Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொறுப்புக்கூறல் விடயத்தில் எமது அழுத்தம் தொடரும் - த.தே.கூ

Featured Replies

(ஆர்.யசி)

புதிய அரசாங்கம் வடக்கு கிழக்கில் எமது மக்களை அடையாளப்படுத்தி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்தால் அதனை நாம் ஆதரிப்போம் எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எனினும் பொறுப்புக்கூறல் விடயத்தில் எமது  அழுத்தங்களை முழுமையாக பிரயோகிப்போம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பொறுப்புக் கூறல் விடயங்களில் இலங்கையின் புதிய அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாடுகள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கையாளவுள்ள காரணிகள் குறித்து தெரிவிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார். 

sumanthiran.jpg

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலைங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலை முன்னெடுக்க வேண்டும் என்ற  பிரேரணையை நிறைவேற்றிய நாடுகளுடன் நாம் இப்போதே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம். 

இந்த நகர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நல்லதொரு முடிவை கொண்டுவரும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் இதன்போது கூறினார்.

https://www.virakesari.lk/article/70556

13 hours ago, ampanai said:

பொறுப்புக் கூறல் விடயங்களில் இலங்கையின் புதிய அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாடுகள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கையாளவுள்ள காரணிகள் குறித்து தெரிவிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார். 

அதுசரி ரணிலுக்காக வழக்காடிப்போட்டு, 2019 மார்ச் மாதத்துக்குள்ள அரசியல் தீர்வு கிடைக்காட்டில் அரசியலை விட்டு ஒதுங்குவன், கல்முனை பிரதேச சபை விடயத்தில போராடிய மக்களுக்கு வழங்கின உறுதிமொழி (அவர்களை ஏமாத்தப்போய் அடிவாங்கினது வேறு விஷயம்) எல்லாத்துக்கும் எப்ப பொறுப்பு கூறப்போறியல்?

சுமந்திரன் போன்ற ஏமாத்துப் பேர்வழிகள் ஒதுங்கும் வரை, ஒதுக்கப்படும் வரை தமிழினத்துக்கு நல்லது ஏதும் நடக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் அய்யாவாலே அழுத்தம் குடுக்க முடியுமா.....

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அழுத்தம் கொடுக்க கொடுக்க டமிழ்ஸின்ட இரத்த அழுத்தம் கூடுது......

  • கருத்துக்கள உறவுகள்

அழுத்தம் பிரயோகிப்போம் : ஜெனிவா பிரேரணை, மார்ச் கூட்டத் தொடர் குறித்து கூட்டமைப்பு தெரிவிப்பு

(ஆர்.யசி)

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலை முன்னெடுக்க வேண்டும் என்ற  பிரேரணையை நிறைவேற்றிய நாடுகளுடன் நாம் இப்போதே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம். இந்த நகர்வு  அடுத்த ஆண்டு  மார்ச் மாதத்தில் நல்லதொரு முடிவை கொண்டுவரும் என எதிர்பார்க்கின்றோம் என்று  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

sumanthiran.jpg

 பொறுப்புக்கூறல் விடயத்தில் புதிய அரசாங்கத்திற்கு எமது  அழுத்தங்களை முழுமையாக நாம் பிரயோகிப்போம் எனவும்  அவர்  கூறினார். 

பொறுப்புக் கூறல் விடயங்களில்   புதிய அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாடுகள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கையாளவுள்ள காரணிகள் குறித்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். 

 இது தொடர்பில்  அவர் மேலும்  குறிப்பிடுகையில்,

ஜெனிவா விவாகரத்தில் நாம் ஏற்கனவே சில முன்னெடுப்புகளை கையாண்டுள்ளோம். இதில் இலங்கை குறித்த விவகாரத்தில் எமக்கு அனுசரணையாக இருக்கின்ற நாடுகளின் கூட்டமொன்று உள்ளது. இந்த குழுவிற்கு இப்போது தலைமை தாங்குவது பிரித்தானியா, ஆகவே அவர்கள் தான் இப்போது இதற்கொரு வடிவம் கொடுக்க வேண்டும். அந்தவகையில்  பிரித்தானிய தூதுவரை அண்மையில் சந்தித்து இந்த விடயம் குறித்து ஒன்றரை மணித்தியாலத்துக்கும் அதிகமான நேரமாக பேசினேன். வருகின்ற சில நாட்களில் மேலும் சிலருடன்  பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. 

ஆகவே எழுந்துள்ள புதிய சூழ்நிலை சம்பந்தமாக இப்போது பிரேரணையை நிறைவேற்றிய நாடுகளுடன் நாம் இப்போதே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம். இது மார்ச் மாதத்தில் நல்லதொரு முடிவை கொண்டுவரும் என எதிர்பார்க்கிறோம்.  பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னைய  அரசாங்கம் தீர்மானங்களை எதிர்க்கவில்லை. சில ஆரோக்கியமான நகர்வுகளை அவர்கள் முன்னெடுத்தனர். 

பொறுப்புக் கூறல் விடயத்தை தவிர்த்து செயற்பட முடியாது. பொறுப்புக்கூறல் என்பது எல்லா அரசாங்கங்களுக்கும் இருக்கின்ற பொறுப்பாகும். அதனை தட்டி  கழிக்கவே முடியாது. இந்த புதிய அரசாங்கம் வடக்கு கிழக்கில் எமது மக்களை அடையாளபடுத்தி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்தால் அதனை நாம் ஆதரிப்போம். அதற்கான பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு விடயத்தில் நாம் கண்ணை மூடி செயற்படுவதாக அர்த்தமில்லை. இந்த விடயத்தில் எமது எதிர்ப்பையும் அழுத்தங்களையும் முழுமையாக நாம் பிரயோகிப்போம் என்றார்.
 

https://www.virakesari.lk/article/70604

  • தொடங்கியவர்

"ஜெனிவா விவாகரத்தில் நாம் ஏற்கனவே சில முன்னெடுப்புகளை கையாண்டுள்ளோம். இதில் இலங்கை குறித்த விவகாரத்தில் எமக்கு அனுசரணையாக இருக்கின்ற நாடுகளின் கூட்டமொன்று உள்ளது. இந்த குழுவிற்கு இப்போது தலைமை தாங்குவது பிரித்தானியா, ஆகவே அவர்கள் தான் இப்போது இதற்கொரு வடிவம் கொடுக்க வேண்டும். அந்தவகையில்  பிரித்தானிய தூதுவரை அண்மையில் சந்தித்து இந்த விடயம் குறித்து ஒன்றரை மணித்தியாலத்துக்கும் அதிகமான நேரமாக பேசினேன். வருகின்ற சில நாட்களில் மேலும் சிலருடன்  பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. "

பிரித்தானியாவை நோக்கி பாயும் தோட்டாக்களும் பணப்பெட்டிகளும் .... 

பேசுப்பொருட்களாகவும் பேரம்பேசும் பொருட்களாகவும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.