Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரினார் சம்பிக்க!

Featured Replies

(நா.தனுஜா)

2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற விபத்துச் சம்பவமொன்றுக்காக கைதுசெய்யப்பட்ட நேற்றுமுன்தினம் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமய அமைப்பின் தலைவருமான சம்பிக்க ரணவக்க இன்றைய தினம் கண்டி தலதா மாளிகைக்கு சென்று மத அனுஷ்ட்டான நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சம்பிக்க ரணவக்க,

2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு வெற்றியடைந்தது. எமது ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த 9 தேரர்கள் ஊடாகவே அவர்களுக்குப் பெரும்பான்மையைப் பெறமுடிந்தது. 

அவ்வேளையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் லக்ஷ்மன் கதிர்காமரை பிரதமராக்குவதற்கே தீர்மானித்திருந்தார்கள். ஆனால் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குமாறு ஜாதிக ஹெல உறுமயவின் 9 தேரர்களும், நாங்களும் குரல்கொடுத்தது மாத்திரமன்றி, அதுகுறித்து சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் வேண்டுகோளையும் முன்வைத்தோம். அதற்காக நாட்டுமக்களிடம் மன்னிப்புக் கோருகின்றோம்.

அதேபோன்று 2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதைப் போன்ற வேகத்துடன் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்லிலும் அவர்கள் வெற்றியடைவதற்காக மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து நாமும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டமைக்காகவும் மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் கூறினார்.

https://www.virakesari.lk/article/71769

  • தொடங்கியவர்
31 minutes ago, ampanai said:

அவ்வேளையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் லக்ஷ்மன் கதிர்காமரை பிரதமராக்குவதற்கே தீர்மானித்திருந்தார்கள். ஆனால் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குமாறு ஜாதிக ஹெல உறுமயவின் 9 தேரர்களும், நாங்களும் குரல்கொடுத்தது மாத்திரமன்றி, அதுகுறித்து சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் வேண்டுகோளையும் முன்வைத்தோம். அதற்காக நாட்டுமக்களிடம் மன்னிப்புக் கோருகின்றோம்.

ஒரு பெயரால் தமிழரானவரை கூட பிரதமராக்ககூடாது என படுபாடுபட்டும் மகிந்த அண்ட் கோ இப்படி செய்து விட்டதே இந்த புத்த மதவாதியை சிங்கள இனவாதியை ... ஓ மை காட்  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

ஒரு பெயரால் தமிழரானவரை கூட பிரதமராக்ககூடாது என படுபாடுபட்டும் மகிந்த அண்ட் கோ இப்படி செய்து விட்டதே இந்த புத்த மதவாதியை சிங்கள இனவாதியை ... ஓ மை காட்  

மகிந்தவும் அவர் சார்ந்தவர்களும் மேற்கொண்ட இந்த செயல் தமிழ் இனத்தின்பாற் கொண்ட வெறுப்பின்பாற்பட்டதல்ல. தமது நீண்ட கால அரசியல் விருப்பங்களுடன் தொடர்புபட்டது. ஆனால் சம்பிக்கவும் அவர் சார்ந்தவர்களின் செயல் தமிழர் வெறுப்பின்பாற் பட்டதாக இருக்கலாம்.

லக்ஸ்மன் கதிர்காமருடைய கொலையை இதனுடன் தொடர்புபடுத்திப் பார்ப்பதுதான் சரியானதாக அமையும்.

4 hours ago, ampanai said:

சம்பிக்க ரணவக்க இன்றைய தினம் கண்டி தலதா மாளிகைக்கு சென்று மத அனுஷ்ட்டான நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

அங்க பல்லு பத்திரமா இருக்குதா?

அது ஒரு தமிழ் மன்னனின் அரண்மனை!

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.