Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனி தேசிய பொங்கல் விழா இல்லை? துமிந்த தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களையும் ஒன்றுபடுத்தி கடந்த அரசாங்கம் முன்னெடுத்த தேசிய பொங்கல் தின விழா இம்முறை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய தேவையற்ற செலவுகளை குறைத்து மூன்று மாவட்டங்களில் உள்ள தமிழ் இளைஞர், யுவதிகளை உள்ளடக்கி பொங்கல் தின நிகழ்வை நடத்த உத்தேசித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

தேசிய பொங்கல் தின விழா குறித்து இன்று (13) கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும்,

தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதாக குறிப்பிட்டு கடந்த அரசாங்கம் மூன்று இனத்தவர்களின் பிரதான பண்டிகைகளுக்கு 25 மாவட்டங்களிலும் உள்ள இளைஞர், யுவதிகளை ஒன்றிணைத்து தேசிய நிகழ்வாக பொங்கல் பண்டிகையைக் கொண்டாடப்பட்டது.

இதனால் எவ்வித பயனும் மாற்றங்களும் ஏற்படவில்லை. மாறாக வீண் செலவுகள் மாத்திரமே மிஞ்சியது.

உலகவாழ் தமிழர்கள் நாளை மறுதினம் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடவுள்ளனர். இந்நிலையில் 25 மாவட்ட இளைஞர், யுவதிகளை ஒன்றிணைத்து தைப்பொங்கலைக் கொண்டாட தீர்மானிக்கவில்லை.

இதனால் பாரிய செலவுகள் ஏற்படுகின்றன. அதனால் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் உள்ள இளைஞர்களை ஒன்றுபடுத்தி பொங்கல் தின நிகழ்வினை கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது – என்றார்.

https://newuthayan.com/இனி-தேசிய-பொங்கல்-விழா-இல/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களையும் ஒன்றுபடுத்தி கடந்த அரசாங்கம் முன்னெடுத்த தேசிய பொங்கல் தின விழா இம்முறை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய தேவையற்ற செலவுகளை குறைத்து மூன்று மாவட்டங்களில் உள்ள தமிழ் இளைஞர், யுவதிகளை உள்ளடக்கி பொங்கல் தின நிகழ்வை நடத்த உத்தேசித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

தேசிய பொங்கல் தின விழா குறித்து இன்று (13) கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும்,

தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதாக குறிப்பிட்டு கடந்த அரசாங்கம் மூன்று இனத்தவர்களின் பிரதான பண்டிகைகளுக்கு 25 மாவட்டங்களிலும் உள்ள இளைஞர், யுவதிகளை ஒன்றிணைத்து தேசிய நிகழ்வாக பொங்கல் பண்டிகையைக் கொண்டாடப்பட்டது.

இதனால் எவ்வித பயனும் மாற்றங்களும் ஏற்படவில்லை. மாறாக வீண் செலவுகள் மாத்திரமே மிஞ்சியது.

உலகவாழ் தமிழர்கள் நாளை மறுதினம் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடவுள்ளனர். இந்நிலையில் 25 மாவட்ட இளைஞர், யுவதிகளை ஒன்றிணைத்து தைப்பொங்கலைக் கொண்டாட தீர்மானிக்கவில்லை.

இதனால் பாரிய செலவுகள் ஏற்படுகின்றன. அதனால் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் உள்ள இளைஞர்களை ஒன்றுபடுத்தி பொங்கல் தின நிகழ்வினை கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது – என்றார்.

https://newuthayan.com/இனி-தேசிய-பொங்கல்-விழா-இல/

இது ஒன்றும் வியாபாரம் இல்லையே உடனடியாக இலாபம் வருவதற்கு. தொடர்ச்சியான இன நல்லெண்ண முயற்சிகள் காலம் தாழ்த்தியேனும் நிச்சயம்  பயன் தரும். 

இதனை உணராதவர்கள் / தகுதியில்லாதவர்கள் பதவிகளுக்கு வந்தால் இதனைத்தவிர வேறெதனை எதிர்பார்க்க முடியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தைப்­பொங்கல் நிகழ்வை இரத்து செய்­தமை கவ­லைக்­கு­ரி­யது: தமிழ்-முஸ்லிம் சமூ­கத்தின் தனித்­து­வத்­துக்கு அர­சாங்கம் மதிப்­ப­ளிக்க வேண்டும்

இரா­ஜ­துரை ஹஷான்)

பல்­லின மக்கள் வாழும் நாட்டில் அனைத்து மக்­களின் மத கலா­சா­ரங்­க­ளுக்கும் பார­பட்­ச­மின்­றிய   விதத்தில் முன்­னு­ரிமை  கொடுக்க வேண்டும். 2020ஆம் ஆண்­டுக்­கான தேசிய தைப்­பொங்கல்   நிகழ்­வை அர­சாங்கம்  உரிய   கார­ணங்கள் இன்றி  இரத்து செய்­தது  கவ­லைக்­கு­ரி­யது. பிற மதங்­களின் தனித்­து­வத்துக்கும் அர­சாங்கம் முன்­னு­ரிமை  கொடுத்தால் மாத்­தி­ரமே தேசிய  நல்­லி­ணக்­கத்தைக் கட்­டி­யெ­ழுப்ப முடியும் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  காவிந்த ஜய­வர்­தன  தெரி­வித்தார்.

Pongal_vizla.jpg

இது­ கு­றித்து அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,

மூன்று இனத்­த­வர்­க­ளையும் ஒன்­றி­ணைத்து கடந்த  ஐந்து வருட கால­மாக  கொண்­டா­டிய தேசிய தைப்­பொங்கல்  தின நிகழ்­வுகள் இம்­முறை  இரத்து செய்­யப்­பட்­டுள்­ளமை  தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான   செயற்­பா­டா­கவே கருத முடியும்.    கொண்­டாட்­டங்­களின் ஊடா­கவே தேசிய நல்­லி­ணக்கம் கட்­டி­யெ­ழுப்­பப்­படும்.  ஓர் இனத்தின்   மத கலா­சா­ரங்­களை பிறி­தொரு இனத்­தவர் புரிந்துகொள்­வது அவ­சி­ய­மா கும்.

கடந்த  ஐந்து வருட  கால­மாக   25 மாவட்­டங்­க­ளையும் ஒன்­றி­ணைத்த வகையில்  நத்தார்,  தைப்­பொங்கல்,  ரமழான் ஆகிய  பண்­டி­கைகள் தேசிய விழா­வாக  இளைஞர், யுவ­தி­க­ளினால்  வெகு­வி­மர்­சை­யாக கொண்­டா­டப்­பட்­டன. நாளை  கொண்­டா­ட­வுள்ள  தைப்­பொங்கல் தின  நிகழ்­வுகள்  நுவ­ரெ­லியா மாவட்­டத்தில்  கொண்­டாட தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில்    எவ்­வித உரிய  கார­ணங்­க­ளு­மின்­றிய விதத்தில் இரத்து செய்­யப்­பட்­டுள்­ளமை  கவ­லைக்­கு­ரி­யது. ஓர்  இனத்­துக்கும்,  கலா­சா­ரங்­க­ளுக்கும் மாத்­திரம்  முன்­னு­ரிமை  அரச ரீதியில் வழங்­கப்­படும் பட்­சத்தில்  அங்கு முரண்­பா­டு­களே தோற்றம் பெறும்.   இதற்கு  வர­லாற்றுச்  சம்­ப­வங்கள்  சான்று பகர்­கின்­றன.  இதனை  அர­சாங்கம் புரிந்­து­கொள்ள வேண்டும்.  பல்­லின  சமூகம் வாழும் நாட்டில் அனைத்து மக்­களின்    தனித்­து­வத்­துக்கும் முன்­னு­ரிமை கொடுத்தால் மாத்­தி­ரமே அங்கு  ஜன­நா­யகம்    நடை­மு­றையில் செயற்­ப­டுத்­தப்­படும்.  இன்று   இந்­நிலை கேள்­விக்கு­றி­யாக்­கப்­பட்­டுள்­ளது.

நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அனைத்து இன மக்­களின் தனித்­து­வங்­க­ளுக்கும் முன்­னு­ரிமை கொடுக்­கப்­பட்­டது.  2016ஆம் ஆண்டு   சுதந்­திர தின நிகழ்வில்   தேசிய  கீதம் தமிழ் மொழியில்  பாடப்­பட்­டதை இன்று    ஆளும்  தரப்­பினர்  அர­சி­ய­ல­மைப்­பிற்கு  முர­ணான செயல் என்று குறிப்­பி­டு­கின்­றார்கள்.     ஒரு மொழியை  அர­சியல் தேவை­க­ளுக்­காக  புறக்­க­ணிப்­பதால் எவ்­வித  நடை­மு­றைக்கு சாத்­தி­ய­மான விட­யங்­களும் தோற்­றம்­ பெ­றாது. அவை  எதிர்காலத்திலே  மாறுபட்ட  தாக்கங்களை ஏற்படுத்தும். ஆகவே அரசாங்கம் அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்தே  செயற்பட வேண்டும்.  தமிழ், - முஸ்லிம்  மக்களின்  தனித்துவங்களுக்கு மதிப்பளித்து  தேசிய  நல்லிணக்கத்தைக்   கட்டியெழுப்ப வேண்டியது  அவசியமாகும் என்றார்.

https://www.virakesari.lk/article/73208

  • கருத்துக்கள உறவுகள்

இவங்களாவது ந்லிணக்கத்தை மதிக்கிறதாவது. இனங்கள் எனியும் ஏதாவது செய்வங்கள் என்று எதிர்பார்த்தால் நாங்கள் தான் மோடயோக்கள்

6 hours ago, பிழம்பு said:

2020ஆம் ஆண்­டுக்­கான தேசிய தைப்­பொங்கல்   நிகழ்­வை அர­சாங்கம்  உரிய   கார­ணங்கள் இன்றி  இரத்து செய்­தது  கவ­லைக்­கு­ரி­யது.

இலங்கையில் மாட்டுப் பொங்கல் கொண்டாட ஹிந்திய ஜனாதிபதிக்கும் / பிரதமருக்கும் / வெளிவிவகார அமைச்சருக்கும் நேரம் கிடைக்கவில்லையோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.