிக்கொண்டு திரியேலுமே?

எனக்கு.... பயங்கர சந்தோசம், அண்ணை... :grin:
முஸ்லீம் ஆக்களுக்கு , இன்னும்.. அமைச்சர்  பதவி குடுக்க இல்லையாம். ⛏️

சவூதி பக்கம் இருந்து..... கண்டனம்  தெரிவிப்பாங்களோ ?
ஆனால்... உள்ளூர், முஸ்லீமும்... ஏன்  வாயை... பொத்திக்  கொண்டிருக்கின்றாங்கள்? 😎
சரியாய்.... பயந்துட்டாங்கள்  போலை, கிடக்கு.  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

எனக்கு.... பயங்கர சந்தோசம், அண்ணை... :grin:
முஸ்லீம் ஆக்களுக்கு , இன்னும்.. அமைச்சர்  பதவி குடுக்க இல்லையாம். ⛏️

சவூதி பக்கம் இருந்து..... கண்டனம்  தெரிவிப்பாங்களோ ?
ஆனால்... உள்ளூர், முஸ்லீமும்... ஏன்  வாயை... பொத்திக்  கொண்டிருக்கின்றாங்கள்? 😎
சரியாய்.... பயந்துட்டாங்கள்  போலை, கிடக்கு.  :rolleyes:

தங்களை வைச்சு தமிழருக்கு எதிராய் சாதித்தவர்கள், இனி தமிழரை தங்களுக்கு எதிராய் ஏவி விடுவார்களோ?  தாங்கள் விதைத்ததை திரும்ப அறுக்க வேண்டி வந்து விடுமோ? என்கின்ற அச்சத்தில இருக்கினம் போல. எனக்கென்னவோ இனிமேல் முஸ்லிமுக்கும், தமிழருக்கும். இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையில் மூட்டி விடல் நடக்கலாம் என சந்தேகமாய் இருக்கு. சிங்களம் தானே நேரடியாய் இல்லாமல்  தன்னைக் காப்பாற்றிக்கொண்டு மற்றய இனங்களையும் மதங்களையும்  அழித்து தான் நினைத்ததை சாதிக்கப்போகுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.