Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும்

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனவும் மாறாக அந்த தலைமைத்துவத்தை தனக்குத் தாருமாறு கேட்பது அல்ல என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாரம் ஒரு கேள்விக்கு பதிலளித்து அவர் அனுப்பி வைத்துள்ள மின்னஞ்சலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சர்வதேச மத்தியஸ்தத்துடனேயே இனப் பிரச்சினைக்கான பேச்சு வார்த்தை முன்னெடுக்கப்பட்ட வேண்டும் என வட மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அத்துடன் இலங்கை பூராகவும் உள்ள தமிழ்ப் பேசும் மக்களுக்கு வரவிருக்கும் கெடுதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உணர மறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இதுவரை மக்கள் பிரச்சினைகளை மறந்தது போல் தமிழ் மக்களின் எதிர்காலத்தை கஞ்சிப் பானைக்கு காலப்போக்கில் விற்று விடுவார்கள் எனவும அவர் சாடியுள்ளார்.

சேர்.பொன்னம்பலம் இராமநாதன் தொடக்கம் இன்றுவரையான சகல தமிழர் தலைவர்களும் சட்டத்தரணிகளாகவே இருந்து வந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் ஆகவே அவர்கள் மக்களை ஒன்று சேர்த்து ஒரு குடைக்கீழ் கொண்டு வருவார்கள் என்பது சந்தேகம் எனவும் கூறியுள்ளார்.

இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடென்று உருமாற்ற எடுக்கப்படும் நடவடிக்கைகளைக் கண்டும் காணாதது போல் தமிழ் தலைமைகள் செயற்படுவது வேதனைக்குரியது எனவும் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தை தம் கைகளுள் வைத்திருக்க வேண்டும் என்ற தமிழ் தலைமைகளின் பலவீனத்தை புரிந்துக் கொண்டு மத்திய அரசாங்கம் அவர்களை தம்வசப்படுத்தி வருவதாகவும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட முன்வருமாறு ரெலோவின் தலைவர் செல்வம் அடைகலநாதன் அண்மையில் விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அவரின் அழைப்புக்கு பதில் அளிக்கும் வகையிலேயே தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.
 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனவும் மாறாக அந்த தலைமைத்துவத்தை தனக்குத் தாருமாறு கேட்பது அல்ல என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அது எப்படி ஐயா சம்பந்தன் ஐயா சொல்லுவார் .பெளத்த நாடு தான் இலங்கை என்றும் பல் இனங்களின் நாடு இலங்கை இல்லை என்றும் அவர் தானே பெளத்தக் கொடியை கையில் ஏந்தி இது பெளத்தர்களுக்கு உரிய நாடு போல் சொல்லி விட்டாரே .ஐயா நீங்கள் சொல்லுவது போல் பலமான ஒரு தலைமை வேண்டும் நீங்கள் எல்லோரும் பிரிந்து நிற்காமல் ஒற்றுமையோடு அறிவும் ,அனுபவமும் ,கல்வி அறிவும் ,சர்வதேச அரசியலை கற்று உணந்தவராக ,உலக ஒழுங்கை சரியாக புரிந்து கொள்பவராக,
ஒற்றுமையே பலம் என்று உணரக் கூடிய ஒருவரே தமிழர் தலைமைக்கு தகுதி உடையவர்.
 

11 hours ago, nunavilan said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும்

உங்கட கட்சி எப்பிடி இருக்கு?

16 hours ago, nunavilan said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும்

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும்

 

 

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனவும் மாறாக அந்த தலைமைத்துவத்தை தனக்குத் தாருமாறு கேட்பது அல்ல என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


அத்துடன் இலங்கை பூராகவும் உள்ள தமிழ்ப் பேசும் மக்களுக்கு வரவிருக்கும் கெடுதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உணர மறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இதுவரை மக்கள் பிரச்சினைகளை மறந்தது போல் தமிழ் மக்களின் எதிர்காலத்தை கஞ்சிப் பானைக்கு காலப்போக்கில் விற்று விடுவார்கள் எனவும அவர் சாடியுள்ளார்.

சேர்.பொன்னம்பலம் இராமநாதன் தொடக்கம் இன்றுவரையான சகல தமிழர் தலைவர்களும் சட்டத்தரணிகளாகவே இருந்து வந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் ஆகவே அவர்கள் மக்களை ஒன்று சேர்த்து ஒரு குடைக்கீழ் கொண்டு வருவார்கள் என்பது சந்தேகம் எனவும் கூறியுள்ளார்.

இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடென்று உருமாற்ற எடுக்கப்படும் நடவடிக்கைகளைக் கண்டும் காணாதது போல் தமிழ் தலைமைகள் செயற்படுவது வேதனைக்குரியது எனவும் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தை தம் கைகளுள் வைத்திருக்க வேண்டும் என்ற தமிழ் தலைமைகளின் பலவீனத்தை புரிந்துக் கொண்டு மத்திய அரசாங்கம் அவர்களை தம்வசப்படுத்தி வருவதாகவும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
 

விக்னேஸ்வரன் ஐயா தனக்கு தலைமைத்துவம் தேவை இல்லை என்று நேரடியாகவும் , தலைமைத்துவம் தேவை என்று மறைமுகமாகவும் கோருகிறார்।

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.