Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழர்களின் பிரதிநிதிகளே காரணம்! டக்ளஸ் தேவானந்தா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழர்களின் பிரதிநிதிகளே காரணம்! டக்ளஸ் தேவானந்தா

SudarSeithy-55.jpg

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு பிரதான காரணம் இந்திய அரசாங்கமோ இலங்கை அரசாங்கமோ அல்ல. தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சொல்பவர்களே அந்த பிரச்சனைகளுக்கு காரணம், வேறு எவரும் இல்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்றையதினம் இடம்பெற்ற கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

காணாமல் போனோரின் உறவுகளை பல மாவட்டங்களிலும் சந்தித்திருக்கின்றேன். குறிப்பாக காணாமல் போனோரின் உறவுகள் தங்களுடைய பிரச்சினைகளை பலரிடம் தெரிவித்தும் இதுவரை தீர்க்கப்படவில்லை என தெரிவித்திருந்தனர்.

குறிப்பாக தங்களுடைய உறவுகளிற்கு என்ன நடந்தது, அவர்களை இழந்தமையால் மன வேதனையிலும், பொருளாதார அலைச்சலிலும் தாங்கள் இருப்பதனால் அவர்கள் தங்களிற்கு உரிய பதிலை பெற்றுத்தருமாறு கேட்டிருந்ததோடு தங்களின் சார்பாக என்னை அரசாங்கத்துடன் கதைக்குமாறு தெரிவித்திருந்தனர். இப்பிரச்சினை தொடர்பாக அமைச்சரவையில் பேசுவதற்குள்ளேன்.

இதேவேளை, சிலர் காணாமல் போனோர் சங்கங்களை அமைத்து அதன் ஊடாக தங்களுடைய வாழ்வாதாரத்தை சிறப்பாக்கி கொள்வதோடு வெளிநாடுகளிலும், உள்நாடுகளிலும் உள்ள அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடாக தங்களை தவறாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.

முதல் முதல் எங்களால் 1998ஆம் ஆண்டு காணாமல் போனோரை தேடி கண்டுபிடிக்கும் சங்கத்தை அமைத்து அதன் ஊடாக அம்மக்களின் பிரச்சினைகளிற்கு தீர்வு காண்பதற்கு முயற்சி எடுத்தோம்.

ஆனால் தவறானவர்கள் பிரச்சினைகளை தீரா பிரச்சினையாக வைத்திருப்பதற்காக அவர்களை தவறாக பயன்படுத்தி வருகின்றார்கள். அம்மக்களிற்கு விரைவாக தீர்வை பெற்றுக்கொடுப்பேன்.

வவுனியா மாவட்டத்தை சேர்ந்த காணாமல் போனவர்கள் என்னை சந்திக்க மறுத்தது தொடர்பாக எனக்கு தெரியாது. மேலும் எனக்கு உடனடியாக அவசரமாக கொழும்பு செல்ல இருப்பதால் இச்சந்திப்பை ஒத்தி போட்டுள்ளேன்.

வவுனியா காணாமல் போன சங்கத்தின் செயலாளர் மீதான தாக்குதலினை தங்களின் கட்சி ஆதரவாளர்கள் நிகழ்த்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு கட்சி ஆதரவாளர்களினால் நிகழ்த்தப்பட்டால் அதற்கான நடவடிக்கை எடுப்பீர்களா? என ஊடகவியலாளரினால் கேள்வி எழுப்பப்பட்ட போது,

இச்சம்பவம் செய்திதானே ஒழிய சரியான உறுதிப்பாடு இல்லை. மேலும் கட்சி ஆதரவாளர்கள் ஈடுபட்டிருந்தால் அதற்கான நடவடிக்கை எடுப்பேன். என்றாலும் இச்சம்பவம் தொடர்பாக அறிந்த வரை கட்சி ஆதரவாளர்கள் அவர்களிடம் சென்று நான் அழைப்பு விடுத்துள்ளது பற்றி தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இப்பிரச்சினை பற்றி என்னிடம் கதைத்து தீர்வு காண கூடாதா என்று கூறியதோடு இப்பிரச்சினைகளை தீராத பிரச்சினையாக வைத்திருக்காமல் இதற்கான உண்மையான தீர்வினை பெறவிரும்பினால் எனது அழைப்பை ஏற்று வரலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

அதற்கு காணாமல் போனோர் சங்க செயலாளர் கட்சி ஆதரவாளர்களை தள்ளியதாக கேள்வி என்றாலும் இச்சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள படியால் இது தொடர்பாக மேலதிகமாக சொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் போட்டிபோடுவது அவர்களது அரசியல் கொள்கை. அதாவது வடக்கு கிழக்கில் கூட்டமைப்பு கடந்த காலங்களை போல் வெற்றி பெறுவார்களா என்ற கேள்வி இருக்கின்றது.

மேலும் கூட்டமைப்பு காலத்திற்கு காலம் இவ்வாறு சொல்லிக்கொண்டு இருப்பார்கள். மனோகணேசனிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலே ஒப்பந்தம் உள்ளது பற்றி எனக்கு தெரியாது அத்துடன் அதைபற்றி அக்கறையும் இல்லை.

சில தமிழ் தரப்புக்கள் மக்களுடைய பிரச்சினைகளை தீராப்பிரச்சினையாக வைத்திருந்து அதற்கு தீர்வை பெற்றுத்தருவோம் என்று மக்களிற்கு பலவிதமான வாக்குறுதிகளையும் பொய்யான உறுதி மொழிகளையும் கொடுத்ததுதான் வரலாறு.

மேலும் இவர்கள் சாதியின் பெயரால் கதைப்பதும், ஐக்கியத்தின் பெயரால் கதைப்பது, ஏகபிரதிநிதித்துவத்தின் பெயரால் கதைப்பது, சர்வதேச சமூகத்தின் பெயரால் கதைப்பார்கள்.

கடந்த முப்பது, முப்பத்தைந்து வருடங்களாக இவற்றின் ஊடாகவே வாக்குகளை அபகரித்தார்கள். திரும்பவும் இவற்றைதான் சொல்ல முற்படுவார்கள். மேலும் முப்பது முப்பத்தைந்து வருடங்களாக இவர்களால் ஏன் மக்களின் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு பிரதான காரணம் இந்திய அரசாங்கமோ இலங்கை அரசாங்கமோ அல்ல.

தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சொல்பவர்களே அந்த பிரச்சினைகளுக்கு காரணமே ஒழிய வேறு எவரும் இல்லை. மக்கள் எங்களுடன் அணிதிரண்டால் விரைவாக நியாயமான தீர்வை பெற்றுக்கொடுப்போம்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை பின்னர் 1990ஆம் ஆண்டு மாற்று கருத்து, மாற்று வேலைத்திட்டத்துடனே ஈபிடிபி களமிறங்கியது. வன்முறைக்கு ஊடாக தீர்வு காண முடியாது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாக பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்க்கலாம் என்று தெரிவித்து இருந்தோம்.

அன்று இருந்த தமிழ் தரப்பு கூறியது வன்முறைக்கு ஊடாகவே தீர்வு காணமுடியும் என்று கூறியது. அதாவது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாக சென்றால் அவர்கள் துரோகிகளாக கருதப்பட்டு கொல்லப்படுவார்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். ஆனால் இன்று வன்முறையா, ஜனநாயக அணுகுமுறையா வெற்றி பெற்றிருக்கிறது.

ஏன் வன்முறையால் தான் வெற்றி பெற முடியும் என்று சொன்னவர்கள் கூட ஒரு நேரத்தில் ஏக பிரதிநிதித்துவம் என்ற பேரில் மக்களை உசுப்பேத்தி வாக்குகளை அபகரித்தனர்.

ஒரு பக்கம் தங்களிடம் ஆயுத பலம் இருக்கு என்றார்கள், இன்னொரு பக்கம் நாடாளுமன்றத்தில் ஏக பிரதிநிதித்துவம் இருக்கு என்றார்கள் ஏன் அவர்களினால் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. பிரச்சினை தீர்க்க முடியாதத்திற்கு காரணம் அவர்களே ஒழிய இந்திய அரசாங்கமோ, இலங்கை அரசாங்கமோ அல்ல.

தமிழ் தலைமை என்று சொல்லப்பட்டவர்கள் சரியாக பிரச்சினைகளை அணுகவில்லை என்பது என்னுடைய அனுபவம்.

எனக்கு 15 வருடத்திற்கு மேல் ஆயுத போராட்டத்தினுடைய முன் அனுபவம். இருபத்தைந்து, முப்பது வருடத்திற்கு மேல் தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்ட அனுபவம் இருக்கின்றது.

இந்த அனுபவங்களிற்கு ஊடாகவே இந்த கொள்கைகளும், வேலைத்திட்டங்களும் அமைந்திருக்கின்றது. அந்த வகையில் வர இருக்கின்ற சந்தர்ப்பத்தை மக்கள் சரியாக பயன்படுத்தி கொண்டால் விரைவாக தீர்வை காண முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

https://www.sudarseithy.com/?p=37373

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nunavilan said:

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழர்களின் பிரதிநிதிகளே காரணம்! டக்ளஸ் தேவானந்தா

அதுகும்... ஒரு காரணம் என்றாலும்,
இவரும்... ஒரு காரணம் என்று  அல்லவா, இது வரை நினைத்துக் கொண்டு இருந்தேன். :grin:

இவர் சொல்வது எல்லாம் உண்மையாக இல்லாவிடடாலும் , சில உண்மையான கருத்துக்களும் உண்டு. இருந்தாலும் ஒற்றுமையே பலம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

 தமிழ் தரப்பு கூறியது வன்முறைக்கு ஊடாகவே தீர்வு காணமுடியும் என்று கூறியது

அது பிழை என்றால்  நீங்கள் ஏன்  ஆயுதம் தூக்கினனீங்கள்?  அரசியலிலும் இருந்து என்னத்தை கிளிச்சநீங்கள்? மண்கொள்ளை, இளைஞர் கொலை. வேறு நன்மை.....? நீங்கள் எவ்வளவு கூவினாலும் மக்கள் அவர்களைத்தான் தெரிகிறார்கள். மக்களுக்கு  தெரியும் உங்களின் கடந்தகாலம்  என்ன?  கூடி கும்மாளம் அடிக்கத்தான்   உம்மால் முடியும்.  ஒன்றும் அசைக்க முடியாது என்பது நீர் சொல்லாமலே புரியும். நப்பாசையில புலம்பி துலையும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதிலை அரைவாசி நீங்கள் செய்ததுதானே டக்கிமாமா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.