Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்ப்புகளுக்கு அஞ்சாத வலம்புரி தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய பத்திரிகை கம்பவாரிதி இ,ஜெயராஜ் புகழாரம்

Featured Replies

உளம் மகிழ \'வலம்புரியின்\" இருபது அகவை நிறைவுச் செய்தி வந்து சேர்ந்தது. யாழ்ப்பாணப் பத்திரிகை உலகில் \'வலம்புரியின்\" சாதனை மிகப்பெரிது.

ஊடக அதிகாரத்தைப் பயன்படுத்தி மற்றவர்களை மிரட்டி, தமது வசதிகள் வளர்க்கவும், பதவிகள் தேடவும் சிலர் முயன்று நின்ற நிலையில், அதிகாரமிக்க அவர்களின் எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் தொடங்கப்பட்ட \'வலம்புரி\", மண்ணின் உணர்வுகளைப் பதிவு செய்து, சமூகம், மொழி, சமயம், பண்பாடு என,பலதிறத்தாலும் நம் தமிழ்ச் சமூகத்தை வளர்க்க, முடிந்தவரை பாடுபட்டதால், இன்று தமிழ்மக்களின் நம்பிக்கைக்குரிய பத்திரிகையாய் வளர்ச்சி பெற்றிருக்கிறது.

பேச்சுத்திறன், எழுத்தாற்றல், சமூக அக்கறை, அரசியல் ஈடுபாடு என, பலதகுதிகளையும் கொண்டு செயற்பட்டு வரும், \'வலம்புரியின்\" ஆசிரியர் திரு.ந.விஜயசுந்தரம் அவர்களின் வழிப்படுத்தல், \'வலம்புரியின்\" இவ் இருபதாண்டு வளர்ச்சிக்குக் காரணமாய் அமைந்தது வெளிப்படை.

எத்தனையோ தரம் எனது கருத்தை அங்கீகரித்தும் அதனோடு முரண்பட்டும் நின்ற போதும், அக்கருத்துக்களைப் பத்திரிகையில் வெளியிட்டு நடுநிலை பேணிய அவர்தம் செயலால் மகிழ்ந்திருக்கிறேன்.

அவரைப் போலவே \'வலம்புரியின்\" நிர்வாக இயக்குநர் சி. வெற்றிவேலாயுதம் அவர்களும், எங்களது கழக முயற்சிகளை பெரிதும் ஊக்குவித்து வரும் ஒருவராவார்.

ஜனநாயகத்தைத் தாங்கும் நான்கு தூண்களில் ஒன்றாக ஊடகமும் கருதப்படுகிறது.

அந்த சக்தியை \'வலம்புரியோடு \" தமிழினத்திற்கு வழங்கி வரும் அனைவர்க்கும் எனது வாழ்த்துக்கள்.

நிறைவுறும் இருபது ஆண்டுகள் இன்னும் பெருகி \'வலம்புரி\" எழுச்சி கொள்ள, என்னை வாழ்விக்கும் கம்பனாடன் தாள்பணிந்து வாழ்த்துகிறேன்.

\'இன்பமே எந்நாளும் துன்பமில்லை\"

http://valampurii.lk/valampurii/content.php?id=20158&ctype=news

 

இருபது ஆண்டு நிறைவில் உங்களுடன்...

20157.jpg

வலம்புரி முகிழ்த்து இன்று இருபது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இன்று போல் இருக்கிறது அந்த ஆரம்பம்.

வலம்புரி என்ற நாமத்துடன் அவதரித்த இந்தக் குழந்தை எங்களுக்குத் தேவை என்று நீங்கள் தூக்கி வளர்த்து பாலூட்டி பாதுகாத்து விட்டதால் இன்று இருபது வயது ஆகிவிட்டது. ஆம், தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக அவதரித்த கிருஷ்ண பரமாத்மாவின் வரலாறு நீங்கள் அறிந்ததே.

ஒரு பாலகனாலேயே தனக்கு மரணம் என்றறிந்த கம்சன் எனும் அசுரன் தன் நாட்டிலுள்ள குழந்தைகளைக் கொல்லுமாறு கட்டளையிட்டான். அவனின் அசுர குணத்தால் எத்தனையோ குழந்தைகள் கொல்லப்பட்டன.

தனக்கு எந்த அழிவும் இல்லை என்று கருதிய வேளை, வாசுகிக்கும் வசுதேவருக்கும் பிறந்த குழந்தை கண்ணனைக் காப்பாற்றுவதற்காக குழந்தையைக் கூடையில் வைத்து தலையில் சுமந்தபடி வசுதேவர் கோகுலத்துக்குள் செல்கிறார்.

மழை பெய்கிறது. கூடவே ஆற்றைக் கடக்க வேண்டிய சூழ்நிலை, இவ்வேளையில்தான் ஐந்து தலை நாகம் குழந்தைக்கு குடையாகிறது. யமுனை நதி வசுதேவருக்கு பாதை விட்டுக் கொடுக்கிறது. குழந்தை கண்ணன் கோகுலத் தில் பக்குவமாகச் சேர்க்கப்பட்டு விடுகிறான்.

அதர்மத்தை அழிப்பதற்காக - தர்மத்தை நிலைபேறடையச் செய்வதற்காக கண்ணன் என்ற குழந்தையை காப்பாற்ற ஆதிசேடன் முதல் யமுனை நதி, கோகுலத்து குழாம் என பலரின் உதவியோடு கிருஷ்ணன் வளர்த் தெடுக்கப்பட்டான். அந்த வளர்ப்பு கம்சன் எனும் அசுரனை வதம் செய்து தர்மத்தை நிலைநிறுத்த உதவிற்று.

இது கிருஷ்ணனுக்கு மட்டுமல்ல. அந்தக் கிருஷ்ணனின் கரத்தில் இருக்கும் வலம்புரிச் சங்கின் நாமம் கொண்ட வலம்புரிப் பத்திரி கைக்கும் பொருந்தும்.

20ஆம் திகதி டிசம்பர் மாதம் 1999ஆம் ஆண்டு வலம்புரி பத்திரிகை உதித்தெழுந்த போது அந்தக் குழந்தையை அழித்துவிட சில கம்சன்கள் முன்னெழுந்தனர்.

ஆனால் வலம்புரி என்ற குழந்தை தர்மத்தின் குரலாக ஒலிக்க வல்லது என்பதனை உணர்ந்து கொண்டு, நீங்கள் அந்தக் குழந்தையைக் காப்பாற்றினீர்கள்.

அதனால் வலம்புரி தர்மத்தின் குரலாக நடு நிலை நின்று தன் பணியை ஆற்றி வருகிறது.

இன்று இருபது ஆண்டுகள் நிறைவு கண்டு 21ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக் கின்ற இவ்வேளையில்; வலம்புரியின் வாழ் வுக்காக நீங்கள் அத்தனைபேரும் வாரி வழங்கி வரும் ஆதரவை நாம் ஒருபோதும் மறந்து விட மாட்டோம்.

வலம்புரி என்றும் தர்மத்தின் குரலாக ஒலிக்கும் என்ற உறுதிமொழியை சத்தியம் செய்கிறோம்.

வலம்புரி எவருக்கும் எதிரானதல்ல. எம் மைப் பொறுத்தவரை எங்கள் தமிழினம் வாழ வேண்டும். எம் தமிழ் உறவுகள் பட்ட துன் பங்கள், வேதனைகள் கொஞ்சமல்ல. இதற் கெல்லாம் தீர்வு வேண்டும்.

இந்த உண்மையை உரக்கச் சொல்வது தமிழினம் சார்ந்த ஊடகங்களின் தார்மீகக் கடமை என்ற அடிப்படையில், வலம்புரி என்றும் நீதி நெறி வழுவாது தர்மத்தின் குரலாக ஒலிக் கும் என்பதை உங்கள் முன் உறுதி செய்கிறோம்.

http://valampurii.lk/valampurii/content.php?id=20157&ctype=news  

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன் குடும்பி சும்மா ஆடாதே ?

5 hours ago, ampanai said:

எதிர்ப்புகளுக்கு அஞ்சாத வலம்புரி தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய பத்திரிகை கம்பவாரிதி இ,ஜெயராஜ் புகழாரம்

எடுபிடி அரசியல்வாதியும் (மண்)கடத்தல் அமைச்சருமான டோக்கி டாவானந்த ஆதரவில் வளர்ந்த வலம்புரி பத்திரிகையை எடுபிடி அரசியல்வாதியும் (மண்)கடத்தல் அமைச்சருமான டோக்கி டாவானந்த ஆதரவில் வளர்ந்த ஜெயராச் வாழ்த்துறது அதிசயமில்லை.

இன்னொரு பக்கம் உதைவாங்கி உதைவாங்கி வளர்ந்த உதயன் என்ற ஊடகமும் எடுபிடி அரசியல்வாதிக் கும்பலான சுத்துமாத்து சம்பந்தன்-சுமந்திரன் கோஷ்டிகளுக்கு ஜால்றா போடுறதுலையே காலம் கழிக்குது.

தமிழ் மக்களுக்கு தரமான ஊடகம் மிஸ்ஸிங்.

11 hours ago, Kapithan said:

சோழியன் குடும்பி சும்மா ஆடாதே ?

அதான் ஜெயராஜ் குடும்பி வைச்சுக்கொண்டு திரியிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.