Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’பொதுத் தேர்தலை இலக்கு வைத்தே சமஷ்டி குண்டு வெடித்துள்ளது’

Featured Replies

-க. அகரன்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, பதவிகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே, சமஷ்டி முறையிலான தீர்வு கிடைக்கும் என்ற வெடிகுண்டை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வெடிக்க வைத்துள்ளாரென, சிவசக்தி ஆனந்தன் எம்.பி குற்றஞ்சாட்டினார்.

சமஷ்டி அடிப்படையிலான தீர்வை, பேரம் பேசலுடன் பெறுவதற்கான பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்த போதும், அவை அனைத்தையும் கோட்டைவிட்டு, கடந்த ஆட்சியாளர்களுடன் சரணாகதியடைந்து, நான்கு வருடங்களாக நிஷ்டையில் இருந்து விழித்தவர் போன்று, தமிழ் மக்களை ஏமாற்றும் கருத்துகளை அவர் வெளியிட்டுள்ளார் என்றும், ஆனந்தன் எம்.பி குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர் அதில், போர் நிறைவுக்கு வந்த பின்னர், போரின் வலிகளையும் இழப்புகளையும் சந்தித்த மக்கள் மீது, சர்வதேசச் சமுகம் அதீத கரிசனை கொண்டிருந்தது என்றும் இச்சமயத்தில், தமிழ் மக்களும் தமது பூரண ஆணையைக் கூட்டமைப்புக்கு வழங்கியிருந்தார்கள் போதிலும், சர்வதேச சமுகத்தையும் அயல் நாடான இந்தியாவையும் முறையாகப் பயன்படுத்தி, உரிய நகர்வுகளைச் செய்வதற்கு சம்பந்தன் விளைந்திருக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

“இராஜதந்திர அணுகுமுறை ஊடாக, அனைத்தையும் அணுகின்றோம் என்று கூறி வந்திருந்த போதும், அவை அனைத்துமே எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தக்கவைப்பதற்கான இலக்காகவே இருந்துள்ளது என்பது தான் யதார்த்தமாகும்.

“தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பதையெல்லாம் வெறும் வாக்குகளைக் கொள்ளையடிக்கும் வார்த்தைகளாகவே, தேர்தல் விஞ்ஞபனங்களில் பயன்படுத்தி வந்துள்ளார்கள். இவ்வாறான நிலையில், பெரும்பான்மையிடம் மண்டியிட்டு அனைத்துத் தந்திரங்களும் கைநழுவி, அடுத்தகட்ட இருப்பே கேள்விக் குறியாகியுள்ள நிலையில், தற்போது சர்வதேச ஆதரவுடன் சமஷ்டி தீர்வு கிடைக்கும் என்று மீண்டும் ஒரு புனைகதையொன்றையே சம்பந்தன் கட்டவிழ்த்து விட்டுள்ளார்.

“தமிழர் தாயகமான வடக்கு-கிழக்கு இணைப்பே நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருகின்ற நிலைமையை அறிந்தும் கண்ணயர்ந்திருக்கும் சம்பந்தன், தற்போதைய சூழலில், தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினையில் இருந்து அரசியல் தீர்வு வரை, இவர்களால் ஒரு துரும்பைக் கூட நகர்த்த முடியாத நிலைக்கு, தமிழ் மக்களை நடுத்தெருவில் விட்டுள்ளார்கள்” என்றும், சிவசக்தி ஆனந்தன் எம்.பி குற்றஞ்சாட்டியுள்ளார்.

http://www.tamilmirror.lk/வன்னி/பதத-தரதல-இலகக-வதத-சமஷட-கணட-வடததளளத/72-242734

 

11 hours ago, ampanai said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வெடிக்க வைத்துள்ளாரென, சிவசக்தி ஆனந்தன் எம்.பி குற்றஞ்சாட்டினார்.

தற்காலத்தில் சம்மந்தன்-சுமந்திரன் கும்பலின் ஏமாற்றும் நாடகங்கள் தேவானந்தாவின் கடத்தல், கப்பக் கும்பலை வென்றவையாக  உள்ளன.

இந்த மண்டையன் குழு என்ன சொல்ல வருகிறார்கள். இவர்களாவது பொது தேர்தலை சொல்லி பொய் குண்டுகள் வைக்கிறார்கள். உங்களுக்கு எப்போதும் குண்டு, கொலை, கொள்ளை அப்படியான எண்ணங்கள்தான் தலையில்  உதிக்கும்.

எடடாத பழம் புளிக்குமாம். எல்லோரும் ஒன்றாக இருந்து அனுபவித்துவிட்டு உங்களுக்கு ஏதும் கிடைக்காவிட்டால் அது கெடடதாக மாறிவிடும்.

உங்களுக்கு இப்போது மக்கள் முன் செல்ல நல்ல சந்தர்ப்பம் வருகின்றது. எல்லாவற்றிட்கும் சம், சும் எண்டு புலுடா விடுறியள். இந்த தேர்தலில் தெரியும் யாருடைய சாயல் வெளிக்கும் எண்டு.

எனவே அது வரைக்கும் பொறுமையாக இருப்போம். நீங்கள் தெரிவு செய்யப்படடால் எங்களுக்கு ஈழம் , சமஷடி பெற்றுத்தருவீர்கள் என்று மக்களை நம்ப சொல்கிறீர்கள். சரி பார்ப்போம் மகேசன் தீர்ப்பு என்ன எண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.