Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணா ஒட்டுக் குழுவின் 5 சடலங்களில் ஒன்று இனம் காணப்பட்டது.

Featured Replies

கருணா ஒட்டுக் குழுவின் 5 சடலங்களில் ஒன்று இனம் காணப்பட்டது.

மட்டக்களப்பு கிரானில் கடந்த புதன்கிழமை மீட்கப்பட்ட ஒட்டுக் குழுவினரின் 5 சடலங்களில் ஒன்று கல்லாறைச் சேர்ந்த 31 வயதுடைய சிந்துஜன் ஒன்றழைக்கப்படும் ஜோன்சன் ஜெயகாந்தன் என்பவரது என அவரது அனைவி அடையாளம் காட்டியுள்ளார்.

கருணா ஒட்டுக் குழுவிற்குள் ஏற்பட்டுள்ள பிளவின் எதிரொலியாக பிள்ளையான் அணிக்கு ஆதரவாக இருந்த சிந்துஜன் உட்பட 5 பேர் கருணா அணியினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஏறாவூர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள எஞ்சிய 4 சடலங்களில் ஒன்று பிள்ளையான் அணியைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவரது என நம்பப்படுகின்றது.

பெரியகல்லாறிலுள்ள தனது வீட்டிலிருந்து களுவாஞ்சிக்குடியிலுள்ள கருணா ஒட்டுக் குழுவின் முகாமிற்குச் செல்வதாக கர்ப்பிணியான தனது மனைவியிடம் கூறிச்சென்ற ஏற்கனவே ஒரு பிள்ளையின் தந்தையான சிந்துஜன், கருணா அணி முக்கியஸ்தரான இனியபாரதி குழுவினரால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

அன்றைய தினம் கருணா அணியுடன் முரண்பட்டு பிரிந்து சென்றுள்ள பிள்ளையான் அணியின் மற்றொரு முக்கியஸ்தரான சின்னத்தம்பியும் காணாமல்ப் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

150 உறுப்பினர்களுடன் பிரிந்து சென்று திருகோணமலையில் சிறீலங்காப் படையினரின் உதவியுடன் தங்கியுள்ள பிள்ளையான், மட்டக்களப்பில் படுகொலைகளுக்கும், கருணா அணியின் செயற்பாடுகளுக்கும் பொறுப்பாக இருந்தவர்.

தற்பொழுது கருணா அணியினரால் படுகொலை செய்யப்பட்டுள்ள சிந்துஜன், பிரிந்து சென்றுள்ள பிள்ளையானின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவு

துரோகிகள்

ஆரம்பத்திலிருந்தே கருணா குழுவில் பல குழப்பங்கள் தோன்றின. இப்போது ஆட்டம் சுடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

எல்லாம் நன்மைக்கே.

அரசாங்கத்தின் இத்தனை வசதிகள் இருந்தும் கருணா ஒரு சிறிய அளவிலான குழுவைக்கூட நிர்வாகிக்க முடியாதது அவரது இயலாமையைக் காட்டுகின்றது. கருணா தனிமைப்படுத்தப்பட்டு கேவலப்பட்டு அழியப்போவது நிச்சயம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணா என்கின்ற முரளிதரனுக்கு இதுதான் சரியான தண்டனை! துரோகிகளுக்குள்ளேயே துரோகிகளாய்!!....தொடரப்போகின்றது இவர்கள் நிலை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

OK ஆட்டத்தின் முதல் பாதி இப்போது நடைபெறுகிறது.

ஒருதரப்பில் 5 விக்கெட் விழுந்திட்டுது எத்தினை ரண்ஸ் (பொதுமக்களை கடத்தி சுருட்டிய பணம்) எண்டது இன்னும் தெரியாது.

தவிரவும் இந்த ஆட்டம் கொஞ்சம் வித்தியாசமாக நடக்கலாம். அதாவது விக்கெட்டுகளின் எண்ணிக்கை 10 ஐவிட பலமடங்கு இருக்கலாம். அதேபோல் ரண்ஸ் மில்லியன் இன்னும் பில்லியன் கணக்கிலும் எடுக்கலாம். என்ன நடக்கிறது கொஞ்சம் வேடிக்கை பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்த மிருகங்களுக்கும் மனைவி குழந்தைகள் உண்டாமே? இதுகளுக்கு வாழ்க்கைப்பட்டு வாழும் பாவப் பட்ட ஜீவன்களும் இந்த உலகில் இருக்கின்றனவா?

இந்த சந்தாப்பத்தை பயன் படத்தி புலிகள் தமது கைவரிசையை காட்ட கூடும்..

அதற்காக அவர்கள் இவர்களுக்குள்ளேயே ஊடுருவி இருக்கலாம்

இவ்வாறான பிளவுகள் இவ்வாறான குழுக்களிற்கள் வரும்போது அந்த நேரத்தை

தமக்கு சாதகமாக பணன் படத்துவது போரியல் உத்தி...

அவ்வாறான நிகழ்வுகள் இனி வரும் காலங்களில் ஏற்ப்படலாம்...

தற்போது புலிகள் இவர்களது பிரபலங்களின் முக்கிய ஆவன குறிப்பகளை

பெற்றிருப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர். அவ்வாறு நடை பெறுவதற்க சாத்தியங்கள் உள்ளன..

எது எப்படியோ இத நமக்கு நல்லது..நாய்களும் நாய்களும் கடி படுகின்றன...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னுமொரு செய்தி

கருணா குழுவின் பேச்சாளர் அசாத் மௌலானா வெளிநாட்டுக்குத் தப்பியோட்டம்

சிறீலங்கா துணை இராணுவக் குழுவான கருணா குழுவில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள உட்பூசல் காரணமாக கருணா, பிள்ளையான் முரண்பாடு மிகவும் உக்கிரமடைந்துள்ள நிலையில் கருணா அணியைச் சேர்ந்த கருணா குழுவின் பேச்சாளர் அசாத் மௌலானா உட்பட மேலும் சிலர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-- நன்றி: பதிவு

ம் நடக்கட்டும். ஆட்டம் கொஞ்சம் விறுவிறுப்பா போனாலும் முதல் 5 இற்குப்பிறகு கனனேரமா விக்கற் ஒண்டும் விழேல்லையே?

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் இந்தியா! இனி அதுக்கு ஒரு மேலதிக வேலை இருக்கு. இப்பிடி சிதறிப் போற தற்குறிகளைத் தேடிப் பொறுக்கி ஆந்திரா கர்நாடகா போல எங்கேயாவது ஒளித்து வைக்க வேணும். பிறகு நல்ல சமயம் பார்த்து அதுகளைப் பிளேனேத்தி இங்க கொண்டு வந்து இறக்கி விட வேணும். தங்கட தண்ணிப் பிரச்சினையைப் பார்ப்பினமோ இல்லையோ இதுகளை நல்லாச் செய்வினம்! :D

கருணா ஒட்டுக்கும்பலின் பேச்சாளர் "அசாத் மௌலானா" எஸ்கேப்பா? மவுத்தா?

கருணா ஒட்டுக்கும்பலின் பிரதம பேச்சாளராக செயற்பட்டு வந்த அசாத் மௌலான பெருமளவு பணத்துடன் நாட்டை விட்டுத் தப்பியோடி இருப்பதாக கொழும்பு ஊடக வட்டாரங்கள் இன்று செய்தி வெளியிட்டிருக்கின்றன. ஆனால் நெருப்புக்குக் கிடைத்த தகவலொன்றின்படி அசாத் மௌலானா, கருணா ஒட்டுக்கும்பலினால் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.

Web : neruppu.org

Pillayan vows to fight both Karuna and Prabha

New breakaway group claims to have more cadres; Karuna likely to flee

By Sunil Jayasiri

Former Karuna associate Pillayan yesterday vowed to continue his fight against the LTTE while ruling out reconciliation with Karuna Amman from whose faction he broke away recently following a bitter feud.

“We will continue to fight against the LTTE cadres but we will definitely not patch up with Karuna,” a spokesman for the Pillayan group told the Daily Mirror.

He said the Karuna-breakaway group led by Pillayan and including senior military and political leaders and some 350 cadres was based in Trincomalee.

“Most of the former Karuna faction’s senior military and political wing leaders are with us. Karuna is only left with a handful of seniors,” the spokesman said.

He said military and political leaders like Jeyam, Markan, Thooyavan – the former spokesman for the Karuna faction - Eelamaran, Pradeep Master - former eastern political leader and Suranga, have joined forces with the new splinter group.

The Pillayan spokesman said leaders like Sinnathambi, Bharathee, Thileepan and Jeevendran were among those still loyal to Karuna.

“We have the full control of the military wing of the Karuna faction. We do not want to link with the LTTE and will continue our struggle to rescue innocent Tamil-speaking people from Prabhakaran’s grip,” the spokesman claimed.

He revealed that though the initial arrangement was for Karuna to be the overall leader of the TMVP (Tamil Makkal Viduthalai Pulikal) – the political wing of the Karuna faction with Pillayan the party’s deputy leader in charge of its military wing.

“But it did not work out as Karuna did not like that arrangement,” the spokesman said. Meanwhile, it is learnt that Karuna was to leave the country with some of his close associates because of split in the faction.

A few weeks, ago, Karuna’s deputy leader Pillayan parted ways with Karuna over the alleged misuse of TMVP funds by Karuna Amman. Later two close associates of Pillayan were killed by Karuna.

http://www.dailymirror.lk/2007/05/12/front/1.asp

நா..நா..நாத்தம்............ பிடிக்குதுகள்!! உந்த எச்சிலைக்கழிவுகள்!!

  • கருத்துக்கள உறவுகள்

இருந்தாலும் இந்த ஒட்டுக்குழுக்களில் அறிந்தும், அறியாமலும், பலவந்தமாகவும்...இப்படிப்பல வழிகளிலும் இணைந்தவர்கள் இருக்கின்றார்கள்.

உண்மையில் இந்தச் சம்பவங்களை நாம் நகைப்பதிற்கோ அல்லது மகிழ்வதிற்குரியதோ அல்ல, இவையும் பரிதாபப்பட வேண்டியவையாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடிபடுறதோடை யார் யார் எத்தனை கொலைகள் செய்தவை? யாரா கொலை செய்தவை? போன்ற விடயங்களையும் இருதரப்பும் மாறி மாறி அண்டிவைத்தால் உலகம் தெரிந்து கொள்ளும்..

பிரபாகரன் மற்றும் கருணாவுக்கு எதிராகப் போராடுவோம் பிள்ளையான் சூளுரைப்பு

துணை இராணுவக் குழுவான கருணா அணியில் ஏற்பட்டுள்ள உள்ளக முரண்பாடுகளால் கருணா அணியிலிருந்து பிள்ளையான் தலைமையிலான மூத்த ஆயுததாரிகள் உட்பட 350 பேர் திருகோணமலைக்குத் பிரிந்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து பிள்ளையான் அணியின் பேச்சாளர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில்....

பிரபாகரனுக்கு எதிராகவும் கருணாவுக்கு எதிராகவும் போராடப் போகின்றோம். எந்தவொரு காலகட்டத்திலும் கருணாவுடன் சேர்ந்து இயங்கமாட்டோம் என பிள்ளையான் அணியின் பேச்சாளர் சூளுரைத்துள்ளார்.

பிள்ளையான் மற்றும் முக்கிய நபர்கள் உட்பட 350 பேர் திருமலையில் முகாம் அமைந்துள்ளதாகவும் பிள்ளையான் அணியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கருணாவினுடைய இராணுவ மற்றும் அரசியல் செயற்பாடுகளில் ஈபட்ட முக்கிய நபர்கள் பிள்ளையான் அணியுடன் இணைந்திருப்பதாகவும் ஒருசிலரே கருணாவுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயம்இ மார்க்கன்இ தூயவன்இ ஈழமாறன்இபிரதீப் மாஸ்ரர்இ சுறாங்கன் ஆகியோர் பிரிந்து சென்ற பிள்ளையான் அணியுடன் இணைந்துள்ளனர்.

சின்னத்தம்பிஇ இனிய பாரதிஇ திலீபன்இ ஜீவேந்திரன்இ ஆகியோர் கருணாவுடன் இருப்பதாகவும் பிள்ளையான் அணியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தங்களிடம் கருணாவுடனிருந்து இராணுவ அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட முக்கிய உறுப்பினர்கள் தங்கள் வசம் இருப்பதால் இராணுவ அரசியல் பிரிவுகள் தங்களின் முழுமையான கட்டுப்பாட்டினுள் இருப்பதாகவும் பேச்சாளர் தெரிவித்தார்.

வன்னியைத் தலைமையாகக் கொண்ட பிரபாகரனின் பிடியில் உள்ள மக்களைத் தாங்கள் விடுவிப்போம் எனவும் பிள்ளையான் அணியின் பேச்சாளர் தெரிவித்தார்.

கருணா குழுவில் இருந்தபோது அரசியல் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்தவர் தற்பொழுது பிள்ளையான் அணியின் இராணுவப் பிரிவுக்கு இராண்டாவது தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிள்ளையானுடைய கட்டமைப்பு கருணா குழுவில் இருந்ததுபோல் இருக்காது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-www.pathivu.com-

அடேங்கப்பா முதல்ல கருநாய் இப்ப புள்ளயான் ஒட்டிக்கொண்டிருப்பவனுக்கு இத்தனை கெறுத்தனமென்றால் சொந்தப் பலத்தில் நிற்பவர்களின் சக்தியைச் சிந்தித்துப் பார்க்கவில்லையா? அடி எங்கே வீழ்ந்தாலும் காலைத் தூக்கிக் கொண்டு ஓடும் நாய்களுக்கு யார் எழுதிக்கொடுத்தது இந்த வீரவசனம்?

மேலோங்கும் பிள்ளையானின் கரங்கள்: நாட்டை விட்டுத் தப்ப கருணா திட்டம்?

பிள்ளையானுடன் ஏற்பட்ட உட்கட்சி மோதலைத் தொடர்ந்து பலவீனமடைந்துள்ள கருணாவும் அவருக்கு நெருக்கமான சிலரும் தமது உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்குத் திட்டமிட்டிருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமது யுத்தம் தொடரும் அதேவேளையில், கருணாவுடன் எதிர்காலத்தில் சமரசரத்துக்கான சாத்தியக்கூறுகள் இல்லையென பிள்ளையான் அறிவித்திருக்கும் நிலையிலேயே கருணா தனக்கு நம்பிக்கையான சகாக்கள் சிலருடன் நாட்டைவிட்டு வெளியேறுவதற்குத் திட்டமிடடுவருவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இது கருணா குழுவுக்குள் ஏற்பட்ட உட்கட்சி மோதலில் பிள்ளையானின் கைகள் மேலோங்கியிருப்பதைப் புலப்படுத்துவதாக இருக்கின்றது. கருணா குழுவின் இராணுவப் பொறுப்பாளராகச் செயற்பட்ட பிள்ளையான், அக்குழுவுக்குள் எற்பட்ட உள்மோதலையடுத்து பெரும்பாலானவர்களைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

"கருணாவுடன் நாம் மீண்டும் இணையந்து செயற்படும் சாத்தியக்கூறுகள் இல்லை" எனத் தெரிவித்திருக்கும் பிள்ளையான் குழுவின் பேச்சாளர் ஒருவர், "கருணா குழுவில் இருந்த பெரும்பாலான உறுப்பினர்கள் எம்முடன் உள்ளனர். கருணாவுடன் அவருக்கு விசுவாசமான ஒரு சிலர் மட்டும்தான் இருக்கின்றனர். கருணா குழுவின் இராணுவத்தரப்பு எமது முழுக்கட்டுப்பாட்டில் உள்ளது. எமது குழுவின் தலைவர் கருணா என்ற நிலை தற்போது மாறியுள்ளது" எனவும் தெரிவித்திருக்கின்றார்.

கருணா குழுவிலிருந்த சிரேஷ்ட இராணுவ மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் பிள்ளையானுடனேயே இருப்பதாகவும் தெரிவித்த அவர், திருமலையில் உள்ள தமது முகாமில் 350 போராளிகள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

கருணா குழுவில் முக்கிய இராணுவ மற்றும் அரசியல் தலைவர்களாகவிருந்த ஜெயம், மாக்கன், தூயவன், ஈழமாறன், பிரதிப் மாஸ்ரர், சுரங்கா ஆகியோர் பிள்ளையான் தரப்பில் இணைந்து செயற்படும் அதேவேளையில், சின்னத்தம்பி, பாரதி, திலீபன், ஜீவேந்திரன் ஆகியோர் தொடர்ந்தும் கருணாவுடனேயே இருந்து செயற்படுகின்றார்கள். அத்துடன், பிள்ளையான் தரப்பு திருமலையில் உள்ள இராணுவக் கட்டுப்பாட்டு பகுதியிலும், கருணா தரப்பு மட்டக்களப்பில் உள்ள இராணுவக்கட்டுப்பாட்டு பகுதியிலும் இராணுவத்தினரின் பாதுகாப்புடன் நிலைகொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தமது குழுவுக்குள் தோன்றியுள்ள மோதல்களைத் தொடாந்து கருணா தனக்கு நெருக்கமான சிலருடன் நாட்டை விட்டு தப்பியோட முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருணா குழுவின் பிரதித் தலைவராகவும், இராணுவப் பொறுப்பாளராகவும் இருந்த பிள்ளையான் குழுவின் பெரும்பாலானவர்களை அவர்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதால் தன்னுடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலிருப்பதாக கருணா கருதுவதாகத் தெரிகின்றது.

இருந்த போதிலும் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் கருணாவை முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்திய படைத்தரப்பினர் கருணா நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கு அனுமதிப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

இரு தரப்பினருக்குமிடையில் சமரசத்தை ஏற்படுத்துவதற்காக படையினர் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், உட்கட்சி மோதல்களால் இதுவரையில் கருணா குழுவின் முக்கியஸ்தர்கள் சிலர் உட்பட சுமார் எட்டுப் பேர் இருதரப்பிலும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

-Puthinam-

வெளிநாடுகளைப் பகைத்துக் கொண்டு எந்தத் தீர்வையும் காண முடியாது நிலைத்து நிற்காது என்கிறார் ரணில்

இந்தியா உட்பட வெளிநாடுகளைப் பகைத் துக்கொண்டு எந்தத் தீர்வையும் இலங்கையில் நடைமுறைப்படுத்த முடி யாது. இது அரசுக்குப் புரியவில்லை. இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று மாலை கம்பளை நகரில் நடைபெற்ற கட்சியின் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வெளிநாடுகளைப் பகைத்துக்கொண்டு எந்தத் தீர்வையும் இலங்கையில் கொண்டுவர முடியாது. அவ்வாறு காணப்படும் எந்தத் தீர்வும் நிலையானதாகவும் இருக்காது.

அரசு பலவீனப்பட்டும் விடுதலைப் புலிகள் பலம் பெற்றும் வருகின்ற நிலையில் மீண்டும் பேச்சுக்குச் செல்வதில் பயன் ஏற்படப்போவதில்லை.

கருணா குழுவும் தமிழீழ விடுதலைப் புலிகளும் மீண்டும் ஒன்றுபடும் நிலை ஏற்பட்டு வருகின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்

http://www.tamilwin.com/

பாவம் இந்த ரணில் பிள்ளை. அரசியல் சாணக்கியன் என்று தன்னைக் கருதிக்கொண்டு ஆடிய நாடகங்கள் எல்லாம் புஷ்வாணமாகி விட்டது. இப்போ மீண்டும் ஆரூடம் கூறுகிறார். கருணா குழுவே ரணில் பிள்ளைக்கு எமனாகப் பாவிக்கப்படப் போகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவிற்கு இப்போது ஒரு விடயம் புரிந்திருக்கும். தான் எப்படித் தமிழீழப் போராட்டத்தைக் காலை வாரினாரோ, அப்படியே பிள்ளையானும் வாரிவிடும் போது, அன்று எமக்கு ஏற்பட்ட வலியை இன்று புரிந்து கொண்டிருப்பான். தேசியத் தலைவரின் திறமையும், தளராத கொள்கையும், அவர் மீது மக்கள் கொண்டிருக்கின்ற உண்மையான அன்பும், மதிப்பும் என்றைக்குமே எத்தடை வந்தாலும், விடுதலைப் போராட்டத்தைக் கொண்டு சென்றிடும். ஆனால் சிங்கள தரப்போடு கருணா நின்று தமிழ்மக்களுக்குச் செய்த கொலையும், கொள்ளைகளும் மக்கள் மத்தியில் என்றைக்குமே நீங்காத கறையை ஏற்படுத்திவிட்டது.

புலிகளோடு இருந்தபோது தளபதியாக மதிக்கப்பட்டவன் இன்று நட்டாற்றில் எல்லோரும் காலை வாரிவிட்டு அனாதையாக நிற்கின்றான்.

Edited by தூயவன்

கருணா குழுவை இரண்டாக உடைத்தால் தம்மால் அவர்களை நிர்வகிப்பது இலகுவானது என புலனாய்வுத்துறை நம்பியது. இதற்காக பிரித்தானியாவில் இருந்து கிருஸ்ணபிள்ளை எனப்படும் கிருஸ்ணன் வரவழைக்கப்பட்டார். இவர் முன்னாள் ஈ.என்.டி.எல்.எப். உறுப்பினராவார். - கருணா, ஈ.என்.டி.எல்.எப்புடன் உறவுகளை பேணியது கொழும்புக்கு பிடிக்கவில்லை.

சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணைக் குழுவான கருணா குழுவுக்குள் மோதல் நடந்தது ஏன் என்று கொழும்பில் இருந்து வெளிவரும் 'த மோர்னிங் லீடர்' ஆங்கில வார ஏட்டில் எழுதியுள்ளதாவது: கருணா குழுவினரை பிரித்து ஆளும் உத்தியையே இராணுவ புலனாய்வுப் பிரிவினர் முன்னர் கொண்டிருந்தனர். ஆனால் தற்போது அவர்கள் முழுமையான சமாதான முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த பிளவு மீண்டும் சேர முடியாதவாறு உருவாகியுள்ளதோ என்ற நிலை தற்போது தோன்றியுள்ளது. கருணாவுக்கு பிள்ளையான் விசுவாசமானவர், உயிருக்குப் பயந்து கருணா வெளிநாடு ஒன்றில் தங்கியிருந்த போது பிள்ளையானே தனது உதவியாளர்களுடன் உள்ளுரில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். பின்னர் தனது பாதுகாப்புக் கருதி பனாகொடவில் கருணா முகாம் அமைத்திருந்த போது பிள்ளையான பொலநறுவை மாவட்டத்தில் முகாம் அமைத்து செயற்பட்டு வந்தார். சிறிலாங்காவின் புலனாய்வுத்துறையினரின் முழுமையான கட்டுப்பாட்டில் கருணா வந்த போது புலனாய்வுத்துறையினால் அக்குழு வழிநடத்தப்பட்டது.

சிறிலங்காவின் புலனாய்வுத்துறையினர் கருணா குழுவினரை ஒரு குழுவாக இயங்க விடாது சிறு சிறு குழுக்களாக வௌ;வேறு பொறுப்பாளர்களின் கீழ் இயங்க வைத்தார்கள். அவர்களில் சின்னத்தம்பி, றியாசீலன், மங்களன், இனியபாரதி, மாக்கன் என பலர் உண்டு. இவர்களுக்கும் கருணாவுக்கும் இடையிலான தொடர்பாடல்களை பிள்ளையான் மேற்கொண்டு வந்தார். இக்குழுவுக்கான பெரும்பாலான கட்டளைகளை சிறிலங்கா புலனாய்வுத்துறையே வழங்கி வந்தது. கருணாவுக்கும் வெளிநாட்டில் இருக்கும் அவரது குடும்பத்திற்கும் தேவையான பணத்தை பிள்ளையானே வழங்கி வந்துள்ளார்.

கொட்டாவ பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் கருணாவின் நிதிப்பொறுப்பாளர் குகனேசன் கொல்லப்பட்டார். அவரே கருணாவின் பெருமளவு பணத்தை பல வழிகளில் முதலீடு செய்தவர். அது அவருக்கு மட்டுமே தெரியும். குகனேசனின் மரணத்துடன் எல்லாம் இழக்கப்பட்டு விட்டது. அதன் பின்னர் வரி அறவிடுதல், மக்களை கடத்தி கப்பம் வாங்குதல் போன்ற வேலைகளை பிள்ளையானே மேற்கொண்டு வந்துள்ளார். கருணாவுக்கு தொடர்ச்சியாக பிள்ளையான் பணத்தை வழங்கி வந்துள்ளார். பிள்ளையான் இதில் பெருமளவான பணத்தை சம்பாதித்துள்ளார். கிழக்கிற்கு ஒரு இடைக்கால சபையை அமைத்து அதனை தனக்கு தர வேண்டும் என கருணா விரும்பியிருந்தார். ஆனால் அது கருணாவை வழிநடத்தும் சிறிலங்கா புலனாய்வுத்துறைக்குப் பிடிக்கவில்லை. ஆகையால் கருணா குழுவில் மோதலை உருவாக்க செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டன.

கருணா குழுவை இரண்டாக உடைத்தால் தம்மால் அவர்களை நிர்வகிப்பது இலகுவானது என புலனாய்வுத்துறை நம்பியது. இதற்காக பிரித்தானியாவில் இருந்து கிருஸ்ணபிள்ளை எனப்படும் கிருஸ்ணன் வரவழைக்கப்பட்டார். இவர் முன்னாள் ஈ.என்.டி.எல்.எஃப். உறுப்பினராவார். பின்னர் 1990 களில் சிறிலங்கா புலனாய்வுத்துறையினருடன் இணைந்து செயற்பட்டு வந்திருந்தார். அதன் பின்னர் சிறிலங்கா புலனாய்வுத்துறையின் உதவியுடன் கருணாவுடன் நெருக்கமான உறவுகளை பேணிவந்துள்ளார். கருணா, ஈ.என்.டி.எல்.எஃப்புடன் உறவுகளை பேணியது கொழும்புக்கு பிடிக்கவில்லை. எனவே புலனாய்வுத்துறையின் ஆதரவுடன் கிருஸ்ணன் இந்த உறவை முடிவுக்கு கொண்டு வந்திருந்தார். தற்போது கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் பகமையை மூட்டிவிடும் படி கிருஸ்ணன் பணிக்கப்பட்டிருந்தார். கொழும்பு வந்த கிருஸ்ணன் கருணாவின் அதிகாரத்துடன் வேலையை ஆரம்பித்தார். பிள்ளையானின் நிதிக்கையாடல்கள் குறித்து கருணாவுக்கு கூறப்பட்டது. பணப்பிரச்சினை தொடர்பாக உடனடியாக கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் தொலைபேசியில் வாக்குவாதம் மூண்டது. பிள்ளையான் வசமுள்ள பணத்தையும் கணக்குகளையும் ஒப்படைக்கும் படி கருணா உத்தரவிட்டார். பிள்ளையான் துப்பாக்கியை தூக்க ஆயத்தமானார்.

கருணாவின் விசுவாசியான மட்டக்களப்பில் இருந்த இனியபாரதியை கொல்வதற்கு தனது குழுவினரை அனுப்பினார். இனியபாரதியை பிள்ளையானிடம் இருந்து பணத்தையும், கணக்குகளையும் பெற்றுக்கொள்ளும் படி கருணா பணித்திருந்தார். தாரக்கி சிவராமை கொலை செய்ததில் சம்மந்தப்பட்டதாக கருதப்படும் பாரதி கூரையில் ஏறி பிள்ளையானின் கொலை முயற்சியில் இருந்து தப்பிக்கொண்டார். கிருஸ்ணனை கொல்வதற்கும் பிள்ளையான் ஆட்களை அனுப்பியிருந்தார். ஆனால் அதற்கு முன்னர் தனது இருப்பிடத்தில் இருந்து கிருஸ்ணன் வெளியேறிவிட்டார். பின்னர் இந்த பிளவு வெளிப்படையானது.

சின்னத்தம்பி, இனியபாரதி, றியாசீலன், ஜெயதான், சந்திவெளி மாமா, திலீபன், மகிலன் போன்றோர் கருணா பக்கமும், சிந்துஜன், சித்தா மாஸ்ரர், மாக்கன், சீலன், தூயவன், சசி போன்றோர் பிள்ளையான பக்கமும் பிரிந்தனர். கருணா குழுவின் பேச்சாளர் அசாத் மௌலானா, மங்களன் மாஸ்ரர் போன்றோர் நடுநிலையில் இருந்தனர். பிள்ளையான் தனது குழுவினருடன் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் இருந்து பொலநறுவை, திருமலை நோக்கி ஓடத்தொடங்கினார்.கருணா ஆதரவாளர்கள் மட்டக்களப்பில் இருந்தனர். கிழக்கில் இருந்த படையினர் பிள்ளையானுக்கு ஆதரவளிக்க பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ உயர்பீடம் கருணாவுக்கு ஆதரவளித்தது. இருதரப்பு சமாதானப் பேச்சுக்களும் நடத்தப்பட்டன. இரு தரப்புக்கும் தற்போது பிரதேசங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.மட்டக்கள

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.