Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆட்சி மாறியவுடன் நீதிமன்ற உத்தரவையும் மீறி நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் 3.5 அடி உயரமான புதிய புத்தர் சிலை

Featured Replies

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள விகாரைக்கு புதிதாக பிரதிஷ்டை செய்ய 3.5 அடி உயரமான புதிய புத்தர் சிலை ஒன்று கொழும்பிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. நீதி மன்ற உத்தரவை மீறி ஆட்சி மாற்றம் இடம் பெற்ற சில நாட்களிலேயே இச் சம்பவம் இடம் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பௌத்த விகாரையில் எந்தவித கட்டுமான பணிகளும் மாற்றங்களை செய்ய முடியாத அளவுக்கு நீதிமன்றத்தின் தடை உத்தரவு இருக்கின்றபோதும்  நேற்று புதிதாக 3.5  அடி உயரமான குறித்த மூலஸ்தானத்துக்கான புத்தர் சிலையை  கொண்டுவந்து விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது.

image_f03906b3a0.jpg

இந்நிலையில் குருகந்த ரஜமகாவிகாரை, சூரியபுர சமநலபாலம ரஜமகா விகாரை விகாராதிபதி திருகோணமலை பிரதான சங்க நாயக்கர் கந்தளாய் சோமபுர வித்தி யாலயத்தின் முதல்வர் வணக்கத்துக்குரிய மிகுந்துபுரரத்னதேவ கீர்த்தி அவர்களது தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்று இருந்தன.

நீதிமன்றம் இரண்டு தரப்பினரையும் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கிய போதும் உரிய அனுமதி இல்லாமல் எந்த விதமான கட்டுமானங்களையும் மாற்றங்களையும் செய்யக்கூடாது என உத்தரவிட்டது ஏற்கனவே இருந்த கட்டுமான நிலைமைகள் வீடியோ பதிவு செய்யப்பட்ட நிலையில் நேற்று இவ்வாறாக மூலஸ்தானத் திற்கு புத்தர் சிலை உட்பட பல்வேறு தளபாடங்கள் ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.

கடந்த 16ஆம் திகதி நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்று ஆட்சிமாற்றம் இடம்பெற்ற நிலைமையில் மன்றம் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த விகாரைக்கு புத்தர் சிலை கொண்டுவரப்பட்டது என்பது பல்வேறு சிக்கல்களை உருவாக்கலாம் என பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.    

 

http://valampurii.lk/valampurii/content.php?id=20011&ctype=news

  • கருத்துக்கள உறவுகள்

F556-CAE7-F4-EE-485-C-B5-B0-315-C21-CB1-

  • தொடங்கியவர்
செம்மலையில் புத்தர் சிலை புனிதவாய் மலராத சம்பந்தர்
 
முல்லைத்தீவு செம்மலை நீராவியடியில் நேற்றுமுன்தினம் நவம்பர் 30ஆம் திகதி புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்துக்குச் சொந்தமான இடத்தில், வலுக் கட்டாயமாக புத்தர் சிலையை பெளத்த தேரர்கள் ஒன்றுகூடிப் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
 
பழைய அரசாங்கத்தில் எடுத்த முயற்சி புதிய அரசாங்கத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
செம்மலை நீராவியடி விவகாரம் தொடர்பில் ஏலவே நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் இருக்கின்றபோதிலும் அதனையும் மீறி, அங்கு புத்தர் சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது.
 
இதற்கு முன்னதாக கீர்த்தி தேரரின் பூதவுடலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளா கத்தில் வைத்து தீமூட்டியதால் இந்து மக்கள் மனத்தால் நொந்து போயினர்.
 
நீதிமன்றத்தால் குறித்துரைக்கப்பட்ட இடத்தில் தேரரைத் தகனம் செய்யாமல், பிள்ளை யார் ஆலய வளாகத்தில் வைத்து நாட்டாமைத் தனத்துடன் தேரரின் உடலை எரியூட்டியதன் மூலம் சைவ ஆகம விதிமுறைகளுக்கு மிகப் பெரும் பங்கம் இழைக்கப்பட்டது.
 
எனினும் இதுபற்றி எவரும் நடவடிக்கை எடுத்ததாக இல்லை.
 
பிள்ளையார் ஆலய வளாகத்தில் நடந்த அதர்மத்தனத்தால் நொந்து போயுள்ள சைவ மக்களை மீண்டும் நோகடிக்கும் வகையில், நீராவியடியில் புத்தர் சிலை நிர்மாணிக்கப் பட்டுள்ளது.
 
நேற்று முன்தினம் நவம்பர் 30ஆம் திகதி நடந்த இச்சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் அவர்கள் வாய்திறந்து எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக இருக்கிறார் எனும்போது, தமிழினத்தின் தலைமை எப்படி என்பது புரிகிறது அல்லவா.
 
ஆம், சீர்காழிக்கேணியில் நீராடச் சென்ற தன் தந்தை சிவபாதவிருதையரைக் காணாத  சம்பந்தக் குழந்தை அம்மையே அப்பா என்று அழுது இறைவனிடம் முறையிட, பார்வதியும் பரமேஸ்வரனும் எருதேறி வந்து சம்பந்தக் குழந்தைக்கு ஞானப்பால் கொடுத்து ஞான சம்பந்தக் குழந்தையாக்கிவிட, அந்தக் குழந்தையால் ஆக வேண்டிய அத்தனையும் ஆனதாக சேக்கிழார் செப்புவார்.
 
ஆக, ஆபத்து வரும் வேளைஅழுதேனும் முறையிட வேண்டும். அப்போதுதான் இறை வன் கருணை காட்டுவான். உலகம் எட்டிப் பார்க்கும். சம்பந்தர் அழுவது ஏன் என்று தட் டிக் கேட்கும்.
 
இதைவிடுத்து கதைக்க வேண்டிய நேரத்தில் கதைக்காமல் விட்டால்; கண்டிக்க வேண் டிய இடத்தில் கண்டிக்காமல் விட்டால், கதிர்காமத்தை இழந்தது போல மெல்ல மெல்ல எல்லாவற்றையும் இழந்து இலங்கையில் இந்து மதம் இருந்ததா? என்று பிறர் கேட்குமள வுக்கு நிலைமை வரும்.
 
ஆகையால் நடக்கின்ற அதர்மம் பற்றி உரக்கக் கூறுங்கள். இல்லையேல் எல்லாம் அஸ்தமனமாகிவிடும்.
 
  • கருத்துக்கள உறவுகள்
On 12/1/2019 at 2:06 AM, ampanai said:

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள விகாரைக்கு புதிதாக பிரதிஷ்டை செய்ய 3.5 அடி உயரமான புதிய புத்தர் சிலை ஒன்று கொழும்பிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. நீதி மன்ற உத்தரவை மீறி ஆட்சி மாற்றம் இடம் பெற்ற சில நாட்களிலேயே இச் சம்பவம் இடம் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெரும்பான்மை மக்களின் விருப்பத்துக்கு மாறாக எதுவும் செய்ய முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

உலக நாடுகளுக்கு.. சீனப் பயம் உள்ளவரை.. இந்த அடாத்துக்களை சிங்களம் மிக சுலபமாக முன்னெடுக்கும். 

மகிந்த - கோத்தா ஆட்சி என்பது சர்வாதிகரமானது என்பது தெரிந்தது. அங்கு.. நீதித்துறை என்பது முழுமையாக செத்ததாகவே இருக்கும். ரணில் ஆட்சியில் குற்றுயிராய்க் கிடந்தவை எல்லாம் எனி செத்தவையாகும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.