Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

image_15090b7447.jpg

-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன், மு.தமிழ்ச்செல்வன்,சண்முகம் தவசீலன்

சுதந்திர தினத்தை பகிஷ்கரிக்கும் வகையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால், கிளிநொச்சியில் இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இன்று காலை 10 மணிக்கு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில், வடக்கு மாகாணத்தில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த போராட்டம் இரு பிரிவுகளாக முன்னெடுக்கப்பட்டன.

ஒரு தரப்பினர் கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு ஏ9 வீதியில் தமது எதிர்ப்பை வெளியிட்டவாறு சென்றனர். மற்றைய தரப்பினர் தமது பிள்ளைகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு கந்தசுவாமி கோவில் முன்பாக தமது எதிர்ப்பை தொடர்ந்து வெளியிட்டிருந்தனர்.

image_ab7913d44b.jpgimage_f8a57cbd3c.jpg


 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் இரண்டாக பிரிந்து இரண்டு போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.


1.jpg

இன்று காலை பத்து மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இரு அணிகளாக பிரிந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.


2.jpg


காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்பட்ட நாட்டில் சுந்திர தினம் எதற்கு,  பதில் கூறு பதில் கூறு காணாமல் ஆக்கப்பட்ட உறவுக்களுக்கு பதில் கூறு? சர்வதேச நீதி மன்றில் இலங்கை அரசை நிறுத்து, எங்களுக்கு சர்வதேச விசாரணையே தேவை போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளுடன் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன், முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் கிளிநெச்சி தமிழரசு கட்சியினர் கலந்துகொண்ட தரப்பினர் ஒரு புறமாக போராட்டத்தல் கந்தசுவாமி கோவில் நின்றபடி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.


7.jpg

இதேவேளை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், சுகாஸ், மணிவண்ணன் ஆகியோர் கலந்துகொண்ட தரப்பினர் இன்னொரு புறமாக கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு பெப்ரவரி 4 சிறிலங்காவுக்கு சுதந்திரநாள் அது தமிழ் மக்களுக்கு கரிநாள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உள்ளக விசாரணை மூலம் நீதி கிடைக்காது நாட்டின் சுதந்திரம் சிங்களவருக்கு மட்டும்தானா? போன்ற வாசகங்களுடன் ஒரு அணியினரின்  ஆலயத்தின் முன் பகுதியின் வலது பக்கமாகவும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பின்னர் இவர்கள் அங்கிருந்து புறப்பட்டு டிப்போச் சந்திவரை ஊர்வலமாக சென்றனர்.


4.jpg

ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்கள் கலந்துகொண்ட தரப்பினர் ஆலய முன்றலில் நின்றவாறே தங்களின் போராட்டத்தை  முன்னெடுத்திருந்தனர்.


6.jpg

 

https://www.virakesari.lk/article/74859

மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்ககளின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

Tuesday, February 4, 2020 - 1:47pm

DSCN5930.JPG?itok=_xauzk_f

இனப்படுகொலைக்கான விசாரணைகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படல் வேண்டுமென தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவினர்களின் ஆர்ப்பாட்ட பேரணியொன்று இன்று(04) மட்டக்களப்பில் இடம் பெற்றது.

இதன் போது இலங்கையின் சுதந்திர தினம் தமிழ் மக்களின் கரிநாள் எனவும் தெரிவித்த ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டோர் காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டு பிடித்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

மட்டக்களப்பு கல்லடிப்பாலத்திற்கருகில் ஒன்று சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவினர்கள் பேரணியாக மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப்பூங்காவை சென்றடைந்தனர். இதையடுத்து அங்கு ஆர்ப்பாட்ட மொன்றிலும் ஈடுப்ப்பட்டனர்.

கையில் சுலோகங்களை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவிணர்கள் இதுவரை எங்கே என கோசம் எழுப்பினர்.

இனப்படுகொலைக்கான விசாரணைகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படல் வேண்டுமென வலியுறுத்தியதுடன் தமிழர்களின் தேசங்கள் அங்கீகரிக்கப்படல் வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

(எம்.எஸ். நூர்டீன் - புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்) 

http://www.thinakaran.lk/2020/02/04/உள்நாடு/47884/மட்டக்களப்பில்-காணாமல்-ஆக்கப்பட்டவர்ககளின்-உறவினர்கள்-ஆர்ப்பாட்டம்

வடக்கு கிழக்கில் உணர்வுபூர்வமாக நடக்கும் இந்த மக்களின் போராட்டங்கள் வெற்றி பெறவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.