Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

செயற்திறன் மிக்க தளபதி லெப் கேணல் விநாயகம்

On Feb 4, 2020

இரண்டு தசாப்தகாலமாக தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் வெற்றிநடைபோட்டு விழிமூடிக்கொண்ட கடற்புலிகளின் துணைத் தளபதி லெப். கேணல் விநாயகம்.

நிலையுடன் பெயர்: லெப். கேணல் விநாயகம்.

சொந்தப்பெயர்: தங்கவேலு சுதரதன்.

சொந்த முகவரி: மருதங்கேணி வடக்கு தாளையடி. (யாழ் மாவட்டம்)

வீரச்சாவுத்திகதி: 04.02.2009

வீரச்சாவுச் சம்பவம்: சுண்டிக்குளம், பேப்பாரைப்பிட்டிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட வழிமறிப்புத் தாக்குதலில்.

vinayakam1.jpg

 

விநாயகம் அண்ண வீரச்சாவு என்ற செய்தி எனது காதுகளை எட்டியபோது ஒருமுறை எனது இதயம் உறைந்து போனது. விடுதலைப் போராட்டத்தில் இழப்புக்கள் ஒன்றும் புதியவை அல்ல. இழப்புக்கள் இன்றி விடுதலை கிடைக்கவாய்ப்பில்லை என என்னைத் தேற்றிக் கொண்டேன். விநாயகம் அண்ண எமைவிட்டுப் பிரிந்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் அந்த உத்தம வீரனின் ஆற்றல் மிகுந்த தளபதியின் நினைவுகள் எம்மனங்களில் அலை மோதுகின்றன.

யாழ் குடாநாட்டின் வளம்மிகுந்த வடமராட்சிக் கிழக்குப் பிரதேசத்தில் கடலலைகள் தழுவுகின்ற மருதங்கேணி எனும் அழகிய கிராமத்தில் தங்கவேலு காந்திமலர் தம்பதியினருக்கு 1973ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இரண்டாவது மகனாகப்பிறந்தவர்தான் சுதரதன் எனும் இயற் பெயரைக் கொண்ட லெப் கேணல் விநாயகம் அவர்கள். இவரை வீட்டில் ஏல்லோரும் சுதன் என்றே அழைத்தனர். சுதன் தனது இளமைக் காலக் கல்வியை உடுத்துறை மகாவித்தியாலயத்தில் தொடர்ந்தார். சுதன் கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கியதோடு கலைத்துறையிலும் ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தார். இந்து சமயத்தவர்களின் பாரம்பரிய கலை வடிவங்களில் ஒன்றான காத்தவராயன கூத்து மருதங்கேணியில் அரங்கேற்றப்பட்டபோது அதில் சுதனும் நடித்து மக்களின் அபிமானத்தைப் பெற்றிருந்தார். இவ்வாறு அவரது இளமைக்காலம் இனிதாக நகர்ந்து கொண்டிருந்த வேளையில் அமைதி என்ற போர்வையில் எமது தாயக மண்ணில் அகலக்கால் பதித்த இந்தியப் படையினர் அதற்கு முற்றிலும்மாறாக ஆக்கிரமிப்புப்போரையும் தமிழ்மக்கள் மீதான அடாவடித் தனங்களையும் பெருமெடுப்பில் கட்டவிழ்த்துவிட்டிருந்தனர். இவ்வாறு இந்தியப்படையினர் தாயகத்தில் பல நூற்றுக் கணக்கான தமிழ் மக்களின் உயிர்களைப் பலிகொண்டதுவும் இந்தியப் படையினர் நாளாந்தம் தமிழ்மக்கள் மீது தொடரும் கெடுபிடிகளும் அதன் விளைவாக தமிழ்மக்கள் அனுபவித்துவரும் அவல வாழ்க்கையும் 1989ம் ஆண்டு காலப்பகுதியில் உடுத்துறை மகாவித்தியாலயத்தில் தரம் 11ல் கல்வி கற்றுக்கொண்டிருந்த சுதனின் மனதை மிகவும் ஆழமாகப்பாதித்தது. அது விடுதலைப்புலிகள் இயக்கம் மக்களின் ஆதரவுடன் தலைமறைவு வாழ்க்கையைமேற்கொண்டு விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருந்த காலம். லெப். கேணல் மறவன் மாஸ்ரரின் உதவியுடன் சுதனும் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த இன்னும் பல இளைஞர்களும் தம்மை முழுமையாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டார்கள். அமைப்பில் இணைந்து கொண்ட சுதனும் மற்றய இளைஞர்களும் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசத்தின் எல்லைப் பகுதியான சுண்டிக்குளம் ஊடாக மணலாற்றுக் காட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள்.

26815215_337393726746664_654775306566716

 

மணலாற்றுக் காட்டிற்குச் சென்ற சுதன் அங்குதான் இயக்கப் பெயராக விநாயகம் எனும் பெயரைப் பெறுகின்றார். அங்கு வியட்னாம் பயிற்சிப் பாசறையில் இரண்டாவது பயிற்சி அணியில் விநாயகமும் இணைக்கப்பட்டு ஒரு போர்வீரன் கற்றுக்கொள்ள வேண்டிய அனைத்து படைத்துறைப் பயிற்சிகளிலும் கொமாண்டஸ் பயிற்சிகளிலும் மிகச்சிறப்பாகத் தேர்ச்சிபெற்று சிறந்த போராளியாக பயிற்சிப் பாசறையிலிருந்து விநாயகம் அவர்கள் வெளிவருகின்றார். தொடர்ந்து இந்தியப் படையினருக்கெதிரான தாக்குதல்கள் தேசவிரோதக் கும்பல்களுக்கெதிரான தாக்குதல்கள் என அவரின் போர்ப் பயணம் தொடர்ந்தது. 1990ம் ஆண்டின் முற்பகுதியில் இந்தியப்படையினர் தாயகத்திலிருந்து முழுமையாக வெளியேறியதையடுத்து அந்த ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கை அரசபடையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் மீண்டும் போர் வெடித்தது. அந்தக் காலப்பகுதியில் யாழ். கோட்டை படைமுகாம்மீது விடுதலைப்புலிகள் முற்றுகைப்போரை மேற்கொண்டிருந்தபோது விநாயகம்அவர்களும் அந்த தாக்குதல்அணியில் பங்கெடுத்து அந்தச்சமரில் தனது போரியல் ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தார். தொடர்ந்து அவ்வவ்போது குடாநாட்டில் தான் சந்தித்த களமுனைகளிலும் களப்பணிச் செயற்பாடுகளிலும் தனது நேர்மைத்திறனையும் அர்ப்பணிப்பான உழைப்பையும் வெளிக்காட்டி பொறுப்பாளர்கள் மத்தியில் நன்மதிப்பைப்பெற்றிருந்தார். இதேகாலப்பகுதியில் அப்போதய விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரதித்தலைவரும் மக்கள் முன்னணித் தலைவருமாகிய மாத்தையா அவர்களின் அணியில் விநாயகம் அவர்களும் இணைக்கப்பட்டு அவரது மெய்ப்பாதுகாப்பு அணியில் விநாயகம்அவர்களின் பணி தொடர்ந்தது. 1991ம் ஆண்டு ஆனையிறவு ஆகாயக்கடல்வெளிச்சமரிலும் விநாயகம் அவர்கள் பங்கெடுத்திருந்தார்.

1993ம் ஆண்டின் நடுப்பகுதியில் மாத்தையாவின் அணி கலைக்கப்பட்டபோது அதில் குறிப்பிட்ட போராளிகள் கடற்புலிகள் படையணியில் உள்வாங்கப்படபோது விநாயகம்அவர்களும் கடற்புலிகள் படையணியில் உள்வாங்கப்பட்டிருந்தார். 1993ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பூநகரி நாகதேவன்துறை படைத்தளம்மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தவளை நடவடிக்கையின்போது கடற்புலிகளின் தாக்குதலணியில் விநாயகமும் அங்கம் வகித்திருந்தார். வரலாற்று முக்கியத்துவம்பெற்ற அந்தச் சமரில் அபாரமான துணிச்சலுடன் களமாடிய விநாயகம் அவர்கள் நாகதேவன்துறைப் படைத்தளத்தின் வெற்றிக்கு முன்நின்று உழைத்ததோடு அந்த வெற்றிச்சமரில் வீரவடு ஏந்தியதன் விளைவாக ஒரு கண்பார்வையை இழந்திருந்தார்.

1994ம் ஆண்டு காலப்பகுதியில் கடற்புலிகளின் மன்னார் மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளராக விநாயகம்அவர்கள் பொறுப்பு வகித்திருந்தார். இவர் மன்னார் மாவட்டத்தில் அரசியல்த்துறைப் பொறுப்பை பொறுப்பேற்றுக்கொண்ட காலத்திலிருந்து விடுதலைப் போராட்டப் பங்களிப்பில் மக்கள் மத்தியில் புதிய உத்வேகம் பிறந்தது. பொதுமக்களின் வழிகாட்டிகளாகத் திகழ்வதும் மக்களை பிரதிநிதித்துவப் படுத்துவதுமான நிர்வாகக்கட்டமைப்புக்களுக்கு புத்துயிரூட்டி புதுப்பொலிவுடன் அவை செயற்பட வழிசமைத்ததுடன் அவைகளுக்கு ஊடாக கடற்புலிகளின் படைக்க ட்டமைப்பை மன்னார் மாவட்டத்தில் விரிவாக்கம் செய்வதற்கு முதன்மையாக உழைத்தவர். இதன் பிற்பாடு குடாநாட்டில் அரசியல்ப்பணியும் குறிப்பிட்டகாலம் புலனாய்வுக் கல்வியையும் கற்றுத் தேர்ச்சிபெற்று அதுசார்ந்த பணிகளும் தேவையேற்படும் சந்தர்ப்பங்களில் படைத்துறை ரீதியான செயற்பாடுகளுமென விநாயகம் அவர்களின் போராட்டப்பயணம் தொடர்ந்தது.

1996ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் யாழ். குடாநாடு முழுமையாக அரசபடையினரின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டபோது ஐந்து லட்சம் மக்களுடன் விடுதலைப்புலிகளின் அனைத்து படைக் கட்டமைப்புக்களும் நிர்வாகக் கட்டமைப்புக்களும் வன்னிப் பெரு நிலப்பரப்பிற்கு நகர்த்தப்பட்டு வன்னியை தளமாகக்கொண்டு செயற்பட்டபோது விநாயகம் அவர்களின் போரியல் செயற்பாடுகள் வன்னியில் தொடர்ந்தது. இந்தக் காலப் பகுதியில் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசைஅவர்களின் பிரரதான மெய்ப் பாதுகாவலராகவும் சில காலம் விநாயகம் அவர்கள் கடமையாற்றியிருந்தார். அத்துடன் சூசை அவர்களின் மெய்ப் பாதுகாப்பு அணிக்கு தேர்வு செய்யப்படுகின்ற போராளிகளுக்கு பாதுகாப்புப்பயிற்சி வழங்குகின்ற பயிற்சி ஆசிரியராகவும் விநாயகம் அவர்கள் செயற்பட்டிருந்தார். 1996ம் ஆண்டு யூலை மாதம் முல்லைத்தீவு படைத்தளம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஓயாத அலைகள் 01 வெற்றிச் சமரிலும் விநாயகம்அவர்கள் பங்கெடுத்து தீரமுடன் களமாடி முல்லைத்தீவு படைத்தளத்தின் வெற்றிக்கு அர்ப்பணிப்புடன் உழைத்ததோடு அந்த வெற்றிச் சமரில் தலைப்பகுதியில் விழுப்புண்ணடைந்தார். மருத்துவச் சிகிச்சைகளுக்கு ஊடாக விழுப்புண் தேறிய நிலையில் விநாயகத்தின் போர்ப்பணி மீண்டும் தொடர்ந்தது. ஆனாலும் தலைப்பகுதியில் புதைந்திருந்த சன்னம் இறுதிக்காலம் வரையிலும் அவரை உபாதைக்கு உட்படுத்தியிருந்தது. தொடர்ந்து செம்மலையில் தளம் அமைத்து செயற்பட்டுக் கொண்டிருந்த கடற்புலிகளின் கிழக்கு மாகாண விநியோக அணியில் விநாயகம்அவர்களும் இடம்பெற்றிருந்தார். கடற்புலிகளின் சண்டைப்படகில் இரண்டாம் நிலை கட்டளைஅதிகாரியாக செயற்பட்டு பல சவால்களுக்கு மத்தியில் கிழக்குமாகாண விநியோக நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம் பெறுவதற்கு அயராது உழைத்தார். அத்துடன் செம்மலையில் அமையப் பெற்றிருந்த கிழக்குமாகாண விநியோக அணிக்கான முகாம் பொறுப்பாளராகவும் பொறுப்புவகித்து போராளிகளின் உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படைத் தேவைகளிலும் கூடிய கவனம் செலுத்தி குறித்த முகாம் செயற்பாடுகள் திறம்படசெயற்படுமளவிற்கு மிக நேர்த்தியாக தனது கடமையினை ஆற்றியிருந்தார்.

27073052_617387558592404_114657324204336

 

1999ம் ஆண்டு காலப் பகுதியில் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் விநாயகம் அவர்களை கடற்புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளராக நியமித்திருந்தார். குறிப்பிட்ட காலமாக மந்தகதியில் செயற்பட்டுக் கொண்டிருந்த கடற்புலிகளின் அரசியல்த்துறையின் செயற்பாடுகள் விநாயகம் அவர்களின் அரசியல் பிரவேசத்துடன் புதுப்பொலிவுடன் முழுவீச்சுப்பெற்றன. முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சமாசம் மற்றும் மன்னார் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சமாசம் அவற்றின் ஆளுகைக்குட்பட்டிருந்த கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் அத்துடன் வர்த்தகர் சங்கங்கள் பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் விளையாட்டுக் கழகங்கள் போரெழுச்சிக் குழுக்கள் என சமூகக் கட்டமைப்புக்களை தொடராக சந்தித்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வெற்றிப் பாதையில் கொண்டு செல்வதற்கு மக்களின் இன்றியமையாத பங்களிப்பை வலியுறுத்தி கருத்துக்களை எடுத்துக்குறி அதற்கு ஊடாக மக்களை போராட்டத்தின்பால் அணிதிரட்டி எல்லைக் காப்புப் படையணிகள் கிராமியப் படையணிகள் ஆகிய கட்டமைப்புக்களை விரிவாக்கம் செய்து 1999ம் ஆண்டின் பிற்பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட ஓயாத அலைகள் 03 நடவடிக்கையின்போது கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி படைத்தளங்களை விடுதலைப்புலிகள் கைப்பற்றியதுடன் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசத்தின் மேலும் சிலபகுதிகளை மீட்டெடுத்தவாறு விடுதலைப்புலிகளின் படையணிகள் முன்னேறிக் கொண்டிருந்தபோது முல்லை மாவட்டத்தில் மாத்தளன் பொக்கணை வலைஞர்மடம் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் உருவாக்கப்பட்டிருந்த எல்லைக் காப்புப்படையணிகளை விநாயகம் அவர்களே தலைமையேற்று கூட்டிச்சென்று களமுனையின் பின் களப் பணிகளையும் மீட்கப்பட்ட பகுதிகளில் எல்லைக் காப்புப் படையணிகளை பாதுகாப்பு நிலைகளில் நிலைப் படுத்துவதையும் மிக நேர்த்தியாக நெறிப்படுத்தியிருந்தார். அந்தக் காலப்பகுதியில் பெரும்பாலானமக்கள் வடமராட்சி வடக்கு மற்றும் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசங்கிளிலிருந்து இடம்பெயர்ந்து வந்து மாத்தளன் பொக்கணை வலைஞர்மடம் முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளில் வசித்துவந்தார்கள். இந்த மக்களுக்கும் விநாயகம் அவர்களுக்கும் அரசியல் ரீதியாகவும் அதற்கு அப்பாலும் நெருக்கமான உறவுப்பிணைப்பு இருந்து வந்தது. இந்த உறவுப்பாலம் தான் அவர் எல்லைக்காப்புப் படையணிக் கட்டமைப்புக்களை நேர்த்தியாக நெறிப்படுத்துவதற்கு உந்துசக்தியாக விளங்கியது. இவ்வாறாக கடற்புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பை மிகவும் சீரிய முறையில் நெறிப்படுத்திவந்த விநாயகம் அவர்கள் 2002ம் ஆண்டு நோர்வே நாட்டின் அனுசரணையில் இலங்கை அரசிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் மத்தியிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறைக்குவந்த காலப்பகுதியில் குறிப்பாக யுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு நகரத்தின் அபிவிருத்திக்காக அயராது உழைத்தார். யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து முள்ளியவளை புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் செயற்பட்டுவந்த முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகம் கரைத்துறைப்பற்று பிரதேசசபை உள்ளிட்ட அரச நிர்வாகக் கட்டமைப்புக்கள் மீளவும் முல்லை நகரத்தில் செயற்படுவதற்கு முதன் நிலைக் காரணகர்த்தாவாகவும் விளங்கினார். அரச நிர்வாகக் கட்டமைப்புக்களை துரிதகதியில் முல்லைத்தீவுக்கு நகர்த்தியதற்கு ஊடாகவே இடம்பெயர்ந்திருந்த முல்லைத்தீவு மக்களையும் மீள்குடியேற்றம் செய்வதற்கு ஏதுநிலையாக அமைந்திருந்தது. இந்த முயற்சிகளில் விநாயகம் அவர்கள் முழுமூச்சாக நின்று உழைத்ததன் பயனாகவே குறுகியகாலத்தில் முல்லைத்தீவு நகரம் புதுப்பொலிவுடன் மிளிர்ந்தது.

2002ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த காலப்பகுதியில் விநாயகம் அவர்களின் திருமணத்திற்கு சிறப்புத் தளபதி சூசைஅவர்கள் அனுமதி வழங்கியதையடுத்து அதற்கான ஏறபாடுகள் நடைபெறறன. தனது நீண்டநாள் காதலியான இதயாவை 2002ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் நாளன்று விநாயகம் அவர்கள் தனது வாழ்க்கைத் துணைவியாக கரம் பிடித்துக்கொண்டார். இல்லறம் எனும் நல்லற வாழ்க்கையில் அலைக்குமரன் ஐங்கரன் ஆகிய இரண்டு குழந்தைகளுக்கும் சிறந்ததொரு அப்பாவாகவும் திகழ்ந்தார். இவ்வாறாக அவரின் இல்லறவாழ்க்கையும் போரியல் வாழ்வும் ஒரே பாதையான தமிழீழ தேசத்தின் விடுதலையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.

சமாதான காலப்பகுதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கரையோரப் பிரதேசங்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் உதவியுடன் மீள்கட்டுமானம் செய்யும் நோக்குடனும் அந்தப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடனும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசைஅவர்கள் விநாயகம் அவர்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கரையோரப் பிரதேசங்களுக்கான இணைப்பாளராக நியமித்திருந்தார். அத்துடன் மற்றுமொரு பொறுப்பையும் சூசைஅவர்கள் விநாயகத்திடம் ஒப்படைத்திருந்தார். அதாவது கடற்புலிகளின் கடற்கண்காணிப்பு நிலையங்கள் அனைத்திற்குமான மேலாளராகவும் நியமித்திருந்தார். குறித்த இந்த இரண்டு பொறுப்புக்களையும் விசுவாசமாகவும் பொறுப்புணர்வுடனும் செயலாற்றி தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பொறுப்பாளர் மத்தியிலும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதியின் மத்தியிலும் நனமதிப்பைப் பெற்றிருந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு சிறந்த அரசியல்ப் பேச்சாளர். அவரது பேச்சாற்றலையும் அரசியல் சாணக்கியத்தையும் நீண்ட நாட்களாகவே அறிந்திருந்த சூசைஅவர்கள் தேசியத்தலைவர் அவர்களின் ஏற்பாட்டில் ஐரோப்பிய நாடுகளில் தமிழ்த்தேசியத்தின் அரசியல் கொள்கைப் பரப்புரைகளை முன்னெடுப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட குழுவில் விநாயகம்அவர்களையும் சிபார்சு செய்திருந்தார். விநாயகம் உள்ளிட்ட ஐவர் அடங்கிய அந்த அரசியல் பரப்புரைக் குழுவை தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் சந்தித்து அரசியல்ப் பரப்புரைகள் தொடர்பாக விளக்கமளித்து ஆசிகூறி வழியனுப்பி வைத்திருந்தார். 2004ம் ஆண்டு ஒக்டோபர்மாதம் தாயகத்திலிருந்து புறப்பட்ட விநாயகம் உள்ளிட்ட குழுவினர் நோர்வே சுவிச்சர்லாந்து உள்ளிட்ட இன்னும் சில ஐரோப்பிய நாடுகளில் தமது கொள்கைப் பரப்புரைகளை வெற்றிகரமாக முன்னெடுத்தனர். குறிப்பாக விநாயகம் அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டம தொடர்பாகவும் அதற்கு புலம்பெயர்ந்த தேசங்களில் வாழ்கின்ற தமிழ்மக்கள் ஆற்றவேண்டிய பங்களிப்புக்கள் தொடர்பாகவும் எடுத்துக் கூறிய கருத்துக்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ்மக்களை பெரிதும் கவர்ந்தன. விநாயகம்அ வர்கள் வெளிநாட்டில் நின்ற நாட்களிலேயே சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம் இலங்கை உள்ளிட்ட இன்னும் சில நாடுகளையும் தாக்கியது. யுத்த காலத்தில் பாரிய உயிரழிவுகளையும் சொத்தழிவுகளையும் சந்தித்த வடக்கு கிழக்கு தாயகத்து மக்கள் மீண்டும் இயற்கையின் சீற்றத்தினால் குறுகிய நேரத்திற்குள்ளேயே பல ஆயிரக்கணக்கான மனிதஉயிர்கள் காவுகொள்ளப்பட்டு பல கோடி பெறுமதியான சொத்தழிவுகளைச் சந்தித்து பாரிய மனிதப் பேரவலத்தைச் சந்தித்தபோது எமது தாயக விடுதலைப் போராட்டத்தில் தோளோடு தோள்நின்று உழைத்த மக்கள் ஆழிப் பேரலையினால் அடித்துச் செல்லப்பட்ட அவலத்தை புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் மத்தியில் மிகவும் உருக்கமாக எடுத்துக் கூறினார். விநாயகம் அவர்களின் சாணக்கியமான அரசியல்ப் பேச்சுக்களால் கவரப்பட்ட புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் எமது விடுதலைப்போராட்டத்தை வீச்சாக்குவதற்கும் வடக்கு கிழக்கு தாயகத்தை மீள்கட்டுமானம் செய்வதற்குமாக பெருந் தொகையான நிதியை மனமுவந்து தந்தனர். மூன்று மாத காலமாக தமது ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு 2005ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில் விநாயகம்அவர்களும் மற்றயவர்களும் தாயகம் திரும்பியிருந்தனர். தாயகம் வந்த விநாயகம்அவர்கள் சிறப்புத் தளபதி சூசைஅவர்களால் பணிக்கப்படுகின்ற பிரத்தியேகமான பணிகளை முன்னெடுத்ததுடன் வடமராட்சி வடக்கு மற்றும் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசங்களில் உருவாக்கப்பட்ட மக்கள் படைக் கட்டுமானத்திலும் அயராது உழைத்தார். அத்துடன் மக்கள் படைக் கட்டுமானத்தைக்கொண்டு முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசங்களின் கரையோரமாக உருவாக்கப்பட்டிருந்த பாதுகாப்பு நிலைகளுக்கான பொறுப்பாளராகவும் செயற்பட்டார். இவரது சேவையைப் பாராட்டி தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் கைத்துப்பாக்கி ஒன்றும் வாகனம் ஒன்றும் இவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். 2006ம் ஆண்டு மற்றும் 2007ம் ஆண்டின் முற்பகுதிகளில் போராட்டத்திற்கு புதிதாக இணைகின்ற புதிய போராளிகளில் கடற்புலிகளுக்கு தகுதியானவர்களை தேர்வுசெய்து கடற்புலிகளுக்கு உள்வாங்குகின்ற பொறுப்பையும் சிறப்புத் தளபதி அவர்கள் விநாயகத்திடமே ஒப்படைத்திருந்தார். அந்தப்பணியை சிரமேற்கொண்டு கடற்புலிகளுக்கென பிரத்தியேகமாக செயற்பட்டுக் கொண்டிருந்த அடிப்படை படயப்பயிற்சிக்க ல்லூரியின் பண்டிதர் றஞ்சன் லாலா அப்பையா லிங்கம் ஆகிய பயிற்சி அணிகளுக்கு ஆற்றல் மிகுந்த திடகாத்திரமான இளைஞர்களைத் தேர்வுசெய்து குறித்த பயிற்சி அணிகள் சிறப்பாக தமது பயிற்சிகளை நிறைவு செய்து பின்நாளில் அவர்கள் சிறந்த போராளிகளாகவும் அணித் தலைவர்களாகவும் கடற்புலிகள் படையணியை அலங்கரித்திருந்தார்கள். இந்த செயற்திட்டத்தில் விநாயகம் அவர்களின் உழைப்பு மிகவும் அளப்பரியது. அத்துடன் குறிப்பிட்ட காலம் கடற்புலிகளின் படைய அரசியல்ப் பொறுப்பாளராகவும் பொறுப்புவகித்து ராஜன் கல்விப்பிரிவினருடன் இணைந்து போராளிகளுக்கான கல்விச்செயற்பாடுகளிலும் போராளிகளுக்கான அரசியல் வகுப்புக்களை ஏற்பாடு செய்தல் முதலான சிறப்புத் தளபதி சூசை அவர்கள் பணிக்கின்ற அரசியல் மற்றும் புலனாய்வுச் செயற்பாடுகளையும் சிறப்புத் தளபதியின் எண்ணத்திறகு ஏற்றவாறு செயல்வடிவம் கொடுத்திருந்தார்.

2007ம் ஆண்டு யூலை மாதம் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் படகு விபத்திற்குள்ளாகி தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்தபோது அவரது தனிப்பட்ட பாதுகாப்புக்கள் உறுதிப்படுத்தப்படல் வேண்டும் என்ற பலதரப்பினரதும் அபிப்பிராயக் கருத்துக்களுக்கு அமைவாக விநாயகம் அவர்கள் சூசை அவர்களின் பிரதான மெய்ப்பாதுகாப்பு அணிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். நம்பிக்கையாகவும் விசுவாசமாகவும் அந்தப் பொறுப்பையேற்று இரவு பகல் பாராது கண்துஞ்சாது பாதுகாப்புக் கடமையை மிகவும் செவ்வனே செய்திருந்தார். 2007ம் ஆண்டு செப்ரெம்பர் மாதத்தில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் விநாயகம் அவர்கள் கடற்புலிகளின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். துணைத் தளபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட விநாயகம் அவர்கள் தனது ஆளுகைக்கு உட்பட்ட கடற்புலிகளின் நிர்வாகச்செயலகம் மருத்துவப்பகுதி அரசியல்த்துறை புலனாய்வுத்துறை ஆகிய கட்டமைப்புக்கள் புதுப்பொலிவுடன் செயற்பட சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்ததுடன் கடற்புலிகளில் அங்கம் வகித்த போராளிகள் அனைவரின் நலன்களிலும் கூடியகவனம் செலுத்தி அவர்கள் முகம்கொடுக்கின்ற தனிப்பட்டதும் பொதுவானதுமான பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வினைப் பெற்றுக்கொடுத்து அவர்களும் தங்களது கடமைகளை நேர்த்தியாக முன்னெடுத்துச் செல்வதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.

2008ம் ஆண்டு பிற்பகுதியில் மணலாற்றுக்கள முனையில் தாக்குதல்கள் தீவிரம் பெற்றதையடுத்து முல்லைத்தீவில் மக்களை அணிதிரட்டி மிகப்பெரிய மக்கள்படைக் கட்டமைப்பை உருவாக்கி அவர்களுக்கான பயிற்சிகளையும் வழங்கி நாளாந்தம் நூறு பேர்வரையில் மணலாற்றுக் களமுனைக்கு அனுப்புகின்ற செயற்திட்டத்தை சிறப்புத் தளபதியின் ஆலோசனைக்கு அமைவாக தானே பொறுப்பேற்று மணலாற்றுக் களமுனையை அண்டியதான அளம்பிலை தளமாக வைத்துக்கொண்டு மிநேர்த்தியாக நெறிப்படுத்தினார். இவரால் அனுப்பப்பட்ட மக்கள்படை களமுனையில் போராளிகளுக்கு தோள் கொடுத்ததுடன் துணிகரத் தாக்குதல்களையும் நிகழ்த்தியிருந்தார்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

2009ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் முற்பகுதியில் நாகர்கோவிலில் நிலைகொண்டிருந்த அரசபடையினர் முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்டு வடமராட்சிக் கிழக்கின் எல்லைப் பகுதியான சுண்டிக்குளம், நல்லதண்ணீர்த் தொடுவாயவரையிலும் ஆக்கிரமித்திருந்தனர். ஆகவே யாழ். மாவட்டத்தின் கரையோரத்தினதும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரத்தினதும் மையத்தில் அமையப்பெற்ற பேப்பாரைப்பிட்டி எனும் பகுதியில் பலமான காவல் நிலைகளை விடுதலைப்புலிகள் அமைத்திருந்தார்கள். அதாவது பேப்பாரைப்பிட்டியை அடுத்துள்ள சாலைப்பகுதியையும் கடந்தால் அடுத்துவருவது மாத்தளன் ஆகும் அப்போது மாத்தளன் மற்றும் பொக்கணையில் இடம்பெயர்ந்து வந்திருந்த பல ஆயிரக்கணக்கான மக்கள குடியிருந்தார்கள். எனவே பேப்பாரைப்பிட்டி காவல்நிலைகளை அரசபடையினர் கைப்பற்ற விடுவதில்லை என்ற மனவுறுதியுடனேயே விடுதலைப்புலிகளின் படையணிகள் நிலைகொண்டிருந்தன. அதில் விநாயகம்அவர்கள் பகுதிப் பொறுப்பாளராக பொறுப்பு வகித்துக்கொண்டிருந்தார்.

vinayakam1.jpg2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ம் நாளன்று நல்லதண்ணீர்த் தொடுவாயில் நிலைகொண்டிருந்த படையினர் பேப்பாரைப்பிட்டியை நோக்கியதாக யுத்த டாங்கிகள் பல்குழல் எறிகணைகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களின் சூட்டாதரவுடன் பெருமெடுப்பிலான முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த முன்னேற்றநடவடிக்கையை எதிர்த்து விடுதலைப்புலிகள் வழிமறிப்புத் தாக்குதலை மேற்கொண்டனர். எதிரியின் முன்னேற்றத்தை துணிகரமாக எதிர்த்து களமாடிய கடற்புலிகளின் துணைத் தளபதி லெப். கேணல் விநாயகம் அவர்கள் அந்த வழிமறிப்புத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். அவருடன் கடற்புலிகளின் கட்டளைத் தளபதிகளான லெப். கேணல் குகன் (காதர்) லெப். கேணல் பகலவன் உட்பட மேலும் பல போராளிகளும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். இரண்டு தசாப்த காலமாக தமிழீழ விடுதலைப்போராட்டப் பயணத்தில் தளராத உறுதியுடன் வீறுநடை போட்ட உத்தமத் தளபதி லெப். கேணல் விநாயகம் அவர்கள் பேப்பாரைப்பிட்டி மண்ணை முத்தமிட்டு தமிழீழ விடுதலைக்காக தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார். அவரது இழப்பு எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தியிருந்தாலும் அவரது வித்துடலை எமது தோளகளில் சுமந்து விதைகுழிக்கு ஒருபிடி மண் எடுத்துப் போட்டிருந்தாலும் ஓரளவுக்கேனும் மனம் ஆறியிருப்போம். ஆனாலும் அதற்குக்கூட அவரது வித்துடல் எமக்கு கிடைக்கவில்லை. எனவே கடற்புலிகளில் தனக்கென தனித்துவமான அத்தியாயத்தை பதிவாக்கிவிட்டு விழிமூடிக்கொண்ட கடற்புலிகளின் துணைத் தளபதி விநாயகம் அவர்களின் ஆறாவது ஆண்டு நினைவு தினத்தில் அவரையும் அவருடன் வீரச்சாடைந்த மாவீரர்களையும் எமது இதயத்தில் பூசித்து தமிழீழ விடுதலைப்பயணத்தில் வெற்றிநடைபோடுவோமாக………

“கடலிலே காவியம் படைப்போம்”

நினைவுப்பகிர்வு:- செங்கோ

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

https://www.thaarakam.com/news/111954

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்...

  • 11 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்+

செயற்திறன் மிக்க தளபதி லெப் கேணல் விநாயகம்

 

 

-செங்கோ-

 

மூன்று பக்கங்களும் கடலால் சூழப்பட்ட யாழ்.குடாநாட்டின் வெள்ளலைகள் கரைதழுவுகின்ற வடமராட்சிக் கிழக்குப்பிரதேசத்தில் மருதங்கேணி எனும் நெய்தல் நிலமண்ணில் 1973-ம் ஆணடு பெப்ரவரி மாதத்தில் தங்கவேலு காந்திமலர் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தான் சுதரதன். அம்மா அப்பா மற்றும் இரண்டு சகோதரர்களையும் ஒரு சகோதரியையும் கொண்ட அளவான குடும்பம். சுதரதனை எல்லோரும் செல்லமாக சுதன் என்றே அழைத்தனர். சுதன் தனது மழலைப் பருவத்தைக் கடந்து தனது பள்ளிப் படிப்பில் ஆரம்பக் கல்வியை மருதங்கேணி இந்துவித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை உடுத்துறை மகா வித்தியாலயத்திலுமாகத் தொடர்ந்தான்.

இளமையிலேயே சுறுசுறுப்பும் துடிப்பும் குறும்புத்தனமும் இவனுடன் கூடிப்பிறந்த குணவியல்புகளாக இருந்தன. கல்வியிலும் விளையாட்டிலும் தனது திறமைகளை வெளிக்காட்டிய சுதனிடம் கலைத்திறனும் மிதமாகவே காணப்பட்டது. அன்றய நாட்களில் மருதங்கேணியில் அரங்கேற்றப்பட்ட காத்;தவராயன் சிந்துநடை மரபுவழிக்கூத்தில் பிரதான பாத்திரங்களையேற்று நடித்த சுதன் பலரது அபிமானத்தையும் பாராட்டுக்களையும் பெற்றிருந்தான்.

1989-ம் ஆண்டுகாலப்பகுதி. இந்தியப்படையினர் தாயகத்தில் நிலைகொண்டிருந்த காலப்பகுதி. அமைதிப்படை என்ற பெயரில் தாயகத்தில் கால்பதித்த இந்தியப்படையினர் அதற்கு மாறாக ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இவனது வீட்டிலிருந்து சுமார் ஒரு மைல் துரத்தில் தாளையடியில் இந்தியப்படையினரின் முகாம் அமைந்திருந்தது.

தாளையடி முகாமிலிருந்து அடிக்கடி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இந்தியப்படையினர் மக்கள் குடியிருப்புக்கள் மீது மேற்கொள்ளும் சுற்றிவளைப்புக்கள் மற்றும் கைதுகள் சித்திரவதைகள் என்பனவும் க.பொ.த.சாதாரணதரத்தில் கல்விகற்றுக்கொண்டிருந்த சுதனின் மனதில் ஆறாத வடுக்களை அன்றய நாட்களில் ஏற்படுத்தியிருந்தது.

அந்த நாட்களில் விடுதலைப்புலிகள மணலாற்றுக் காடுகளிலும் ஏனைய இடங்களிலும் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர். இநதச்சூழ்நிலையில்த்தான் சுதனும் வடமராட்சிக்கிழக்கைச்சேர்ந்த இன்னும் சில இளைஞர்களும் அன்னை மண்ணை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து சுதந்திர தமிழீழம் அமைப்பதை இலட்சியமாக வரித்துக்கொண்டு விடுதலைப்போராட்டத்தில் இணைந்துகொள்வதற்கு முடிவெடுத்தனர்.

அந்த நாட்களில் வடமராட்சிக்கிழக்கு சுண்டிக்குளம் காட்டுப்பகுதியிலும் விடுதலைப்புலிகளின் ஒரு அணியினர் தலைமறைவாகியிருந்து போராட்டப்பணிகளை முன்னெடுத்தனர். இந்த அணியில் லெப் கேணல் மறவன் மாஸ்ரரும் ஒருவராகவிருந்தார். மறவன் மாஸ்ரர் வடமராட்சிக்கிழக்கு தளையடியைச் சேர்ந்தவரும் முன்னாள் உடுத்துறை மகா வித்தியாலயத்தின் ஆசிரியருமென்பதால் பாடசாலை மாணவர்களிடத்திலும் மக்களிடத்திலும் நெருக்கமானதொரு உறவுநிலையிருந்தது. போராட்டத்திற்கான ஆட்கள்; இணைப்புப்பணியை மறைமுகமான முறையில் மேற்கொள்வது மற்றும் போராளிகளுக்கான சாப்பாட்டுப் பார்சல்கள் உட்பட போராட்டத்திற்கான முக்கியமான தேவைகள் சிலவற்றயும் மக்களிடத்திலிருந்து இரகசியமான முறையில் பெற்றுக்கொள்வது போன்ற வேலைத்திட்டங்களை மறவன் மாஸ்ரர்தான் மேற்கொண்டிருந்தார்.

இந்த நிலையில்த்தான் விடுதலைப்போராட்டத்தில் இணைந்துகொள்ள முடிவெடுத்த பதினாறு வயதேயான சுதன் மறவன் மாஸ்ரருடன் மறைமுகமான முறையில் தொடர்பினை ஏற்படுத்தியிருந்தான். அதற்கமைவாக மறவன் மாஸ்ரரின் ஏற்பாட்டில் 1989-ம் ஆண்டின் முற்பகுதியில் சுதனும் இன்னும் சில இளைஞர்களும் சுண்டிக்குளம் காட்டுப்பகுதிக்குச் சென்று புதிய போராளிகளாக இணைந்து கொண்டனர். இதன் பின்னர் இந்த புதிய போராளிகள் அணியினர் மணலாற்றுக் காட்டுப்பகுதிக்குச் சென்று பின்னர் அங்கிருந்து வவுனியா காட்டுப்பகுதியில் அமைந்திருந்த வியட்னாம் பயிற்சிப்பாசறைக்குச் சென்றனர்.

வியட்னாம் பயிற்சிப்பாசறையின் இரண்டாவது அணியினருக்கான அடிப்படைப் பயிற்சிகள் தொடங்கியபோது வடமராட்சிக்கிழக்கிலிருந்து சென்ற இந்தப்புதிய போராளிகள் அணியினரும் அடிப்படைப்பயிற்சியில் இணைத்துக்கொள்ளப்பட்டார்கள். அங்குதான் சுதனுக்கு இயக்கப் பெயராக விநாயகம் என்ற பெயர் சூட்டப்படுகிறது. உடற்பயிற்சி கொமாண்டஸ் பயிற்சி, ஆயுதங்களின் சூட்டுப்பயிற்சி போன்ற அனைளத்துப் பயிற்சிகளிலும் மிகத்திறமையாகத் தேர்ச்சி பெற்ற விநாயகம் சிறந்த போர்வீரனாக பயிற்சிப்பாசறையிலிருந்து வெளிவருகின்றான்.

http://www.eelapparavaikal.com/wp-content/uploads/2019/02/vinayakam1.jpg

அன்றைய நாட்களில் தாக்குதல்கள் பெரும்பாலும் மணலாற்றுக் காட்டுப்பகுதிகளிலேயே விரிந்திருந்தது. மணலாற்றுக்காட்டுப்பகுதியில் இந்திய இராணுவத்தினருக்கெதிரான தாக்குதல் ஒன்றுதான் விநாயகத்தின் கன்னித்தாக்குதலாக அமைந்திருந்தது. அதைத் தொடர்ந்து தேசவிரோதக் குழுக்கள் மீதான தாக்குதல் என விநாயகத்தின் களமுனைகள் விரிந்தன.

1990-ம் ஆண்டின் முற்பகுதியில் இந்தியப்படையினர் தாயகத்திலிருந்து முற்றாக வெளியேறியிருந்தனர். அதைத்தொடர்ந்து 1990-ம் ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கை இராணுவத்தினருடனான இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியிருந்தது. யாழ்-கோட்டையில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினரை விடுதலைப்புலிகள் முற்றுகையிட்டிருந்த போது விநாயகமும் அந்த அணியோடு நின்றிருந்தார். அத்தோடு கோட்டை இராணுவத்தளத்தை கைப்பற்றுவதற்கு விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களிலும் விநாயகம் நேரடியாகப் பங்கெடுத்திருந்தார்.

கோட்டை இராணுவ முகாம் விடுதலைப்புலிகளின் வசம் வீழ்ந்ததைத்தொடர்ந்து பலாலி கட்டுவன் பகுதிகளிலும் களப்பணிகளிலும் சில தாக்குதல்களிலும் பங்குகொண்ட விநாயகம் அவர்கள் பின்னர் அப்போதய விடுதலைப்புலிகளின் பிரதித்தலைவரும் மக்கள் முன்னணித்தலைவருமாகிய மாத்தையா அவர்களின் மெய்ப்பாதுகாவலர் அணியில் இணைத்துக்கொள்ளப்படுகின்றார். மெய்ப்பாதுகாவலர் அணிக்கான பயிற்சியிலும் மிகத்திறமையான முறையில் தேர்ச்சி பெற்று மாத்தையா அவர்களின் பிரதான மெயப்பாதுகாப்பாளர்களில் ஒருவராகச்செயற்பட்டுக்கொண்டிருந்தார்.

இந்தக்காலப்பகுதியில் அதாவது 1991-ம் ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்ற ஆகாயக்கடல்வெளிச்சமர் உட்பட இன்னும் பல தாக்குதல்களிலும் பங்கெடுத்திருந்தார்.

தொடர்ந்துவந்த நாட்களில் 1993-ம் ஆண்டின் நடுப்பகுதியில் விநாயகம் அவர்கள் கடற்புலிகள் அணிக்குள் உள்வாங்கப்பட்டார். கடற்புலிகள் அணிக்குள் உள்வாங்கப்பட்டிருந்த விநாயகத்திடம் அரசியல் ஆளுமையும் நிர்வாகத்திறனும் இருப்பதைக்கண்டுகொண்ட கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அவர்கள் விநாயகம் அவர்களை கடற்புலிகளின் மன்னார் மாவட்டத்தின் அரசியல்த்துறைப்பொறுபாளராக நியமித்திருந்தார்.

மன்னார் மாவட்டத்தின் அரசியல் நிர்வாகத்தை பொறுப்பேற்றுக்கொண்ட விநாயகம் அவர்கள் தனது அரசியல் ஆளுமையினாலும் உறுதியானதும் தெளிவானதுமான பேச்சுக்களினாலும் மக்கள் மனங்களில் இடம்பிடித்திருந்தார். இந்தகாலப்பகுதியில் நடைபெற்ற பூநகரி-நாகதேவன்துறை கூட்டுப்படைத்தளம் மீதான சமரின்போது அதில் விநாயகமும் பங்குகொண்டிருந்தார். அந்தச்சமரில் காயமடைந்த விநாயகம் அவர்கள் தனது ஒரு கண்பார்வையையும் இழந்தார்.

அதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட நாட்கள் மருத்துவ ஓய்விலிருந்த விநாயகம் அவர்கள் மீண்டும் தனது அரசியல் பணிகளை முன்னெடுத்தார். அதனைத்தொடர்ந்து விநாயகம் அவர்கள் சிறப்புத்தளபதி சூசை அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக குறிப்பிட்ட காலப்பகுதிக்கு புலனாய்வுக்கல்வியை சிறப்பான முறையில் கற்று நிறைவு செய்திருந்தார்.

1996-ம் ஆண்டு ஏப்ரல் மாததில் விடுதலைப்புலிகள் யாழ்.குடாநாட்டிலிருந்து வெளியேறி வன்னிப்பெருநிலப்பரப்பை தளமாகக்கொணடு செயற்பட்டவேளையில்தான் முல்லைத்தீவு இராணுவத்தளம்மீதான ஓயாதஅலைகள்-01 நடவடிக்கையினை விடுதலைப்புலிகள் மேற்கொண்டு அந்த இராணுவத்தளத்தை விடுதலைப்புலிகள் கைப்பற்றியிருந்தனர்.

http://www.eelapparavaikal.com/wp-content/uploads/2019/02/27073052_617387558592404_1146573242043362400_n.jpg

இந்த தாக்குதலிலும் பங்குகொண்ட விநாயகம் இந்தச்சம்பவத்தில் தனது தலையில் காயமடைந்திருந்தார். அதனைத்தொடர்ந்து மருத்துவ சகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டு உடல்நிலை தேறியிருந்தார்.

தொடர்ந்துவந்த நாட்களில் சிறப்புத்தளபதி சூசை அவர்கள் தனக்கான பிரதான மெயப்பாதுகாப்பு அணிப்பொறுப்பாளராக விநாயகம் அவர்களை நியமித்திருந்தார். சிறப்புத்தளபதி சூசை அவர்களுக்கான பாதுகாப்புக்கடமையை விசுவாசமாகவும் அர்ப்பணிப்புடனும் செய்துவந்தார்.

அத்தோடு பாதுகாப்பு அணிக்கென தேர்வுசெய்யப்படுகின்ற போராளிகளுக்கும் பாதுகாப்புப்பயிற்சியை வழங்குகின்ற பயிற்சி ஆசிரியராகவும் விநாயகம் விளங்கினார். குறிப்பிட்ட காலப்பகுதியில் பாதுகாப்புப்பணிகளை சிறப்பாகச்செய்து சூசை அவர்களின் நம்பிக்கைக்குப்பாத்திரமான விநாயகம் அவர்கள் பின்னரான நாட்களில் முல்லைத்தீவு-செம்மலைப்பகுதியில் தளமிட்டிருந்த வசந்தன் கடற்சண்டை அணிக்குள் உள்வாங்கப்பட்டிருந்தார்.

அந்த கடற்சண்டை அணியில் சண்டைப்படகு ஒன்றின் இரண்டாம் நிலையிலான கட்டளை அதிகாரியாகச் செயற்பட்டு குறிப்பிட்ட சில கடற்சண்டைகளிலும் கிழக்கு மாகாணத்திற்கான விநியோக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்ததுடன் அந்த கடற்சண்டை அணியினரின் முகாமின் நிர்வாகப்பொறுப்பாளராகவும் செயற்பட்டு போராளிகளின் நன்மதிப்பையும் பெற்றிருந்தார்.

இதன் பின்னரான நாட்களில் அதாவது 1999-ம் ஆண்டுகாலப்பகுதியில் சிறப்புத்தளபதி சூசை அவர்களால் விநாயகம் அவர்கள் கடற்புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இவர் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து கடற்புலிகள் அரசியல் துறையின் செயற்பாடுகள் முழுவீச்சுப்பெற்றன.

தனது நேர்த்தியான செயற்பாடுகளாலும் பேச்சுத்திறனாலும் மக்களுக்கும் கடற்புலிகளுக்குமிடையிலான நெருக்கமான உறவுப்பாலத்தை ஏற்படுத்தியிருந்தார். அத்துடன் தனது ஆளுகையின் கீழ் கடமையாற்றுகின்ற அரசியல் போராளிகளையும் பூரண அரசியல்தெளிவும் ஆளுமைமிக்க போராளிகளாகவும் வளர்த்தெடுத்தார். 1999-ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஓயாத அலைகள்-03 நடவடிக்கை மூலமாக வெற்றிலைக்கேணி-கட்டைக்காடு இராணுவத்தளங்கள் உட்பட வடமராட்சிக்கிழக்கின் பல பகுதிகளும் மீட்கப்பட்டபோது ஏற்கனவே வடமராட்சிக்கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்து மாத்தளன் பொக்கணை பகுதிகளில் வசித்துவந்த மக்களை எல்லைக்காப்புப்படையணியாகவும் கிராமியப்படையாகவும் அணிதிரட்டி அதற்கு தானே தலைமையேற்றுச்சென்று வடமராட்சிக்கிழக்குப்பிரதேசத்தில் விரிந்த களமுனைகளில் பங்கெடுத்திருந்தார்.

இதன் பின்னரான நாட்களில் எல்லைக்காப்புப்படையணிகளை வீதிப்பாதுகாப்பு மற்றும் கடற்கரையோரப்பாதுகாப்பு போன்ற பாதுகாப்புக் கடமைகளையும் சிறந்த முறையில் நெறிப்படுத்தினார். இவ்வாறாக சுமார் நான்கு ஆண்டுகள் தனது அரசியல்த்துறைப்பொறுப்பு நிலையை மிகவும் சிறப்பான முறையில் மேற்கொண்டார்.

நோர்வே அரசின் அனுசரணையுடன் போர்நிறுத்தம் அமுல் படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் அதாவது 2003-ம் ஆண்டின் முற்பகுதியில் விநாயகம் அவர்கள் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் கடற்புலிகள் பிரதேசங்களுக்கான இணைப்பாளராகவும் கடற்கண்காணிப்பு நிலையங்களுக்கான பொறுப்பாளராகவும் சிறப்புத்தளபதி சூசை அவர்களால் நியமிக்கப்பட்டார். சமநேரத்தில் இரண்டு பொறுப்பு நிலைகளையும் வகித்த விநாயகம் அவற்றை மிகவும் அர்ப்பணிப்புத்தன்மையுடன் செய்திருந்தார்.

இவர் பொறுப்பேற்றதைத்தொடர்ந்து தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் அபிவிருத்தித்திட்டங்கள் கடற்புலிகளின் பிரதேசங்களில் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டன. இவரது பேச்சுத்திறன்கள் அதிகரிக்கவே 2004-ம் ஆண்டு நவம்பர்மாதம் சிறப்புத்தளபதி சூசை அவர்களால் விநாயகம் அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு பரப்புரைப்பணிகளுக்காக அனுப்பப்பட்டிருந்தார். நோர்வே சுவிஸ் உட்பட இன்னும் பல நாடுகளுக்குச்சென்று தனது பேச்சாற்றலினால் விடுதலைப்போராட்டத்தின் நியாயப்பாடுகளை புலம்பெயர் மக்களுக்கு தெளிவுபடுத்தினார்.

சுமார் இரண்டு மாதகாலமாக புலம்பெயர்நாடுகள் பலவற்றிலும் தனது பரப்புரைப்பணிகளை மேற்கொண்டு அதற்கூடாக விடுதலைப்போராட்டம் வீச்சுப்பெறுவதற்காக பெரும்தொகையான நிதி கிடைப்பதற்கு உறுதுணையாக உழைத்திருந்தார். ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு அந்த பேரலையின் ஊழித்தாண்டவத்தில் தனது உறவினர்களும் தான் நேசித்த மக்களுமாக ஆயிரக்கணக்கில் பலிகொள்ளப்பட்டபோதிலும்கூட அந்த துயரங்களையெல்லாம் தாங்கிக்கொண்டு தனது கொள்கையில் குறிதவறாமல் புலம்பெயர் நாடுகளில் தனது கடமையை நிறைவாகச்செய்திருந்தவர்.

இதன்பின்னரான நாட்களில் 2005-ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் தாயகத்திற்கு வந்து கரையோரப்பாதுகாப்புப் பொறுப்பாளராக செயற்பட்டதோடு மக்கள் படைக்கட்டுமானப்பயிற்சித்திட்டங்களை நெறிப்படுத்துபவராகவும் செயற்பட்டார். அத்தோடு சிறப்புத்தளபதி சூசை அவர்களின் பிரத்தியேகமான இராணுவ மற்றும் நிர்வாக வேலைத்திட்டங்களையும் நெறிப்படுத்தினார். இந்தக்காலப்பகுதியில்தான் இவரது சேவைகளை கோரவிருக்கும் முகமாக தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் விநாயகம் அவர்களுக்கு கைத்துப்பாக்கியும் (பிஸ்ரல்) டாட்டாப்பிக்கப் வாகனமும் வழங்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து வந்த நாட்களில் கடற்புலிகளின் இராணுவ அரசியல்ப்பொறுப்பாளராக குறிப்பிட்ட காலப்பகுதியில் செயற்பட்டிருந்தார். 2007-ம் ஆண்டின் நடுப்பகுதியில் சிறப்புத்தளபதி சூசை அவர்கள் படகு விபத்திற்கு உள்ளாகி முழுமையான மருத்துவக்கண்காணிப்பில் இருந்தபோது அவருக்கான பாதுகாப்புப்பொறுப்பாளராக விநாயகம் அவர்கள் செயற்பட்டார்.

இதைத்தொடர்ந்து 2007-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தின் இறுதிப்பகுதியில் தேசியத்தலைவர் அவர்களால் விநாயகம் அவர்கள் கடற்புலிகளின் துணைத்தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். துணைத்தளபதியாக பொறுப்பேற்றதைத்தொடர்ந்து சிறப்புத்தளபதி சூசை அவர்களின் வேலைச்சுமைகளில் ஒரு பகுதியை தானே பொறுப்பேற்று அவற்றை சிறப்பான முறையில் முன்னெடுத்திருந்தார்.

நான்காம் கட்ட ஈழப்போர் வீச்சுப்பெற்ற வேளையில் போராளிகளுக்கான புத்தூக்கப்பயிற்சி மற்றும் மக்கள் படைக்கட்டுமானப்பயிற்சி என்பவற்றையும் அவரே நேரடியாக நின்று நெறிப்படுத்தியிருந்தார். என்னதான் வேலைப்பழுக்கள் இருந்தாலும் மக்கள் சந்திப்புக்களை நடத்தி மக்களின் தேவைகளைக்கேட்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளையும் உடனுக்குடன் பெற்றுக்கொடுத்தார்.

வன்னியில அரசபடைகளின் ஆக்கிரமிப்புப்போர் உச்சம் பெற்றிருந்தவேளையில் யாழ.;மாவட்டத்தையும் முல்லைத்தீவுமாவட்டத்தையும் பிரிக்கும் சுண்டிக்குளம்-நல்லதண்ணீர்த்தொடுவாய் வரையிலும் படையினர் முன்னேறியிருந்தனர். இந்தச்சூழ்நிலையில் நல்லதண்ணீர்த்தொடுவாயை அடுத்துள்ள பேப்பாரைப்பிட்டிப்பகுதியில் பலமான காவல்நிலையொன்றை அமைக்கவேண்டிய நிர்ப்பந்தம் விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்டது.

ஏனெனில் பேப்பாரைப்பிட்டி சாலைப்பகுதிகளை இராணுவம் கைப்பற்றும் படசத்தில் மாத்தளன் பொக்கணை கிராமங்களின் இருப்பு கேள்விக்குறியாகவிருந்தது. ஆகவேதான் பேப்பாரைப்பிட்டிப்பகுதியில் பலமான காவல்நிலை விடுதலைப்புலிகளால் அமைக்கப்பட்டது. பே;பாரைப்பிட்டியின் களமுனைகளின் கட்டளைத்தளபதிகளாக துணைத்தளபதி விநாயகம் மற்றும் செழியன் காதர் பகலவன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

2009-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04-ம் திகதி நல்லதண்ண்ணீர்த்தொடுவாய்ப்பகுதியில் நிலைகொண்டிருந்த படையினர் யுத்த டாங்கிகள் ஆட்லறிகள் மற்றும் கனரக ஆயுதங்களின் சூட்டாதரவுடன் பேப்பாரைப்பிட்டியை நோக்கியதான முன்னேற்றத்தை மேற்கொண்டிருந்தனர். இதைத்தொடர்ந்து பேப்பாரைப்பிட்டிப்பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும் அரசபடையினருக்கும் கடும் சமர் மூண்டது. பேப்பாரைப்பிட்டி பெரும் சமர்க்களமாக மாறியது. இறுதிவரையிலும் தான் வரித்துக்கொண்ட இலட்சியத்தில் உறுதியுடனும் துணிச்சலுடனும் சமரிட்டு பேப்பாரைப்பிட்டி மண்ண்ல் தனது உயிரை தமிழ்த்தாயின் விடுதலைக்காக அர்ப்பணித்திருந்தார். இந்த சமரில் துணைத்தளபதி லெப் கேணல் விநாயகம் உடபட கேணல் காதர் லெப் கேணல் பகலகன் உட்பட இன்னும் பல போராளிகள் வீரச்சாவினைத்தழுவிக்கொண்டனர். மாவீரர்களின் வரலாற்றில் துணைத்தளபதி லெப் கேணல் விநாயகம் அவர்களின் வரலாறும் தனித்துவமான அத்தியாயத்தை வகிக்கின்றது.

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.