Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வைத்தியர் ஷாபி விவகாரம் ; ஆரம்பத்திலிருந்து மீள வாக்கு மூலங்களை பதிவு செய்ய சி.ஐ.டி.க்கு நீதிமன்றம் உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.எப்.எம்.பஸீர்)

சட்ட விரோத கருத் தடை விவகாரம் தொடர்பில்  குருணாகல் போதனா வைத்தியசாலையின்  பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபிக்கு  எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும்  நீதிவான் நீதிமன்ற விசாரணைகள் இன்று குருணாகல் பிரதான நீதிவான் சம்பத் ஹேவாவசம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

இதன்போது பிணையில் உள்ள வைத்தியர் ஷாபி மன்றில் ஆஜரகியிருந்தார். அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி வசந்த நவரத்ன பண்டாரவின் கீழ், சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், சைனாஸ் அஹமட், பசன் வீரசிங்க, ஹரித்த நவரத்ன பண்டார உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவொன்று ஆஜரானது.

பாதிக்கப்பட்டதாக கூறப்படும் தாய்மார்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான கல்யானத்த திரானகமகே, மொஹாம், சட்டத்தரணி சானக உள்ளிட்டோர் ஆஜராகினர்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில், அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் டப்ளியூ.திலகரத்ன, சமூக கொள்ளை விசாரணைன் அறையின் புதிய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜயசுந்தர, பொலிஸ் பரிசோதகர் மொஹான், பொலிஸ் கான்ஸ்டபிள் சில்வா ஆகியோரை கொண்ட குழுவினர் ஆஜராகினர்.

குருணாகல் போதனா வைத்தியசாலையின்  பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியராக  இருந்த சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி முஸ்லிம் என்பதாலேயே அவர துரத்தி இலக்கு வைக்கப்படுவதாக  அவரது சட்டத்தரணி ஜனாதிபதி சட்டத்தரணி நவரத்ன பண்டார இதன்போது  நீதிமன்றில் தெரிவித்தார்.  

இனவாதத்தின் அடிப்படையிலேயே குறித்த வழக்கு சோடிக்கப்ப்ட்டுள்ளதாகவும் வைத்தியர் ஷாபி தொடர்பிலான இந்த விவகாரத்தில், அரசியலமைப்பின்  12 (3) ஆவது சரத்து மீறப்பட்டுள்ளதாகவும், அதனால் சாட்சிகள் இன்றி குற்றம் சாட்டப்பட்டுள்ள தனது சேவை பெறுநரை விடுவிக்க வேண்டும் எனவும் அவர் வாதிட்டார்.

இதன் பின்னர் விடயங்கள் அனைத்தையும் ஆராய்ந்த குருணாகல் நீதிவான் சம்பத் ஹேவாவசம், சி.ஐ.டி. கோராமலேயே விஷேட உத்தரவொன்றினை சி.ஐ.டி.க்கு வழங்கினார். 

இதுவரை இவ்விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்கு மூலங்களில் சில பரஸ்பர தன்மைகள் உள்ளன. 

எனவே அவை தொடர்பில் கருத்தில் கொண்டு ஆரம்பத்தில் இருந்து மீள வாக்கு மூலங்களை பதிவு செய்யவும் என புதிய விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட்டார்.  

அதனபடி புதிய விசாரணைக் குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்க ஒரு மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டு இவ்வழக்கு எதிர்வரும் 2020 ஜனவரி 16 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.https://www.virakesari.lk/article/70948

சில வேளைகளில் இது இனவாத நோக்குடன் இந்த பிரச்சினையை உருவாக்கி இருக்கலாம். இருந்தாலும் இவருடைய அரசியல் தொடர்புகள் 450 மில்லியன் ரூபா சொத்துக்கள் சம்பந்தமாக சில பிரச்சினைகள் இருக்கின்றது. இவை பற்றி அரசு சரியான முறையில் விசாரணை நடத்தி மக்களின் சந்தேகங்களை தீர்க்க வேண்டும்.

அத்துடன் பெண்கள் சம்பந்தமான பிரச்சினையையும் வயித்திய நிபுணர்களின் உதவியுடன் சந்தேகங்களை நிவர்த்திக்க வேண்டும். இல்லாவிடடாள் இது ஒரு தொடர் பிரச்சினையாகவும் , ஷாபிக்கு இங்கு தொழில் செய்வதிலும் சிக்கலை உருவாக்கும்.

மனுஷனை சித்திரைவதை செய்றாங்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.