Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆயுத குழுவை உருவாக்கவே கருணாவின் களமிறக்கம் – காேடீஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுத குழுவை உருவாக்கவே கருணாவின் களமிறக்கம் – காேடீஸ்

கருணா அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தில் களமிறங்கியிருப்பது தனது பழைய ஆயுத குழுவிற்கு புத்துயிர் கொடுக்கவே என்று அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று (10) இடம்பெற்ற நிகழ்வில் இதனை தெரிவித்தார். மேலும்,

அம்பாறை மாவட்டத்தில் சில பேரினவாத சக்திகளின் கைகூலிகள் அம்பாறை தமிழ் மக்களை கூறுபோட களமிறங்கியுள்ளன. இவர்களின் திட்டம் எமது தமிழ் மக்களின் பிரதி நிதித்துவத்தை இல்லாதொழித்து எமது மக்களை நிர்க்கதியான சூழ்நிலைக்கு தள்ளுவதே தவிர வேறொன்றுமில்லை.

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தான் பதவியில் இருக்கும் போது அம்பாறை மாவட்டத்திற்கு ஒரு சில இடங்களுக்கு வந்து அடிக்கல் நாட்டிவிட்டு சென்றவர் 10 வருடங்கள் கடந்த பின்னர் தற்போது அபிவிருத்தி செய்வதாக புழுகு கதைகளை கூறி ஏமாற்றி வருகிறார்.

முன்னாள் கருணா குழுவோடு இயங்கியவர்களை தேடிப்பிடித்து பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். இவர்களின் வேலைத்திட்டங்கள் மீண்டும் இந்த நாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் திட்டமாகவே நான் பார்க்கின்றேன்.

கடந்த காலங்களிலே பல கடத்தல்களையும், கொள்ளைகளையும், கொலைகளையும் செய்த நபர்கள் உள்வாங்கி மீண்டும் இந்த நாட்டிலே ஒரு குழப்பகரமான சூழ்நிலையை ஏற்படுத்த முனைகின்றார். இப்படியான குழுக்கள் மீண்டும் இந்த நாட்டில் உருவாகுவதை தடுக்க வேண்டிய கட்டாயப்பாட்டில் இந்த அரசு இருக்கின்றது. அந்த வகையிலே இந்த மக்களையும் மண்ணையும் பாதுகாக்க வேண்டிய கடமைப்பாடு எம் அனைவருக்கும் இருக்கின்றது.

இவ்வாறான நபர்கள் வெவ்வேறு வகைகளில் மாயாஜால வித்தை காட்டி அம்பாறை மாவட்டத்தில் உள்நுழைய பார்க்கின்றனர். இவர்களுக்கு தகுந்த பாடத்தை தமிழ் மக்கள் புகட்ட வேண்டும். கடந்த ஒக்டோபர் புரட்சியின்போது பல கோடிகள் தருவதாக என்னிடம் பல பேரம் பேசப்பட்டது.

ஆனாலும் எங்களது மக்களுக்காக எமது மண்னை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும், எமது மக்கள் கொடுத்த உத்தரவாதத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த கேவலமான செயலுக்கு நான் துணை போகவில்லை. நாங்கள் நினைத்திருந்தால் மிகவும் சக்திவாய்ந்த அமைச்சு பதவியை பெற்றிருக்கலாம் எமது மக்களின் ஆணைக்கு ஏற்ப செயற்பட்டோம் – என்றார்.

https://newuthayan.com/ஆயுத-குழுவை-உருவாக்கவே-க/

  • கருத்துக்கள உறவுகள்

கோடிஸ்வரன் ஏன் பிதற்றுகிறார் என தெரியல  

1 hour ago, பிழம்பு said:

நாங்கள் நினைத்திருந்தால் மிகவும் சக்திவாய்ந்த அமைச்சு பதவியை பெற்றிருக்கலாம் எமது மக்களின் ஆணைக்கு ஏற்ப செயற்பட்டோம் – என்றார்.

ஐயோ பாவம் ஐயோ பாவம்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கோடிஸ்வரன் ஏன் பிதற்றுகிறார் என தெரியல  

ஐயோ பாவம் ஐயோ பாவம்

இப்ப கொஞ்ச நாளா ஓவராய் புலம்புகிறார் என்னத்திற்கு என்று தான் விளங்கவில்லை 

8 hours ago, ரதி said:

இப்ப கொஞ்ச நாளா ஓவராய் புலம்புகிறார் என்னத்திற்கு என்று தான் விளங்கவில்லை 

எல்லாம் தேர்தல் வாறதால பிடிச்ச காய்ச்சல் தான்.
தோற்பது கிட்டத்தட்ட உறுதி என்கிற நிலை.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ரதி said:

இப்ப கொஞ்ச நாளா ஓவராய் புலம்புகிறார் என்னத்திற்கு என்று தான் விளங்கவில்லை 

வேறென்ன கருணா அம்மான் கிழக்கில் அதுவும் அம்பாறையில் வருகிற எலக்சனில் இறங்க போறாறாம் அவ்வளவுதான் இத்தனை காலமும் இருந்த கோடிஸ்வரனால் ஒன்றும் செய்ய முடியல கருணா வந்து பனங்காட்டு வைத்திய சாலையை தரன் உயர்த்தினார் மற்றது கல்முனை தனி தமிழ் பிரதேச செயலகத்துக்கும் போய் கதைத்து இருக்கிறார் இதையெல்லாம் செய்யாமல் இருந்த கோடிஸ்வரன் பொங்க ஆரம்பித்துள்ளார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.