Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிகாந்தா தலைமையில் புதிய கட்சி உதயம்

Featured Replies

தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

01.jpeg

ஜனாதிபதித் தேர்தலில் போது ரெலோ கட்சி எடுத்த முடிவுக்கு முரணாகச் செயற்பட்டனர் என்ற சாட்டுதலில் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா உள்ளிட்ட சிலர் கட்சியிருந்து நீக்கப்பட்டனர்.

இவ்வாறு விலக்கப்பட்டவர்கள் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP) ஆரம்பித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/71104

  • தொடங்கியவர்

ரெலோவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் புதிய கட்சி ஆரம்பித்தமை எமக்கு சிறிய சூறாவளி தாக்கம் மட்டுமே ;செல்வம் 

ரெலோ கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் புதிய கட்சி ஆரம்பித்தமை எமக்கு சிறிய சூறாவளி தாக்கம் மட்டுமே எமது கட்சி இப்போதும் மிக பலமாகவே உள்ளது என ரெலோ கடசியின் தலைவரும் பாராளுமனற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள பாராளுமனற தேர்தலில் யாழ்ப்பாணத்தில் இருந்து எமது கட்சியில் இருந்து ஒருவர் பாராளுமன்றம் செல்ல தொண்டர்கள் அயராது உழைக்கவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் ரெலோ கட்சியை சேர்ந்த உறுப்பினர்களுடன் கலந்துரையாடும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு தெரிவிக்கையில்,

ரெலோ கட்சியில் இருந்து சிலர் விலகி சென்றுள்ளனர்.அவ்வாறு சென்றவர்கள் புதிய கட்சியை ஆரம்பித்தும் உள்ளனர்.

இது எமக்கு சிறிய சூறாவளி தாக்கம் மட்டுமே.எனினும் எமது கட்சி மிக பலமாகவே உள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட முன்னின்று செயற்பட்ட கட்சி எமது கட்சி மட்டுமே.

எமது கட்சியிலிருந்து எங்களை உருவாக்கிய எம்மை வழிநடத்திய முன்னாள் பொது செயலாளர் சிறிகாந்தா சிறிய விடயத்திற்காக பிரிந்துள்ளமை கவலையளிக்கின்றது. தமிழரசுக் கட்சியின் மீது கோபத்தில் அவர்களுடன் இணைந்து செயற்பட முடியாது என தனி கட்சியை ஆரம்பித்துள்ளார்.இது எமக்கு வருத்தத்தை தருகின்றது.

எங்களின் நிலைப்பாடு 5 தமிழ்த் தேசியக் கட்சிகளும் முன்னரை போல இணைந்து மிக பலமாக செயற்பட வேண்டும் என்பதே.நாம் ஒற்றுமையையே விரும்புகின்றோம்.அப்படியானால் தான் நாம் எதிர்வரும் பொது தேர்தலில் 22 ஆசனங்களை பெற முடியும்.

இதனை விடுத்து தமிழர்களிடையே புதுப் புது கட்சிகள் வரும் போது வாக்குகள் சிதறும்.இதனால் தென்னிலங்கையில் உள்ள சிங்கள கட்சிகள் ஆளுமை காலூன்றும் நிலைமை உருவாகும்.அவ்வாறு நடக்குமேயானால் தமிழர்களின் பூர்விகமாக வடக்கு கிழக்கு பிரதேசம் கேள்விக் குறியாகும்.நாம் வாழ்ந்த வரலாறுகள் மழுங்கடிக்கப்படலாம்.

இது ஏன் முன்னாள் பொதுச் செயலாளர் சிறிகாந்தாவுக்கு தெரியவில்லை.அனால் ரெலோவில் இருந்து அவர் போய் விட்டார் என்பதற்காக ரெலோ பலவீனம் அடையவில்லை.எமது கட்சி பலமாகவே உள்ளது.அவர் கட்சி தொடங்குவது அவரின் ஜனநாயக உரிமை.

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் இதுவரை காலமும் ரெலோவில் இருந்து ஒரு பாராளுமனற உறுப்பினர் கூட தெரிவாக்கவில்லை என்ற கருத்தை முறியடித்து எமது கட்சியில் இருந்து ஒருவரை அனுப்பி வைக்க வேண்டும்.அதற்காக கட்சியின் உறுப்பினர்கள்,தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாராளுமனற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு மக்கள் வாக்களிக்கவில்லை.மாறாக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்ப்பாளர் சஜித்திற்கே வாக்களித்தனர். இந்த தேர்தல் தமிழர்களுக்கு ஓர் செய்தியை கூறி சென்றிருக்கின்றது 

மைத்திரியை ஜனாதிபதியாக்கும் அதிகாரம் தமிழ் மக்களாகிய எம்மிடம் இருந்தது.இதனை அறிந்த சிங்கள மக்கள் இம்முறை எமக்கு அதனை தார கூடாது என எண்ணியே கோத்தாபயாவுக்கு வாக்களித்துள்ளனர்.எனவே நாம் ஒற்றுமனையுடன் பலமாக செயற்பட வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/71105

  • தொடங்கியவர்

விக்கியின் கூட்டோடு இணைய தயார் - சிறிகாந்தா

முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் இணைந்து உருவாக்கும் கூட்டு அணியுடன் கைகோர்த்துப் பயணிக்க தமிழ்த் தேசியக் கட்சி தயாராக இருப்பதாக அந்தக் கட்சியின் தலைவர் மூத்த சட்டத்தரணி என். சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

011.jpeg

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் இருந்து பிரிந்த உறுப்பினர்கள் இன்றையதினம் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி எனும் புதிய கட்சியினை ஆரம்பித்துள்ளனர்.

கட்சியின் ஆரம்ப நிகழ்வும் ஊடகவியலாளர் சந்திப்பும் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.

01.jpg

கட்சியின் தலைவராக என்.சிறிகாந்தா, செயலாளர் நாயகமாக எம்.கே.சிவாஜிலிங்கம், உப தலைவராக சட்டத்தரணி சிவகுருநாதன் மற்றும் தேசிய அமைப்பாளராக சில்வஸ்டர் விமல்ராஜ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/71108

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மனுசன் தான் அந்த புள்ளய பிடிச்ச பூசாரிக்கு ஆதரவாக கோட்ஸ்சில இறங்கின்வரு நல்ல மனுசன் 

இனியென்னா ஆளையாள் குற்றம் சொல்லி காலத்தை கழிங்க 

  • தொடங்கியவர்

விக்கியார் தான் டெலோவை உடைத்தார் என்ற நோக்கில் நாளைய அரசியல் ஆய்வு தயார் :rolleyes:

இனி கள்ளன், கொலைகாரன், பாலியல் பலாத்காரம் பண்ணுபவன், மண் கொள்ளையடிப்பவன் எல்லோருக்கும் நல்ல கொணடடடம்தான். இனி காந்தா ஐயா பணம் இல்லாமலே இவர்களுக்கு முன்னிலையாவார். இவர்கள் கிராமசபை தேர்தல்களில் போட்டியிடுவது நல்லது. ஆளுக்கொரு கட்சி , ஆளுக்கொரு தலைவன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.