Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் அரசுக்கட்சியின் ‘சுத்துமாத்து’: புட்டுப்புட்டு வைத்தார் அருந்தவபாலன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

arunthavapalan-696x360.jpg

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் விடுத்த ஒற்றுமை அழைப்பின் பின்னாலிருந்த திருகுதாளங்களை புட்டுப்புட்டு வைத்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடக செயலாளர் க.அருந்தவபாலன்.

இதுவரை மக்கள் ஒற்றுமையாக தந்த ஆணையை பயன்படுத்தி, அரசின் சுகபோகங்களை அனுபவித்து விட்டு, மீண்டும் ஒற்றுமை பற்றி பேச என்ன அருகதையுள்ளது?, புதிய அரசியலமைப்பு வெற்றிபெறாவிட்டால் பதவியை துறப்பதாக சொன்ன சுமந்திரன் அதையெல்லாம் மறந்து விட்டாரா என கேள்வியெழுப்பியுள்ளார் அருந்தவபாலன்.

நேற்று (28) அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஒற்றுமையை கோரி நிற்கும் அவர்களிடம் நாங்கள் சில கேள்விகளை கேட்க விரும்புகிறோம்.

இதுவரை நிலவி வந்த ஒற்றுமையை குலைத்தவர்கள் யார்? தமிழ் மக்கள் ஒற்றுமையாக தந்த ஆணையை கொண்டு அந்த மக்களிற்கு இதுவரை என்ன செய்தீர்கள்? இப்பொழுது நீங்கள் ஒற்றுமை கோருவது, உங்கள் பதவிகளிற்காகவே என்பதை மக்கள் அறியவில்லையென நினைக்கிறீர்களா? தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் மட்டுமல்ல, தமிழ் அரசு கட்சிக்குள்ளேயே ஒற்றுமையை சீர்குலைத்தவர்கள் நீங்கள்.

இக்கட்டான காலகட்டத்தில் தமிழ் அரசுக்கட்சியை கட்டிக்காத்த பேராசிரியர் சிற்றம்பலத்தையே வெளியே அனுப்பியவர்கள் நீங்கள். தமிழ் தேசியத்துடன் இணைந்திருந்த மற்ற கட்சியினரையும், தமிழ் அரசு கட்சியினரையும் உங்கள் சுயலாபத்திற்காக வெளியே அனுப்பி விட்டு, இப்பொழுது ஒற்றுமை பற்றி கோசமிடுகிறீர்கள்.

தமிழ் மக்கள் ஒற்றுமையாக தந்த ஆணையை புறந்தள்ளிவிட்டு, உங்கள் சுயலாப அரசியலை செய்து, அந்த மக்களை நடுத்தெருவில் கொண்டு வந்து விட்டுவிட்டு நீங்கள் ஒற்றுமை பற்றி கோசமிடுகிறீர்கள். இது மக்களிற்கான ஒற்றுமையல்ல. உங்கள் சுயலாப அரசியலிற்கான கோசமென்பது தமிழ் மக்களிற்கு தெரியும்.

கோட்டாபய அமெரிக்க பிரஜையா, இலங்கை பிரஜையா, ஆபிரிக்க பிரஜையா என்பது தமிழ் மக்களின் பிரச்சனையில்லை. தமிழ் மக்களின் பிரச்சனை தங்களின் இருப்பை பாதுகாப்பது தொடர்பான பிரச்சனை. ஜனாதிபதி தொடர்பான பிரச்சனையை அவரை தெரிவு செய்த சிங்கள மக்கள் பார்த்துக் கொள்ளட்டும். அல்லது அரசியலமைப்பை பாதுகாக்கவும், இல்லாத ஜனநாயகத்தை கட்டிக்காக்க முயற்சித்த ஜனாதிபதி சட்டத்தரணிகள் பார்த்துக் கொள்ளட்டும்.

நாங்கள் எமது மக்களின் பிரச்சனையை பார்ப்பதே முக்கியமானது. உண்மையில் நீங்கள் ஒற்றுமையை நேசிப்பவர்கள் என்றால், உங்களை நீங்களே சுயஆய்வு செய்யுங்கள். நீங்கள் செய்த தவறுகளிற்கெல்லாம் மக்களிடம் மன்னிப்பு கோருங்கள். அரசியல் தீர்வுத்திட்டம் நிறைவேற்றாவிடில் பதவியை இராஜினாமா செய்வதாக கூறிய சுமந்திரன், முதலில் அதை செய்யட்டும்.

இதற்கு மேலாக, தமிழ் அரசுகட்சி இளைஞரணி குறிப்பிடுவதை போல, இளைஞர்களிற்கும், புதியவர்களிற்கும் வழிவிடுங்கள். புதியதொரு ஒற்றுமை இங்கு உருவாகும். தமிழ் அரசுக்கட்சியிலுள்ள நேர்மையான இளைஞர்களை கேட்டு நிற்பது என்னவென்றால், உங்கள் கட்சியில் உள்ள புல்லுருவிகளையும், ஆட்சியாளர்களிற்கு விலை போனவர்களையும், மக்களை ஏமாற்றியவர்களையும் முதலில் உங்கள் கட்சியிலிருந்து விரட்டியடியுங்கள். அப்படி செய்தீர்கள் என்றால், ஒற்றுமை தானாகவே வரும்.

ஆனால், அப்படியொன்று நடக்காதென்பதாலேயே தமிழ் மக்கள் மாற்று அணியை நாடி நிற்கிறார்கள். இந்த மாற்று அணி காலத்தின் கட்டாயமாக, தமிழர்களின் உரிமைக்காகவும், வாழ்விற்காகவும் முக்கியமான அணி. அதனால்தான் புத்திஜீவிகள் உள்ளிட்ட அனைவரையும் இந்த அணியை நாடி நிற்கிறார்கள்.

தமிழ் அரசுகடக்சி உறுப்பினர்களிற்கும், இளைஞர்களிற்கும் அன்பான அழைப்பை விடுக்கிறேன். நீங்கள் எங்களுடன் வந்து இணைந்து கொள்ளுங்கள்.உண்மையான, நேர்மையான, மக்களிற்கான அரசியலைநாங்கள் ஏற்படுத்திக் கொள்வோம். இதுவே உண்மையான ஒற்றுமையை நேசிக்கும் அனைவருக்கும் விடுக்கும் கோரிக்கையாகும்.

தமிழ் மக்களின் ஆணை எமக்கே தரப்பட்டுள்ளது, ஜனாதிபதி எம்மடனேயே பேச வேண்டுமென சுமந்திரன் அண்மையில் கூறியிருந்தார். நிச்சயமாக அவர்களிற்கு அந்த அருகதையில்லை. நாங்கள் எதிர்காலத்தை கருதி சரியான முடிவுகளை எடுக்காமல், தவறான முடிவுகளை எடுத்து விட்டு, இப்பொழுது அவர்களுடன் பேச கோரிக்கை விடுவது கவலைக்குரிய விடயம்.

இதுவரை உங்களிற்கு தந்த ஆணையை சரியாக பயன்படுத்தாமல், விலைபோய்விட்டு, இப்பொழுது மீண்டும் புதிய ஆட்சியிடம் கோரிக்கை விடுப்பது நகைச்சுவையானது.

உண்மையில் புதிய ஆட்சியாளர்கள், தமிழர் பிரச்சனையை பேச வேண்டியது, எதிர்காலத்தில் தமிழர்களால் தெரிவு செய்யப்படும் தலைவர்களுடனேயே. அதுதான் நியாயமானது என்றார்.

http://www.pagetamil.com/90506/

On 11/29/2019 at 1:07 PM, பெருமாள் said:

உங்கள் கட்சியில் உள்ள புல்லுருவிகளையும், ஆட்சியாளர்களிற்கு விலை போனவர்களையும், மக்களை ஏமாற்றியவர்களையும் முதலில் உங்கள் கட்சியிலிருந்து விரட்டியடியுங்கள். அப்படி செய்தீர்கள் என்றால், ஒற்றுமை தானாகவே வரும்.

அருந்தவபாலன் நல்லாத்தான் ஜோக் அடிக்கிறார்!

அதெப்படி அதே புல்லுருவிகளிடமும், ஆட்சியாளர்களிடமும், விலை போனவர்களிடமும், மக்களை ஏமாற்றியவர்களிடமும் தங்களைத் தாங்களே விரட்டியடிக்க கூறமுடியும்?

பல்கலை மாணவர் ஏற்படுத்திகொண்டுவந்த ஒற்றுமையை அறிக்கைகள் விட்டு குழப்பியடித்த தங்கள் பங்கை அருந்தவபாலன் கூறட்டும்!

இவரே ஒரு சுத்துமாத்து . அதுக்குள்ளே மதத்தவர்களை குற்றம் பிடிக்கிறார். அரசியல் சாக்கடையில் அநேகமாக எல்லோருமே சுத்துமாத்துதான். சரி , நீங்கள் எதை பெற்று தரப்போகிறீர்கள்? ஈழமா , சம்ஸடியா, அல்லது இதுக்கும் மேலயா? ஆசை யாரைத்தான் விட்டுது. 

1 hour ago, Vankalayan said:

இவரே ஒரு சுத்துமாத்து . அதுக்குள்ளே மதத்தவர்களை குற்றம் பிடிக்கிறார். அரசியல் சாக்கடையில் அநேகமாக எல்லோருமே சுத்துமாத்துதான். சரி , நீங்கள் எதை பெற்று தரப்போகிறீர்கள்? ஈழமா , சம்ஸடியா, அல்லது இதுக்கும் மேலயா? ஆசை யாரைத்தான் விட்டுது. 

எல்லாம் சம்பந்தன், சுமந்திரன் போன்ற ஆக்களிட்டை சுத்துமாத்து பழகி இருக்கீனம்.

ஆனா, அவையளை எட்டிப்பிடிக்க இன்னும் இவரால் முடியவில்லை. 

18 hours ago, Gowin said:

எல்லாம் சம்பந்தன், சுமந்திரன் போன்ற ஆக்களிட்டை சுத்துமாத்து பழகி இருக்கீனம்.

ஆனா, அவையளை எட்டிப்பிடிக்க இன்னும் இவரால் முடியவில்லை. 

சும்மா சம்மந்தன் சுமந்திரன் எண்டு கதை விடாம , இவர்கள் பாராளுமன்றம் போனால் தமிழனுக்கு ஈழம் , சமஷடி , சுயாட்சி , டக்கு சொல்லுவாரே எதோ ஒரு ஆட்சி என்று , இதில் எதாவது ஒன்று கிடைக்குமா எண்டு கேட்டு சொல்லுங்கோ அண்ணே. 

On 12/3/2019 at 10:53 AM, Vankalayan said:

சும்மா சம்மந்தன் சுமந்திரன் எண்டு கதை விடாம , இவர்கள் பாராளுமன்றம் போனால் தமிழனுக்கு ஈழம் , சமஷடி , சுயாட்சி , டக்கு சொல்லுவாரே எதோ ஒரு ஆட்சி என்று , இதில் எதாவது ஒன்று கிடைக்குமா எண்டு கேட்டு சொல்லுங்கோ அண்ணே. 

சம்பந்தன், சுமந்திரன் போன்ற ஆக்களிட்டை சுத்துமாத்து பழகி இருக்கீனம். பிறகென்ன அடுத்த தீவாளிக்கும்,  அடுத்த கிறிஸ்மஸ்சுக்கும், அடுத்த தைப்பொங்கலுக்கும், அடுத்த வருஷப்பிறப்புக்கும் தமிழனுக்கு ஈழம் , சமஷடி , சுயாட்சி, எல்லாம் கிடைக்கும் என்றதை சின்னப்பிள்ளையும் புரிஞ்சுகொள்ளும்.

அந்த டக்குட லெவெளைவிட படுகீழதான் தமிழ் தேசியம் பேசும் சம்பந்தன், சுமந்திரன் நீக்கீனம்.

14 hours ago, Gowin said:

சம்பந்தன், சுமந்திரன் போன்ற ஆக்களிட்டை சுத்துமாத்து பழகி இருக்கீனம். பிறகென்ன அடுத்த தீவாளிக்கும்,  அடுத்த கிறிஸ்மஸ்சுக்கும், அடுத்த தைப்பொங்கலுக்கும், அடுத்த வருஷப்பிறப்புக்கும் தமிழனுக்கு ஈழம் , சமஷடி , சுயாட்சி, எல்லாம் கிடைக்கும் என்றதை சின்னப்பிள்ளையும் புரிஞ்சுகொள்ளும்.

அந்த டக்குட லெவெளைவிட படுகீழதான் தமிழ் தேசியம் பேசும் சம்பந்தன், சுமந்திரன் நீக்கீனம்.

அப்போ டக்குவோட மத்தியில் கூடடட்ச்சி மாநிலத்தில் சுயட்ச்சி சரி வருமென்று சொல்லுறியள். சரி பார்ப்பம். இதுவாவது சரி வருதா எண்டு. இப்போ டக்குவோட ஆட்சிதானே. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.